Wednesday, February 11, 2015

போஸ்ட் ஆஃபீஸ்

99 நாள் ஃப்ரீடம் என்றொரு சமாச்சாரத்தில் இருக்கிறேன். 99 நாட்களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் குழுக்களிலெல்லாம் இல்லை. “ஓ.. அதான் ப்ளாக்ல அப்டேட்ஸா?” என்று புருவமுயர்த்துபவர்களுக்கு ஒரு புன்னகை. படிக்க சேர்ந்துவிட்ட புத்தகங்களின் மிரட்டலும், இங்கே அதிகமாக எழுதவேண்டுமென்றும்தான் இந்த விரதமே.

இந்த 99 நாட்களுக்காக மட்டுமல்லாமல் ரொம்ப நாள் ஆசையாக, ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறேன். கடிதமெழுதுவது. எழுதுவது என்றால் எழுதுவது. மின்னஞ்சல் அல்ல.

ஏற்கனவே ஆரம்பித்து, சிலபேருக்கு எழுதியும் ஆயிற்று. வித்யாசமான க்ராஃப் ஷீட், கலர் கலர் பேனாக்கள் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.

***

ரண்டு நாட்கள் முன்னர் போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நண்பருக்கு ஒரு புக் பார்சல் அனுப்ப வேண்டியிருந்தது. முன் அறையில் பார்வைச்சவால் நிறைந்த ஒருவரும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

”ஸ்பீட் போஸ்ட் பண்ணணும்”

“உள்ள ரெண்டாவது கவுண்ட்டர்” - என்றார் அந்தப் பெண்.

உள்ளே ஐந்து கவுண்ட்டர்கள் இருந்தன. அமர்ந்திருந்தவர்களில் நான்கு பேர் இந்த வருடத்திற்குள் ரிட்டயர்டாக இருப்பவர்களாக இருக்கலாம். இரண்டாவது கவுண்ட்டரில் விசாரித்தபோது, “இங்க ஸ்டாம்ப் மட்டும்தான். ஸ்பீட் போஸ்ட் அடுத்த கவுண்ட்டர்” என்றார்.

நான்கடி நகர்ந்து பின்னுக்கு வந்து நின்றேன். மொத்தம் எத்தனை கவுண்டர்கள் என்று மீண்டும் எண்ணினேன்.

ஐந்து.

ஆக, எந்தப் பக்கத்திலிருர்ந்து எண்ணினாலும் ஸ்பீட்போஸ்ட் இரண்டாவது கவுண்டரில்லை. மூன்றாவது. அல்லது நட்டநடு கவுண்டர் என்று சொல்லியிருக்கலாம் அந்த முன்னறைப் பெண். சரி, அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.

புத்தகத்தைக் கொடுத்து, எத்தனை ரூபாய்க்கு ஸ்டாம்ப் என்று கேட்டேன். அவர் எடை பார்த்துவிட்டு, சுற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு, வாட்ச்சில் மணி பார்த்துவிட்டு, டிரங்க் பெட்டியின் பூட்டை சரிபார்த்துவிட்டு, கணினியில் எதையோ பார்த்துவிட்டு

-101 ரூபாய் என்றார்.

இந்த நேரத்திற்குள், முன்னறையில் இருந்த பார்வைச் சவால் நிறைந்த அந்த நபர் வந்தார்.  குறிப்பிட்ட சில இடங்களில் நடையை எண்ணி, சரியாக அந்தப் பெண்மணிக்கு சற்றுப் பின்னால் வந்து நின்றார்.

“சித்ரா” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றார்.

ஸ்பீட்போஸ்ட் பெண்மணி ஒன்றும் பேசவில்லை.

“சித்ரா”

அப்போதும் இந்த அம்மணியிடமிருந்து பேச்சேதும் இல்லை.

“ஓ.. அம்மாங்களா” என்றார் அவர். “சித்ரா இல்லீங்களா?”

“இல்ல” என்றார் இவர். அந்த நபர் நூறுரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுத்து, நூறு ரூபாயா என்று தடவித் தடவி சரி பார்த்து “சித்ராகிட்ட குடுக்கணும்” என்றார்.

ஸ்பீட்போஸ்ட் அம்மணி பக்கத்து கவுண்ட்டரி்ல் கொடுக்கச் சொல்ல அந்த நபர் “சரிங்க.. நான் நாளைக்கே குடுத்துடறேன்” என்று திரும்பி ஸ்டெப் வைத்து நடந்துபோனார்.

ஒரு பார்வையற்ற நபரின் குரலுக்கு முதல்தடவையிலேயே பதில் சொல்ல என்ன வந்தது இவருக்கு? இவர் அமைதியாக பதில் சொல்லாமல் இருப்பது கண்டு, அந்த நபரே “ஓ.. நீங்களா” என்று கேட்கிறார். உள்ளே பணிபுரியும் சக அலுவலருக்கே ரெஸ்பான்ஸ் இல்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஸ்பீட் போஸ்ட் வேலையை முடித்ததும் - திடீரென்று ஒன்று தோன்றியது.

85க்குப் பின் அல்லது 90களில் பிறந்தவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். அதில் கடிதம் சென்றிருக்குமா அவர்களுக்கு?

பக்கத்து கவுண்ட்டரில் கேட்டேன்.

“இன்லாண்ட் லெட்டர் இல்லீங்க”

“ஓ... நாளைக்கு வரும்களா?”

“தெரியலைங்க”

“இல்ல மேடம்.. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் கடிதம் எழுதறதுன்னு நாலைஞ்சு பேர் முடிவு பண்ணீருக்கோம். அதுக்காக..”

“நல்ல விஷயம். பண்ணுங்க. இன்லாண்ட் இல்லை”

நான் வெளியில் வந்துவிட்டேன்.

**

நேற்றைக்கு வேறொரு போஸ்ட் ஆஃபீஸில் விசாரித்தபோதும் “இன்லாண்ட் இல்லை” என்ற பதிலே வந்தது.

“ஏப்ரலுக்கப்பறம்தான் வரும் சார். எந்த போஸ்ட் ஆஃபீஸ்லயும் இல்லை” என்றார்.

வெளியில் வந்தபோது, கையில் பேப்பர்களுடன் ஒருத்தர் நின்றிருந்தார். கோடுபோட்டப்பட்ட பேப்பரில் பலரின் கையெழுத்துகள். என்னவென்று கேட்டேன்.


“சார்... BSNL தனியார் மயமாக்கக்கூடாதுன்னு ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். பப்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கறோம். ப்ளீஸ் ஒரு கையெழுத்து போடுங்களேன்”

*******

Monday, February 9, 2015

சாருவுடன் ஒரு சந்திப்பு

12வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் இனிதே நிறைவுற்றது. திருப்பூர் போன்ற ஒரு தொழில்நகரத்தில் வாசிக்கும் பழக்கம் மிக மிக அவசியமாகிறது. எந்நேரமும் தொழில் குறித்த சிந்தனையும், கொஞ்சமும் ஓய்வில்லாத மனவோட்டமும் கொண்ட மனிதர்களிடையே வாசிப்பு குறித்த உணர்வை, ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி மூலம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் பின்னல் புத்தக நிலையத்திற்கு பாராட்டுகளும், அன்பும்.

***

நாசர், மனுஷ்யபுத்திரன், பூமணி, சாருநிவேதிதா என்று இந்த வருடம் விஐபிக்களின் வருகையால் மகிழ்வுற்றனர் வாசகர்கள்.
“நாம மீட் பண்றது இதான் மொத டைம்ல?” என்றார் சாருநிவேதிதா, என்னை நண்பர் அவரிடம் அறிமுகப்படுத்தியபோது. நான் ஏதேதோ உளறினேன் என்றாலும் இதுதான் முதல்முறை அவரை சந்திப்பது. ஆனால் அப்படி நினைக்காமல் இருக்க வைத்தது அவருடன் உரையாடிய நிமிடங்கள்.



நான் அப்படி ஒன்றும் பெரிய ஆளில்லையெனினும்,
“ஓ.. நீங்கதான் அவரா?” என்று ஒரு கெத்தாகக் கேட்டுவிட்டு போய்விடாமல், ஞாபகம் வைத்திருந்து உரையாடிய சாரு நிச்சயம் வித்தியாசப்பட்டுக் கவர்ந்தார்.


***



திருப்பூரின் எழுத்தாளர் லெனினின் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஸ்டால் போட குழி தோண்டிய நாளிலிருந்து, முடியும் நாள் வரை அவர் வீட்டுக் கல்யாணம் போல பாவித்துக் கொண்டிருந்தார். அறிந்த முகங்களை வரவேற்பது, விருந்தினர்களை உபசரிப்பது, கூட்டம் எத்தனை என்று அவ்வப்போது மேடை முன்னிருக்கும் பார்வையாளர்களை எண்ணிப் பார்த்துக் கொள்வது, யாருக்காவது ஏதாவது உதவி என்றால் முகத்தைப் பார்த்தே, ‘என்னாச்சுங்க’ என்று ஓடிப் போய்க் கேட்டு உதவுவது என்று அனைத்தனையும் புன்னகை மாறாத முகத்தோடு செய்து கொண்டிருந்தார்.

சனிக்கிழமை சாருவை காரில் அனுப்பிவிட்டபிறகு,  எழுத்தாளர்கள் பாரதி சுப்பராயன், செல்வகுமார் பழனிச்சாமி மற்றும் லெனினுடன் டின்னர். சுவையான அரட்டையோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், லெனின் மட்டும் கொஞ்சம் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு கேட்டேன்:

“என்னாச்சுங்க.. என்னமோ மாதிரி இருக்கீங்க?”

“ஆமா பரிசல். கொஞ்சம் வருத்தமா இருக்கு”

“ஏன்?”

“கூட்டம் கொஞ்சம் கம்மி இன்னிக்கு. என்னான்னு தெர்ல. அதுபோக நாளையோட கண்காட்சி வேற முடியுது. இனி அடுத்த வருஷம்தான்” என்றார்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கண்காட்சி குறித்த சிந்தனையோடேதான் திரிந்தார்.

**

ண்பர் கவின் ஆசிரியராய் இருக்கும், “பாஷோ’ ஹைக்கூ இதழை திங்களன்று மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். போலவே சனிக்கிழமை ட்விட்டர் நண்பன் “செல்வு எஃபெக்ட்” புகழ் செல்வா அழைத்தான்.

“அண்ணே.. எங்கிருக்கீங்க?”

“ஆஃபீஸ்ல. என்னாச்?”

“என்னோட எலி நாவலை சாரு கொஞ்ச நேரம் முந்தி வெளியிட்டுட்டார். இங்க வருவீங்களா?”

“கொஞ்சநேரத்துல அங்கிருப்பேன்” என்று சென்றேன்.

வெளியிட்ட உடனே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. முன்னுரையை எழுதிக் கொடுத்திருந்தேன். என் புத்தகத்திற்கும், இதற்கும் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாய்ப் பட்டது. முக்கியமான ஒற்றுமை எழுத்துப் பிழைகள். கிருஷ்ணகுமாரை, கிருஷ்ணக்குமாராக்கியது உட்பட சில. இதை ஜாலியாகத்தான் சொல்கிறேன் என்பதற்காக இங்கே ஒரு ஸ்மைலியை கற்பனை செய்துகொள்ளுங்கள். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் புத்தகத்தைப் பார்த்ததும் ஏற்கனவே வேறொருவர் மூலமாக இந்தப் புத்தகம் குறித்து அறிந்ததையும், புத்தகத்தின் ஃபாண்ட் உட்பட சிலது குறித்தும் அவர் உரையாடியது செல்வாவுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என அவதானிக்கிறேன்.

விஜய்யின் அடுத்தபடம் புலி. வடிவேலுவின் அடுத்தபடம் எலி என்கிற சூழலில் இந்த நாவல் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாங்கி, ஊக்குவிக்குமாறு கே.கொ.

**

னவரி 30லிருந்து ஃபிப்ரவரி 8 வரை பத்து நாட்கள் நடைபெற்றாலும், நாசர் வந்த - கடந்த - ஞாயிறுதான் கூட்டம் என்றார்கள். சினிமா பிரபல்யம். இது குறித்து லெனினுடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘சினிமால மாஞ்சு மாஞ்சு புக் படிக்கற ஆளுக நிறைய இருக்காங்க. அடுத்தவாட்டி அவங்களையெல்லாமும் கூப்டணும்’ என்று பேச்சு வந்தது. ராஜேஷ், கரு. பழனியப்பன், கிட்டி, மிஷ்கின் என்று பல பேர் அடிபட்டது.

அடுத்தவருடத்திற்கு இன்னும் 365 நாட்களிருக்கிறது. அதற்குள் எப்படியாவது நயன்தாராவோ, நமீதாவோ நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சொல்லவில்லை.

**

Saturday, February 7, 2015

சென்னை!

“ஜப்பான், அமெரிக்கா, சீனா மூணு பேரும் இவனுக ஒருத்தனையும் விட்றாதீங்க. எல்லாவனையும் சாவடிங்க. ஒரு தமிழனும் இருக்கக்கூடாது. இவனுகள்ல ஒருத்தனுக்கும் அறிவில்ல. சுயநலம் பிடிச்சவனுக. எல்லாத்தையும் அழிக்கணும்.. விடக்கூடாது” - காந்திசிலைக்குக் கொஞ்சம் தள்ளி நடந்தபோது கையில் பிரம்புடன் ஒருவர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார். கலைந்த, அழுக்கு உடை. பழுப்பான கண்களில் ஏதோ வெறி. குரல்மட்டும் அத்தனை தீர்க்கம். அதுவும் வாகன இரைச்சல்களற்ற அந்த அதிகாலை ஆறுமணிக்கு தெளிவாக நூறு அடிவரை அவர் குரல் கேட்ட இடம் மெரினா. 

**
த்தனையாவது  முறை என்று தெரியவில்லை. ஜனவரி 30-31 சென்னை சென்றிருந்தேன். சென்னையைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அது என் ஊர் என்கிறாற்போல ஒரு நெருக்கத்தை உணர்கிறேன். சனிக்கிழமை காலையில், மெரினா சென்று இரண்டு மணிநேரங்களை செலவிட்டேன். மக்கள். மக்கள். மக்கள். “நைட் கொஞ்சம் ஏறிடுச்சு மாமூ” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அருகம்புல் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். யுவன் - யுவதிகள் காதில் இயர்ஃபோன். அங்கங்கே சின்னஞ்சிறார்கள், கோச்சுடன் வந்திருந்தார்கள். ஒரு கோச், ‘லேட்டா வந்தியில்ல, அவன் பேக்கையும் நீ தூக்கீட்டு ஓடு’ என்று தண்டனையாய்ச் சொன்னதை லேட்டாய் வந்த பையன் உற்சாகமாய் செய்ததைக் காணமுடிந்தது.





‘கைவிரல் தரைல தொடணும். அப்டியே இடதுபக்கம் தலையை மட்டும் திருப்புங்க. அப்டியே நிமிந்து, மறுக்கா விரல் தொட குமிஞ்சு வலது பக்கம் திரும்புங்க. டென் டைம்ஸ்’ என்ற குரல் கேட்ட இடத்தில் குழுவாக நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞனுக்கு வலதும் இடதுமாய் இளைஞிகள் இருக்க, முழு உற்சாகமாய் இருபுறமும் திரும்பிக் கொண்டிருந்தான். 


“அம்பது கிலோ மூட்டை. அப்டியே இப்டிக்கா தூக்கி, அப்டிக்கா அடுக்குவேன். இன்னா நென்ச்ச நீயி?” இளநீர்க் கடையொன்றின் முன் நான்கைந்து பெருசுகள் அமர்ந்திருக்க, ஒருவர் அவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டவர் அத்தனை ஒல்லி. ‘ஒடம்பு இருந்தா பலம் இருக்குன்னு அர்த்தமாக்கும்?’ என்றார் அவர். ‘சரி சரி போ.. ஒனக்கு ஆள் வந்துடுச்சு’ என்று அமர்ந்திருந்தவர் சொல்ல. கிட்டத்தட்ட அவர் சைஸுக்கு ஐந்து மடங்கிருந்த ஒரு பெண்மணி மூச்சிரைக்க நடந்து வந்து, ‘என்னாங்குது ஓமக்குச்சி?’ என்று இவர்களைப் பார்த்து கேட்டுவிட்டு ‘வாய்யா போலாம்’ என்று நடந்தார்.

**

ஃபீனிக்ஸ் மால் LUXE திரையரங்கு. 150 ரூபாய் டிக்கெட். நிச்சயமாகக் கொடுக்கலாம், அந்தத் திரையரங்குக்கு. ஒவ்வொரு அடியிலும் உங்களைக் கவர ஏதோ ஒன்றை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தில், சத்யராஜ் சுருட்டு பற்ற வைக்கும்போதெல்லாம் சுருட்டின் பேப்பர் கருகும் ஓசை காதுக்கருகில் கேட்கிறது. ஒலி அத்தனை துல்லியம். இந்தத் தியேட்டரில், நாயகி சாவித்திரியின் தொப்புளைக் காண்பித்த சைஸில்தான் சி செண்டர் டூரிங் டாக்கீஸ்களின் மொத்தத் திரையே இருக்கும்போல. (ஒரு குறிப்பு: தொப்புள் ரசிகரான கே.எஸ்.ரவிகுமாருக்கு சரியான போட்டி எஸ்.ஜே.சூர்யா என்றால் அது.... அதென்னது... ஆங்.. மிகையாகாது!)

வ்வொரு கடையையும் சுற்றிவரவே, நேரம் சரியாக இருக்கிறது. யார் போனாலும் HIDESIGN கடைக்குச் செல்ல மறக்காதீர்கள். ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் தோத்தார்கள்!

**
ருகாலத்தில் மந்திரமாய் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘ஸ்பென்சர் ப்ளாஸா’ மார்க்கெட் இழந்த நடிகையாக (படு மொக்கையான, பல பேர் சொன்ன உதாரணம்) பொலிவிழந்து நிற்க, அதைத் தாண்டி எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. இதைப் போன்ற மால்களை மக்கம் ஈக்களாய் மொய்க்க, சுத்தமும், சுதந்தரமும்தான். போலவே, கஸ்டமர் கேர். எந்தக் கடையிலாவது ‘இது என்ன விலையிருக்கும்?’ என்று உங்கள் மனதுக்குள் நினைத்தால் ‘நைன் ஹண்ட்ரண்ட் சார்’ என்று தோளுக்கருகே குரல் கேட்கும். வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவர்கள் முகம் அஷ்டகோணலாவதுமில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு கடை விடாமல் போய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்று கூட வாங்காமல். ஒரு கடையிலும் அவரை தடுக்கவோ, வேண்டாமென்று சொல்லவோ இல்லை.

**

த்தனை முறை  சென்றாலும் இடங்கள், வழிகள் என்றால் எனக்கு தடுமாற்றம்தான். முகவரி கேட்டால் ஆட்டோகாரர்கள் அத்தனை பாந்தமாக உதவுகிறார்கள். "உட்லண்ட்ஸ்னா நியூ உட்லண்ட்ஸா? நேரா போங்க. யாரையும் கேட்கவேணாம். ஒண்ணு, ரெண்டு, மூணு... நாலாவது சிக்னலாண்ட லெஃப்ட். அங்கிருந்து நேரப்போனீங்கன்னா.. ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சாவது சிக்னலாண்ட லெஃப்ட் எடுங்க. ஃப்ளை ஓவர் வரும். அதுல போகக்கூடாது. கீழ போனீங்கன்னா... ஆமா எங்கிருந்து வர்றீங்க?"

"திருப்பூர்"

"அப்ப வேணாம். கஷ்டம்.. நீங்க என்ன பண்றீங்க.. நேராப் போய்ட்டேஏஏஏஏ இருங்க. நாலாவது சிக்னல்ல லெஃப்ட் எடுங்க. யாரையும் கேட்கவேணாம்... " என்று தொடர்ந்தார்.

வழி சொல்கிற அனைவரின் வாயிலும் "யாரையும் கேட்கவேணாம்" தவறாமல் வருகிறது. 

சனிக்கிழமை காலை மெரினா வாக்கிங் போனேன் அல்லவா? அன்று மாலை நண்பர் அப்துல்லாவைச் சந்தித்தபோது “அண்ணே.. நாளைக்கு சாந்தோம் பீச் போலாம்னிருக்கேன். எப்டிப் போறதுண்ணே?” என்றேன். 

“இன்னைக்கு எங்க போனீங்க?”

“வீரமா முனிவர் சிலைக்குப் பக்கத்துல காரை நிறுத்தீட்டு, ஒரு கிலோ மீட்டர் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போனேன்”

“அதாண்ணே சாந்தோம் பீச்”

ஓஹோ என்று வழிந்துவிட்டு வந்தேன். 

ஞாயிறு திரும்பும்போதுதான் ஞாபகம் வந்தது. நான் கேட்க நினைத்தது பெசண்ட் நகர் பீச். 

****



Wednesday, January 28, 2015

அவன்களால்தான் நிறைந்த உலகு

2005

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.

“என்னாச்சுங்க?”

“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.

“அப்ப அரை கிலோமீட்ட முன்னாலதான பெட்ரோல் பங்க்? எதுக்கு தள்ளீட்டே போறீங்க? இனிமே போனா அஞ்சாறு கிலோமீட்டராகும் பெட்ரோல் பங்க் வர..”

“அது வந்து..” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, வார்த்தைகளை மென்று விழுங்கினர்.


“ஏங்க.. என்னாச்சு?”

“பெட்ரோலுக்கு காசில்லைங்க. அதான் அப்டியே தள்ளீட்டு போய்டறோம். மூணு, நாலு கிலோமீட்டர்ல எங்க கம்பெனி வந்துடும்”

அவன் யோசித்தான். “என்னோட பைக்கும் ரிசர்வ்தான் பாஸ். வேண்ணா ஒண்ணு பண்லாம்” தன் பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். “முப்பது ரூவா இருக்கு. அப்டியே பின்னால போய், அந்த பங்க்லயே அடிச்சுட்டுப் போங்க. வேகாத வெயில்ல எவ்ளோதூரம் தள்ளுவீங்க!”

“ரொம்ம்ம்ப தேங்க்ஸ் பாஸ்!!”

-------------------------

2010

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.

“என்னாச்சுங்க?”

“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.

இவன் பைக்கை நிறுத்தினான். சாலையோரம் ஏதும் தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று தேடினான்.

“பெட்ரோல் பங்க் ரொம்ப தூரம்க. நான் கொஞ்சம் பெட்ரோல் தர்றேன். போயிருங்க. வெயில் வேற ஜாஸ்தியாருக்கு. பாட்டில் ஏதும் கெடைக்குதான்னு பாருங்க”

அவர்கள் இருவரும் இவன் அருகில் வந்து தேடினர். 

சாலை நீளமாய், ஒன்றிரண்டு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது. நான்கைந்து நிமிடங்களில் ஒருவரும் இருக்கவில்லை சாலையில்.

இவன் பாட்டிலைத் தேட, இவன் இருபுறமும் நின்றிருந்த இருவரில் ஒருவன், இவன் தோளில் கைபோட்டான். இன்னொரு கையில் ச்சின்ன கத்தி முளைத்திருந்தது.

“பாஸ்.. ஃபோன், காசு, வாட்ச் எதிருந்தாலும் எடுத்து அவண்ட்ட குடுத்துடு பாஸு. எதும் வித்தியாசமா ட்ரை பண்ணி வெட்டு வாங்கிக்காத”

இவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. டக்கென்று இடதுகையை பாக்கெட்டில் விட்டு, மோதிரத்தை நைஸாக விரலாலேயே கழட்டி பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.

டக்கென்று பின்பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். வாட்ச்சைக் கழட்டினான்.

“முன்னூறு ரூவாதான் இருக்கு. வாட்ச் இந்தாங்க. ப்ளீஸ் ஃபோனை விட்டுடுங்க. ஆஃபீஸ் ஃபோன். காண்டாக்ஸ்லாம் இருக்கு. நான் மெர்ச்செண்டைஸரா வேலை செய்யறேன். கால் வந்துட்டே இருக்கும். ப்ளீஸ் கெஞ்சிக் கேட்டுக்கறேன். உங்களை நம்பி பட்டப்பகல்ல பைக்கை நிறுத்தினேன். இப்டி பண்ணீட்டீங்களே..”

“அட்வைஸ்லாம் வேணாம் பாஸ். ஓகே. ஃபோனை வெச்சுக்கங்க” என்ற ஒருவன், இரண்டாமவனிடம் “போலாண்டா. வேற காசில்லை இவண்ட்ட” என்றபடி தங்கள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினர். 


அவன் மிகுந்த வேதனையோடு தன் பைக்கை எடுத்து அந்த இடத்தைக் கடக்கையில், வெறும் இருநூறு அடி தொலைவில் இருந்த போலீஸ் செக்போஸ்ட்டை வாழ்நாளுக்கான வெறுப்புடன் பார்த்தபடி கடந்தான்.

-------------------

2015

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் ஒருவரைப் பார்த்தான். தன் பைக், நின்று கொண்டிருக்க - இவனை நோக்கி கை காட்டியபடி நின்று கொண்டிருந்தார். 

அருகில் சென்றவன் ஏதோ யோசனை வந்தவனாய், பைக் வேகத்தை அதிகப்படுத்தியபடி சென்றுவிட்டான்.

--------------------------

குறிப்பு: அவனும் அவனும் அவனும் வேறு வேறு ஆட்கள். ஆனால் அவன் செய்தது, அவனுக்கும்-அவனுக்கும், அவனுக்கு நிகழ்ந்தது அவனுக்கும்-அவனுக்கும் தெரியும். அவன் செய்ததன் காரணமாக, அவன் செய்ய நினைத்து மாட்டிக் கொண்டதால் அவன் அதைச் செய்யவில்லை. அவ்வளவுதான். 


**


Monday, January 26, 2015

அவியல் 26 ஜனவரி 2015

ந்தக் குடியரசு தினம் வந்தாலும், போய் நெட்டில் இரண்டு விஷயங்களைத் தேடுவோம்.

1. இது எத்தனையாவது குடியரசு தினம்?
2. சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

இதை இரண்டையும் தெரிந்து கொண்டு கொஞ்சம் மானே தேனே போட்டு குடியரசு தினத்தைக் கொண்டாடிவிட்டு வந்தாச்சு.


 ‘டேஏஏஏஏஏஏஏஏய்.... ஒரு இந்தியன் இப்டி எப்டிச் சொல்லப் போச்சு?’ என்று குத்தவராதீர்கள். இந்தியன் என்றால் உண்மையைச் சொல்லலாம் இல்லையா?

____________________

தொட்டால் தொடரும்
............................................

ண்பர் கேபிள் சங்கர் டைரக்‌ஷன், வசனம், இன்னொரு நண்பன் கார்க்கி இயக்கம் - வசனத்தில் உதவி என்று வந்திருக்கும் படம்.

நல்ல கதை. நல்ல வசனம், மோசமான திரைக்கதை, படு கடுப்பேற்றும் பின்னணி இசை. ஹீரோயின், வேறொரு ஃபோட்டோவை எடுத்து தன் ஃபோட்டோவை வைக்கும் இடத்தில் படம் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த விறுவிறுப்பை கொண்டு போனபடியே மற்றவற்றை ஃப்ளேஷ்பேக்கில் காட்டியிருக்கலாம். பாலாஜியின் நடிப்பும் வசனங்களும் நன்று. தமன் / அருந்ததி நடிப்பும் நிறைவு. 

பழம் தின்று கொட்டை போட்ட சிலர் எடுக்கும் படங்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது சீனிலேயே கொட்டாவி வர வைக்கிற சமயத்தில் முதல் படமாக இது பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம் கேபிள்!

-------------------------------


டனடி கருத்து சொல்கிற வியாதி ஒன்று படுமோசமாக பரவி வருகிறது. எல்லாவற்றிற்கும் உடனடி கருத்து. செய்திகளை முந்தித் தருவதாய் எண்ணி கே.பாலச்சந்தர் இறப்பதற்கு முன்னரே RIP போட ஆரம்பித்துவிட்டார்கள் வாட்ஸப்பில். ரஜினிகாந்துக்கு இவர்களே பத்மபூஷன் குடுத்துவிட்டார்கள். இப்படி நிறைய. 

ஒரு 99 நாள் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் க்ரூப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

அதுவரை இங்கே மட்டும் எழுதுவதாய் உத்தேசம். பார்க்கலாம்.

.  

Friday, January 23, 2015

ரிப்போர்ட்

"ஏப்பா ரிப்போர்ட் கேட்டு ரெண்டு நாளாச்சு. இன்னைக்கு தர்றேன்ன.. ஞாபகமிருக்கில்ல?”

“இருக்கு சார்” என்றான் கணேஷ்.

“இருக்கா? ஞாபகமிருக்குங்கறியா... இல்லை ரிப்போர்ட் ரெடியா இருக்கா?”

“ஞாபகமிருக்கு சார். ரிப்போர்ட் இன்னும் ஒன் ஹவர்ல ரெடியாகிடும்”

“சரி.. கேபினுக்கு கொண்டு வா” என்று நகர்ந்தார் மேனேஜர்.

*

“இன்னிக்கு நீயா?” என்றாள் மானஸா.

“ஆமாப்பா” என்றான் கணேஷ்.

“என்ன ரிப்போர்ட் குடுத்தாலும் எதாச்சும் ஒரு நொள்ளை சொல்லுவார். நாம எவ்ளோ கரெக்டா, எல்லா டேட்டாஸ் எடுத்தாலும் இல்லாத ஒண்ணைத்தான் கேட்பாரு” - புலம்பினாள் மானஸா.

”இப்படித்தான் போனவாரம்  நான்  ஒரு ரிப்போர்ட் குடுத்தனா..” என்று ஆரம்பித்தான் அடுத்த டெஸ்க் சுந்தர். அதன்பின் நான்கைந்து இப்படித்தான்கள் வந்தன.

“ப்ளீஸ்.. இன்னும் அரைமணி நேரத்துல ரெடி பண்ணிக் கொண்டு போகணும். எல்லாரும் சைலன்ஸ் ப்ளீஸ்” என்றான் கணேஷ்.

சிஸ்டத்தில் ஃபோல்டரைத் தேடினான். எக்ஸெல்லை திறந்தான். ஒவ்வொன்றாக காபி பேஸ்டினான். மூன்று மாத ரிப்போர்ட்டைத் தொகுத்தான். ஒவ்வொரு ஷீட்டிலும் ஒவ்வொரு விதமாக அதை பதிவாக்கினான். எல்லாவற்றிற்கும் Chart க்ரியேட் செய்தான். ஒவ்வொன்றையும் தனித்தனியாக காண்பிக்க எழுத்து / எண்களுக்கெல்லாம் வேறு வேறு கலர் கொடுத்தான்.   மொத்தம் 12 பக்கம் வந்தது.

45 நிமிடங்களானது முடிக்க.

ப்ரிண்ட் எடுத்தான். ஃபைல் ஃபோல்டர் ஒன்றை தேடி எடுத்து அதில் வரிசையாக சொருகினான்.

55  நிமிடங்கள்.

எழுந்தான். சுற்றியுள்ளவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான்.


 மேனேஜர் கேபினை - எக்ஸ்யூஸச் சொல்லிவிட்டுத் - திறந்தான்.

“3 மாச ரிப்போர்ட் சார்” என்றான்.

வாங்கியவர் இரண்டே நிமிடங்கள் மேய்ந்து விட்டுக் கேட்டார்:

“ப்ரிண்டர் டோனர் மாத்தலியா? பேப்பர்ல கோடு விழுது பாரு. போனதடவை சுந்தர்கிட்டயே சொன்னேன்.  மேனேஜர்ட்ட  ஒரு ஃபைல் குடுக்கறதுன்னா இப்படித்தான் குடுப்பீங்களா? சீ மிஸ்டர் கணேஷ்...” என்று ஆரம்பித்தார் மேனேஜர்.
.




Thursday, January 22, 2015

தொட்டால் தொடரும்!



உள்ளதை உள்ளபடி ஒரு சிலரிடம் மட்டுமே பேச முடியும். எனக்கு அப்படி ஒரு நண்பர் கேபிள் சங்கர்.

பேசாவிட்டாலும் இவனுக்கு என்னையும் எனக்கு இவனையும் தெரியும். அவன் - கார்க்கி.


வலையுலகம் தொட்டு ஆரம்பித்த நட்பு - தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நன்றாக நினைவிருக்கிறது... கேபிளுக்கு இந்தப் படம் இயக்க வாய்ப்பு வந்ததும், உடனே நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு, “கார்க்கி.. நீயும் என்கூட வொர்க் பண்ற” என்றார்.

உதவி இயக்கம், வசனம் உட்பட பாடல் ஒன்றையும் எழுதியிருக்கிறான் கார்க்கி. அவன் பெயரை போஸ்டரில் பார்த்தபோதே மகிழ்வாக இருந்தது. நாளை திரையில் பார்க்கப் போகிறேன்.

சூப்பர் சிங்கர் ஜூனியரில், குழந்தைகளுக்காக ஓட்டு கேட்கும் பெற்றோர்களை நேற்றுதான் கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.

“நல்லா இருந்தா ஓட்டுப் போடுங்கன்னு கேட்காம, ‘உங்க வீட்டுக் கொழந்தை, ரொம்ப ப்ராக்டீஸ் பண்ணினா, அவளுக்கு இசைதான் உயிரு’ இப்டியெல்லாமா சொல்லி ஓட்டுக் கேட்பாங்க?” என்று.

அதன்படி, படத்தை உண்மையாக விமர்சியுங்கள். விமர்சிக்க என்ன செய்ய வேண்டும்?

ஆங்! தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டும்!

கேபிள் சங்கர் & கார்க்கி...

உங்கள் பெயர் திரையில் வருகையில் ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு கைதட்டலும் என்னுடையதாக எண்ணிக் கொள்ளுங்கள்!

இந்த வெற்றிப் பயணம்....  தொடரட்டும்!

.

இதை எதுல எழுதுவீங்க?

“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.

ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ..  ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.


“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”

உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”

“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”

“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.

“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”

இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.

“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.

புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.

உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.

 “தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப  ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”

“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”

“நீங்க நிருபரா?”

“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”

“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”

“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”

“புரியலையே தம்பி...”

“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”

“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”

“ஐயா உங்க பேர் கேட்டேனே...”

“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”

“சரி..  உதவின்னா காசு வாங்குவீங்களா?”

அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.

“சில்லறை இல்லீங்களா?”

“இல்லீங்களே”

இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.

“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.

“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.

வாங்கியவர்,  அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.

 “ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.

 “கறாரா வாங்கீடுவீங்க போல?”

“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி.  ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”

அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.

“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”

“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.

“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”

“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”

“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”

“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.

“சரிங்க” என்றேன்.

“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”

“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதுங்களே..”

“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”

“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”

“சரிங்கய்யா”

“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.

“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”

நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.

“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.

 “அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.

“நீங்க?”

“நான் இங்கதான் இருக்கேன்”

“எங்க?”

“இதே ஊர்ல..”

“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“சும்மாதான் இருக்கேன்” என்றான்.

>>>

Tuesday, January 20, 2015

வெல்டன் மதன் கார்க்கி!


mile emotic(1)

ஐ!

மிகுந்த எதிர்பார்ப்போடு போய்ப் பார்த்தபடம். படம் பார்த்தபிறகு, ஷங்கர் ஒரு விளம்பர ஏஜன்ஸி ஆரம்பித்திருந்தால் நம்பர் ஒன் ஆக வந்திருப்பார் என்று தோன்ற வைத்தது அவர் காட்சிப்படுத்தியிருந்த சில பல ஐடியாக்கள்.

அதிலும், ஐல ஐல ஐ பாடலில் நான்கு  ப்ராடக்டுகளுக்கான விளம்பரத்தைக் கண்பித்திருப்பார்கள். அந்தப் பாடலின் மூலமேதான், விளம்பர உலகில் எமியும், விக்ரமும் ஜோடி சேர்ந்து கலக்குவார்கள் என்பதும் / அவர்களிருவரும் காதலிக்கத் துவங்கி - காதலில் திளைப்பதும் காண்பிக்கப்பட்டிருக்கும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கான்செப்ட்கள் அட்டகாசம். யார் குடுத்திருந்தாலும் சபாஷ்! 

இதில் விசேஷம் என்னவென்றால், மதன் கார்க்கியின் அசத்தலான வரிகள். தனியாகக் கேட்டால், இருவரும் பாடும் காதல் பாடல் போலவும், படத்தில், காண்பிக்கப்படும் ப்ராடக்ட் விளம்பரங்களுக்கான வரிகள் போலவும் இருக்கும்.

மதன் கார்க்கி.... You Rock Man!!!

இப்போது வரிகளையும் அது எதற்காக காண்பிக்கப் படுகிறது என்பதையும் பாருங்கள்:

**********************************************************
உன் பிடியிலே என் உயிரும் இருக்க,
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ
எனில் முட்கள் கொய்தாய்!
காலை உந்தன் முத்தத்தில் விடியும்,
நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ
எனை மென்மை செய்தாய்!
எனது ரோமனே
சிறிது கீறவா?
விழியின் கூரிலே
மனதை கூறவா?
முகத்தின் மூடியை
திருடிப் போகவா?
நீங்கா.......தே!
என் ரோமனே....வா!

<ஷேவிங் ரேஸர்>
************************
(2)
கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி
ஐலா ஐலா எடுப்பாயா?
தூரிகையிலே எனை கிடத்தி விண்
மீன்கள் வெள்ளை அடிப்பாயா?
துப்புத் துலக்க வருவாயா?
முத்துச் சிதறல் oh yeah!
பூ இல்லாமல் ஐலா,
வாசம் oh yeah!
நீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா?
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி - இனி
மின்சாரப் பஞ்சம்
தீர்ப்போம் சிரி துளி!
<டூத் பேஸ்ட்>
***********************
(3)
உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச
எட்டிப் பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே hey yeah!
இளஞ்சிவப்பை oh yeah!
ரோஜா பூவில் ஐலா!
வண்ணத்தை oh yeah!
நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக!
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள் - உன்
கீழே பூக்கும் வெண் பூக்கள்
பூக்கள் இல்லை, நிழல்!

<ஃபேர்னஸ் க்ரீம்>

******************************
(4)
சக்கையென வானத்தைப் பிழிந்து
ஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
பேய் வெறி உன்னில் கண்டேன்
இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா?
காதல் தறியிலே
நாணம் உரிக்கவா?
பருத்தித் திரியிலே
பொறிகள் தெறிக்கவா?
ஓடா.......தே!
என் ஜீன் மானே....வா!
<ஜீன்ஸ்>

****************************

எப்பூடி!!! 

Monday, January 19, 2015

இந்த நாடும்...

“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”

முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.

நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.

இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.

இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.

“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.

வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.

எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.

எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:

1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?

2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?

3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?

4. &$%&க் கொழுப்பு.

இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?

ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.

என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.

ஆமென்.