Tuesday, November 15, 2011

சவால் சிறுகதைப் போட்டி 2011 - முடிவுகள்

பரிசல்+ஆதி, மற்றும் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கிய ‘சவால் சிறுகதைப்போட்டி –2011’க்கான முடிவுகள்.

அன்பான போட்டியாளர்கள் மற்றும் இணைய நண்பர்களே,

“இப்பதான் விஷ்ணு கிட்ட இருந்து போன் வந்தது, ஆனால் பேசினது எஸ்.பி.கோகுல். நான் என்னோட ரிவால்வர பேன்ட் பாக்கெட்ல செருகினேன். 'டிஎஸ்பி அனுஜன்யா சாருக்கு' என்று எழுதிய பார்சல் இப்போதுதான் என் டேபிளுக்கு வந்தது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் முழுத் தகவலும் வரும். தூக்கிக்கொண்டு நேரே ஆப்பிரிக்காவில் போய் செட்டிலாகிவிட வேண்டியதுதான். அத்தனை வில்லன்களையும் பிடித்து புழல் சிறையில் அடைத்துவிட்டு நிம்மதியாக சேரில் அமர்ந்தேன். ’இன்ஸ்பெக்டர் அப்துல்லா இலங்கை போயிருக்கிறார், வருவதற்குள் நாமே கொலையாளியைப் பிடித்துவிடமுடியுமா?’ என்று கேட்டார் சிறப்புப்படை கமாண்டோ ஸ்ரீதர் நாராயணன். யோசனையோடு கைக்குட்டையில் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து, அலை பேசியையும் ஒற்றினேன்”

சமீபத்தில் ஒருநாள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா ஆகியோருடன் நாங்கள் போட்டி முடிவுகள் குறித்த ஒரு கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர்கள் மூவரும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்ததுதான் மேலே நீங்கள் காண்பது. இதிலிருந்தே தெரிந்துகொண்டிருக்கலாம்.. ஆம்! இவர்கள்தான் நமது கிரைம் கதைகளில் மூழ்கி இந்த நிலைக்குப் போன, நம்முடைய இந்த ஆண்டு சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியேற்று நம்மைப் பெருமை செய்த நடுவர்கள் என்று.

அனுஜன்யாவிடம் விபரம் சொல்லி பொறுப்பேற்கச் சொன்னதுமே, பின்னணியிலிருக்கும் பெண்டு நிமிர்க்கும் வேலையை எப்படி கண்டுகொண்டாரோ தெரியவில்லை, ‘நா ரொம்ப பிஸி’ என்று தப்பியோட முயன்றார். பின்னர் நம் ‘பதிவர்களால், பதிவர்களுக்காக..’ ஸ்லோகத்தை லைட்டாக உல்டா செய்து, ’இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டியில் ஓர் இளைஞர் நடுவர் என்றால்தானே சிறப்பு’ என்று கூறி அவரை அரைமயக்கத்தில் ஆழ்த்தி சம்மதிக்க வைத்தோம்.

சென்ற ஆண்டு சவால் போட்டியில் கலந்துகொண்டு கலக்கல் கதை எழுதி, முதல் பரிசை வென்றவர்களுள் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனைக் கேட்டபோது டக்கென ஒப்புக்கொண்டார். பாவம் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தவில்லை அப்போது. பின்னாடி அவர் புலம்பியதை ஒரு தனி தொடராகவே எழுதலாம். சென்ற ஆண்டின் நடுவர்களில் ஒருவராக இருந்தும், மீண்டும் களம் காணும் துணிச்சல் ஒருவருக்கு இருக்குமானால் அது அப்துல்லாவிற்கு மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

நடுவர்களின் திறனையும், கதைகள் மீதான அவர்களின் ஆர்வத்தையும் நாங்கள் சொல்வதெற்கெல்லாம் அவசியமில்லை என்பதை நண்பர்கள் நீங்கள் அறிவீர்கள். சவால் மற்றும் விதிமுறைகளோடு கூடிய போட்டி குறித்த முதல் அறிவிப்பை இங்கே காணலாம். துவக்கத்தில் ஒன்றிரண்டு என மெதுவாக வர ஆரம்பித்த கதைகள் பிற்பகுதியில் வந்து குவியத்தொடங்கின.

ஆம், சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் (78 பேர்) போட்டியில் கலந்துகொண்டு எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த போட்டியாளர்களின் அன்புக்கும், இதன் பின் நின்ற நண்பர்களுக்கும், போட்டியை ஸ்பான்ஸர் செய்து நடத்தித்தந்த ’யுடான்ஸ்’ திரட்டிக்கும், இணைய வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

கீழே நடுவர்களின் மடல்..

-அன்புடன்

ஆதிமூலகிருஷ்ணன், பரிசல் கிருஷ்ணா மற்றும் யுடான்ஸ் குழு.

*

அன்பு நண்பர்களே,

பல்வேறு காரணிகளை புனைந்துகொண்டு அதன் கீழ், சற்று சிரமத்துடனே கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். போட்டி குறித்தும், தேர்வு செய்தமை பற்றியும், வெற்றிபெற்ற கதைகள் பற்றியும், அவற்றின் ’விதிமுறைகளுடன் 100% பொருந்தாத தன்மை’ பற்றியும், அடைந்த குழப்பங்கள் பற்றியும் நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. இனியும் பில்டப் செய்துகொண்டிருக்காமல் நேரடியாக ரிஸல்டுக்குப் போய்விடுவது நல்லது என்பதையும் உணர்கிறோம். பரிசுகளுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியுடன் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்களுடன் சில கதைகள் இருந்தமையால் முதல் மூன்று இடங்களை இரண்டிரண்டு கதைகள் பகிர்ந்துகொள்கின்றன.

முதல் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சிலை ஆட்டம் -ஆர்விஎஸ்
http://www.rvsm.in/2011/10/2011.html


விண்டேஜ் -பினாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

இரண்டாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சட்டென நனைந்தது ரத்தம் -ஜேகே
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html


கனவில் எழுதப்படும் கதை -நந்தாகுமாரன்
http://nundhaa.blogspot.com/2011/10/2011.html


மூன்றாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சவால் சிறுகதை -இளா
http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html


கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு -சி.பி.செந்தில்குமார்
http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html


--- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ---- --- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ----

றுதிச் சுற்றுக்கு வந்த 15 கதைகளில் மற்ற 9 கதைகள் : இவையும் அறிவிக்கப்படாத ஆறுதல் பரிசுகளைப் பெற இருக்கின்றன.

நகல் -கோமாளி செல்வா
http://koomaali.blogspot.com/2011/10/2011.html


போர்க்களத்தில் சாய்ந்தால் கூட -சன்
http://writersun.blogspot.com/2011/10/2011.html


கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் -சரவணவடிவேல்.வே
http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html


உதயசூரியன் -கார்த்திக் பாலா
http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html


அர்த்தமுள்ள குறியீடு -ஸ்ரீ மாதவன்
http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html


ரங்கு குரங்கு ஆன கதை -வெண்புரவி
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html


பீமனின் பராக்ரமம் -இராஜராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/2011/10/2011.html


குறிப்பறிதல் -நவநீதன்
http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html


மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும் -சன்
http://writersun.blogspot.com/2011/10/2011_31.html


இவை தவிரவும் போட்டியில் கலந்து கொண்ட பலரும் மிகுந்த ஆர்வத்துடன் புதுமையாகவும், சுவாரசியமாகவும், நிறைவாகவும் கதை சொல்லியிருந்தார்கள். வேறு பல காரணிகளில் சிறப்பாக விளங்கிய கதைகளும் அனேகம் இருந்தன. அவற்றில் மனோ எழுதிய ’நீதானே என் பொன்வசந்தம்..’, அபிமன்யு எழுதிய ’அலைபேசி’, கணேஷின் ‘அறியா உலகம்’, பார்வையாளன் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இவை நூலிழையில் பரிசுகளைத் தவறவிடுகின்றன.

வெற்றிபெற்றோருக்கும், கலந்துகொண்டோருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துவதற்கு வெற்றியை விடவும் பங்கேற்பு என்பதே சிறந்த காரணி என்பதை அறிவீர்கள். இப்படியொரு நல்வாய்ப்பினை நல்கிய ஆதி, பரிசல் ஆகியோருக்கு நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் -

அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்.எம்.அப்துல்லா.

*

போட்டிக்களத்திலிருந்த மொத்தக் கதைகளின் வரிசையையும் இந்த இணைப்புகளில் நீங்கள் காணலாம். இணைப்பு 1, இணைப்பு 2. களத்திலிருந்தவை மொத்தம் 78 கதைகளாகும்.

இன்று சுடுவது நிச்சயம் –என்றொரு கதையை வேங்கட ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருக்கிறார். போட்டிக்கான இறுதிநாளைக் கடந்து அனுப்பப்பட்டதால் இதை போட்டிக்கு ஏற்கமுடியவில்லை. போட்டிக்கல்ல என்று குறிப்பிட்டே ஒரு கதையும் தாமதமாக எழுதப்பட்டிருந்தது. நீச்சல்காரன் என்பவர் எழுதிய கஞ்சத்தின் தலைவா! என்பதே அது. ஆகவே அதுவும் போட்டியில் இல்லை. முடிவுகள் வெளியாகுமுன்பே ஒரு ஆர்வத்தில் வெளியான விமர்சனங்களை கொண்டு கணிக்கப்பட்ட ஒரு பதிவு பார்வையாளனால் எழுதப்பட்டிருந்தது மற்றொரு சுவாரசியம்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு விபரங்களை விரைவில் இன்னொரு பதிவில் காணலாம். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.


.

சவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2

இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட விமர்சனங்களுக்கு..

கீழே உள்ள தளத்திற்குச் செல்லவும்.

http://www.thaamiraa.com/2011/11/2.html


போட்டி முடிவுகள் அறிவித்தபடி இன்று இரவுக்குள் வெளியாகும்.

அட்வான்ஸ் வாழ்த்துகள்!


.

Sunday, November 13, 2011

சவால் போட்டிக் கதைகள் - விமர்சனம்: பகுதி-1

ன்பு தோழமைகளுக்கு...

சவால் சிறுகதைப் போட்டிக் கதைகளின் முடிவை அறிவிக்க வேண்டிய தேதி நெருங்கி விட்டது. அதன் முதற்கட்டமாக சென்ற வருடம் போலவே, விமர்சனங்களின் முதல் பகுதியை கீழே உள்ள இணைப்பைப் க்ளிக்கிப் படியுங்கள்.



இவை இந்தக் குறிப்பிட்ட படைப்பின் விமர்சனமே அன்றி, உங்கள் ஒட்டுமொத்த திறமைக்கான விமர்சனம் அல்ல. ஆரோக்யமான முறையில் இவற்றை அணுகி, தொடர்ந்து பயணிக்க சிறுகதைப் போட்டிக் குழு வாழ்த்துகிறது.


நன்றி.


.

Tuesday, November 1, 2011

சவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!

'என்னப்பா.. எவ்ளோ சிக்கலான கான்செப்ட் இது? இந்த கான்செப்டுக்கு 10 கதைகள் வந்தாலே உங்கள் முயற்சி வெற்றின்னு நினைச்சுக்கோங்க..’

- சவால் சிறுகதைப் போட்டி அறிவித்த உடனே எனக்கும் ஆதிக்கும் அடுத்தடுத்து வந்த அலைபேசி அழைப்புகள் இந்தச் செய்தியைத்தான் தந்தன.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை கொண்டுவரவேண்டும், தமிழுக்கு இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. அதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுபபை எங்களை விட மூத்தவர்களுக்கும், இணைய, அச்சு இதழ்களுக்கும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் ‘வம்சி’ நடத்தும் சிறுகதைப்போட்டி அப்படியொரு அழகிய உதாரணமாகும். (அந்த சிறுகதைப்போட்டிக்கான இறுதிநாள் 02.11.11, ஆர்வமிருப்பவர்கள் விரைந்து கதைகளை அனுப்புங்கள். விபரங்கள் இங்கே).

எங்களைப் பொறுத்தவரை அதைப்போன்ற சீரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் மாணவர்களே என்று கருதுகிறோம். ஆகவே நாங்கள் அது போன்ற ஆசையில் இந்த சிறுகதைப்போட்டியினை நடத்தவில்லை.

இதை ஒரு சுவாரசியமான விளையாட்டு என்ற வகையில் கொள்ளவேண்டும். மேலும் சவால்களுக்கு உட்பட்டு வித்தியாசமான கதைகளைத் தரவேண்டியதிருப்பதும், புதியவர்களை எழுத ஊக்குவிக்கும் ஒரு காரணிதான் அல்லவா? புதிய வலைப்பூக்களைத் துவக்கிக்கொண்டு சென்ற முறை பல இணைய வாசகர்கள் கதையெழுத முன்வந்தனர். இந்த முறையும் அதே நல்ல விஷயத்தை நாம் காண்கிறோம். எப்படி எழுதத் துவங்குவது என்ற தயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். அவ்வளவே!

இருப்பினும் மேற்சொன்ன தொலைபேசி அழைப்புகள் எங்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன. ஆனால், எங்களை ஏமாற்றவில்லை நீங்கள்..

78 கதைகள் போட்டிக்கு வந்து குவிந்துள்ளன!

நடுவர்களும் ‘அட! சிக்கலான சவால் என்பதால் குறைந்த அளவே கதைகள் வரும்.. எங்களுக்கும் வேலை மிச்சம் என்றிருந்தோம். இத்தனைக் கதைகளா?’ என்று சந்தோஷப் பட்டனர். ஆம் சென்ற ஆண்டை விட சிக்கலான சவால் எனினும் சென்ற ஆண்டைவிட அதிக ஆதரவையே இப்போதும் தந்திருக்கிறீர்கள்.

ஆகவே நண்பர்களே... நடுவர்குழு கதைகளை அலசிக் கொண்டிருக்கிறது. முடிவுகள் இம்மாதம் 15 அன்று வெளியாகும்.

கலந்து கொண்டு சிறப்பித்த, ஆதரவு தந்த, பின்னின்ற ஒவ்வொருவருக்கும் மற்றும் போட்டியை ஸ்பான்ஸர் செய்த யுடான்ஸ் திரட்டிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

கதைகள் அனைத்தும் யுடான்ஸ் திரட்டியில் ஒருக்கமைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே காணக்கிடைக்கும். அனைவரும் சென்று கதைகளை வாசித்து எழுதியவர்களை பின்னூட்டங்களில் ஊக்குவிக்குமாறும், பிடித்த கதைகளுக்கு யுடான்ஸ் திரட்டியில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை வழங்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். நவ.12ம் தேதி வரை பெறப்படும் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.

78 கதைகளின் தொகுப்பையும் ஆதியின் தளத்திலிருந்தும் வாசிக்கலாம்.

குறிப்பு: உங்களுடைய கதை விடுபட்டிருந்தால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். kbkk007@gmail.com & thaamiraa@gmail.com

மகிழ்ச்சியோடு வாழ்த்துகளும்.... நெகிழ்ச்சியோடு நன்றிகளும்!

.