Friday, December 31, 2010

2010ன் டாப் 5 நிகழ்வுகள்

டாப் 5ன்ன உடனே உலகம் பூராவும் நடந்ததோட டாப் ஃபைவ்ன்னு நினைச்சு வந்துடாதீங்க. என் லைஃப்ல நடந்த டாப் 5.

.

என் புத்தக வெளியீடு.
நான் எழுதிய கதைகளைத் தொகுத்து ஒரு மகராஜன் புத்தகமாய் போட, அது ஃபிப்ரவரி 14ம்தேதி, வெளியிடப்பட்டது. வாசகர் கடிதம், துணுக்கு, கேள்வி என்று ஆரம்பித்து இந்த நிலைவரை வந்தது ஆச்சர்யம்தான். இதற்கான தகுதி இருக்கிறதா என்ற வாதத்திற்கெல்லாம் வராமல், கடலோரக் கிளிஞ்சலைப் பொறுக்கி முத்தென நினைத்து குதூகலப்படும் குழந்தையின் மனப்பாங்குடன் அதை அள்ளியெடுத்து வாசித்துப் பாராட்டி, விமர்சித்து, குட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு.

விபத்து. ஃபிப்ரவரியின் ஒரு சனிக்கிழமை நேர்ந்தது அந்த விபத்து. காரில் சீட் பெல்ட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. தலையில் பெரும் காயத்தோடு, பத்துக்கும் மேற்பட்ட தையல்கள். விபத்து நடந்த கணத்திலிருந்து மீண்டும் அன்றாட நிகழ்விற்குத் திரும்பும் வரை உற்சாகமோடே இருந்த என் மனநிலையை -வேறு வழியின்றி - நானே மெச்சிக் கொள்கிறேன். என்னவாயிற்று என்று பதறிய நட்புகளுக்கு நானெழுதிய பதிவிற்கு, நான் மிக மதிக்கும் பல பெரிய பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தன. சுஜாதாவின் எழுத்தை நினைவுபடுத்தியது என்று மிகப்பிரபலம் ஒருவர் சொன்னதை சுஜாதா கேட்டால் சிறு புன்னகையுடன் கடப்பார். எனக்கது புக்கர்.

வேலைமாற்றம். பத்து முழு வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து தனிப்பட்ட சில காரணங்களுக்காக அந்நிறுவனத்தை விட்டு புதிய இடத்தில் சேரும்போது, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் மனவலியை உணர்ந்தேன். ஆறு மாதங்கள் ஆனது மனதளவில் அதை ஏற்க. புதிய இடம், புதிய வேலை தந்த சவால்கள் பிடித்திருந்தது. என்னை நானே உணர முடிந்தது. COMFORT ZONEலிருந்து தாவுவதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்ததன் மூலம் என்னை நானே மெருகேற்றிக்கொள்ள இந்த மாற்றம் உதவியது. என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. அலுவகத்தில் நல்ல நண்பர்கள் என்று நினைத்து நட்பு பாராட்டிய சிலரின் நிறங்கள் வெளுத்தன. என்னையும் அவ்வாறே அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். பத்து வருடங்கள் பழகிய ஒருவனை, ஒரே வாரத்தில் மறக்கும் வரம் கிடைக்கப் பெற்ற மாமனிதர்கள் புண்ணியாத்மாக்கள் என்பதைத் தவிர சொல்வதற்கொன்றுமில்லை. வியாபாரக் கண்ணோட்டம் என்பது வியாபாரத்திற்கு மட்டுமல்ல நான் கொண்டாடும் நட்புகளுக்கும்தான் என்று சொன்னார்கள் சிலர். நீ என் மகன், நீ என் தோழன், நீ என் சகோதரன், நீ என் எல்லாம் என்றவர்களெல்லாம் ‘ஹலோ.. ஐ’ல் காண்டாக்ட் யூ லேட்டர்’க்கு மாறினார்கள். பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்தபோதும் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லா தெய்வப்பிறவிகள் என்னைச் சுற்றி இருந்திருக்கிறார்கள், அவர்களைச் சுற்றி நானும் அளவளாவி நடந்திருக்கிறேன் என்பன போன்று பல உண்மைகள் எனக்குத் தெரிவித்தது இந்த வேலை மாற்றம்.

சவால் சிறுகதைப் போட்டி. தமிழுக்கு நம்மால் ஆன ஏதேனும் சிறு பங்காய் இருக்க வேண்டும் என்று கூட்டம் போட்டு, திட்டமிட்டு என்றெல்லாம் இல்லாமல் உங்களில் ஒரு.. மன்னிக்க இருவராய் நானும் ஆதியும் ஆரம்பித்த சவால் சிறுகதைப் போட்டி எங்கள் வலையின் ‘டாக் டாப் 2010’ ஆனது. சவால் சிறுகதை என்று தேடினால் கூகுளாண்டவரை லட்சத்துக்கு மேற்பட்ட முடிவுகளோடு வந்து நிற்க வைத்தது. வருடா வருடம் ஏதேனும் ஒரு போட்டி எங்களின் பங்களிப்பாய் இருக்க வேண்டும் என்று திட்டமிட வைத்தது. எங்கெங்கே சறுக்கினோம் என்பதுணர்ந்து சரி செய்து இன்னும் வேகமாய், திடமாய் போட்டி நடத்த அனுபவம் கொடுத்தது. சில விமர்சனங்கள், பல பாராட்டுகள் என எங்களைச் செலுத்திய இந்த அனுபவம் மறக்க முடியாத நிகழ்வு.

நீயா நானா பங்கேற்பு: திருச்சி ஹலோ எஃப் எம் நண்பர் ராஜா, திருநெல்வேலி ஹலோ எஃப். எம். எழுத்தாளர் தமயந்தி என சிலர் அவ்வப்போது அழைத்து என்னை பண்பலையில் பேச வைத்து பெரிய மனுஷனாக்குவதுண்டு. நானும் வெங்காய விலை முதல் ஒயிட் ஹவுஸில் வெள்ளையடித்த வரலாறு வரை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு சொதப்புவேன். இதையெல்லாம் கண்ட சின்னவள் மேகா ‘நீங்க எப்பப்பா டிவில வருவீங்க’ என்று கேட்டு வைத்தாள். ‘டி வி எஸ்-ஸில் வருவதென்றால் அன்றைக்கே வரலாம். டிவியிலா?’ என்று வழக்கம்போல மொக்கை போட்டேன். அவள் கேட்ட நேரம் அடுத்த நாளே விஜய் டிவியிலிருந்து அழைப்பு வர, சென்று வென்று வந்தேன். அந்தக் கதையை நீங்களும் படித்திருப்பீர்கள். மற்றபடி அதில் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.


2010ல் எனக்குக் கிடைத்து நான் பொக்கிஷமாய் வைத்திருக்கும் இரண்டு பொருட்கள்: நண்பன் ஒருவன் பரிசாய்த் தந்த பைனாகுலரும், பதிவர் கோபி தந்த 18000 பெறுமானமுள்ள (ஆம். பதினெட்டாயிரம் ரூபாய்!) MONTE BLANC (மா’ம் ப்ளா - என்றுதான் உச்சரிக்க வேணுமாமே?) பேனாவும்.


முக்கிய இந்த ஐந்து நினைவுகள் / இரண்டு பரிசுகள் தவிர்த்து, பிற வழக்கம்போல.


நீ எத்தனை முட்டினாலும் மோதினாலும் பெண்ணென்பது பெரும் சக்தி என்பது தெரிந்தது. அவளன்றி அணுவும் அசையாது, அசைக்க நினைத்தாலும் முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. நான் சொல்லும் அந்தப் பெண் மனைவி என்பது உ. கை நெ.கனி. சில பல வேளைகளில் மௌனமே ஆயுதம். பேசி ஒன்றும் ஆவதற்கில்லை என்பது உட்பட பல பால பாடங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்தது.

சில நட்புகள் காட்டிய அன்பின் ஆழம் இதயத்தை வருடியது. சுகம், சோகம் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கிடைத்த நட்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நானும். நீ உன்னைப் பற்றிய எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனேனும் உலகில் இருப்பான் என்பார்கள். எனக்கது ஒன்றுக்கு மேற்பட்டதாய் இருக்கிறது. அவர்களுக்கும் நான் அவ்வாறே என்பதில் ஒரு மகிழ்ச்சி.

இந்த வருஷத்தில் நீ கற்றுக் கொண்டதென்ன? புத்தாண்டில் என்ன உறுதிமொழி எடுக்கப் போகிறாய் என்றெல்லாம் என்னை நானே கேட்டுக் கொள்வதில்லை. புத்தாண்டென்றால் நான் எதிர்பார்ப்பது உறுதிமொழியோ, வோட்காவோ, பீரோ அல்ல.. தடித் தடியான டைரிகள். ஏனோ இந்த வருடம் அவை அதிகம் வரவில்லை.

இரண்டாயிரத்துப் பதினொன்று எல்லாருக்கும் இதமாய் அமைய...

பதிவர்களுக்கு: எழுத நினைத்தது உடனே வார்த்தைகளாய் வந்து விழ, எழுதிய பதிவுகள் உடனே ஹிட்டாக, வலைப்பூவின் ஹிட் கவுண்டர் நிரம்பி வழிய, பின்னூட்டங்கள் தேவையில்லை என்று நீங்கள் பெட்டியை மூடுமளவு பின்னூட்டங்கள் வந்து விழ, சைடு பார் முழுவதும் நிரம்பும் வண்ணம் ஆயிரமாயிரம் ஃபாலோயர்கள் வர, உங்கள் பெயர் பஸ், டிவிட்டர் உட்பட எங்கேயும் கிழிந்து தொங்கி பஞ்சராகாமல் இருக்க...

வாசகர்களுக்கு: படிக்கும் பதிவுகள் உங்கள் மனம் கவர, சோகமாய் இருக்கும்போது நினைத்துச் சிரிக்கும் பதிவுகள் வர, சண்டை சச்சரவுப் பதிவுகள்-பஸ்கள்-ட்விட்டர்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க, அப்படியே பட்டாலும் அவற்றைப் படித்து மண்டை குழம்பாமல் இருக்க, உங்களுக்குப் பிடித்த பதிவர்கள் இடைவெளியில்லாமல் எழுதிக் கொண்டே இருக்க (ஹி..ஹி..)

குடும்பஸ்தர்களுக்கு: புக்கிங் செய்ய அழைத்த உடன் கேஸ் கம்பெனிக்காரன் உங்கள் அழைப்பை அட்டெண்ட் செய்ய, உங்கள் நண்பனோடு ஒரு லார்ஜ் அடிக்க நினைக்கையில் மனைவி மனமார அனுமதி அளிக்க, முக்கியமான மேட்ச்களின் போது ரிமோட் உங்கள் ஆளுமையில் இருக்க, சேமிப்பென்று பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும் கடன் என்ற ஒன்றை நாடாமல் வாழ, மனைவி / கணவன் பரஸ்பரம் அன்பால் தங்களிணையை ஆள, உங்கள் குழந்தைகள் படிப்பின் நம்பர் ஒன் ஆகாவிட்டாலும் பண்பில் சிகரமாய்த் திகழ,

உத்தியோகஸ்தர்களுக்கு: பணி செய்யும் இடத்தில் நீங்கள் செய்த வேலைக்கு உங்களுக்கே பாராட்டுக் கிடைக்க, அப்ரைசலின் போது உங்கள் ஜாதகக்கட்டத்தில் சுக்கிரன் சிரிக்க, அட்டெண்டன்ஸ் ரிப்போர்ட்டில் LATE COMERSல் உங்கள் பெயர் வராமலிருக்க, கேட்டபோதெல்லாம் முகச் சுளிப்பில்லா பர்மிஷன்/லீவு கிடைக்க..........

பொதுமக்களுக்கு: 2011 தேர்தல் சமயத்தில் கூம்பு வடிவ மைக்குகள் உங்கள் வீட்டருகில் கட்டப்படாமல் இருக்க, உங்கள் நேர்மையைச் சோதிக்கும் வண்ணம் கையூட்டுகள் உங்களைக் கவராமல் இருக்க, நீங்கள் செல்லும் வழியில் குண்டு குழியில்லாத சாலைகளிருக்க, அப்படியே இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லாமலிருக்க, அப்படியே இருந்தாலும் அப்போது வாகனமேதும் கடக்காமல் இருக்க, விலையேற்றம் என்பது தவிர்க்கவே முடியாது வேறு வழியே இல்லையென்பதை உணர்ந்து, இனிமேலும் நீங்கள் புலம்பாமல் நாட்களைக் கடத்த...


இன்னும்..
இன்னும்.. உயரங்கள் பல தொட

வாழ்த்துகள்!


.

(தொடர்புடைய பதிவு: சொல்லாததும் உண்மை. 2010 புத்தாண்டுக்கு எழுதியது)

.

Tuesday, December 28, 2010

மைனாவும் மன்மதன் அம்பும்


கா
ந்தி செத்துட்டாரா, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா, சக்கரம் கண்டுபிடிச்சாச்சா - இப்படீன்னெல்லாம் கேட்காம கம்முன்னு படிங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு தமிழுக்கு - வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாச்சும் - சேவை இல்லீன்னா இடியாப்பம் செய்யலாம்ன்னு இருக்கேன். புரிஞ்சுக்கங்க.. ஆமா...

----------------

மொதல்ல மைனா.

எனக்கு ஒரு வியாதி இருக்கு. சோகப்படம்னா அந்தத் தியேட்டரைச் சுத்திதான் ஆஃபீஸூக்கே போவேன். அதென்னமோ சோகரசம் பிடிக்கறதில்லை. ‘அதான் வாழ்க்கையே முழுக்க சோகமா இருக்கே.. அப்பறம் என்ன தியேட்டர்லயும் போய்’ அப்படீன்னெல்லாம் காரணம் சொல்ல விரும்பல. போனமா ரெண்டரை மணி நேரம் ஜாலியா ரசிச்சமா வந்தமான்னு இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.

மைனா வர்றதுக்கு முன்னாடிலேர்ந்தே ஊரே ‘மைனா.. மைனா’ன்னு பேசிகிட்டிருந்துச்சு. காட்டுக்குள் பருத்திவீரன்னு கமெண்ட்ஸ் வேற. சென்னைலேர்ந்து வர்ற ப்ரிவ்யூ தகவல்கள் ‘படம் டாப்பு. ஆனா சோகமா முடியுது’ன்னு சொல்லிச்சு. முதல் மரியாதை, பருத்தி வீரன் உட்பட பல படங்களை சோகம் அதிகமா இருக்கும்ன்னு ரொம்பவே லேட்டாத்தான் பார்த்தேன். அதே மாதிரிதான் ஆச்சு மைனாவுக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சுதான் படம் பார்த்தேன். செமயான படம். படத்துல எனக்குப் பிடிச்சது தம்பி ராமையாவோட கேரக்டர்தான். கைதியோட வீராப்பா இருக்கறதும், அவன் கோவப்படறப்ப ‘ஜெயில்ல வெச்சு நொங்கெடுத்துடலாம்’ன்னு இன்ஸ்பெக்டர்கிட்ட (வார்டன்?) சொல்றதும், அவனால காப்பாத்தப்படறப்ப அவனுக்கு சப்போர்ட்டா இருக்கறதும்-ன்னு அவரோட கேரக்டரை அற்புதமா செதுக்கின இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுகள். அதே சமயம் ஒவ்வொரு மனநிலைக்குத் தகுந்தாப்ல உடல்மொழி காட்டி நடிச்ச தம்பி ராமையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!!

முடிவைப் பத்தி பேசிகிட்டிருக்கறப்ப ‘யதார்த்த சினிமான்னா சோகமாத்தான் இருக்கணும்’ன்னு நண்பர்கள் சொன்னாங்க. இந்த கான்செப்ட் என் மரமண்டைக்குப் புரியவே இல்ல. நாட்டுல நூத்துல 10 பேருக்கு இந்த மாதிரி நடக்குமா? அது யதார்த்தமா? ஒண்ணுமே புரியலப்பா...

அமலா பால், (ஸ்ஸ்ஸ்......) இன்ஸ் வீட்டுக்குப் போவாம, தம்பி ராமையா வீட்டுக்குப் போய் நல்லா இருந்திருக்கலாம்ன்னு தோண வைக்கறதுதான் படத்தோட வெற்றியோ என்னமோ..!

படத்தோட ஒட்டி வர்ற நகைச்சுவை அபாரம். ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன்.

விமர்சனத்தை முடிக்கறப்ப மைனா – நைனா போனா வந்தான்னு ஏதாவது சொல்லணும்ல... ம்ஹும்.. ஒண்ணும் தோணல.. விட்டுடுங்க.

------------------------------------------

நெக்ஸ்ட்.. மன்மதன் அம்பு... ஸாரி... மன் மதன் அம்பு

நான் பல படங்களுக்கு முதல் நாளே படத்துக்குப் போகறதுக்குக் காரணம், ரெண்டாவது நாளே விமர்சனங்களைப் போட்டுத் தாக்கி ஒண்ணு எதிர்பார்ப்பைக் கூட்டுவாங்க.. இல்லைன்னா இவ்ளோதானான்னு நினைக்க வைப்பாங்க. முதல்நாள்ன்னா ப்ளெய்னா போய்ட்டு வர்லாம். அதான்.

மன் மதன் அம்பு- நான் கொஞ்சம் எதிர்பார்ப்போடத்தான் போனேன். காரணம் கமல் மட்டும் அல்ல. கமலைவிட ஒரு படி மேல கே.எஸ்.ரவிகுமாருக்கான எதிர்பார்ப்பு. ஆனா அது புஸ்ஸுன்னு போச்சு!

கமல் கதை, வசனத்தோட நின்னிருக்கலாம். இயக்கத்தோட, திரைக்கதையையும் கே எஸ் ஆர்கிட்ட குடுத்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டார். கே எஸ் ஆர் படத்துல தெரியவே இல்லை. ஒரே ஒரு இடம் தவிர – நீலவானம் பாட்டு. (அந்தப் பாட்டோட பிக்ச்சரைசேஷன் ஐடியா அவரோடதாத்தான் இருக்கும்ன்னு வெச்சுகிட்டா) ஒருவேளை கமலின் யோசனையாகக் கூட இருக்கலாம். பாட்டு ஆரம்பிச்சு முடியறவரைக்கும் முழுமையா பின்னோக்கிப் போய் கமலோட கதையைச் சொல்றது தமிழ்ச் சினிமாக்குப் புதுசுன்னு நினைக்கறேன். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனையோ கேபிள் சங்கரையோத்தான் கேட்கணும்.

படம் ஆரம்பிச்சு சூடு பிடிக்கவே அரைமணி நேரமாச்சு. சீரியஸான ஜானரும் அல்லாம, காமெடியான ஜானரும் அல்லாம ரெண்டுங்கெட்டான் மாதிரிப் போனது படத்தோட மைனஸ்.

படத்தின் என்னைக் கவரோ கவரென்று கவர்ந்த மகாப்பெரிய அம்சம் வசனம். பல இடங்களில் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. பின்னால் இருக்கிறவருக்கு மறைக்குமென்பதால் அடக்கிக் கொண்டேன்.

படத்தின் க்ளைமாக்ஸ் பழைய எஸ் வி சேகர் ட்ராமாக்களைப் போல, முடிஞ்சாச் சரி பாணியில் இருந்தது நிறைவின்மையைத் தந்தது. அதுவும் மாதவன் சங்கீதா சேரணும்ன்னு ரசிகன் நினைக்கவே இல்ல. கமல் த்ரிஷாகூட அப்படித்தான். இன்னும் அந்த சீனையெல்லாம் கலகலப்பா கொண்டு போக க்ரேஸி மோகனை வெத்தலைப் பெட்டியோட ஆழ்வார்ப்பேட்டைக்குக் கூப்பிட்டிருக்கலாம் கமல்.

படத்துல நான் ரொம்பவும் எதிர்பார்த்த கமல் கவிதை கட். அதே மாதிரி உய்ய உய்ய பாடல் (சூர்யா டான்ஸ் பிரமாதம்) விட்டு விட்டு வர்றதும் ‘பெப்’பைக் குறைத்தது.

படத்தில் கமலுக்கு இணையாக.. ஒரு படி மேலேயே தூள் கிளப்பியிருப்பவர்கள் மாதவன் & சங்கீதா. சங்கீதா டைட்டான காஸ்ட்யூமில் ரொம்ப லைவ்வாக பப்ளிமாஸாக இருக்கிறார். த்ரிஷா, சங்கீதா என்று எல்லாரையும் சொந்தக்குரலில் பேச வைத்து ட்ரில் வாங்கியிருக்கிறார்கள். சபாஷ்.

படம் பிடிச்சுதா, பிடிக்கலையான்னு கேட்டேன் உமாகிட்ட. கமல் ரசிகை வேற.

‘பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’

சரிதான்!



.

Monday, December 27, 2010

சிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன்


செ
ன்ற வருடம் போலவே இந்த வருடமும் சிறப்புற நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தினர் நடத்திய சங்கமம்-2010 நிகழ்வின் சில துளிகளை பல வலைப்பூக்களில் இன்று காண்பீர்கள். என் பங்கிற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதில் இருந்து சில....


‘சிறுகதைகளை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

• முன்னைப் போல வார / மாத இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அதிக பட்சம் ஒரு சிறுகதை, சில சமயம் அதற்கும் இடமில்லை என்கிற போக்கே இருக்கிறது. ‘உயிர் எழுத்து’ இதழ் மட்டும் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு சிறுகதைக்கு இடமளிக்கிறது.

• சிறுகதை எழுதுவதில் / சிறுகதை வாசிப்பதில் / சிறுகதை வெளியிடுவதில் என்று மூன்று நிலைகளிலும் ஒரு தேக்க நிலை தற்போதைய காலகட்டத்தில் இருக்கிறது.

• கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வியல் முறையைப் பதிவு செய்யும் சிறுகதைகள் அதிகம் வரவில்லை. இன்றைய வாழ்வைப் பதிவு செய்வது அவசியம். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைப் பதிவு செய்திருப்பார்கள். அந்தப் போக்கு இப்போது இல்லை.

• இந்த மாதிரியான நேரத்தில் சிறுகதைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையமே சிறந்த வழி.

• எழுதுவதற்கு, வாசிப்பு என்பது மிகவும் அவசியம். வேலைப்பளு காரணமாக வாசிப்பு குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. வாசிப்பையும் ஒரு வேலையாகப் பாவித்து தினமும் செய்தால் இந்த மாதிரி சொல்ல நேராது.

• எழுதுபவர்களுக்கு சின்னச் சின்ன யோசனைகள்:

1) குறைந்தது மாதம் ஒரு சிறுகதை படியுங்கள். கட்டாயமாக இதைச் செய்யுங்கள். மாதம் ஒரு சிறுகதை வாசிப்பதென்பது என்பது நிச்சயமாக கடினமான விஷயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2) பகிர்ந்து கொள்ளக் கூடிய ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் எழுத்தாளர்களுக்கு இந்த ஆசை, பேராசையாகவே இருக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

3) கதை எழுத தீவிர கவனிப்பு மிக முக்கியம். Observation. கவனிக்கும் தன்மை இருந்தால்தான் நடக்கும் சம்பவங்களிலிருந்து, சிலதைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து எழுத்தில் கொணர முடியும்.

4) எழுதுவதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளுங்கள். எழுதாமல் கதை வராது. எழுதிய உடனும் கதை வராது. முதல் கதையே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் எல்லாரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜெயமோகன் - விகடன் உட்பட - சில இதழ்களில் பல கதைகள் வெளிவந்து, நெடுநாட்கள் கழித்து கணையாழியில் ‘நதி’ என்றொரு கதை எழுதினார். அந்தக் கதையைத்தான் தன் முதல் கதை என்று குறிப்பிடுவார். ‘அதற்கு முன் நிறைய கதைகள் வந்தனவே?’ என்று கேட்டால், ‘அவையெல்லாம் பயிற்சிக்காக எழுதியவை’ என்பார்!

5) சம்பவங்களிலிருந்து விதிவிலக்குகளைத் தேர்வு செய்து எழுதுங்கள். அன்றாட நடப்புகளை, விதிக்குட்பட்டு நடக்கும் நிகழ்வுகளை / மனிதர்களை கதை வடிவில் கொண்டு வந்து எழுதுவது – அதை வாசகர்களுக்குச் சுவைபடச் சொல்வது கொஞ்சம் சிரமம். அசோகமித்திரன், வண்ணதாசன் போன்றோர் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

உதாரணமாக கந்தர்வன் ஒரு சிறுகதை எழுதினார். பனைமரத்தைப் பிடுங்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. பனைமரத்தைப் பிடுங்கும் மனிதன் என்றாலே அவன் சமூகத்தில் இருக்கக்கூடிய மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து வேறானவன். இதுதான் சிறுகதைக்குத் தேவை.

6) வாசகர்களுக்குக் கருத்தெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் எழுதுகிற கதையில், அதன் போக்கில் சொல்லப்பட்டவற்றை வாசகன் படித்துக் கொள்ளட்டும். வலிந்து திணிக்கப்பட்ட நீதிபோதனைகளை எவரும் விரும்புவதில்லை.

இவையாவும் மேம்போக்காகச் சொல்லப்பட்டவையே. சிறுகதையுலகு ஒரு கடல். அவற்றின் துளியின் துளி பற்றியே பேசியிருக்கிறேன் என்றார்.

முடிக்கும் முன் தி.ஜானகிராமனின் ‘காண்டாமணி’ என்றொரு கதையைச் சொன்னார்.

உணவுச் சாலை நடத்தும் ஒருவர், ஒரு நாள் - தன் முதல் வாடிக்கையாளருக்கு சாம்பார் ஊற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த சாம்பாரில் பல்லி விழுந்திருப்பதைக் கவனிக்கிறார். சாம்பாரைக் கொட்டி விட்டு, பிற வாடிக்கையாளர்களுக்கு புதிய சாம்பார் சமைக்கிறார். முதலில் உண்ட வாடிக்கையாளருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குற்றவுணர்ச்சி. அவரோ சென்று விட்டார். ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்.

துரதிருஷ்டவசமாக அந்த வாடிக்கையாளர் மறுநாள் இறந்துவிடுகிறார். நெஞ்சு வலி என்று சொல்லப்படுகிறது. தன் கடைச் சாம்பாரின் பல்லி விஷம்தான் காரணம் என்று இவர் நினைத்துக் கொள்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் கடை வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார். வெளியில் தெரியாமல் தன் கடைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் அருகிலேயே இருக்கும் கோயிலொன்றுக்கு காண்டாமணியை உபயம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார். அதுபோலவே காண்டாமணியை கோயிலுக்கு உபயம் செய்கிறார்.

ஒவ்வொரு முறை அந்த காண்டாமணி அடிக்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மணியை திரும்ப வாங்கிக் கொள்கிறார்.

இதுதான் கதை. இதில் எந்த வித நேரடியான நீதிபோதனைகளும் இல்லை. நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த, நீங்கள் மறக்க நினைக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் ஏதேனும் நிகழ்வைப் பொருத்திப் பார்க்கச் செய்கிற கதை. இப்படி வாசகனை, கதையோட்டத்துடன் இணைத்துச் செல்லும் கதைகளே வெற்றிபெறும் என்று சொல்லி முடித்தார் பெருமாள் முருகன்.

__________________________________

சங்கமம் குறித்த முழுத் தகவல்களுக்கு ஈரோடு கதிரின் இந்த இடுகையைச் சுட்டவும்.


.

Wednesday, November 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - முடிவுகள்

அன்புக்குரிய 'சவால் சிறுகதைப் போட்டி' பங்கேற்பாளர்களே,

இப்படியானதொரு போட்டியின் நடுவர்களாக இருக்க வாய்ப்பளித்து சுவாரசியமான அனுபவத்தைத் தந்தமைக்கு பரிசல்காரன் மற்றும் ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் முதல் நன்றி. அனுபவம் நிறைய சிரமங்களையும் கொண்டிருந்தது என்பதே உண்மை. போட்டி குறித்த போதுமான தகவல்கள் நேற்றே இந்தத் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவிட்ட நிலையில் சில குறிப்புகளுடன் முடிவை இங்கே அறிவிக்கிறோம்.

பங்கு பெற்ற கதைகளில் நிறைய எழுத்துப்பிழைகள் காணப்பட்டன. இருக்கும் ஏராள விதிமுறைகளில் இன்னும் இறுக்கம் செய்வது தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் அவை பெரும்பாலும் பொருட்படுத்தப்படவில்லை. புதிய தளங்களை முயன்றவர்கள்/ நல்ல சிறுகதை அனுபவத்தை தந்தவர்கள் கொடுக்கப்பட்ட 'வரிகளை' வலிந்து திணித்திருப்பதாய் எங்களுக்குத் தோன்றியது. இங்கே கதையைப் பார்ப்பதா, விதிகளைப் பார்ப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.

கொஞ்சம் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் - க‌தையில் வ‌ர‌வேண்டும் என்று போட்டி விதிக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ மூன்று வ‌ரிக‌ளையும் க‌தையும் மெயின் ஃப்ளோவில் இல்லாம‌ல் "பார்த்துக் கொண்டிருக்கும் டிவி சீரிய‌லில் வ‌ருவ‌து", "சினிமாவில் வ‌ருவ‌து", "துண்டு சீட்டில் வருவ‌து" என்று ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌. க‌தையில் வ‌ர‌வேண்டும் என்ப‌துதானே விதி, க‌தையின் மெயின் ஃப்ளோவில் வ‌ர‌வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று கேட்க‌லாம்.

அப்ப‌டி பார்த்தால் இதுவ‌ரை அனைத்து மொழிக‌ளிலும் எழுத‌ப்ப‌ட்ட‌ + எழுத‌ப்ப‌ட‌ப்போகும் பில்லிய‌ன் க‌ண‌க்கான‌ அனைத்து க‌தைக‌ளிலும் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளை சேர்க்க‌ முடியும்.

உதார‌ண‌மாக‌ "என் இனிய‌ இய‌ந்திரா" நாவ‌லில்
"ஜீவாவைப் பார்க்க‌ முண்டிய‌டித்துக் கொண்டு சென்ற‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் அருகே இருந்த‌ லேச‌ர் விள‌ம்ப‌ர‌ போர்டில் இருந்த‌ க‌தைப்போட்டியை க‌ண்டு கொள்ள‌வே இல்லை. அதில்

கீழ்க‌ண்ட‌ வ‌ரிக‌ளுட‌ன் க‌தை எழுதுங்க‌ள், ஒரு கோடி ப‌ரிசை வெல்லுங்க‌ள்.

1......................
2...............................
3.......................................


என்றிருந்தது.” என்று எழுத‌ முடியும். எந்த‌ ஆங்கில‌ நாவ‌லிலும் "Something was written on the piece of paper in some indian language.....

1...........................

2...............................

3......................................."

என்றும் எழுத‌ முடியும். அப்ப‌டி விதிமுறைக‌ள் புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டால் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளும் இருக்க‌ வேண்டும் என்ற‌ விதியே தேவை இல்லை. அந்த‌ வ‌ரிக‌ளை அக‌ற்றினாலும் க‌தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றால் எத‌ற்காக‌ இந்த‌ போட்டிக்கு அந்த‌ க‌தைக‌ள்?

ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது.

வரிகளுக்குப் பொருத்தமாக இருந்த கதைகள் புதுமையாக இல்லாமலிருந்தன. அப்படியும் இருந்தால் நடை மிகவும் சோர்வடையச் செய்வதாய் இருந்தன. ஆனால் - ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் இந்தக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

நாங்களும் உங்களில் மூவர்தான் என்பதால் எங்களின் முடிவு இறுதியானதாக இருக்கமுடியாது. எங்களின் அளவுகோல்கள் உங்களின் இந்தக்கதையை மதிப்பிடத்தானே தவிர உங்களின் திறனை மதிப்பிடத் தகுந்தவை அல்ல. ஆகவே வெற்றியைத் தவறவிட்டவர்கள் தொடர்ந்து கதைகள் புனைந்து பதிவுலகில் பயணிக்க எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள். அனைத்து கதைகளுக்கும் முடிந்தவரை சுருக்கி எழுதப்பட்ட விமர்சனங்களை இந்த (ஒன்று, இரண்டு, மூன்று) பதிவுகளில் காணலாம்.

கலந்துகொண்ட 84 கதைகளிலிருந்து முதல் கட்டத் தேர்வில் இறுதிக்கட்டத்துக்கு வந்த 15 கதைகள் :

(அகர வரிசைப்படி... )

1. அதே நாள் அதே இடம் - சத்யா

2. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

3. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா

4. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

5. கம் ஆன், காமினி - அனு (இவருக்கு வலைப்பூ இல்லாததால், கதை பரிசல்காரனின் வலையில் வெளியிடப்பட்டது. கதாசிரியரின் ப்ரொஃபைலைக் காண அவரது பெயரைக் க்ளிக்கவும்)

6. கமான்.. கமான்.. காமினி - வித்யா

7.
காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

8. காட்சிப்பிழை - செல்வகுமார்

9. சவால் - புதுவை பிரபா

10. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்

11. டைமண்ட் - முகிலன்

12. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

13. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

14. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

15. வைர விழா - R V S


இதிலிருந்து பரிசுகளை வென்றவை :-

முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தாமல் மூன்று சிறப்பான கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சமமான மதிப்பெண்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தேர்வாகி தலா ரூ.400/- மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி....)


முதலிடத்துக்கான போட்டியை இறுக்கம் செய்த, ஆறுதல் பரிசுகளைப் பெறும் 2 கதைகள் (ரூ. 250 மதிப்புள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுக்கும்)


மீண்டும் ஒரு முறை பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.! பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.!

அன்புடன் -
வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, ஜீவ்ஸ்
--------------------------------------------------------------


போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.

பி.கு : போட்டியில் கலந்துகொண்ட கதைகள் 84. இதுவரை 83 எனக் குறிப்பிடப்பட்டது தவறு. எனது கதைத் தொகுப்பு இணைப்பில் கடைசி இரண்டு கதைகளுக்கு 83 என ஒரே எண் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. விமர்சனப்பதிவுகளில் நீங்கள் 85 கதைகளைக் காணமுடியும். 53ம் எண் கொண்ட ஒரு கதை போட்டிக்குரியதல்ல, தவறுதலாக நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதாகும்.

.

(Thanks For the Image to: http://www.designniac.com)

Tuesday, November 16, 2010

சவால் போட்டியின் பின்னிருந்த சவால்

சவால் சிறுகதைப் போட்டிகளின் ஒரு சில கதைகளுக்கான விமர்சனங்கள் - நேற்றைய என் இந்தப் பதிவில் காணலாம்.

மேலும் சில கதைகளுக்கான விமர்சனங்களை ஆதிமூலகிருஷ்ணனின் இன்றைய பதிவில் - இங்கே காணலாம்.


**** ***** **** **** ****

சவால் சிறுகதைப் போட்டி குறித்து ஆதி எனக்கெழுதிய அனுப்பிய பதிவு இன்றைக்கு இங்கே...

--------------------------- --------------------------------

டந்த ஆகஸ்டில் 'என்ன செய்யப்போகிறாய் மினி?' என்றதொரு மினி கிரைம் தொடரை எனது வலைப்பூவில் எழுதினேன். தொடர்ந்தது நண்பர் பரிசல்காரனின் 'மிஸ்.யாமினி' என்ற மினி கிரைம் தொடர் அவரது வலைப்பூவில். இரண்டுக்கும் நீங்கள் தந்த 'பரபர' ஆதரவைத் தொடர்ந்து ஒரு நாள் நானும், பரிசலும் கதையெழுதிய அழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பருக்குத் தோன்றிய ஆசையே இப்படியான குறிப்புகளைத் தந்து கதைப்போட்டி அறிவிக்கும் யோசனை. 'காமினி' உருவானாள். என்னென்ன மாதிரியான எதிர்வினைகளெல்லாம் வரும் என்று நான் கருத்துச்சொன்னபோது, 'அப்படியெல்லாம் பார்த்தால் நீங்களெல்லாம்தான் இதற்குள் எழுதுவதை மூட்டைகட்டியிருக்க வேண்டும்..' என்று வாயை அடைத்தார். இருவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு போட்டியை அறிவித்தோம். வாசகங்கள் கொஞ்சம் கடுமையாகவே இருந்ததாகத் எனக்குத் தோன்றியது. ஹிஹி.. அவை பரிசல்காரனுடையவை.

'சவால் சிறுகதைப்போட்டி' என்று தலைப்பிட்டு அறிவித்துவிட்டோமே தவிர அதற்குப்பின்னால் எங்களுக்காகக் காத்திருந்த பெரிய சவால் அப்போது தெரியவில்லை. அழுத்தமான பணிச்சூழல், இருவருக்குமே இருக்கும் (தங்க)மணிச்சூழல் (இருவரும் அவ்வப்போது 'Same same.. puppy same' என்று தொலைபேசியில் பாடிக்கொள்வதுண்டு) தெரிந்தும் நாங்கள் இதில் இறங்கியிருக்கக்கூடாதோ என்று ஒரு கட்டத்தில் மலைப்பாகிவிட்டது. ஏனெனில் எனது கணிப்பாக 25 கதைகள், அதிகபட்சமாக கடைசி நேர விறுவிறுப்பில் 35 கதைகள் வரலாம் என எதிர்பார்த்தேன். நண்பரின் கணிப்பும் ஓரளவு அவ்வாறே இருந்தது. ஆனால் எங்கள் கணிப்பு தகர்ந்தது. சில விளையாட்டுகளையும் சேர்த்து 83 கதைகள் போட்டிக்கு வரும் என்று நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்துகொண்டிருக்கும் கதைகளைப் படிப்பது, ஒரே கோப்பாக தகுந்த எண்களிட்டுக் கோர்த்துவைப்பது, நடுவர்களுக்கு மின்னஞ்சல், மற்றும் பிரிண்ட் அவுட்களை அனுப்பி வைப்பது என்பதே மிகுந்த நேரம் எடுக்கும் செயலானது. நண்பர்களின் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதே ஒரு தனி வேலையாக இருந்தது.

இவற்றிற்கெல்லாம் முதலாக நடுவர் தேர்வு ஒரு சிக்கலான தலையாய விஷயமாக இருந்தது எங்களுக்கு. நிச்சயமாகக் கொஞ்சமேனும் பிரபலமாகியிருக்கும் எழுத்தாள நண்பர்களை அணுகியிருக்க முடியும். எங்களுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நண்பர்களாக சிலர் இருப்பது வசதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த 'ஸ்டார் வேல்யூ' வழியை மறுத்து 'பதிவர்களுக்குப் பதிவர்களால்..' கொள்கைப் படி பதிவர்களையே நடுவர்களாக்க முடிவுசெய்து சில பிரபல பதிவர்களை அணுகினோம். நாங்கள் தேர்வு செய்தவர்கள் ஸ்டார் வேல்யூ இருப்பவர்கள் என்பதைவிட நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எங்கள் எண்ணப்படி இருந்தார்கள். அவர்களில் கணிசமான நேரம் செலவிடத் தயாராக இருந்த மூவர் குழு போட்டியின் நடுவர்களாக இருக்கச் சம்மதம் சொன்னார்கள்.

முதலாமவர் வெண்பூ.

வெண்பூ அவரது வீட்டுச்சூழல், அலுவலகச் சூழலால் தொடர்ந்து பதிவெழுதுபவராய் இல்லாவிடினும் பதிவுலகை தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வருபவராய் உள்ளார். மேலும் எழுதுவதைவிடவும் தற்போது வாசிப்பதிலேயே மிகவும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். நாளடைவில் நிறைய எழுதுவார் என நம்பலாம். சிறுகதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். துவக்கத்தில் நிறைய கதைகள் எழுதியவர். விகடனில் இவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டாமவர் எம்.எம்.அப்துல்லா.

பதிவுலகில் துவக்ககாலத்திலிருந்தே எங்கள் நண்பர். மேற்சொன்னவை அப்படியே இவருக்கும் பொருந்தும். நண்பர்களில் நிச்சயம் அதிகம் பிஸியாக இருக்கும் நபர் என இவரைச்சொல்லலாம், ஏனெனில் பணி அப்படி. ஆயினும் மிக விருப்பத்தோடு இதில் கலந்துகொண்டார். எனக்குத் தெரிந்து பதிவுலகில் இவரது படுக்கையறையில்தான் அதிகபட்ச புத்தகங்களைக் கண்டிருக்கிறேன்.

மூன்றாமவர் ஜீவ்ஸ்.

இப்போதும் நான் ஏதும் கதைகள் என்ற பெயரில் எழுதினால் அதைப்பற்றி மெனக்கெட்டு போன் செய்து அபிப்பிராயம் கேட்கும் முதல் நபராக இருப்பவர் நண்பர் ஜீவ்ஸ். மிகச்சிறந்த ஒரு புகைப்படக்காரராக இருக்கும் அதே நேரம் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாதாமாதம் புகைப்படப் போட்டிகளை நடத்தும் 'பிட்' குழுவிலிருக்கும் அனுபவம் வாய்ந்தவர்.

ஏற்கனவே இருந்த எங்களின் எதிர்பார்ப்புகளோடு இன்னும் இறுக்கமாக, நேர்மையாக விதிகளைப் புனைந்துகொண்டனர் நம் நடுவர்கள். நாங்கள் இருவர் உட்பட யாரும் பெரும்பாலும் கதைகள் எழுதியவர்களின் வலைப்பூக்களில் சென்று பின்னூட்டமிடவில்லை. கதைகளுக்கு எண்கள் தரப்பட்டன. எழுதியவர் யாரென்ற தகவல் நடுவர்களுக்குத் தரப்படாமல் அந்த எண்கள் தரப்பட்டன. கதைகளை நிதானமாகப் படித்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மூவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆகவே எனது தேர்வான 'முடிவுகள் தேதி : நவம்பர் 1' என்பதை முதலிலேயே அனைவரும் நிராகரித்துவிட்டனர். கணினியில் வாசிப்பதை விட ஃபீல் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் கதைகளைப் பிரிண்ட்அவுட் எடுத்தே வாசித்தார்கள். அதுவும் சென்னையிருக்கும் அப்துல்லாவுக்காக பிரிண்ட்அவுட்டுகளை எடுத்துக்கொண்டு மெனக்கெட்டு தாம்பரத்திலிருந்து சிட்டிக்குள் போன கதையெல்லாம் வேறு நடந்தது. அந்தக் கதையை தனிப் பதிவாகவே எழுதலாம். பதிவுலகுக்காக செலவு செய்யும் சில மணி நேரங்களையும் பல நாட்கள் இந்தப் பணிக்காகவே நாங்களும், நடுவர்களும் செலவு செய்ய நேர்ந்தது எனில் அது மிகையாகாது. தகுந்த இணைப்புகளுடன் கதைகளின் விமர்சனங்களைக் கோர்த்தது பரிசலின் சாதனை என்று கூட சொல்லலாம், ஏனெனில் அவரது வீட்டு இணைய இணைப்பின் வேகம் அத்தகையது. கடந்த நாட்களில் அவர் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், பிறர் பதிவுகளில் அவர் நடமாட்டமும் இதன் சாட்சி.

அதுவும் நடுவர்கள் ஒரு நாளில் சுமார் 5 கதைகளை மட்டுமே வாசித்துக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இதனால் தொடர்ந்து வாசிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கவும், ஆர்வத்தைத் தக்கவைத்து முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ளவும் ஏதுவாயிற்று. மேலும் முழுமையான, திருப்தியான முடிவையும், அத்தனைக் கதைகளின் சுருக்கமான விமர்சனங்களையும் அவர்களால் தரமுடிந்தது.

முதலாவது முக்கிய விதியாக கொடுக்கப்பட்ட விதிகளுக்குள் கதை அமைந்திருக்கிறதா எனப் பார்த்தார்கள். பின் கதைக்களம், நடை, சுவாரசியம் போன்ற அடிப்படையில் தனித்தனியாக மதிப்பெண்கள் தந்து முதலிடம் பெற்ற கதைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலிடம் பெற்ற பதினைந்து கதைகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவற்றுள் பரிசுக்குரியவற்றை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை பங்குபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடுவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோருக்கு எங்கள் அன்பு.

பதிவர்கள் என்றில்லாமல் பின்னூட்டம் போடும் வாசகர்களையும், வலைப்பூவே இல்லாதவர்களையும் எழுத வைத்ததுதான் இந்தப் போட்டியின் வெற்றி என்று எங்களிடம் தெரிவித்த - எங்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பை அளித்த - பிரபலங்கள் பலருக்கும் இந்த நேரத்தில் எங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான். முதல் கதை முயற்சி என்று சொல்லி எழுதிய பலரும் மேலும் முயன்று, இன்னும் பல சிறப்பான படைப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி.

-ஆதிமூலகிருஷ்ணன்


.

Monday, November 15, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள்

நாங்களோ, நடுவர்களோ எதிர்பார்த்தது போல அத்தனை சுலபமானதாக இல்லை முடிவுகளை அறிவிப்பது! குறிப்பிட்டிருந்த நாள் கடந்து கொண்டிக்கிறதே என்று அவசர அவசரமாக அறிவிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுக்கும் சுருக் - விமர்சனங்களை நடுவர்கள் அனுப்பிவிட்டனர். கடைசி கட்ட தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

விமர்சனங்களைப் பதிவிட்டபின் முடிவு அறிவிக்கப்படும்.

நிச்சயமாக இந்தவாரத்தில்!

தாமதத்திற்கு தலை குனிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

*****************************

இனி விமர்சனங்கள்

*** **** ***


1. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

ஆரம்பிக்கும்பொழுது நன்றாக இருப்பதாக தோன்றினாலும் நடைபுரண்டு சிறுகதைக்கான அழுத்தத்தை தரவில்லை. சிவா என்று மூன்றாம் மனிதராக ஆரம்பிப்பது நடுவில் நான் என்று மாறி மீண்டும் சிவா என்று மாறுகிறது. சுத்த தமிழிலும் இல்லாமல் வழக்குத் தமிழிலும் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான வார்த்தைகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. அதேபோல் முடிவில் எதற்காக பரந்தாமன் & காமினிகளின் தற்கொலைகள் சரியாக ஜஸ்டிஃபை செய்யப்படவில்லை.

*** *** ***

2. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

நல்ல முயற்சி. இந்த மூன்று வரிகளையும் ஒரு சீரியல் கதாசிரியர் எழுதி குழப்படைவதைப் போல முடித்திருப்பது நல்ல எதிர்பாராத திருப்பம். என்னதான் போட்டியின் விதிமுறையில் எத்தனை வரிகள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் டெவலப் செய்திருந்தால் அருமையாக வந்திருக்கும். நல்ல முயற்சி.

*** *** *** ***

3) மணிகண்டன் விஸ்வநாதன் எழுதிய கதைக்கான விமர்சனம் (என் இந்த போஸ்டில் ஒன்பதாவது கதை)

பரிசல் கொடுத்திருந்த மூன்று வரிகளை மட்டுமே எழுதி முற்றும் போட்டிருக்கிறார் நண்பர். பள்ளிக்கூடம் / காலேஜில் படிக்காமல் எக்ஸாமிற்கு போய் கேள்வியை மட்டும் நாலு தடவை எழுதி பக்கத்தை நிரப்புவது நினைவுக்கு வருகிறது.. :)

ஒருவேளை கதையை படிப்பவர்களே இந்த வரிகளைச் சுற்றி கதையை கட்டமைத்துக்கொள்ளும் சுதந்திரத்துடன் எழுதப்பட்ட பின்நவீனத்துவ கதையா என்றும் சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை :)

*** *** *** ***


4) காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

காமினியை ஒரு துப்பறியும் புலியாக காட்டி அதற்கு நமக்கு தெரிந்த கதாபாத்திரங்களை உதாரணத்துடன் முதல் பத்தி : ஒரு நல்ல ஆரம்பம். நடை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். எழுத்துப்பிழைகளை மறுவாசிப்பில் திருத்தி இருந்தால் (உலவு, விரம்) இன்னும் நன்றாக இருந்திருக்கும். வைரம் என்பதை அந்த பெயரில் உள்ள சிறுவனைக் கடத்த முயல்வதாகக் காட்டி இருப்பது நல்ல முயற்சி

5. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

கொடுக்கப்பட்ட மூன்று வரிகளையும் அப்படியே எழுதி நான்காவதாக இன்னொரு வரியை சேர்த்து கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். சுமார் 50 வரிகளிலாவது சொல்ல வேண்டியதை இரண்டே வரிகளில் சொல்ல முயற்சிப்பதால் ஒருமுறை படித்து புரிந்து கொள்ள இயலவில்லை. கதை புரிந்து கொள்ளவே மறுவாசிப்பு தேவைப்படுகிறது. விரிவான சிறுகதையாக எழுதியிருந்தால் நல்ல முயற்சியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

6.
விபூதி வாசனை - விதூஷ்

பதிலளிக்கப்படாத பல கேள்விகள். மலையடிவாரத்தில் வந்தவர் யார்? சிவாவை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் டாக்டர் ஏன் அவரை முதலிலேயே பிடிக்கவில்லை. கதையோ அல்லது அதன் நடையோ புரியவில்லை. கழுத்து நெறிபட்டு சாவின் விளிம்பில் மர்மக்குரல்கள் கேட்பதும் அது நிஜத்தில் நடப்பதும்
என்று நல்ல தீம், சரியாக டெவலப் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

7. காமினி - கோபி ராமமூர்த்தி


பதிவுலகின் கதைப்போட்டிக்கு பதிவர்களையே கதாபாத்திரங்கள் ஆக்கியிருப்பது அழகு. அதிலும் ஒவ்வொருவரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் பொருத்திப் பார்க்க முடிகிறது.. ஆனால் ஆதியை கமிஷ்னராக... ஹி..ஹி..

மைனஸ் பாயிண்ட்: கதாபாத்திரங்களில் பதிவர் பெயர்களுக்கு பதில் வேறு பெயர்களைப் போட்டால் கதை படு மொக்கையாக காட்சியளிக்கிறது. இதை ஒரு ’சிரி’யஸ் முயற்சியாக இருந்தாலும் சீரியஸ் முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

8. காமினி என் காதலி - ஆசியா உமர்

ரயிலில் ஆரம்பிக்கும் கதை லேசாக வேகமெடுப்பதுபோல் தோன்றும்போது போட்டிக்கான முதல் வரி வந்ததுமே டீரெயில் ஆகிவிடுவது போன்ற தோற்றம். மூன்று வரிகளையும் அப்படியே வரிசைக்கிரமமாக எழுதி மேலும் கீழும் கதையை ஒட்டி சாண்ட்விச் செய்யும் முயற்சி அவ்வளவு விறுவிறுப்பை தரவில்லை. சொல்ல வந்திருக்கும் கதை (ரயிலில் டைமண்ட், சேர்க்க முடியாமல் தடைகள்) என்று அழகாக தெரிந்தாலும் அதை சொன்ன விதம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக / விரிவாக இருந்திருக்கலாம். ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங்... என்று வடிவேலு பாணியில் சொல்லலாம்.

9. டைமண்ட் - முகிலன்


ஒரு வெற்றிகரமான முயற்சி என்றே சொல்லலாம். ஒரு நல்ல துப்பறியும் கதைக்கான களன். ஆஸ்பத்திரியில் டைமன்ட் கடத்துறாங்களா? அதுக்கு காமினி உதவியா? போட்டி விதிகளின் படி காமினியைத்தான் கெட்டவளா காட்டகூடாதே என்று நமக்கு தோன்றுவதை எல்லாம் அழகாக க்ளைமாக்ஸில் புறந்தள்ளுகிறார். மருத்துவமனையில் நோயாளிகளின் பார்ட்டை திருடி விற்கும் கும்பல், டைமண்ட் என்பது கிட்னிக்கான கோட்வேர்ட் என்று நன்றாக சிந்தித்திருக்கிறார்.

மைனஸ்: ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணப்படவேண்டிய கிட்னியை இப்படி பார்சல் செய்யப்பட்ட குலோப் ஜாமூன் கணக்காக இடுப்பில் கட்டிக்கொண்டு ஜன்னலில் குதிப்பது, ஆட்டோவில் போவது, சண்டை போடுவது எல்லாம் சினிமாத்தனம்.

10. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

காமினியை நடிகையாகவும் அவளுக்கு கோவில் கட்ட அவள் ரசிகர்கள் முயற்சி எடுக்க, அவளது புதிய படத்தில் வருவதாக போட்டிக்கான மூன்று வரிகளும் காட்டப்படுகின்றது. பொருந்தவில்லை. முக்கியமாக காமினி சோகமாக இருப்பதால் அந்த காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். மூன்றாவது வசனத்திற்கு எதற்காக காமினி சோகப்படவேண்டும் என்று புரியவில்லை. உண்மையில் அந்த சினிமாவின் கதையை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதை எதிர்பாராத முடிவு என்று சொல்லலாம், ஆனால் போட்டிக்கு பொருத்தமாக இல்லை.

11. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்


நல்ல முயற்சி... எதிர்பாராத முடிவாக காமினியை காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. எதிர்பாராத முடிவுடனான ஒருபக்க கதைக்கு நல்ல ஆப்ஷன் இது.

12. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

ஒரு துப்பறியும் கதைக்கான திருப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் சாதாரணமாக அவ்வளவு வலுவில்லாமல் இருப்பது போன்ற தோற்றம். காமினி போலீஸின் ஆள் என்றால் போலீஸ் ஏன் சிவாவை வைத்து வைரத்தை திருட வேண்டும் என்ற முக்கியமான கேள்விக்கு பதில் இல்லை, அதேபோல் முதலில் வரும் விமானக்கடத்தலும் கதையோடு ஒட்டவில்லை (கதையில் போட்டிக்கான முதல்வரியை கொண்டுவர முனைந்து சேர்க்கப்பட்டதால் தனியாக தெரிகிறது). சிவாவை ஒரே ஒரு முறை பார்த்தவருக்கு எதற்கு கிளைமாக்ஸில் அவரைப் பார்த்து வெட்கப்படவேண்டும்.

எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். (பதினைத்து, பிளாட்டில்)

13. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

போட்டியின் விதியான ”காமினியை கெட்டவராக சித்தரிக்கக் கூடாது” என்பது இதில் அடிபட்டு போய்விட்டது. கதை நன்றாக இருந்தாலும் விதிமுறைக்குள் வராத காரணத்தால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது

14.எஸ்கேப் - ரோமியோ

கதை ஆரம்பிக்கும்போது பாலகிருஷ்ணன் பார்வையில் அவர் சொல்வது போல் ஆரம்பித்து சடாரென வாசகர் பார்வைக்கு மாறுவது சறுக்கல். கதையுடன் ஒன்ற முடியவில்லை. அதை சரி செய்வதற்காக கிளைமாக்ஸில் பாலகிருஷ்ணன் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற ரீதியில் கொண்டு செல்கிறார். கதை எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்று எதுவும் தெளிவாக இல்லை. இன்னும் சிறப்பாக முயற்சிக்கலாம்.

15. காமினி - பலா பட்டறை ஷங்கர்

சயின்ஸ் ஃபிகஷன் முயற்சி.. காமினி மனித இனமே இல்லை, ரோபோ போல என்ற ரீதியில் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் எல்லாரும் எல்லார் பார்ப்பதையும் பார்க்க முடிவது, யாரும் யார் போலவும் மாறுவது என்று சராசரி வாசகனுக்கு குழப்பம் அதிகமாக வர வைக்கிறது. காமினி நல்லவளா / கெட்டவளா என்பதே புரியவில்லை. நல்லவளாக காட்ட வேண்டும் என்ற விதி அடிபட்டு போகிறதா என்பதும் புரியவில்லை. இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம்.

16. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

இரண்டு காமினிகள் : ஒருவர் நடிகை மற்றவர் மாடல் அழகி... நடிகை ஏர்போர்ட்டில் நடித்துக் கொண்டிருக்க, அதில் குழப்பம் விளைவித்து மற்றொரு காமினியின் மூலம் வைரம் கடத்த முயற்சி என்று ஒன்லைனர் அழகாக இருக்கிறது. ஆனால் இன்னும் சிறப்பாக டெவலம் செய்திருக்கப்பட வேண்டிய கதை. முதலில் வரும் மருத்துவமனைப் பகுதி கதையுடன் ஒட்டவில்லை, போட்டிக்கான வரியை கொண்டு வர முனைந்து சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. நல்ல கரு.. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்

17. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். கதை எந்த ஒரு இம்பேக்ட்டையும் ஏற்படுத்தாமல் மிகவும் ப்ளெயினாக இருக்கிறது. போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. இந்த போட்டிக்கு இந்த கதை பொருத்தமாக இல்லை என்பதே உண்மை.


18. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி


போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. கதைக்கான வரிகள் மட்டுமில்லாமல் கதைப்போட்டிக்கான விதிமுறைகளையும் உரைநடையில் கொடுத்து முடிவில் நவம்பர் 15க்குள் தங்களுக்குத் தேவையான கதை கிடைத்துவிடும் என்று முடித்திருக்கிறார். இது சீரியஸ் முயற்சியும் இல்லை, சிரிக்க வைக்கவும் இல்லை.


19. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

இந்த கதை எழுதியவரை எழுத்தாளர் சுபா மிகவும் இம்ப்ரெஸ் பண்ணியிருப்பது தெரிகிறது. காமினி - வைஜ், சிவா - நரேன், பரந்தாமன் - ராமதாஸ் என்று பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் கதையிலும் நடையிலும் அந்த துள்ளலும், திருப்பங்களும் மிஸ்ஸிங். கடைசியில் அவர்கள் வைரம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை, சத்தியசீலனை சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெளிவாக பொருந்தவில்லை.


20. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

டைமண்ட் என்பதை வைரமணி என்ற பெண் என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கிறது. வழக்கமான துப்பறியும் கதைக்களன். ஆனால் திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ புத்திசாலித்தனமான மூவ்களோ இல்லாமல் ப்ளையினாக இருக்கிறது. அடுத்து என்ன வரும் என்று யூகிக்க முடிகிற நடை. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்.


21. டைமண்ட் 2 - முகிலன்


டைமண்ட் என்பது நாய், அது போலீஸ் என்ற பைத்தியக்காரனிடம் சிக்கி விட்டது, காப்பாற்றி டாக்டரிடம் அழைத்து வருகிறார்கள் என்ற ரீதியில் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்குறது. நல்ல முயற்சி என்ற அளவில் பாராட்டலாம். நடையிலும் கருவிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்
ஆனால் போட்டி விதிமுறைகளின் படி கதையில் கனவு வரக்கூடாது. போட்டிக்கான முதல் வரி கனவில் வருவது போல் இருப்பதால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது


22. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்


ஒரு வைரக்கடத்தல் அதன் ஊடான குழப்பங்கள் என்று கதையும் குழப்பமாகவே நகர்கிறது. கதையில் இரண்டு சிவா வருவது வேறு குழப்பத்தை அதிகப்படுத்துகிறது (அல்லது ஒரே சிவாதானா?). காமினியை நல்லவளாக காட்டவேண்டும் என்ற நிபந்தனைக்காக அவளை பரந்தாமன் ப்ளாக்மெய்ல் செய்வதாக சொல்லியிருப்பது ஒட்டவில்லை. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


23. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்


முற்றிலும் வித்தியாசமான கதைக் களன். பூமியில் எக்ஸ்டிங்க்‌ஷன் ஆரம்பிக்கும் தருணத்திற்கு முன்னால் உயிரினம் தழைக்க பரந்தாமன் + சிவா (இந்துக் கடவுள்கள்?) எடுக்கும் முயற்சி, உயிரினங்களை புதிய பூமிக்கு தாங்களே கொண்டு செல்லாமல் அவர்களையே தங்களுக்கான இடத்தை தேர்வு / தெரிவு செய்துக் கொள்ள வைப்பது என்று புதிய வாசிப்பனுப்பவத்தை இந்த கதை கொடுக்கிறது எனலாம்.

டாக்டர் வில்கின்ஸை பிரம்மாவாக உருவகப்படுத்தி இருக்கலாம். அல்லது ஏற்கனவே அப்படித்தானா? :)

கதையின் சிறு சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. கதையில் இந்து மித்தாலஜி, டெக்னாலஜி என்று கலந்து கட்டி அடித்திருப்பது ஒரு மாதிரி புரியாத மனநிலையில் வாசகனை இருக்க வைக்கிறது. ஒரு செல்லில் இருந்து உயிரினம் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்ற அறிவியல் கூற்றை மறுப்பது போல் நேரடியா உயிரினங்கள் பூமியில் உருவானதாக சொல்லும் அதே நேரம் காமினி என்ற புதிய இனம் உருவாவதே டெக்நாலஜியால் என்றும் சொல்லியிருப்பது கதாசிரியர் அறிவியலை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை தெளிவாக சொல்லாமல் குழப்புகிறார் என்றே தோன்றுகிறது.
ஒரு சிறந்த முயற்சி இந்த கதை. பாராட்டுகள்.

24. காமினி - மயில் ராவணன்


நல்ல முயற்சி... போட்டிக்கான மூன்று வரிகளுக்கும் வித்தியாசமான அர்த்தம் கொடுத்ததற்கு பாராட்டுகள். முக்கியமாக “காமினி.. வெல்டன்” என்பதற்கான அர்த்தம் வாசிக்கும்போது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர்த்து கதை பெரிய அளவில் கவரவில்லை. வைரம் கடத்தும் தந்தையை காதலன் உதவியுடன் காட்டிக் கொடுக்கும் பெண் என்ற ஒன்லைனர் மிகவும் ப்ளைனாக இருக்கிறது.


25. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

ஒரு நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் போல இருப்பதே இதன் குறை. சொல்ல வந்த கதை இந்த ஃபார்மேட்டினால சரியாக வாசகனை அடையவில்லை போன்ற தோற்றம். அயோத்தி பிரச்சினையைத் / அதைப் போன்ற ஒன்றை தொட்டிருப்பது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. கடைசியில் காமினி வருத்தப்படவேண்டிய அவசியமும் இல்லை, மீண்டும் சிவாவை சந்தித்து விளக்கி இருக்க முடியாதா?


26. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை


சீரியலை மட்டுமே பார்த்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்காத அம்மா, அதனாலயே அன்புக்கு ஏங்கி வீட்டை விட்டு போகும் மகள் என்று ஒரு வாரமலர் டைப் கதை. போட்டிக்கான மூன்று வரிகளும் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் சீரியலுக்குள் இருப்பது மைனஸ். முக்கியமாக மூன்றாவது வரி அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. இன்னும் நன்றாக முயற்சித்து இருக்கலாம்.


27. இனிமேல் வசந்தம் - வானதி

போட்டிக்கான வரிகளை கதையின் முக்கிய ஃப்ளோவில் உபயோகித்து எழுதப்பட்டுள்ள கதை. அதுவே இந்த கதையின் பலமும் கூட. அடுத்ததாக போட்டிக்கான வரிகளைப் படிக்கும் எவருக்கும் கதை நடப்பது ஒரு மேல்தட்டு குடும்பத்தில் / ஆட்களிடம் என்ற தோற்றம் தோன்றும். ஆனால் அதே வரிகளை வைத்து ஒரு மீனவ குடும்பத்து கதையை எழுதியிருப்பது நல்ல முயற்சி..

விறுவிறுப்பில்லாத நடையும் யூகிக்க முடிகிற முடிவும் இதன் மைனஸ்.

28. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

போட்டிக்கான வரிகளை எழுதி மேலும் கீழும் வேறு கதையை எழுதி வந்துள்ள இன்னொரு சாண்ட்விச் கதை. ஒரு எழுத்தாளனின் மன ஓட்டத்தை எழுத்தில் கொண்டுவரும் முயற்சி என்பதாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே தெறிக்கும் நக்கல் புன்னகைக்க வைக்கிறது.


29. காட்சிப்பிழை - செல்வகுமார்

துப்பறியும் + சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம அளவில் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் கதை.. போட்டிக்கு சிறப்பான முயற்சி. வைரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க கும்பலுக்குள் நுழையும் காமினி போலீஸால் சுடப்பட அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் குற்றவாளிகளை மடக்கும் போலீஸின் கதை. விறுவிறுப்பான நடையும் தெளிவாக விளக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்பும், சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் போட்டிக்கான வரிகளும் பாராட்டப்படவேண்டியவை.


30. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

வித்தியாசமாக ஆரம்பித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு அதை சரியாக தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். முக்கியமாக போட்டிக்கான வரிகள் கொஞ்சமும் கதையில் ஒட்டவில்லை. தனித்து தெரிகிறது. அதே மாதிரி இவர் இந்து சம்பிரதாயங்களை நக்கல் அடிக்கிறாரா அல்லது விளம்பரப்படுத்துகிறா என்பதும் சரியாக புரியவில்லை. வித்தியாசமான தளம், இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.

31. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

தலைப்பே சொல்லி விடுகிறது, இது மெசேஜ் சொல்வதற்காகவே எழுதப்பட்ட கதை என்பது. பதிவர்களை பாத்திரங்களாக வைத்து எழுதப்பட்டுள்ள மற்றொரு கதை, பைரசி தவறு என்பதை அழுத்திச் சொல்கிறது. போட்டிக்கான வரிகளை வரிசையாக எழுதி மேலும் கீழும் கதையை எழுதியுள்ள சாண்ட்விச் கதை, ஆனாலும் அந்த வரிகள் சரியாகவே உபயோகப்பட்டிருக்கின்றன. சட்டென்று கதை முடிந்ததைப் போன்ற உணர்வு. இன்னும் கொஞ்சம் நடையை விறுவிறுப்பாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்


32. கமான்.. கமான்.. காமினி - வித்யா

முதல் பாதியில் எழுதப்பட்டுள்ள கதை அட்டகாசம். அதை அப்படியே கண்டின்யூ செய்து முடித்திருந்தால் முதல் மூன்று இடத்திற்கான போட்டியில் கட்டாயம் இருந்திருக்கும் என்ற ரீதியில் விறுவிறுப்பு, சயின்ஸ் பிக்‌ஷன், யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று எக்ஸ்ப்ரஸ் செல்லும் கதை, இரண்டாவது பாதியில் டீரெயில் ஆவது என்னவோ உண்மை. நமக்கு பழக்கப்பட்ட கதாபாத்திரங்களை (கணேஷ், வசந்த், கோகுல்நாத்) என்று கொடுத்திருப்பது கதையை வாகனுக்கு நெருக்கமாக உணரவைக்கிறது. வசந்த் சொல்வது போல், கதையின் முடிவையும் வாசகனே யூகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது, :-)


33. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

உண்மையில் பெரும்பாலான கதைகளில் காட்டப்பட்டிருக்கும் வித்தியாசத்தை (அந்த மூன்று வரிகளை எப்படி எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை) அழகாக தொகுத்திருக்கிறார். வெறுமனே விளக்கமாக இல்லாமல் ஒரு கதையினூடே இதை சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது. முடிவு கொஞ்சம் மொக்கையாக இருப்பது நிஜம்..


34. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்


கதையின் தலைப்பைப் போலவே கதையின் க்ளைமாக்ஸ்ம் புரியவில்லை. ராபிட் ஐ மூவ்மெண்ட்டுக்கு பதில் கதையின் கடைசி மூன்று வரிகளை விளக்கி இருக்கலாம்.


35. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

புதையலில் கிடைத்த வைரம் திருடப்பட அதை மீட்க உதவும் ஆட்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்ற ஒன்லைன் அழகாக இருந்தாலும் கதை துண்டு துண்டாக இருப்பதாக தோன்றுகிறது. நடை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.


36. காமினி - ராஜகுரு பழனிசாமி

சவால் சிறுகதைப் போட்டியினால் மறை கழண்டு போகும் ஒருவன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.


37. டைமண்ட் - குகன்

போட்டியின் மூன்று வரிகளை அப்படியே ப்ளையினாக டெவலப் செய்திருக்கும் கதை. காமினி ஆஸ்பத்திரியில் இருந்து டைமண்டை திருடி வர சிவா அதை திருட முயல அவனைக் கொன்று பரந்தாமனிடம் சேர்க்கும்போது போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து காமினியைப் பாராட்டுகிறார்கள். தொய்வில்லாத நடை. ஆனால் எதிர்பார்த்த திருப்பங்களும் யூகிக்க முடிக்கிற முடிவும் விறுவிறுப்பு குறைந்த நடையும் மைனஸ்


38. ளவாளி - குகன்

இதற்கு முந்தைய கதையும் (டைமண்ட்) இந்த கதையும் ஒரே வரிகளுடன் உள்ளது... ஆனால் இந்த கதையில் வரிகள் போட்டிக்கான அதே வரிசையில் வரவில்லை, அதனால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது

39. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

கதையின் ஃப்ளோ கொஞ்சமும் சரியாக கருத்தை சொல்லவில்லை.துண்டு துண்டாக விறுவிறுப்பு குறைவாக இருக்கிறது. எழுத்துப்பிழைகளையும் தவிர்த்திருக்கலாம்.


40. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

துப்பறியும் கதைக்கான கரு என்ற அளவில் ஓகே.. நடை மிகவும் தொய்வாக இருக்கிறது, இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். முதலில் நடிகரைப் பற்றி சொல்லிவிட்டு பிறகு கடைசியில் கிளைமாக்ஸில் காமினி கதையுடன் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி.


*********** *********** ************ **********

மற்ற விமர்சனங்கள் அடுத்த பதிவில்.


.

Wednesday, November 3, 2010

Twitter!

22 ஜூலை 2008.

நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த நாள்.

எப்படி கரெக்டாகத் தெரிகிறது? இதோ இங்கே போனால் உங்கள் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப் பட்ட தேதியைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் யாருடைய வலைப்பூவிலேயோ இந்த ட்விட்டரைப் பார்த்து ஏதோ சாட்டிங் சமாச்சாரம் என்று நானும் இணைத்தேன். ஆனால் தொட்ர்ந்து அதில் இயங்கவில்லை. அதன் சூட்சுமம் புரியவே இல்லை. அப்புறம் அதைத் தூக்கிவிட்டேன்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பற்றி அறியவந்து ஆர்வமானேன். ‘140 எழுத்துகள் உனக்கு. எடுத்துக்கோ. என்ன வேணும்னாலும் எழுது’ என்று சொல்கிறது ட்விட்டர். ‘கலைஞன் ஒரு காட்டாறு அவனுக்கு அணைபோட நீ யார்?’ என்று கேள்வி கேட்பவர்கள் ஒரு ஓரமாக குந்திக் கொள்ள, இளைஞர் கூட்டம் ட்விட்டருக்குப் பின்னால் படையெடுத்தது. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு!

இன்றைக்கு நாளேடுகளில் ட்விட்டரைப் பற்றி ஒரு செய்தியேனும் வராத நாட்கள் மிகக் குறைவு. ட்விட்டரில் நமீதா சேர்ந்தால் செய்தி. சச்சின் சேர்ந்தால் சாதனை. ஷாருக்கான் தினமும் 'குளிக்க சோப்பும், டவலும் எடுத்துகொண்டேன்' என்பதிலிருந்து ட்விட்டி மகிழ்கிறார். கோவா ஆட்டத்தின் போது அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே ட்விட்டரில் ‘மழையால் இன்னைக்கு ஆட்டத்துக்கு ஆப்பு’ என்று சொன்ன ரோகித் ஷர்மா, யுவராஜ் சிங்கின் கைங்கர்யத்தால் ஆட்ட நாளின் போது ட்விட்ட வீரர்களுக்குத் தடை.. விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ ஹீரோயின் ஹன்சிகா ‘கவலைப் படாதீங்க.. கூடிய சீக்கிரம் விஜய்யை ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பிக்க வைக்கிறேன்’ என்கிறார். இப்படி எங்கெங்கு காணிணும் ட்விட்டர் புராணம்.

இந்தியாவில் ட்விட்டரை பிரபலப்படுத்திய பெருமை சசி தரூரையே சாரும். விமானப் பயணத்தின் போது ‘எகானமி க்ளாஸ் மாட்டுத் தொழுவம் போலிருக்கிறது’ என்று சொல்லித் தொலைக்க, ‘அப்ப அதுல வர்றவங்க மாடுகளா?’ என்று - அதில் வருபவர்கள் கேட்டார்களோ இல்லையோ - எதிர்கட்சிகள் கேட்க, ட்விட்டர் என்றால் என்ன என்று பொதுஜனம் முதற்கொண்டு கேட்க ஆரம்பித்தார்கள். அதன்பிறகும் அடிக்கடி ட்விட்டரில் ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

வாராந்திர இதழ்கள் சுவையான ட்வீட்களை அள்ளி எடுத்துக் கொஞ்சி மகிழ்கிறது.

‘உங்க ட்விட்ட விகடன்ல பார்த்தேன். அதுமூலமாத்தான் உங்களை ஃபாலோ பண்ணினேன்’ என்று என்னிடம் சொல்பவர்கள் நிறைய பேர்.

வலைஞர்கள் (வலைப்பதிவர்கள்) போல, ட்விட்டர்கள் ட்வீப்பிள்ஸ் என்றழைக்கப்பட்டு, செல்லுமிடமெல்லாம் சந்தித்துக் கொள்கிறார்கள். பேச்சும் 140 வார்த்தைகளுக்குள்ளா என்று தெரியவில்லை!

எது எப்படியோ ட்விட்டரின் வடிவமும், எதையும் சுருங்க சுவாரஸ்யமாய்ச் சொல்ல வைக்கும் அதன் விதியும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இத்தனை பீடிகையும் எதற்கு? நான் சமீபத்தில் எழுதிய சில ட்விட்களைப் பகிர்ந்து கொள்ளத்தான்.

(என்னை ட்விட்டரில் தொடர இந்த வலைப்பூவின் இடது பக்கத்தில் உள்ள குருவியைக் க்ளிக்குங்கள்.)

***************************** ********************** ******************

‘நேரம் சரியில்லை கெடா வெட்டணும்’ என்கிறார்கள். பாவம், அந்த ஆட்டுக்குத்தான் நேரம் சரியில்லை.

*
ரசியல் பத்தி எப்பக் கேட்டாலும் ஒரு தடவை சொன்னதையேதான் நூறு தடவையும் சொல்றாரு சூப்பர்ஸ்டாரு! #வருவியா வரமாட்டியா வரலேன்னா உம்பேச்சு கா!

*

‘எத்தனை தூரம் வேண்டுமானாலும் அடித்து விளையாடுங்கள்’ - இது ஒரு ப்ரா விளம்பரம்! ஹ்ஹூம்!

*

னைவி: ‘சாப்பிட்டாச்சா?’ நான்: ’ஓ!’ மனைவி: ‘கொழம்பு எப்படி இருக்கு?’ நான்: ‘அருமை!’ மனைவி: ’இன்னைக்கு வெறும் லெமன் ரைஸ்தான் வெச்சேன்’ #ஙே

*

ன் மனைவி சுடிதாருக்கு மேட்சா ஷால் கிடைக்கறதுக்குள்ள விஜயகாந்துக்கு கூட்டணி கிடைச்சுடும் போலிருக்கு. #ஷாப்பிங் டார்ச்சர்ஸ்

*

ண்ணின்னாலே எப்பவுமே சண்டைதான் #காவிரி #முல்லைப்பெரியாறு #குழாயடி #டாஸ்மாக்

*

ஃபீஸுக்கு வந்தால் வீட்டு வேலைகளின் பாக்கியும், வீட்டுக்குவந்தால் ஆஃபீஸின் பெண்டிங் வேலைகளும் ஞாபகத்துக்கு வருகிறது. #நாராயணா

*

லபார் கோல்ட் விளம்பரத்தில் இளையராஜா. #தங்கமான ராசா

*

பேருந்தில், ரயிலில் தனித்தனியே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு கேட்போரின் செல்ஃபோன்களைப் பறிமுதல் செய்ய அவசரச் சட்டம் கொண்டு வா ஆண்டவா!

*

“நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன... நீதான் எந்தன் ஒளிவிளக்கு.. (தோழி அப்டேட் அல்ல..ஃப்லிப்ஸ் ட்யூப்லைட்டைப் பார்த்து பாடியது)

*

தூத்துக்குடி டாஸ்மாக் முன் இருந்த “இங்கே பார் வசதி உண்டு’ என்பதில் ‘ச’வை மட்டும் விட்டுப் படித்து ஒரு கணம் திடுக்கிட்டேன்.

*

துரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இலவச கழிப்பிடம்/குளியலறை. 5 பைசா வாங்கவில்லை. அவ்வளவு சுத்தமாக இருக்கிறது!

*

வாழ்க்கையிலேயே முதல்முறையாக பாத்ரூமில் பாத்டப்-பிற்கு மேல் சீலிங் ஃபேனைப் பார்க்கிறேன். #சுகம் ஹோட்டல்ஸ், தூத்துக்குடி.

*

மெனக்கெட்டு ரோடு போட்டு, ரோடு போட்டதுக்கு பாராட்டு விழாக்கு வர்றவங்களை வரவேற்று பேனர் வைக்க அந்த ரோட்டையே தோண்டறாங்க.#கொடுமைடா சாமி

*

ந்தியா செகண்ட் பேட்டிங் என்று தெரிந்ததும் பர்மிஷனைக் கேன்சல் செய்து ஆஃபீஸ் நெட்டில் ஸ்கோர் பார்ப்பவனே புத்திசாலி #சாமர்த்தியன் சொல்

*

ழகான பெண்கள் ஓவர் டேக் செய்ய முயலும்போது வழி விட்டு ரசிப்பவனே புத்திசாலி #சாமர்த்தியன் சொல்

*

ஃபீஸுக்கு 15 நிமிடம் லேட்டானால் வேறு சில ஆஃபீஸ் வேலைகளையும் முடித்து ஒரு மணி நேரம் லேட்டாகச் சென்று ரிப்போர்ட் செய்பவனே
புத்திசாலி #சா.சொ

*

ளம்பெண் லிஃப்ட் கேட்கும்போது, மாட்டியிருக்கும் Back Bagஐ கழற்றி பைக் முன்னால் வைத்துக் கொள்பவனே புத்திசாலி! #சாமர்த்தியன் சொல்

*

விக்ரம், த்ரிஷா, விஜய், மம்முட்டி... இப்போதெல்லாம் பல நிறுவனங்களின் ப்ராண்ட் அம்பாசிடர்கள் - க்ராண்ட் அம்பாசிடர்களாக இருக்கின்றனர்.

*

புள் செஞ்சுரியை மகளுக்கு அர்ப்பணிக்கிறார் சச்சின். நானும் நேத்து ஆஃபீஸ்ல வாங்கின பாராட்டை என் மகளுக்கு அர்ப்பணிச்சுக்கறேன்.

*

நாளைக்கு ஆயுதபூஜையாம். பலபேரை வீழ்த்திய உன் கண்களுக்கு மறக்காமல் கற்பூரம் காட்டு #தோழி அப்டேட்ஸ்

*

பைக்கில் செல்லும்போது கன்னிப் பெண்களைக் கடக்கும்போதுதான் ரிவர்வ்யூ மிர்ரர் சரியான பொசிஷனில் இல்லையென்பதைக் கவனிக்க முடிகிறது.

*

காமன்வெல்த் முடியும்போது, கம்பெனியில் போனஸ் போட்டுவிடுவார்கள். நானும் தங்கத்துக்காக ஓடவேண்டியிருக்கும். #மனைவி சொல்லே மந்திரம்

*
ன்னையின் தாலாட்டும், இளையராஜாவின் பாடல்களும் தரமுடியாத ஆழ்ந்த நித்திரையை ஆஃபீஸ் மீட்டிங்குகள் தருகின்றன #நிதர்சனம்

*

களிர் டென்னிஸ், மகளிர் டேபிள் டென்னிஸெல்லாம் பார்க்கும்போதுதான் ‘காமன்’வெல்த்துக்கு அர்த்தம் புரிகிறது..! #ஆணாதிக்க ட்வீட்

*

ஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்களைவிடவும் ரயில் நிலையத்தில் காணும் கன்னிகள் மனதைக் கவர்கிறார்கள். #அவதானிப்பு


*** *** *** *** ***

Tuesday, November 2, 2010

இணைய ஜோக்காளி - ஹ்யூமர் க்ளப்

சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தபோது நகைச்சுவைக்கு அதிக இடம் கொடுத்தார். நகைச்சுவை என்றால் காலாவதியான ஜோக்ஸ் அல்ல. சிந்தனையை தூண்டும் ஜோக்ஸ், க்ரியேட்டிவான ஜோக்ஸ் இப்படி... கேட்டவையாகத்தான் இருக்கும். ஆனாலும் அதைச் சொல்லும் விதத்தில் வித்தியாசப்படுத்தியிருப்பார்கள்.

அதில் ஹ்யூமர் க்ளப் என்றொரு பகுதி வரும். ஒரு க்ளப்புக்கு வந்து எல்லாரும் ஜோக்ஸ் சொல்வார்கள். இளையஜோக்காளி என்றொரு கதாபாத்திரம் எல்லாரையும் கலாய்ப்பார். (நிஜமாகவே வாராவாரம் அந்த க்ளப் நடந்தது என்று கேள்வி)

அதே போல நாமும் ஒரு ஹ்யூமர் க்ளப் நடத்தி, இளைய ஜோக்காளிக்கு பதிலாக இணைய ஜோக்காளி என்றொரு கதாபாத்திரத்தைக் கொண்டு வந்து ஒரு ஹ்யூமர் க்ளப் நடத்தினால் என்ன என்று நேற்றிரவு 12.18க்கு ஒரு சிந்தனை பிறந்ததன் விளைவே இந்தப் பதிவு.

இது ஒரு சோதனை முயற்சி. யாருக்குச் சோதனை என்பது இன்றிரவுக்குள் தெரிந்துவிடும்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







க்ளப் ஆரம்பிக்கிறது... வந்த எல்லாரையும் ‘வாங்க.. வாங்க’ என்று வரவேற்கிறான் இணைய ஜோக்காளி.

“சரி யாரு மொதல்ல ஜோக் சொல்றது?”

ஒருத்தர் கைதூக்குகிறார். “நான் சொல்றேன்”

“உடனே ஜோக்’ன்னு சொல்லீட்டு ஜோக் சொல்லீட்டேன்னு சொன்னீங்கன்னா அப்படியே தூக்கிக் கொண்டு போய் கூவத்துல போட்டுடுவேன்” என்று மிரட்டுகிறான் இ.ஜோ.

“அந்த மாதிரி உங்க அளவுக்கெல்லாம் கடிக்க மாட்டேன் இஜோ. நிஜமாவே ஒரு ஜோக் சொல்றேன்.. ஒரு பஸ்ஸூல உட்கார்ந்துட்டிருந்த ஸ்கூல் பையன் ஸ்கூல் பேக், ஜாமெட்ரி பாக்ஸ்ன்னு திறந்து ஏதோ தேடிகிட்டிருந்தான். கண்டக்டர் என்னான்னு கேட்க, “டிக்கெட் எடுக்க பத்து ரூவா வெச்சிருந்தேன் சார்.. காணோம்”ன்னான். சரி எங்க போவணும்ன்னு கேட்ட கண்டக்டர் அவன் போற ஸ்டாப்புக்கு அஞ்சரை ரூவா டிக்கெட்டைக் கிழிச்சுக் கொடுத்துட்டு நகர்ந்தாராம். உடனே அந்தப் பையன் கேட்டான். “பாக்கி நாலரை ரூவா?”

கூட்டத்துக்கு வந்ததில் பாதிபேர் ஐந்து செண்டிமீட்டரும், பாக்கி பேர் ரெண்டு செண்டிமீட்டரும் சிரித்தார்கள். இ.ஜோ, “பதிவுல மொத ஜோக்.. கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்” என்றுவிட்டு, “சரி.. அடுத்த டாபிக் கணவன் மனைவி” என்கிறான்.

“நான் சொல்றேன்” என்று கூட்டத்திற்கு வந்த ஒரு முப்பது வயதுக்காரர் எழுந்தார். இணைய ஜோக்காளி கேட்டான்: “உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?”

“ஆமா ஆய்டுச்சு..”

“சரி சரி.. என் ஆறுதல்கள்.. இப்ப ஜோக்கைச் சொல்லும்”

“ஒரு திருவிழாவுக்குப் போயிருந்த கணவன் மனைவில மனைவியைக் கூட்டத்துல காணலை. ரொம்ப வருத்தப்பட்ட அவன், பக்கத்தில் இருந்த ராமன் கோயிலுக்குப் போய் வேண்டினானாம். ‘ராமா.. எப்படியாச்சும் என் பொண்டாட்டியைக் கண்டுபிடிச்சுக் குடு’ன்னு. ராமர் டகார்ன்னு அவன் முன்னாடி வந்து சொன்னாராம்: ‘நேராப் போய் லெஃப்டுல திரும்பினின்னா ஒரு ஆஞ்சநேயர் கோயில் வரும். அங்க போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணு. ஏன்னா என் பொண்டாட்டி தொலைஞ்சப்பவே அவருதான் கண்டுபிடிச்சார்’ன்னு!”

இந்த ஜோக்குக்கு நாலு பேர் விசிலடித்தார்கள். இணைய ஜோக்காளிக்கு கொஞ்சம் உற்சாகம் வந்துவிட்டது. “சரி.. இன்னொரு கணவன் மனைவி ஜோக் பார்சல்...” என்று ஆர்டர் செய்தான் இஜோ.

கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தொந்தி பெருத்த ஆசாமி, தொண்டையைச் செருமிக் கொண்டு, “அவைக்கு வந்திருக்கும் இணைய ஜோக்காளிக்கு என் முதற்கண் வணக்கத்தை..” என்று ஆரம்பிக்க இஜோ அவசர அவசரமாக இடைமறித்து.. “அந்த ஈரவெங்காயம் எதுவுமே இந்தக் கூட்டத்துக்கு வேணாம். ஒழுங்கா ஜோக்கை மட்டும் சொல்லீட்டு அப்படிக்கா போய் குந்திக்கணும்” என்று சொன்னான்.

சரி என்ற அவர் சொன்னார்: “ஒரு பொண்ணு அவளோட ஜாதகத்தை ஜோசியக்காரர்கிட்ட காட்டினா. ஜோசியக்காரர் பார்த்துட்டு ‘உங்க ராசிப்படி உங்களுக்குப் பெரிய இடத்திலேர்ந்து நிறைய சொத்து சொகத்தொட ஒரு புருஷன் கிடைப்பான்’ன்னு சொன்னாரு. இவ கேட்டாளாம்: “அப்ப இப்ப இருக்கற புருஷனை என்ன பண்றது?”

ஒரே ஒருத்தர் கைதட்ட, இஜோ தொந்தியாசாமியை முறைத்தபடி “ஜோக்கு சொல்றேன்னு எந்திரிச்சா ஜோக்கு சொல்லணும்.. இப்படிக் கொல்லப்படாது.. சரியா?” என்றுவிட்டு திரும்ப ஓர் இளைஞன் சொன்னான். “சார் நான் ஒரு
ஜோக்....”

“சொல்லு” என்றான் இஜோ.

‘ஒருத்தன் கார் வெச்சிருந்தான். அவன் ஃப்ரெண்டுகிட்ட சொன்னான். “டேய்.. நான் கார் வாங்கினதிலேர்ந்து இப்ப வரைக்கும் ரிப்பேருக்குன்னு ஒரு காசுகூட குடுத்ததில்லை”ன்னு. அதுக்கு அவன் ஃப்ரெண்ட் சொன்னான்.. “ஆமாமா மெக்கானிக் கூடச் சொன்னாரு”

இஜோ மட்டும் சிரிக்க, மற்றவர்கள் ஐந்து நிமிடம் கழிந்து, சிரிக்கத் தொடங்கினார்கள்.

‘சரி கடைசியா ஒரு ஜோக் சொல்றேன்’ என்றான் இஜோ. க்ளப்புக்கு வந்திருந்தவர்கள் ஓடத் தயாரானார்கள்.

“என் ஃப்ரெண்ட் ராஜான்னு ஒருத்தன் ஆஃபீஸ் பார்ட்டி முடிஞ்சு, கொஞ்சம் போதையோட அவன் காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போய்ட்டிருந்தான். வழில போலீஸ் புடிச்சிடுச்சு. இறங்கி, அவனை ஸ்மெல் டெஸ்ட் பண்ணிகிட்டிருக்கறப்ப, கொஞ்ச தூரத்துல ஒரு திருடனை அஞ்சாறு பேர் தொரத்தறைப் பார்த்தாங்க போலீஸ்காரங்க”

“ஆஆஆவ்வ்வ்..” என்று ஒரு கொட்டாவி சத்தம் வரவே, இஜோ கடுப்பாகி ‘நடுவுல தூங்கறவங்களுக்கு காஃபி கட்’என்றுவிட்டு தொடர்ந்தான்.

“உடனே போலீஸ் ராஜாகிட்ட ‘இங்கயே இரு.. இப்ப வந்துடறோம்’ன்னு சொல்லீட்டு அந்த்த் திருடனைப் பிடிக்க ஓடறாங்க. அரைமணி நேரம் நின்னு பார்த்த ராஜா, போங்கடான்னு காரை எடுத்துட்டு வீட்டுக்கு வந்து ஷெட்ல நிறுத்தி அம்மாகிட்ட “யாராவது வந்து கேட்டா எனக்கு உடம்பு சரியில்ல.. நாலு நாளா பெட்ல இருக்கேன்னு சொல்லு” அப்டீன்னு சொல்லீட்டு மப்போட போய் பெட்ரூம்ல போய்த் தூங்கிடறான்”

“ஜோக் சொல்லச் சொன்னா சிறுகதை சொல்றீங்களே..” என்று வந்த குரலை அதட்டிவிட்டுத் தொடர்கிறான் இஜோ.

“கொஞ்ச நேரத்தில் போலீஸ் அவன் வீட்டுக்கு வருது. அம்மாவும் அவன் சொன்ன மாதிரியே சொல்றாங்க. அதுக்கு போலீஸ்.. ‘அதெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல கார்ஷெட்டைத் திறந்து காமிங்க’ன்னு சொல்றாங்க. திறந்து பார்த்தா.. அங்க பளபளன்னு சிகப்பு சைரனோட நின்னுகிட்டிருந்துச்சு போலீஸ் கார்!”

சொல்லிமுடித்து, ‘கைதட்டுபவர்களுக்கு தீபாவளிக்குப் பட்டாசு பாக்ஸ் ஃப்ரீ’ என்று இஜோ சொல்ல அனைவரும் படபடவென கைதட்டினர்.


.

Wednesday, October 27, 2010

நீயா நானா - சில குறிப்புகள்

“சார்.. நல்லா உடம்பு வந்துடுச்சு உங்களுக்கு”

“என்ன போஸ் குடுத்துட்டிருக்க? எப்ப பேசுவ?”

“ஐ.. ஷர்ட் சூப்பர்”

“கிருஷ்ணா.. இது லைவ்வா? நீ சென்னைல இருக்கியா?”

“ஹலோ சார்.... நீங்களா அது? நீங்களா.. நீங்கதானா? ரொம்ப குண்டா இருக்கீங்க சார்..”

ஒரு ஒன்றரை மணிநேர ப்ரோக்லாம்ல மூணு நாலு வாட்டி டிவில மூஞ்சி வந்ததுக்கு எத்தனை ஃபோனு.. எத்தனை எஸ்ஸெம்மெஸ்ஸு.. என்னென்ன க்ரிடிக்ஸு.. பாராட்டு.. கிண்டலு..... அப்ப்பப்பப்பா... ரஜினிகாந்தையெல்லாம் கோயில் கட்டிக் கும்பிடணும்டா சாமி!

** ** ** **





போன வியாழக்கிழமை செல்வேந்திரன்தான் கூப்ட்டார். விஜய்லேர்ந்து அழைப்பு வரும்ன்னு. கொஞ்ச நேரத்துல வந்துச்சு.. ‘வெள்ளிக்கிழமை மூணு மணிக்கு வாங்க. 4 மணிக்கு ஷூட்’னாங்க.. ஏற்கனவே போன நம்ம மக்கள்ஸ்.. ‘மூணு மணின்னா ஆரம்பிக்கவே எட்டாகும்’னாங்க. நான் அன்னைக்கு நைட் கிளம்பியே ஆகணும். அதுனால போவோம்.. 9க்குள்ள ஷூட் முடியும்னா கலந்துப்போம்.. இல்லைன்னா வந்துடலாம்னு போனேன்.

அஞ்சரைக்கு ஷூட் ஆரம்பிச்சு, எட்டேமுக்காலுக்கெல்லாம் முடிச்சுட்டாங்க..

புதிய பண்டிகை நாட்கள் தேவையா இல்லையாங்கறதுதான் தலைப்பு. பண்டிகை நாட்கள்னா ஃப்ரெண்ட்ஷிப் டே, வாலண்டைன் டே, மதர்ஸ் டே... இப்படி...

தேவையில்லைங்கற டாபிக்ல நான்.

இளையராஜாவுக்கு முதல்ல கரண்ட் போச்சாம், சச்சின் ஃபர்ஸ்ட் மேட்ச்ல டக் அவுட்டாம்.. அதே மாதிரி நான் செட்டுக்குள்ள போனதும் இருந்த ஒரு பெரிய இடைவெளில தொபுக்கடீர்ன்னு விழுந்தேன். (நான் உட்கார்ந்திருக்கறதுக்கு முன்னாடி கருப்புல தெரியறது குழி..! தரை இல்ல..)

சரி.. இனி சில கணக்கு. இது தோராயக் கணக்குதான்...

மொத்த ஒளிபரப்பு நேரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். அதுல கோபிநாத் பேசறது அரை மணி நேரம் வரும். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம்.

இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ஒரு 45 பேர் இருப்பாங்க. ஆக, ஒரு நிமிஷம் பேச சான்ஸ் கிடைச்சா நீங்க போன ஜென்மத்துல யாரோ வயசானவங்களுக்கு ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணிருக்கீங்கன்னு அர்த்தம்.

இதுல ஏன் பேசல ஏன் பேசலன்னு கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல?

எனக்கு அஞ்சு வாட்டி சான்ஸ் கிடைச்சுது. நானும் பேசினேன். ரெண்டு எடிட்டிங்ல போக, மூணு வாட்டி பேசினதைக் காமிச்சாங்கன்னாங்க. (நான் பார்க்கல... ட்ராவல்ல இருந்தேன்) அது போக ரெண்டு மூணு வாட்டி க்ளோஸப்ல காட்டினாங்க... இதுக்கு மேல அடிக்கடி என்கிட்ட மைக்கைக் குடுத்துப் பேச்ச் சொல்ல நான் என்ன அன்னைக்கு வந்த ரேடியோ ஜாக்கி சிவசங்கரி மாதிரி KNOWN FIGURE ஆ?

:-)

ஆனா இந்தப் பக்கம் ஒரு பத்து பேரு, அந்தப் பக்கம் ஒரு பத்து பேரு ஒண்ணுமே பேச சான்ஸ் கிடைக்காம உட்கார்ந்திருப்பாங்க. அவங்கதான் பாவம்.

ஆகவே நண்பர்களே...

**** ***** ******


# எந்த டாபிக் சொல்லி பேசக் கூப்டாலும், அதுல உங்களுக்கு உடன்பாடா இல்லையான்னு யோசிச்சு ஒத்துக்கோங்க. நான் “ஸ்பெஷல் டேஸ் தேவையில்லைன்னு பேச வர்றீங்களா’ன்னு கூப்டதுக்கு சரின்னுட்டுப் போய்ட்டேன். ஆக்சுவலா என் போன்ற கொண்டாட்ட மனநிலை கொண்டவனுக்கு (நன்றி: சாரு) இந்த நாட்களை ஆகோஷிப்பது பிடிக்கவே செய்கிறது. (ஆதாரம்: இதோ)

அந்த மாதிரி நமக்கு மனதளவில் உடன்படாத பக்கத்துக்குப் போய் உட்கார்ந்தா இப்படி சரியானபடிக்கு பேச முடியாமப் போகலாம்.

# முதல் வரிசைல முதல் ஆளா உட்காரச் சொன்னா, சொன்னவனை கிழக்க பார்த்து நிக்க வெச்சு சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மறுத்துடுங்க. என்னை இப்படித்தான் அசிஸ்டெண்ட் ஒருத்தர், ஒரு பொண்ணுகிட்ட ‘இவரை ஏ-ஒன்ல உட்கார வைங்க’னாரு. அந்தப் பொண்ணும் கூட்டீட்டுப் போய் ஃபர்ஸ்ட் ரோ-வுல, ஃபர்ஸ்டா உட்கார வெச்சுது. நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....

என்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். அதே நாலாவது, அஞ்சாவது ஆளா இருந்தா கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சுதாரிச்சுக்கலாம்.

# ஆடத் தெரியாதவனுக்கு’ன்னு நெனைக்காதீங்க. இதையும் மீறி என்னாகுதுன்னா, எதிரணில யாராவது பேசறப்போ உங்களுக்கு சரியானதொரு பாய்ண்ட் ஞாபகத்துக்கு வந்து, பேசலாம்னு பார்த்தா மைக் அஞ்சாவது லைன்ல ஒருத்தன்கிட்ட இருக்கும். அவன் என்னமோ உங்க ஜென்ம விரோதி மாதிரி மூஞ்சியை வெச்சுகிட்டு, கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.

அதையும் மீறி.. திரும்பி அவன் குடுக்கலாம்னு முடிவு பண்ணி பாஸ் பண்ணினாலும் அந்த மைக் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உங்ககிட்ட வரணும். ம்ஹூ.. சான்ஸே இல்லை.

இந்த மைக் பாஸிங் விளையாட்டு போன பத்தாவது நிமிஷமே எனக்குப் புரிஞ்சு போய், ‘போங்கடா’ன்னு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்துட்டேன். அப்படியும் ஒருக்கா மைக் கேட்டதுக்கு, ஒருத்தன் கேஸ் போட்டுடுவான் போல.. அப்படிப் பார்த்தான்.. விட்டுட்டேன்.

# டிஃபன், டீ, காஃபி, கேசரி, சுண்டல் எல்லாமே தர்றாங்க. நல்லாருக்கு.

# அங்க போய் உங்க மேதாவித் தனத்தைக் காட்டறத அவங்க விரும்பறதே இல்லை. போனமா, பேசினமா வந்தமான்னு இருக்கணும். ஒருத்தன் கோபிநாத்கிட்ட ட்ரெடிஷனல் டே பத்திப் பேசி ‘நீங்களே வேட்டி கட்டறதில்லையே’ன்னு கேட்டு எடிட்டிங்ல மாட்டிகிட்டான். தேவையா இது?

# டைரக்டர் ப்ரேக் டைம்ல வந்து டிப்ஸா தர்றாரு. அவரோட டெடிகேஷன் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

# போன வெள்ளிக்கிழமை ஷுட் பண்ணினது, அஞ்சாறு வாரம் கழிச்சு வரும்ன்னு நெனைச்சேன். ஞாயிறன்னைக்கே போட்டுட்டாங்க..!

மறுபடியும்...

அழைத்துப் பேசிய, காலாய்த்த, எஸ்ஸெம்மெஸ்ஸிய, மெய்ல் அனுப்பிய, பாராட்டிய, திட்டிய அனைவருக்கும் நன்றி.

----------------------

நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.

‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’
--------------------------------------------

நிகழ்ச்சியின் லிங்க் இங்கே.

*** *** ***

Monday, October 25, 2010

க்ரிக்கெட்டும் நானும்... (மீள்ஸ்)


ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!


.

Wednesday, October 20, 2010

கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு



கம் ஆன், காமினி


அந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. சுத்தம் என்பதை விட வெறுமையாக இருந்தது என்பது தான் சரியான வார்த்தை. அவள், அவன் மற்றும் அந்த சித்திரத்தைத் தவிர அவ்வறையில் வேறு பொருட்கள் இல்லை. மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும் காமினியின் பார்வை சுற்றுப்புறத்தை ஆழமாக அளவிட்டுக் கொண்டிருந்தது. அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். வேறு யாரும் தேடி கண்டுபிடிக்கும் முன் வைரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வம், வெறி அவள் முகத்தில் தெரிந்தது.

‘ஆளையும் முழியையும் பாரு’ என்று சிவாவை முறைத்துக் கொண்டே, ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அதே சித்திரத்தை திரும்பவும் ஆராய்ந்தாள். அதில் சந்திரமுகி படத்தில் வருவது போல ஒரு கதவு, அதன் கீழே ஒரு மிதியடியில் “Welcome Back” என்று எழுதப்பட்டிருந்தது. வைரத்தை அடையும் ஒரே வழி இதில் மறைந்துள்ள செய்தியை அறிவது தான், ஆனால்...

Welcome Back.. மறைந்துள்ள செய்தி.. இந்த எண்ணம் ஓடியதும், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காமினி சட்டென்று எதிர்புறம் திரும்பினாள். படத்திற்கு நேர் எதிரே உள்ள சுவற்றை தட்ட, சுவற்றோடு ஒன்றி போய் இருந்த கதவு திறந்து கொண்டது. அந்த அறையின் சுவற்றில் பெரிதாக 234445387 என்ற நம்பர் எழுதியிருந்தது. அதன் பக்கத்தில் கண், கடல் ஆகிய படங்களும், அதன் அருகில் ‘நீ’ என்ற வார்த்தையும் எழுதியிருந்தது. சிவா அவளை குழப்பத்துடன் பார்க்க, காமினி ஒரு புன்னகையுடன் தன் கைபேசியை இயக்கிக் கொண்டிருந்தாள்.

‘என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில உள்ள SM ஹாஸ்பிடலோட நம்பர் அது. கண் – Eye = I, கடல் – Sea = C, நீ = U. ஸோ, அந்த ஹாஸ்பிடலோட ICU வார்ட்ல ஏதோ குறிப்பு இருக்கு.. சீக்கிரம் அங்கே போவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்’ என்று அவள் சொல்லி முடிக்கும் நேரம் சிவா காமினியின் மூக்கில் ஒரு கர்சீப்பை வைத்து அழுந்த மூடினான். இது என்ன வாசனை, என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே காமினி மூர்ச்சையானாள்.

------------------------------------------------

மயக்கத்தில் இருந்து காமினி எழுந்த போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள். முகத்தில் மாஸ்க், கையில் ட்ரிப்ஸ் மற்றும் சில வயர்களும், அங்கிருந்த மெஷின்களும் அவளை பயமுறுத்தின. டாக்டர் சிவாவிடம் “உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில எழுந்திடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல இருவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.

‘சிவா ஆபத்தானவன். ஏதோ சதி நடக்கிறது. இவனிடம் இருந்து முதலில் தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள். குறிப்பில் இருந்த அறை இதுவாகத் தான் இருக்கும் என்பது புரிய, அறை முழுவதையும் கண்களால் துழாவினாள். எழுந்து தேடலாம் என்று மாஸ்க்கை கழட்ட போகும் போது டாக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார். வேறு வழியில்லாமல் பாதி முடிய கண்களால் அசுவாரசியமாக நோட்டமிட்டவள் பார்வையில் அது பட்டது.

ரிப்போர்ட்டில் எதையோ எழுதிவிட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். நல்லவேளை சிவாவிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே பைப்பை பிடித்து இறங்கியவள், பைக்-கை ஸ்டார்ட் செய்து அவள் வருகைக்காக ரெடியாக நின்ற சிவாவை பார்த்து திகைத்தாள்.

‘உனக்கு.. உங்களுக்கு எப்படி நான் வருவது தெரியும்’ என்று திணறியவாறே கேட்டாள். ‘என் மனைவி என்றவுடன் உன் பல்ஸ் ரேட் ஏறியதை அந்த மெஷின் காட்டிவிட்டது. மயக்கம் தெளிந்து விட்டதால், குறிப்பை கண்டுபிடிக்க உனக்கு டைம் கொடுத்து விட்டு, உனக்காக இங்கே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்’ என்றான் சிவா. ‘சரி, என்ன கண்டுபிடுத்தாய்’ என்று கேட்டவன், அவள் பதில் சொல்ல தயங்கவும், ‘என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது, போலிஸுக்கு தகவல் கொடுக்கக் கூடாது என்பது உனக்கு இடப்பட்ட உத்தரவு. மறந்து விடாதே’ என்று அழுத்தமாக கூறினான்.

காமினி அந்த அறையில் இருந்த எடுத்து வந்த டவலை அவனிடம் காண்பித்தாள். ‘இந்த டவலில் இருக்கும் Patternஇல் Morse Code உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், ரகசிய செய்திகள் இந்த முறையில் நெய்யப்பட்டு, ஒற்றர்கள் அணியும் ஆடைகளில் சேர்க்கப்பட்டன. இது ஒரு வகை Steganography. இந்த காலத்தில் படங்களுக்குள் செய்திகளை ஒளித்து இண்டெர்நெட் மூலமாக அனுப்புவது போல’ என்று சொல்லிவிட்டு அந்த டவலை ஆராய்ந்தாள். இன்னும் அங்கே நிற்பது ஆபத்து என்பதால், இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி அருகிலிருக்கும் பார்க்-கில் நுழைந்தனர்.

அந்த டவலில் இருக்கும் குறிப்பை படித்து கண்டுபிடிக்க காமினிக்கு அரை மணி நேரமானது. முடித்ததும், அந்த பேப்பரை சிவாவிடம் நீட்டினாள். அவ்வளவு நேரம் சோம்பலுடன் படுத்துக் கொண்டிருந்த சிவா ஆர்வத்துடன் எழுந்து படித்தான். அதில்..

55, LAKSHMANAN ST, GANDHI NAGAR, PALLAVARAM

A THEFT REVISION

என்று எழுதியிருந்தது. “அந்த அட்ரெஸ் காலையில் நம்ம முதலில் இருந்த அதே இடம் தான். ஆனா, ரெண்டாவது லைன் தான் என்னன்னு புரியல. எதற்கும் அங்கேயே போய் பார்ப்போம்” என்றாள் காமினி.

அடுத்த பதினைந்து நிமிடத்தில், காலையில் பார்த்த அதே ‘Welcome Back’ அவர்களை திரும்பவும் வரவேற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மூலை முடுக்கு எல்லாம் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்வளவு அலைந்த பின்னும் வைரம் கிடைக்கவில்லை என்ற நினைப்பு சோர்வை அதிகமாக்கியது. எரிச்சல் மேலிட அவனுடைய டீசர்ட்டில் இருந்த “Admirable?? I’m real bad!!” என்பதை பார்த்த உடன் கைபேசியை இயக்கினாள்.

வியப்பு மேலிட சிவாவைப் பார்த்து “Anagram!! வார்த்தை விளையாட்டு!! A THEFT REVISION என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை பிரித்து சேர்த்தால் ‘IT IS OVER THE FAN’ என்று வருகிறது” என்றாள். தாமதிக்காமல், சிவா ஃபேனை கழட்ட மேலிருந்து ஒரு வெல்வட் டப்பா கீழே விழுந்தது. உள்ளே பளபளவென்ற வைரமும் ஒரு அட்ரஸும் இருந்தது. நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த அட்ரஸுக்கு இருவரும் விரைந்தனர்.

அந்த வீட்டின் வரவேற்பறையை நுழைந்த அந்த நிமிடம், “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. உடனே, காமினி அவன் பின்புறம் பார்த்து “நீங்களா??” என்று அதிர்ச்சியுடன் திடுக்கிட்டாள். அதைக் கேட்டு சிவா தடுமாறிய அந்த நொடியில் அவளுடைய கராத்தே கை கொடுக்க, அடுத்த நொடி துப்பாக்கி காமினியிடம் இடம் மாறியிருந்தது. அதே நேரம், அறைக்குள் வந்து கொண்டே,காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“இல்லை, என்னை அறியாமல் எதாவது சதி வேளையில் ஈடுபடுத்த பட்டிருக்கிறேனோ-ன்ற சந்தேகம் இருந்ததால், காலையில் இருந்து இங்கே நுழையும் வரை உள்ள தகவல்களை எல்லாம் என் மொபைல் வழியாக ஒரு mailஆக போலீசுக்கு எழுதி வைத்திருக்கிறேன். நாளை 10 மணிக்கு முன் நான் அதை delete செய்யாவிட்டால் அது automatically send ஆகிவிடும்.” என்று சொல்லிவிட்டு பரந்தாமனை பார்த்தாள்.

பரந்தாமன் சிரித்த படியே “வெல்டன் காமினி.. எங்கள் குழுவில் Investigative Journalist-ஆக சேர்வதற்கு முழு தகுதியும் உனக்கு இருக்கிறது. இந்த வேலைக்காக நாங்கள் தேர்வு செய்த ஐந்து பேரில் நீ தான் முதலில் வைரத்தை கண்டுபிடித்திருக்கிறாய். உங்களுடைய அறிவையும், ஆர்வத்தையும், தைரியத்தையும் சோதிப்பதற்காகவே இந்த போட்டி. உங்களை கண்காணிக்க ஒரு சீனியரை ஒவ்வொருவருடனும் அனுப்பி வைத்தோம். அப்படி உன்னுடன் வந்தவர் தான் சிவா.


எங்களை முழுவதாக நம்பாமல், நாங்களும் உன்னை சதி வேலையில் ஈடுபடுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணி போலிசுக்கு mail எழுதிய உன் சாமர்த்தியத்தை பாராட்டுகிறேன். நாளையில் இருந்து நீ வேலையில் சேரலாம்” என்றார். காமினி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தன்னுடைய லட்சிய கனவான வேலையை பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தாள்.

*******************************************

குறிப்பு: நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த படி - அனு எழுதிய சிறுகதை இது. பின்னூட்டங்கள் மட்டுமே எழுதி வந்தவரின் இந்த முதன் முயற்சியைப் பாராட்டுவோம்.
-பரிசல்காரன்
.

Tuesday, October 19, 2010

சவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு - (2)

.
முந்தைய நாற்பது கதைகளின் இணைப்பிற்கு இங்கே செல்லவும்.

---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------


41. காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

42. காமினி - பிரபாகரன்.ஜி.

43. டைமண்ட் 2 - முகிலன்

44. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

45. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

46. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்

47. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்

48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்

49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

53. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

54. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி

இவர் எழுதிய கதைகள் இரண்டு. இவர் வலைப்பூ இணைப்பும் கொடுக்கவில்லை. வலைப்பூவில் எழுதியிருந்து அதைத் தெரிவித்தால் இணைப்பு கொடுக்கிறேன். இல்லை அவர் விருப்பமுடன் - அனுமதி அளித்தால் - என் வலைப்பூவிலேயே அவர் கதையை வெளியிடுகிறேன்.

அப்டேட்: இவரும் வலையில் வெளியிட்டுவிட்டார். இணைப்பு அளிக்கப்பட்டு விட்டது.

55. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி

56. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்

57. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா

58. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி

59. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

60. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி

62. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்

63. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்

64. திருடி - சாம்ராஜ்ப்ரியன்

65. காமினி - அப்பாவி தங்கமணி

இவர் இன்னும் கதையை தன் வலையில் வெளியிடவில்லை. ஆகவே கதைக்கு இணைப்பு கொடுக்காமல் அவர் பெயருக்கு, அவரது வலைப்பூவையே இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.


66. காம்ஸ் - விசா

67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி

இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்.

அப்டேட்: இவர் வலையில் வெளியிட்டு விட்டார். இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.

68. காதல் ரோபோ - ஷைலஜா

69. அதே நாள் அதே இடம் - சத்யா

70. எந்திரன் - நீச்சல்காரன்

71. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

72. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்

73. பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்

74. கம் ஆன், காமினி - அனு

இவருக்கும் வலைப்பூ இல்லை. பின்னூட்டத்திற்காக துவங்கிய ப்ரொஃபைல் இணைப்புதான் கொடுத்திருக்கிறேன். இவர் அனுமதி கிடைக்குமாயின் என் வலையில் இவர் கதை வெளியிடப்படும்.

75. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்

76. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி

77. சிவா - ஸ்டார்ஜன்

78. காடு வித்து கழனி வித்து - கிரி

79. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்

80. காமினியீயீயீயீ - இரும்புத்திரை

81. தொலைந்து போன நிஜங்கள் - HVL

82. காணாமல் போன கதை - நந்தா

83. சவால் - புதுவை பிரபா

83. வைரம் உன் தேகம் - அபி


__________________________________________________

யாருடைய கதையாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

மீண்டும்... நன்றியும் வாழ்த்துகளும்!


.