Saturday, March 27, 2010

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

பொறுமையாகப் படிக்கவும்.

***************************************************

Dear All,

This is Lalitha, W/o.Rajesh Subramanian. I would like to share
something with u. February 23,2010 is an unforgettable day in my life.
Fire occured at Carlton Towers, Bangalore which took away the souls of
9 precious lives. One among them is my dear husband, Rajesh. Still the
accident seems to be a dream for me. I am not able to digest the same.

Morning we got ready together to office. He dropped me at office at
9.30 saying evening i will come to pick u. I called him up at 1pm
saying my maternity leave is sanctioned and from tomorrow i will be at
home. He said "Leave away all your tensions from tomorrow, Stay at
home relaxed. I will get u a Lap top. U better help me from home from
tomorrow:. These were the last words he spoke to me.

When i heard the news that he is hospitalised and getting treated at
Manipal Hospital, I rushed to Manipal. But I saw him only in the
Mortuary. Eyes are filled with tears if I am reminded of that. What
has happened is happened. Even the almighty cannot change it. Next day
we left Bangalore. So i didn't have any idea of what exactly has
happened in Carlton Towers.

After 15 days we went to Bangalore. Same house, same kitchen, same
bedroom, the same street. Remembered of those 1 and half years me and
Rajesh used to roam around the streets, getting vegetables from the
same vendors, going to same hotel, cooking together in the kitchen.

On 23rd March 2010 we had a small memorial at 5pm at Carlton Towers
which was the first month anniversary of the fire accident. I could
see young married women crying for their husband, small children
crying for their mother, aged parents who lost their daughter and son.
It was indeed really painful.

But what is the cause of all these. Is it god made. No it is a man
made accident. If we had been alert, we could have not lost our loved
ones. The building did not have a proper emergency exit. The fire
extinguisher shows the due date as November 2009. The fire engine
which came to the spot did not have water in it. Isn't it not funny.
The Ladders could not reach the top floors. The security guard was not
trained. There was neither a fire alarm nor a smoke alarm in the
building. For the government officials to make money, should we
sacrifice the lives of our loved ones. What has happened is more than
enough. No more event of this kind.

The family of the Victims have formed a community in Face Book called
"Beyond Carlton". It is a committee to fight against fire and ensure
justice. So i request you all to join the community and help us for
the success of the community. But to our shock, there was a major fire
at Kolkata, Park street on the first month anniversary of the
accident.Same time and the same reasons were reported. So pls let us
not sacrifice one more life from our family. Hope i will be getting
your support in this.

With Regards
Lalitha Rajesh


***************************

இந்த லலிதா என் தங்கை. கஸின்.


.

Friday, March 26, 2010

சாயம்போன தபால்பெட்டி...

1)

ப்ரியமானவள்
கிழித்துப் போட்ட
காதல் விண்ணப்பத்திற்கு
நடுவில் நிற்கும்
ஒருதலைக் காதலனை
நினைவுபடுத்துகிறது
குப்பைகள் சூழ நிற்கும்
சாயம்போன
தபால் பெட்டிகள்


*********************************

2)

தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com



********************************

3)

வெஸ்டர்ன் யூனியன்
மணி ட்ரான்ஸ்ஃபர்கள்

பதினாறு இலக்க
எண்ணுடன்
மூன்றிலக்க
ரகசிய எண் கேட்கும்
கடன் அட்டை
பரிவர்த்தனைகள்

அலைபேசி
எண் அழுத்தலில்
கண்டம் தாண்டிப்
பயணிக்கும்
பணங்கள்

இன்னும்.. இன்னும்...
எத்தனையிருப்பினும்

இன்றும்
ஒவ்வொரு கிராமத்திலும்
ஒரு தாயாவது
காத்திருக்கிறாள்
மகனின்
மணியார்டருக்காக.


***************************************************

4)

இப்போதெல்லாம்
எனக்கு
கடிதங்கள்
ஏதும் வருவதில்லை
என்ற வருத்தத்தைச் சொன்னேன்.
எங்களுக்கும்தான்
என்கிறார்
போஸ்ட் மாஸ்டர்.

************************************************


(நான்காவது கவிதை இருவாரங்களுக்கு முன் விகடனில் வெளிவந்தது)


.

Monday, March 22, 2010

காஃபி-பெங்களூர்-செல்வேந்திரன்

பெங்களூர் செல்லும்போது சேலத்தில் ஏறிய பெரிய மனிதருக்கு 45 வயதிருக்கலாம். ஏறியதுமே அமைதியாக படுத்துறங்க ஆரம்பித்தார். பெங்களூர் எட்டுவதற்கு அரைமணி நேரம் முன்னதாக எழுந்தவர் பேச்சுக் கொடுத்தார். காஃபி பிஸினஸ் செய்வதாகச் சொன்னார்.

எனக்கு காஃபி என்றால் கொள்ளை இஷ்டம். நடுவில் 2007 பிப்ரவரியிலிருந்து 2009ன் ஏதோ ஒரு மாதம் வரை காஃபி, டீ எதுவுமே சாப்பிடவில்லை. காரணம் ஏதுமில்லை. காஃபி குடிக்கும் பழக்கத்தை என்னால் விட முடியாதோ என்று ஒரு பயம் வந்தபோது நிறுத்தி, அப்படியெல்லாம் இல்லை என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொள்ள இரண்டரை ஆண்டுகள் ஆனது. மீண்டும் ஆரம்பித்தேன்.

சரி.. சுயபுராணம் போதும். அவர் காஃபி சம்பந்தப்பட்ட தொழில் என்றதும் உற்சாகமாய்ப் பேசினேன். காஃபி பற்றி அவர் சொன்ன சில தகவல்கள்.

இன்ஸ்டண்ட் காஃபி உடம்புக்கு நல்லதே அல்லவாம். ருசியான காஃபி குடிப்பதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள். நரசுஸ் ஒரு உதாரணம் என்றார். கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் காஃபி சாப்பிடுங்கள் என்றார். காரணம், காஃபி மிஷன் சூடாக சூடாகத்தான் சுவைமிக்க காஃபி உருவாகும் எனவும், கூட்டம் அதிகமென்றால் மிஷின் இயங்கிக் கொண்டே இருக்கும் எனவும் சொன்னார்.

உலகத்திலேயே இத்தாலிதான் காஃபி பிரியர்களின் சொர்க்கம் என்றார். இத்தாலியில் ஒரு கடைக்கு, கடை திறக்கும்போது சென்றாராம். மிஷினை சூடாக்குவதற்காக 30, 35 காஃபிகளை உருவாக்கி அதை வெறுமனே கொட்டி, பிறகுதான் இவருக்கு காஃபி கொடுத்தார்களாம்.

இத்தாலியின் LAVAZZA காஃபிதான் சுவை மிகுந்தது என்றார். (BARISTA விடம் தான் அதற்கான உரிமம் இருக்கிறது)

கண்டோண்ட்மெண்டில் இறங்கியவருடன் பேச்சுக் கொடுத்தபடியே அவர் வீட்டுக்குப் போய் காஃபி சாப்பிடும் திட்டம் இருந்தது. இறங்கித் திரும்பி ஒரு ஃபிகரைப் பார்க்கும் இடைவெளியில் எஸ்கேப்பாகி விட்டார்.

*************************************************

சீதோஷ்ண நிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரின் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வால்மார்ட், நைகி உட்பட பிரபலமான பல ப்ராண்டுகளின் கூட்டு முயற்சியில் உருவான Environment, Health & Safety Summit 2010 க்கு சென்றிருந்தேன். ‘ஒருமுறை துணியை வாஷிங் மிஷினில் போட்டெடுக்க 65 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறீர்கள் தெரியுமா’ என்பது போன்ற பலதும் பேசி எதிர்காலத்தைக் குறித்த பயத்தை விதைத்துக் கொண்டிருந்தனர். ஏதாச்சும் செய்யணுமே என்ற உந்துதல் எல்லாரிடமும் விதைக்கப்பட்டது. மேஜையில் வைக்கப்பட்ட சாக்லெட் பேப்பரை, பிரித்து கவரைக் கீழே போடாமல் சாக்லெட் சாப்பிட்டு, நாசூக்காக கைகள் குலுக்கி, புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டிருந்த மனிதர்கள் உலகமெங்கிலுமிருந்தும் வந்திருந்தனர். மெய்ல்களில் விரல்கள் மூலம் சந்தித்தவர்களின் முகங்களைப் பார்க்கும் ஆவல் எல்லோரிடமும் இருந்தது. ‘ஓ.. நீங்கதானா அது?’ என்ற குரலை எல்லா பாஷைகளிலும் கேட்க முடிந்தது. இரண்டு நாட்களிலும் எல்லார் குரலிலும் மென்மையும் நளினமும் தவழ்ந்தது.

அங்கு வந்திருந்த நான்கைந்து பேரையாவது, MG ரோடில் ஏதாவது ஒரு பப்பில் சந்திக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை.

**********************

பட்டிக்காட்டான் என்றெழுதும் திருஞானசம்பந்தம், மற்றும் பதிவுகள் படிக்க மட்டுமே செய்யும் கோபிநாத் இருவரையும் அங்கே சந்தித்தேன். திருவை வலுக்கட்டாயமாக FORUM Shopping Mallக்கு அழைத்துச் செல்லச் சொல்லி வன்முறை செய்தேன். இம்மியளவும் புன்னகை மாறாமல் அழைத்துச் சென்றார். என்னை விட்டுவிட்டு அவர் அறைக்குச் செல்ல நள்ளிரவாவது ஆகியிருக்கும். அடுத்த நாள் அதிகாலை எழுந்து பெங்களூரின் ட்ராஃபிக்கில் ஊர்ந்து அவர் ஆஃபீஸ் செல்ல வேண்டும். பாவம். அன்புதான் மிகப் பெரிய வன்முறை!

அடுத்த நாள் மாட்டியவர் கோபிநாத். தேவனின் மாலதி கதை முதற்கொண்டு வீட்டில் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாராம். ‘நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்’ என்றார் என்னைப் பற்றித்தெரியாமல். இலவசப் புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருப்பேனா நான்?

தனது காரில் பெங்களூரை இரண்டே மணிநேரத்தில் சுற்றிக் காட்டினார். வியப்பாக இருந்தது.

இறங்கும்போது, என் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் கேட்டார். அவர் பாக்கெட்டில் இருந்த பேனாவையே உரிமையோடு எடுத்து கையொப்பமிட்டேன்.

‘நல்லாருக்கே பேனா?’ என்றேன் லவட்டும் நோக்கில்.

‘அது யு.எஸ். போனப்ப ஒரு கொழுப்புல வாங்கினது’ என்றார்.

ரொம்பவும் வெய்ட்டாக இருந்தது. ‘3000 ரூவா இருக்கும்போல’ என்றேன். அதிகமாகவே சொல்லிவைப்போமே என்று.

‘இல்லைங்க.. பதினாலாயிரம்’ என்றார்.

என் வாழ்க்கையில் பதினாலாயிரம் ரூபாய்ப் பேனாவைத் தொட்டு எழுதிய பேறைத் தந்தமைக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன்.

******************************************


‘என்னங்க செல்வேந்திரன் இப்படி எழுதிட்டாரு’ என்று எனக்கும் ‘நீங்க சொன்னது கரெக்ட் செல்வா.. சரியா எழுதிருக்கீங்க’ என்று செல்வாவுக்கும் ஃபோன் கால்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அப்படிச் சொல்வது ஒரே ஆட்கள்தானா என்பதை நானும் செல்வாவும் பகிர்ந்து கொள்வதில்லை.

நண்பன் லக்கிலுக்கைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. இதோ அவர் ஒருமுறை எழுதிய பதிவு:

“ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.


ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?


எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.”


எழுதியபின் ஆசிரியன் செத்துவிடுகிறான்.. அதுசரி.. உன்னோடதப் படிச்சா வாசகன் சாவறானேய்யா என்று கேட்பீர்களானால்....

ஹி...ஹி...ஹி...



.

Wednesday, March 17, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

என் நண்பன் அவன். அவ்வப்போது பேசுவதோடு சரி. அடிக்கடி பார்த்துக் கொள்வதெல்லாம் இல்லை. சில விஷயங்களை என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வான் அல்லது நான் அப்படி நினைக்கிறேன்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்துவிட்டாயா?’ என்று படம் வெளியான அன்று கேட்டான். இல்லை என்றேன். போடா என்று ஃபோனை வைத்துவிட்டான். அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அழைத்து அதையே கேட்டான். இல்லை என்பதே என் பதிலாக இருந்தது. அதன் பிறகு வேண்டா வெறுப்பாக அவன் குரல் மாறி வழக்கமான குசலங்களோடு ஃபோனை வைத்துவிடுவான்.

அந்தப் படத்தைப் பற்றி எதுவோ சொல்ல நினைக்கிறான், நான் பார்க்காததால் சொல்லவில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

சென்ற வெள்ளி மதியம், படம் பார்த்து விட்டு இரவு அவனுக்கு அழைத்தேன். படம் பார்த்ததைச் சொன்னேன்.

அவன் அதற்குள் அந்தப் படத்தை ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறான். முதல் நாள் இரவுக் காட்சிப் பார்த்தவனை படம் ரொம்பப் பாதித்திருக்கிறது. தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்த அவன், பைக்கிலேயே கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் இருக்கும் ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறான். அங்கேதான் அவனது தொலைந்த காதலி, தன் கணவனுடன் வசிக்கிறாள். ஏதோ ஒரு லாட்ஜில் தங்கி, நண்பர்களிடம் விசாரித்து இரண்டாவது நாளில் அவள் முகவரி அறிந்து, மூன்றாவது நாள் ஏதேச்சையாக போவது போல் (‘ஒரு ப்ராஜக்ட் விஷயமா வந்தேன், இங்கதான் உங்க வீடுன்னு கேள்விப்பட்டேன்.. அதான் வந்தேன்’) சந்தித்தித்து விட்டு வந்திருக்கிறான்.

அவளது கணவன் இருந்திருக்கிறான். மிகவும் காஷுவலாக கை குடுத்துப் பேசி வந்திருக்கிறான். ஒரு மகன். மகனுக்கு இவன் பெயராக இருக்குமோ என்று குழந்தைத்தனமாக எண்ணினானாம்.

“நீ என்ன எதிர்பார்த்துடா போன?” - கேட்டேன் நான்.

“தெரியல. போய்ப் பார்த்தே ஆகணும்னு இருந்தது. போனேன். ஹானஸ்டா சொல்லணும்னா ‘என் கல்யாண வாழ்க்கை சரியில்லைடா’ன்னு அவ சொல்லணும்னு கூட எதிர்பார்த்தேன். ப்ச். ரொம்ப நல்லா இருக்கா. கார், வீடு. மனசளவுலயும் சந்தோஷமா இருக்காங்கறது அவ பேச்சுல கண்ணுல தெரியுது”

“அப்படியே இருந்தாலும் உன்கிட்ட சொல்லுவாளா நல்லா இல்லைன்னு?”

“இல்லடா. அவ கண்ணு என்கிட்ட பொய் சொல்லாது” என்றான் எல்லா காதலர்களைப் போலவும்.

நிச்சயமாக அந்தப் படம் அவனை பாதித்ததில் அர்த்தமில்லாமலில்லை. மீண்டும் ஒரு முறை உறவுகள், அதன் சிக்கல்கள் என்று காதலோடு விளையாடியிருக்கிறார் கௌதம் வாசுதேன் மேனன்.

****************************************************

கௌதம் மேனனின் படங்களின் நாயகர்களில் ஒரு வித மேல்தட்டு வாசனை எப்போதுமே இருக்கும். என் போன்றவர்களுக்கு படம் பிடிக்க அதுவும் காரணமாய் இருக்கலாம். ஸ்பென்சரோ, சிட்டி செண்டரோ செல்லும்போது குழுமியிருக்கும் மாடர்ன் ட்ரெஸ் தேவதைகளும், அவர்களோடு ஆங்கிலத்தில் கதைத்துச் செல்லும் பாய் ஃப்ரெண்ட்ஸையும் பெருமூச்சோடு பார்க்கும் பலருக்கும் அதைத் திரையில் பார்க்கவும் பிடித்துப் போகிறது.

படத்தில் சிம்பு உள்ளங்கையால் பின்மண்டையை பதினாறு முறை தேய்த்துக் கொள்கிறார் என்பதைத் தவிர அவரது அண்டர்ப்ளே நன்றாகவே பொருந்திருயிருக்கிறது. த்ரிஷாவை மனோஜின் காமிரா அவ்வளவு அழகாய்க் காட்டியிருக்கிறது.

படத்தின் ஹீரோ - ஏ.ஆர். ரகுமான். இன்னும் ஆரோமலோயில் அல்ஃபோன்ஸா அடிவயிற்றிலிருந்து வலியோடு கத்தும் குரல் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஓமனப்பெண்ணேவில் பென்னி தயாள் ‘ஹே-ஹே’ என்பது ஈர்க்கிறது. ஹொசான்னாவுக்கு நானே எங்கள் அலுவலக மாடி, வீட்டு மாடி என்று ஆடுவதாய் கற்பனை செய்து களித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஆலப்புழாவின் அழகை மனோஜின் காமிரா காட்சியில் தர, பின்னணியில் ஏ ஆர் ரகுமானும் சேர்ந்து கொள்ள.. ரசனை!

நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை வேலை வாங்குவதில் கௌதம் கில்லாடி. லைட்டாக பாட்டு ஆரம்பிப்பதுபோல இருந்தாலே போதும், எங்கெங்கிருந்தோ வந்து ஆடிவிட்டுச் செல்கிறார்கள்!


*************************************************

நிச்சயமாக இது கௌதமின் சொந்த அனுபவம்தான் என்று சொல்ல வைக்கிறது ஒரு சில சீன்கள். ‘யார் இல்லைன்னா? என்னோட எல்லா படத்துலயும் என் சொந்த அனுபவம் இருக்கு. ஆனா இதோட பேஸ்லைன் என்னோட சொந்தக் கதைன்னு நினைச்சுடாதீங்க’ என்கிறார் கௌதம் ஒரு இதழுக்களித்த பேட்டியில்.

************************************************

இந்தப் பதிவை விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. ஒரு நல்ல படத்தைப் பார்த்து எழுதாமல் போவதா என்று தோன்றியதால் எழுதுகிறேன். என் காதல் தோற்றிருந்தால் இன்னும் இந்தப் படத்தை ஆழமாக ரசித்திருக்கலாமோ என்று தோன்றியது சத்தியம். ஆனால் கார்க்கிக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்காமல் போனது ஏனென்றே தெரியவில்லை.

காதலில் தோற்றவர்களே வெற்றியாளர்கள்!

............................


(ஒரு வேண்டுகோள்:-

காந்தி செத்துட்டாரா? சக்கரம் கண்டுபிடிச்சாச்சா போன்ற பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்!)



.

Monday, March 8, 2010

அவியல் 08.03.2010

முதல்வருக்கு பாராட்டு விழா நடந்துகொண்டிருந்தது. தம்பி கிரேஸி கிரி ‘யாருண்ணா தமன்னா?’ என்று கேட்டான். ‘என்னடா.. தமன்னாவைத் தெரியலங்கற?’ என்றேன். ‘நான் வேட்டைக்காரன் பார்க்கல’ என்றான்.

அனுஷ்காவையும் தெரியாது போல அவனுக்கு.

****************************************

தோசை செய்யவா.. உப்புமாவா என்று கேட்டார் மனைவி.

மனைவி செய்யும் தோசை அவ்வளவு பிடிக்கும். இருந்தாலும் ‘உப்புமா’ என்றேன்.

“ஏன்.. அதிசயமா உப்புமா-ங்கறீங்க? எனக்கு வேலை கம்மியா ஆகும்னா?” என்றார்.

“அதுவும் ஒரு காரணம். இன்னொண்ணு அதோட முதல் & கடைசி எழுத்துகள்” என்றேன்.

அன்னைலேர்ந்து நாலு நாளைக்கு டெய்லி உப்புமாதான்!

************************************

கிரேஸிகிரியின் அண்ணன் மகேஷுக்கு ஒரு சந்தேகம் வந்ததாகச் சொன்னான் கிரி. தன்னம்பிக்கையை அதிகப்படுத்த எத்தனையோ புக்ஸ் வருதுல்ல... அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஓவர் தன்னம்பிக்கைல ஆடிகிட்டிருக்காராம். சொன்னாலும் கேட்கறதில்லையாம். அந்த மாதிரி ஓவரா இருக்கறவங்களுக்கு அதைக் குறைக்க ஏதாவது புக்ஸ் இருக்கான்னு கேட்டாரு.

தெரியலயேப்பா-ன்னு சொன்னேன்.

****************************************

நண்பரின் நண்பர் ஒருவர் மனைவிக்கு நகை வாங்கியிருக்கிறார். நேரடியாக மனைவியிடம் கொடுக்காமல், தனது அம்மாவிடம் நகையைக் காட்டியிருக்கிறார்.

“எவ்ளோடா?” - அம்மா

“நாப்பத்தஞ்சு ரூவா ஆச்சும்மா”

“ஏண்டா இதப் போய் வாங்கின? நம்ம கணேசன் கடைல ஆயிரத்து நூறுரூவாக்கு ஒரு செய்ன் பார்த்தேன். ஆறு மாசத்துக்கு கறுக்காது. இது ரெண்டே மாசத்துல பல்ல இளிச்சுடுமேடா”

“ஐயோ.. அம்மா... நாப்பத்தஞ்சுன்னா நாப்பத்தஞ்சாயிரம்மா. சுத்தத் தங்கம்மா”

சடாரென நகையை டேபிள் மேல் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாராம் அம்மா!

************************************

நேற்றைக்கு விஜய் டிவி நீயாநானாவில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் தத்தம் கணவர்களை வாங்கு வாங்கு என வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் 9000 சம்பாதிக்கும் ஒரு மனைவி, தன் 8000 சம்பாதிக்கும் கணவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தபோது காமராமேன் கருமமே கண்ணாக அந்தக் கணவனின் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அவர் கொஞ்ச நேரம் பேந்தப் பேந்த முழித்துவிட்டு ‘ஈகோதான் சார். சட்னு ஏத்துக்க முடியல. மாறறதுக்கு டைம் வேணும்’ என்றார்.

முழுவதும் பார்க்கவில்லை. என் வீட்டில் மான்குட்டீஸும், மயிலும் சண்டைபோட இடையிடையேதான் பார்த்தேன். இருந்தாலும் அந்த நிகழ்ச்சி ஒளி/ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின் தம்பதியினர் வீட்டுக்குச் செல்வதையும், வீட்டில் என்ன ஆச்சோ என்பதையும் நினைக்க பதைபதைத்தது.

ஒன்றுமாகாமல், சரவணபவனில் ரோஸ்ட், காஃபி சாப்பிட்டுவிட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டே போன தம்பதிகள் புண்யாத்மாக்கள்!

**********************************************

கலைஞர் டிவியில் திங்கள்-டூ வியாழன் இரவு 10 மணிக்கு விசாரணை தொடர் தவறாமல் பார்க்கிறேன். ராஜேஷ்குமார்! வாரம் ஒரு கதை.




9.30க்கு சன் டிவியின் ‘செல்லமே’வில் ராதிகாவை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, 10 மணிக்கு கலைஞர் டிவியில் வந்து கலக்கும் சாக்‌ஷிசிவா, விவேக் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம்! (கொஞ்சம் கனம் - ஆனாலும் கச்சிதம்!). எல்லா சீரியலிலும் முக்கியக் கதாபாத்திரத்திற்குக் கணவராய் வந்து கொண்டிருக்கிறார். நிறைய பெண் ரசிகர்களை சம்பாதித்திருப்பார். அதனால்தானோ என்னவோ, சென்ற வாரம் விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் இவரது திருமணத்தை ஒளிபரப்பி, தன்னைக் காத்துக் கொண்டார்!

பேசியதில் நிறைய பேருக்கு ராஜேஷ்குமாரின் இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை என்பதால், இந்த வெளம்பரம்!

*****************************************************

கொஞ்சம் ட்விட்டர் அப்டேட்ஸ்:-


ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன். #நித்யானந்தபயம்


மறுபடியும் கலைஞருக்கு விழாவாம். எதற்கு என்று கேட்டேன்: கலைஞர் டிவிக்கு அடுத்த மாசம் ரெண்டு சண்டேக்கு ப்ரோக்ராம் எதும் கிடைக்கலையாம்!

இன்றைக்கு பின் தேதியிட்ட காசோலை ஒன்றைக் கொடுத்தால் அதை முன் தேதியிடப்பட்ட காசோலை என்று ஏன் சொல்கிறார்கள்? #டவுட்டு


ஆஃபீஸ் வந்தவுடன் ஒரு நண்பர் ‘நான் வந்த பஸ் செம ஸ்பீடு. எங்கயுமே நிக்கல’ என்றார். குதிக்கும்போது அடிபடலையா என்றேன். அவருக்குப் புரியவில்லை.


//செம்மொழி மாநாட்டை ஒட்டி ஒரு மலர் வெளியிடுகிறார்கள். // ஒட்டி விட்டா எப்படிப் படிப்பாங்க? #லொள்ஸ்


ஷாரூக்கான் My Name Is Khan என்பதற்கு பதிலாக My Name Is Ram என்று வைத்திருந்தால் ‘மோர் உதைக்கறே’ என்ன பண்ணிருப்பார்?


விஜய் டிவில நடந்துட்டே பேசற கோபிநாத் ஒரு நிகழ்ச்சில மட்டும் நின்னுகிட்டு பேசறாரு.. ஏன்னு பார்த்தேன்.. நிகழ்ச்சி பேரு ‘நடந்தது என்ன?’வாம்..


பலருடைய பதிவுகளைப் படிக்கும்போதுதான் மௌஸில் ஸ்க்ரோல் பட்டன் வைத்தவனைப் பாராட்டத் தோன்றுகிறது! #வாய்க்கொழுப்பு


நண்பரின் ப்ரொஃபைலில் Business என்றிருந்தது. என்ன பிஸினஸ் என்று கேட்டதுக்கு மெட்ரிக் பள்ளி வைத்திருப்பதாய் சொன்னார். வருத்தமாக இருக்கிறது.


முன் செல்லும் பைக்கின் பின்னிருக்கும் ஃபிகரை ரசிக்கும்போதுதான், என் மனைவியுடன் செல்கையில் அவர் வேகமாப் போங்க என்பதன் அர்த்தம் புரிகிறது


KINGSXI PUNJABஐ HEROHONDA வாங்கியாச்சு. மொதல்ல அதை PREETY ZINTA வெச்சிருந்தாங்க என்றான் நண்பன். எனக்கு கரகாட்டக்காரன் நினைவுக்கு வந்தது.

*****************************************

மிக ரசித்த எஸ்ஸெம்மெஸ்:-

ஏதாவது தப்புதண்டா செய்கிறீர்கள் என்றால் சச்சின் விளையாடும்போது அதைச் செய்யுங்கள். அந்த நேரத்தில்தான் எதையும் கவனிக்காமல் கடவுள் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்.

.

மகளிர்க்கு மகளிர் தின வாழ்த்துகள். ஆடவர்க்கு, மகளிரை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.


.

Saturday, March 6, 2010

பாதசாரி - தமிழினி


“சார்.. ஒரு சிசர் ஃபில்டர் 2 ரூவா. பாக்கெட் 20ரூவா வருது. ஒரு நாளைக்கு பத்தாவது பிடிக்க மாட்டீங்களா? அதுவும் ஃப்ரெண்ட்ஸ், கெட் டுகெதர்ன்னா ஒரு பாக்கெட் சடார்னு காணாமப் போயிடும்.. எப்படிப் பார்த்தாலும் மாசம் 300 ரூவா செலவு பண்ணுவீங்களா இல்லையா? இதுக்கு வெறும் 240 ரூவாதான் சார் வருது... அதுவும் வருஷத்துக்கு...”


-இப்படியெல்லாம் ஆரம்பித்து ஒரு நல்ல புத்தகத்துக்கு சந்தா கட்டச் சொல்லி யாசிப்பது தமிழ்ச்சூழலில்தான் நடக்கும். நடக்கிறது.

பாதசாரி - சுஜாதா ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவர். அதனால்தான் நான் கவனிக்கலானேன். கவனித்து என்ன செய்தேன் என்றால் ஒன்றுமில்லை. அதன்பிறகு இவர் பெயர் விஸ்வநாதன் என்றறிந்து ந.விச்வநாதன், விருத்தம் விச்வநாதன் எல்லாம் இவரோ என்று கொஞ்சகாலம் குழம்பிக் கொண்டிருந்தேன்.

பிறகொரு நாளில் ஒரு தளத்தில் காசியை வாசிக்க நேர்ந்தது. பித்துப் பிடித்தது. யுவகிருஷ்ணா அதைப் பற்றி பதிவெழுதி பற்ற வைத்துவிட்டார். கலைஞன் என்பவன் உலகிற்கே சொந்தமானவன் என்றறிகிற போதும் ‘பாதசாரி கோயமுத்தூராமே’ என்று கேள்விப்பட்டபோது டீஷர்ட்டைக் கழட்டி வைத்துவிட்டு, சட்டை மாட்டிக்கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்!

நீங்களும் காசியை கூகுளில் தேடிப் படிக்கலாம். பிராயச்சித்தமாக அவர் ஆசிரியராக இருக்கும் தமிழினிக்கு ஒரு சந்தா கட்டிவிடுங்களேன்.. 240 ரூபாய் மட்டுமே!

‘மனநிழல்’ என்ற தலைப்பில் பாதசாரி எழுதும் பத்தி எழுத்துக்காக மட்டுமில்லாமல் ஒரு நல்ல பத்திரிகையைப் படித்த திருப்தியை மாதந்தோறும் உணர - மறக்காமல் உங்கள் சந்தாவைச் செலுத்தி, ஒரு பத்திரிகை தடுமாறும் சூழலிலிருந்து மாற்ற அதற்கு கைகொடுத்து உதவுங்கள்.


ஓராண்டு சந்தா மட்டும்தான். ஆயுள் சந்தா என்பது யார் ஆயுளுக்கு என்ற சந்தேகத்து இடமளிப்பதாலும், யார் ஆயுளும் சாஸ்வதமில்லா நிலையில் அது தேவையில்லை என்பதாலும் - இல்லை என்கிறார் நண்பர்.

சந்தாவைச் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்:

K.Selventhiran
615201507730
ICICI Bank
Ramnagar Branch
Coimbatore

முக்கியமாய் செய்ய வேண்டியது: வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவுடன் செல்வாவுக்கும் (k.selventhiran@gmail.com) எனக்கும் (kbkk007@gmail.com) பணம் செலுத்திய விபரத்தை உங்கள் முகவரியுடன் அனுப்புங்கள். ரசீதுடன் ஒரு நல்ல சிற்றிதழின் வளர்ச்சிக்கு உதவியதற்கு எங்கள் அன்பையும் கூரியரில் அனுப்புகிறோம்.


பாதசாரியின் காசி கதை பற்றிய யுவகிருஷ்ணாவின் பதிவுக்கு இங்கே க்ளிக்குங்கள்.

பாதசாரியின் கவிதைகள் பற்றிய யாத்ராவின் பதிவு:- இதோ

தமிழினி சந்தாவுக்காக செல்வேந்திரன் எழுதிய பதிவு:- இங்கே

பாதசாரியின் மீனுக்குள் கடல் புத்தகம் பற்றிய பேரின்பாவின் பதிவு:- இங்கே


நன்றி.


.

Wednesday, March 3, 2010

ஹ..ஹ...ஹ.... ஹா.... ஹா....ஹாக்கி!


ப்போதெல்லாம் அரசுப்பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். பத்தாவது வரைக்குமா, பனிரெண்டாவது வரைக்குமா என்று சரியாக நினைவில்லை. பூப்பந்து, கைப்பந்து என்று ஒரு சில விளையாட்டுகள் இருந்த நிலையில் P.T. Period போரடிக்க, எங்கள் பி.டி. மாஸ்டர் ஹாக்கி விளையாடலாம் என்றார். எட்டாவது அல்லது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். சில மாதங்கள் விளையாடி ஹாக்கியின் மேல் கொஞ்சம் பிடிப்பு வந்திருந்த சமயம்.

பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விளையாட்டின் போது கால் எலும்பில் எதிராளி வேண்டுமென்றோ/வேண்டாமென்றோ அடித்ததில் மரண வலி. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களுக்கு ஹாக்கியென்றாலே தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன். பிறகு விளையாட ஆரம்பத்த போது அதே ‘நண்பன்’ அதே மாதிரி தாக்கினான். இந்தமுறை ‘ஸாரிடா.. வேணும்னு பண்ணல. உன்னை சும்மா பயப்படுத்த வீசினேன். பட்டுடுச்சு’ என்றான். ‘சரி.. நான் பாலை பாஸ் செய்கையில் எனக்கெதிராய் ஹாக்கி மட்டை உயர்த்தப்படும்போதே எனக்கு பயம் வர ஆரம்பிக்கிறது இது சரியில்லை’ என்று அந்த விளையாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, முற்றிலுமாக விளையாடுவதே இல்லை!

************************

ப்ளஸ் டூ விடுமுறை. நண்பர்களுடன் ஒரு கேரம் க்ளப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். மாலை ஆறரை/ஏழு இருக்கும். கரண்ட் கட்டானதில் ஒரு போர்டில் விளையாடிக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன் கோவத்தில் மிகக் கடுமையான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்க்கிறான். உடனே க்ளப்பில் பணிபுரியும் ஒரு சிறுவன் ‘ண்ணே.. வார்த்தை பேசாதீங்ணே.. ’ என்கிறான். ‘நீ மூடிகிட்டு இருடா #@$#@$” என்று அவனுக்கும் ஒரு கெட்ட வார்த்தை பார்சல் செய்கிறான். வேறொரு போர்டில் விளையாடிக் கொண்டிருந்தவர் இடையில் புகுந்து ‘இத்தனை பேர் இருக்கோம்.. க்ளப்புக்குள்ள வார்த்தை பேசறது சரியில்லைன்னு பையன் சொல்றான். அவனையும் திட்டறான் பாரு.. யார்யா அது?’ என்கிறார். அவர் அந்த க்ளப்பின் ரெகுலர் வருகையாளர். நான் பார்த்ததுண்டு. முகம் முழுதும் காதல் தண்டபாணி போல பள்ளங்களாக இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு சின்ன சிரிப்பு சிரிப்பார். அவர் போர்டில் ஸ்டரைக்கரை வைத்தவுடன் சடாரென சுண்டி காய்ன்களைப் பாக்கெட்டில் தள்ளுவதை வியப்போடு பார்ப்பதுண்டு.

அவர் அப்படிச் சொன்னதும் கெட்ட வார்த்தை சொன்னவனுக்கு கோவம் சுர்ரென்று வருகிறது. ‘அது யாருடா நாட்டாமை?’ என்கிறான். போதையில் இருந்தான் என்பது பின்னர் தெரியவந்தது. அவன் அப்படிக் கேட்டதும் ‘வெளில வாடா’ என்றபடி அந்த ரெகுலர் ப்ளேயரும், அவர் நண்பர்களும் அவனைக் காலரைப் பிடித்து இழுக்க, அவனது நண்பர்கள் தடுக்க.. எல்லாருமாய் வெளியில் ஓடுகிறார்கள்.

பயந்தபடி அமர்ந்திருந்த நானும் எனது நண்பர்களும் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு வெளியில் போய்ப் பார்த்தபோது, ஒரு சில மண்டைகள் தாக்கப்பட்டு ரத்தச் சிதறல்களோடு முகங்கள் தெரிய நான்கைந்து பேரின் கைகளில்....... ஹாக்கி மட்டைகள்!

அன்றிலிருந்து இன்று வரை பல இடங்களில், சீரியல்களில், திரைப்படங்களில் பார்த்துவிட்டேன்.. ஹாக்கி மட்டையை அடியாட்களின் ஆயுதமாகவேதான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு ஹாக்கி மீது பெரிய ஆர்வமோ, பற்றோ வரவில்லை. அவ்வப்போது ‘இது நம் தேசிய விளையாட்டு’ போன்ற பூர்ஷ்வாத்தனங்களால் பார்க்கத் தோன்றும். ஆனாலும் மனது ஒட்டாது!

தவிரவும் அதன் ஒளிபரப்புக் குழப்பங்கள். முதல் பாக்-இந்திய மேட்சில் இந்தியா போட்ட நான்கு கோல்களை எத்தனை முறை பார்த்தாலும் பந்து கண்ணில் படவே இல்லை. இதுவே கிரிக்கெட்டில் தெள்ளத்தெளிவாகக் காட்டப்படுகிறது. இதில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரீப்ளேக்கள் இல்லை. வர்ணனை ஜாலங்கள் இல்லை. (இதன் பின்னே உள்ள அரசியலை அழகாக எழுதியிருக்கிறார் சீனியர் பதிவர் தராசு! இங்கே போய்ப் படியுங்கள்)

போதாக்குறைக்கு பாஸ்கரன் போன்ற இந்திய கோச்களின் பேட்டிகள் வேறு எரிச்சலூட்டுகின்றன. ‘இந்தியா ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை’ என்பதை பேட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லிவிட்டு இறுதிப்பத்தியில் ‘இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று மனசு சொல்கிறது’ என்று போனால் போகட்டும் பாணியில் சொல்லியிருக்கிறார். இவரை வைத்துக் கொண்டு ஜெயிப்பதா.. ம்ஹூம்!

இதில் அரசியல்கள் வேறு... யாராவது கொஞ்சம் விளையாடி பேர் வாங்கினால் சஸ்பெண்ட்! சம்பளப் பிரச்சினை. வீரர்களும் முழுவெறியோடு விளையாடுகிறார்களில்லை. நேற்றைய போட்டியின் ஆரம்பம் முதலே மந்தம்தான். ஆஸிக்காரர்களின் கோல் போஸ்ட் இருக்கும் திசையையே பந்து பார்க்கவில்லை. கொஞ்சம் அந்தப் பக்கம் போவது போல இருந்தாலும் நான்கைந்து பேர் சூழ, விரட்டி அடிக்கிறார்கள். பரிதாபமாக இருந்தது. (ஆமா.. அந்தப் போட்டில ஆஸிக்காரர்கள் வாயில் கறுப்பாய் எதையோ வைத்தபடி விளையாடினார்களே.. அடிபடாமல் இருக்கத்தானே.. அதெல்லாம் நம்மாளுக கிட்ட இல்லையா?)

இத்தனை பிரச்சினைகள் இருக்க.. இன்னமும் ஏன் ஹாக்கியை தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? அதைக் கிரிக்கெட்டுக்கு மாற்ற ஏதாவது வழியிருக்கிறதா?

ஐயகோ.. என்ன இது?’ என்று கூச்சல் போடாதீர்கள்.


தியான் சந்தைத் தெரியுமா?


பத்மபூஷன் விருது பெற்ற ஒரே ஹாக்கி வீரர். 1926ல் நியூஸீலாந்தில் நடைபெற்ற ஹாக்கி சீரிஸில் 21 போட்டிகளில் 18ல் இந்தியாவுக்கு வெற்றி. மொத்தமாய் இந்திய அணி போட்ட 192 கோல்களில் 100 கோல்கள் தியான்சந்த் போட்ட கோல்கள். லண்டனில் 1927ல் நடந்த தொடரில் மொத்த கோல்கள் 72. தியான்சந்த் போட்டவை 36! 1928ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம். அந்த ஃபைனலில் 3ல் இரண்டு கோல் தியான்சந்த் போட்டார். 5 மேட்ச்களில் தியான்சந்த் போட்டவை 14 கோல்கள்!


அதே போல 1932ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்கிலும் ஹாக்கிக்கான தங்கம் இந்தியாவுக்கு. (ஒலிம்பிக்கிற்குப் பிறகு இங்கிலாந்து, ஹாலந்து ஜெர்மனி என்று அந்தப் பயணத்தில் அவர்கள் விளையாடியது 37 போட்டிகள். 34ல் இந்தியா வெற்றி. 2 டிரா. 1 போட்டி கைவிடப்பட்டது!)

1934ல் நியூஸிலாந்து, சிலோன், ஆஸியுடனான டூரில் 48 போட்டிகள். எல்லாவற்றிலும் வெற்றி. மொத்தம் 584 கோல். (வாங்கியது வெறும் 40 கோல்!) அதில் 201, தியான்சந்த் போட்ட கோல்கள்!

1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ்ஃபைனலில் இடைவேளை வரை ஒரே கோல்தான் ஜெர்மனிக்கு எதிராக. இடைவேளையின்போது தனது ஷூவைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கால்களோடு ஆடுகிறார் தியான்சந்த். எட்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்துகிறது இந்தியா. அந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இந்தியாவுக்கு எதிராக விழுந்த ஒரே கோல் ஃபைனலில் ஜெர்மன் போட்ட அந்த கோல் மட்டும்தான்!

அடால்ஃப் ஹிட்லர் இவரது ஆட்டத்தைக் கண்டு வியந்து இந்திய ராணுவத்தில் இவர் வகித்ததைப் போலவே பெரிய பதவியை ஜெர்மன் ராணுவத்தில் தருவதாய்ச் சொல்லி அழைத்தார். இவர் மறுத்துவிட்டார். டான் ப்ராட்மேன் ‘நான் கிரிக்கெட்டில் ரன்களைக் குவிப்பதற்குச் சமமாய் ஹாக்கியில் கோல் போடுகிறார் இவர்’ என்று வியந்தார் தியான்சந்தைப் பார்த்து.

கடைசியில்?

1979ல் லிவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, பண உதவிக்கு அரசு கைவிரிக்க, சரிவர கவனிக்கவும் ஆளில்லாமல் புதுடெல்லியின் AIIMS மருத்துவமனை ஜெனரல் வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்!

ஹாக்கியாம் தேசிய விளையாட்டாம்.. ஊக்குவிக்கணுமாம்....

போங்கய்யா...


.