Sunday, July 6, 2008

பார்வைக்கு கொஞ்சம் பொன்மொழிகள்

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி


Both optimists and pessimists contribute to society. The optimist invents the aeroplane, the pessimist, the parachute.
-George Bernardshaw


அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்


நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.
-ஜார்ஜ் ஸவைல்


ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
-??


எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...
-ஈஸ்ட்மென்


விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-??


உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-??


It is so simple to be happy. But it is so difficult to be simple.
-??


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
-ஹிட்ச்சாக்


He who knows and knows not that he knows is asleep. Wake him.
He who knows and knows that he knows is wise. Follow him.
-??


உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்


மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
-John. A. Skinler


இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.

24 comments:

Anonymous said...

இதெல்லம் பொன்மொழிகள்னு நினைக்கிறேன்.

it is nice to be important, but very important to be nice.

பழமொழி வேற மாதிரி இருக்கும். குறிப்பா எதுகை மோனையுடன் ரைமிங்கா இருக்கும்.

பரிசல்காரன் said...

பொன்மொழிகள்தான். வெளில கிளம்பற அவசரத்துல `ப'னாவுக்கு ப'னா வர்ற மாதிரி என்ன-ன்னு யோசிச்சு.. போஸ்ட் பண்ணீட்டு பைக்ல போறப்பத்தான் அடாடா.. "ஆத்துல போட்டாலும், அளந்து போடணும்", "ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை-ன்னெல்லாம் வருமே அதுதானே பழமொழி.. இது பொன்மொழியாச்சே-ன்னு நெனச்சேன்!

மாத்தீட்டேன்!!

அகரம் அமுதா said...

அனைத்துப் பொன்மொழிகளையும் படித்து மகிழ்ந்தேன்.

/////ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி////

இப்பொன்மொழி என்னை மிகவும் கவர்ந்தது.

சின்னப் பையன் said...

//இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
//

உங்களுக்குமா???!!!!!!!

Vijay said...

//ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.//


இது ரோம்ம்ம்ம்ம்பபப...ஓவவவரூஊஊஉ..நாந்தான் பிளாக்கே எழுத ஆரம்பிக்கலையே. அப்புறம்தானே ஒரு மனிதனை படிக்க சொல்லி......ம்ம்..நீங்க சொல்ற கட்டாயபடுத்தி எல்லாம் வரும்...ம்ம்... ஏன்...ஏன்.....?????????

பரிசல்காரன் said...

நன்றி அமுதாக்கா..

@ ச்சின்னப்பையன்

//உங்களுக்குமா???!!!!!//

ஏன் கேக்கறீங்க.. ஒரு பதிவும் போடலீன்னா கை நம நமங்குது..

பரிசல்காரன் said...

@ vijay

நீங்கதான் உங்க பிளாக்குக்கு “வரும்.. ஆனா வராது”ன்னு பேர் வெச்சுட்டீங்களே.. தினம் வந்துடுச்சா,
வந்துடுச்சா-ன்னு பாத்து மண்டை காயுது!

Vijay said...

//உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.//

பரிசில்....இப்போ ஒரு வலைபதிவு போடணும்ன்னு வைங்க.....பர்ஸ்ட்......(அய்யோ....அய்யோ......ஏன்பா......அடிக்கிறீங்க....நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட் சொன்னராம்பா...)

Saminathan said...

நக்கற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன ???

இந்த மாதிரி நச்சுன்னு இருக்கனும் பழமொழின்னா....!!!

யாராவது சொல்லுங்களேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

:-)

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் வந்துட்டு போனதற்கு அடையாளம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

என்ன இப்படி பன்னிட்டிங்க...
இப்பலாம் காமக் கதைகள்னு போட்டாதான் ஹிட் ஆகும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

காமப் பொன்மொழிகள்னு வச்சு பாருங்க... பதிவு எப்படி தக தகனு எரியுதுன்னு...

ராமலக்ஷ்மி said...

//அவசரத்துல `ப'னாவுக்கு ப'னா வர்ற மாதிரி என்ன-ன்னு யோசிச்சு.. //

யோசிச்சு..'பழமொழிகள்'னு வச்ச நீங்க வடகரை வேலன் சொன்னதும் 'பொன்மொழிகள்'னு மாத்துனதுதான் மாத்துனீர்கள் 'பொ'னாவுக்கு 'பொ'னா வர்ற மாதிரி 'போற்றுதலுக்குரிய பொன்மொழிகள்'னு வச்சிருக்கலாமோ:)? வைக்காட்டலும் அத்தனையும் போற்றுதலுக்குரியதே!

ஆயில்யன் said...

வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை பயணத்தில் கண்ட அனுபவத்தின் மொழிகள் !

நல்லா இருக்கு :)

ஆயில்யன் said...

//இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.///


என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???


இந்த டைட்டிலை வைச்சுக்கிட்டே பார்ட்டு பார்ட்டா போட்டு பட்டைய கிளப்புலாமே :))))))))

ஆயில்யன் said...

//இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.//

பாருங்க இந்த ஒரு வார்த்தைக்கே எத்தனை எத்தனை டைட்டில்கள் இதுவரைக்கும் வந்துருச்சின்னு!
:))

பரிசல்காரன் said...

@vijay

போன பதிவோட பின்னூட்டத்துல உங்களுக்கு ஐடியா குடுத்திருக்கேன் விஜய்.

@ ஈரவெங்காயம்

பழமொழிதானே.. கொஞ்சம் கைவசம் இருக்கு. மெதுவா போடறேன். டெய்லி கண்டிப்பா வந்து பாருங்க..

@ராமலட்சுமி

//'போற்றுதலுக்குரிய பொன்மொழிகள்//

அம்மா, அருமைம்மா! சீனியாரிட்டியை நிரூபிச்சுட்டீங்க!

@ ஆயில்யன்
என்னாங்க.. பிரிச்சு மேயறிங்க!

@ விக்கி..
நண்பா.. நானும் யோசிச்சுட்டுதான் இருக்கேன். ஒண்ணும் தோண மாட்டீங்குது!

கோவி.கண்ணன் said...

எல்லாம் நன்றாக இருக்கிறது.

//ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.//

இதுமட்டும் தினத்தந்தி 'சாணக்கியன் சொல்' வாசகம் போல் இருக்கிறது !
:)

ராமலக்ஷ்மி said...

//அம்மா, அருமைம்மா! சீனியாரிட்டியை நிரூபிச்சுட்டீங்க!//

நன்றி. "அம்மா" அருமையான வார்த்தை, அத்தனை மகளிரையும் அப்படி அழைக்கலாம் பெற்ற மகளையும் சேர்த்து. ஆனாலும் நான் ரொம்ப சீனியரெல்லாம் இல்லீங்க. என் தம்பிக்கு சரியாக உங்கள் வயதே. எனவே அக்கா என்றே குறிப்பிடலாமோ:)))?

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்கள் kbkk007@gmail.com மிற்கு ஒரு மின் மடல் அனுப்பினேன் கிடைத்ததா இல்லையா....

anujanya said...

கே.கே.

காந்திஜியின் பொன்மொழி என் கவிதையைப் படித்தவுடன் போடத் தோன்றியதா? ம்ம், இருக்கட்டும்.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

கண்ணன் சார்.. அது சாணக்கியன் சொல்தான்\ன்னு நெனைக்கறேன்!

@ ராமலட்சுமி..
சரிக்கா...

(எங்க அம்மா பேர் அனந்தலட்சுமி, அதுனால உங்களையும், கயல்விழி முத்துலட்சுமியையும் பின்னூட்டத்துல பாக்கறப்பவெல்லாம் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.. என்னமோ அவங்களை கயலக்கா-ன்னும், உங்களை அம்மா-ன்னும் கூப்பிட்டேன்... எந்தப் பெயரிட்டு அழைத்தாலென்ன.. ஏங்க்கா?)

@ vikneswaran

சாரி விக்கி.. பாக்கறேன்!

ராமலக்ஷ்மி said...

தனது அம்மா பெயர் என அன்பு பாராட்டும் நாலாவது வலைஞர் தாங்கள். 'அம்மா'வே தொடரட்டும்:)!