Showing posts with label சவால் சிறுகதைப் போட்டி. Show all posts
Showing posts with label சவால் சிறுகதைப் போட்டி. Show all posts

Tuesday, November 16, 2010

சவால் போட்டியின் பின்னிருந்த சவால்

சவால் சிறுகதைப் போட்டிகளின் ஒரு சில கதைகளுக்கான விமர்சனங்கள் - நேற்றைய என் இந்தப் பதிவில் காணலாம்.

மேலும் சில கதைகளுக்கான விமர்சனங்களை ஆதிமூலகிருஷ்ணனின் இன்றைய பதிவில் - இங்கே காணலாம்.


**** ***** **** **** ****

சவால் சிறுகதைப் போட்டி குறித்து ஆதி எனக்கெழுதிய அனுப்பிய பதிவு இன்றைக்கு இங்கே...

--------------------------- --------------------------------

டந்த ஆகஸ்டில் 'என்ன செய்யப்போகிறாய் மினி?' என்றதொரு மினி கிரைம் தொடரை எனது வலைப்பூவில் எழுதினேன். தொடர்ந்தது நண்பர் பரிசல்காரனின் 'மிஸ்.யாமினி' என்ற மினி கிரைம் தொடர் அவரது வலைப்பூவில். இரண்டுக்கும் நீங்கள் தந்த 'பரபர' ஆதரவைத் தொடர்ந்து ஒரு நாள் நானும், பரிசலும் கதையெழுதிய அழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பருக்குத் தோன்றிய ஆசையே இப்படியான குறிப்புகளைத் தந்து கதைப்போட்டி அறிவிக்கும் யோசனை. 'காமினி' உருவானாள். என்னென்ன மாதிரியான எதிர்வினைகளெல்லாம் வரும் என்று நான் கருத்துச்சொன்னபோது, 'அப்படியெல்லாம் பார்த்தால் நீங்களெல்லாம்தான் இதற்குள் எழுதுவதை மூட்டைகட்டியிருக்க வேண்டும்..' என்று வாயை அடைத்தார். இருவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு போட்டியை அறிவித்தோம். வாசகங்கள் கொஞ்சம் கடுமையாகவே இருந்ததாகத் எனக்குத் தோன்றியது. ஹிஹி.. அவை பரிசல்காரனுடையவை.

'சவால் சிறுகதைப்போட்டி' என்று தலைப்பிட்டு அறிவித்துவிட்டோமே தவிர அதற்குப்பின்னால் எங்களுக்காகக் காத்திருந்த பெரிய சவால் அப்போது தெரியவில்லை. அழுத்தமான பணிச்சூழல், இருவருக்குமே இருக்கும் (தங்க)மணிச்சூழல் (இருவரும் அவ்வப்போது 'Same same.. puppy same' என்று தொலைபேசியில் பாடிக்கொள்வதுண்டு) தெரிந்தும் நாங்கள் இதில் இறங்கியிருக்கக்கூடாதோ என்று ஒரு கட்டத்தில் மலைப்பாகிவிட்டது. ஏனெனில் எனது கணிப்பாக 25 கதைகள், அதிகபட்சமாக கடைசி நேர விறுவிறுப்பில் 35 கதைகள் வரலாம் என எதிர்பார்த்தேன். நண்பரின் கணிப்பும் ஓரளவு அவ்வாறே இருந்தது. ஆனால் எங்கள் கணிப்பு தகர்ந்தது. சில விளையாட்டுகளையும் சேர்த்து 83 கதைகள் போட்டிக்கு வரும் என்று நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்துகொண்டிருக்கும் கதைகளைப் படிப்பது, ஒரே கோப்பாக தகுந்த எண்களிட்டுக் கோர்த்துவைப்பது, நடுவர்களுக்கு மின்னஞ்சல், மற்றும் பிரிண்ட் அவுட்களை அனுப்பி வைப்பது என்பதே மிகுந்த நேரம் எடுக்கும் செயலானது. நண்பர்களின் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதே ஒரு தனி வேலையாக இருந்தது.

இவற்றிற்கெல்லாம் முதலாக நடுவர் தேர்வு ஒரு சிக்கலான தலையாய விஷயமாக இருந்தது எங்களுக்கு. நிச்சயமாகக் கொஞ்சமேனும் பிரபலமாகியிருக்கும் எழுத்தாள நண்பர்களை அணுகியிருக்க முடியும். எங்களுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நண்பர்களாக சிலர் இருப்பது வசதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த 'ஸ்டார் வேல்யூ' வழியை மறுத்து 'பதிவர்களுக்குப் பதிவர்களால்..' கொள்கைப் படி பதிவர்களையே நடுவர்களாக்க முடிவுசெய்து சில பிரபல பதிவர்களை அணுகினோம். நாங்கள் தேர்வு செய்தவர்கள் ஸ்டார் வேல்யூ இருப்பவர்கள் என்பதைவிட நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எங்கள் எண்ணப்படி இருந்தார்கள். அவர்களில் கணிசமான நேரம் செலவிடத் தயாராக இருந்த மூவர் குழு போட்டியின் நடுவர்களாக இருக்கச் சம்மதம் சொன்னார்கள்.

முதலாமவர் வெண்பூ.

வெண்பூ அவரது வீட்டுச்சூழல், அலுவலகச் சூழலால் தொடர்ந்து பதிவெழுதுபவராய் இல்லாவிடினும் பதிவுலகை தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வருபவராய் உள்ளார். மேலும் எழுதுவதைவிடவும் தற்போது வாசிப்பதிலேயே மிகவும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். நாளடைவில் நிறைய எழுதுவார் என நம்பலாம். சிறுகதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். துவக்கத்தில் நிறைய கதைகள் எழுதியவர். விகடனில் இவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டாமவர் எம்.எம்.அப்துல்லா.

பதிவுலகில் துவக்ககாலத்திலிருந்தே எங்கள் நண்பர். மேற்சொன்னவை அப்படியே இவருக்கும் பொருந்தும். நண்பர்களில் நிச்சயம் அதிகம் பிஸியாக இருக்கும் நபர் என இவரைச்சொல்லலாம், ஏனெனில் பணி அப்படி. ஆயினும் மிக விருப்பத்தோடு இதில் கலந்துகொண்டார். எனக்குத் தெரிந்து பதிவுலகில் இவரது படுக்கையறையில்தான் அதிகபட்ச புத்தகங்களைக் கண்டிருக்கிறேன்.

மூன்றாமவர் ஜீவ்ஸ்.

இப்போதும் நான் ஏதும் கதைகள் என்ற பெயரில் எழுதினால் அதைப்பற்றி மெனக்கெட்டு போன் செய்து அபிப்பிராயம் கேட்கும் முதல் நபராக இருப்பவர் நண்பர் ஜீவ்ஸ். மிகச்சிறந்த ஒரு புகைப்படக்காரராக இருக்கும் அதே நேரம் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாதாமாதம் புகைப்படப் போட்டிகளை நடத்தும் 'பிட்' குழுவிலிருக்கும் அனுபவம் வாய்ந்தவர்.

ஏற்கனவே இருந்த எங்களின் எதிர்பார்ப்புகளோடு இன்னும் இறுக்கமாக, நேர்மையாக விதிகளைப் புனைந்துகொண்டனர் நம் நடுவர்கள். நாங்கள் இருவர் உட்பட யாரும் பெரும்பாலும் கதைகள் எழுதியவர்களின் வலைப்பூக்களில் சென்று பின்னூட்டமிடவில்லை. கதைகளுக்கு எண்கள் தரப்பட்டன. எழுதியவர் யாரென்ற தகவல் நடுவர்களுக்குத் தரப்படாமல் அந்த எண்கள் தரப்பட்டன. கதைகளை நிதானமாகப் படித்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மூவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆகவே எனது தேர்வான 'முடிவுகள் தேதி : நவம்பர் 1' என்பதை முதலிலேயே அனைவரும் நிராகரித்துவிட்டனர். கணினியில் வாசிப்பதை விட ஃபீல் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் கதைகளைப் பிரிண்ட்அவுட் எடுத்தே வாசித்தார்கள். அதுவும் சென்னையிருக்கும் அப்துல்லாவுக்காக பிரிண்ட்அவுட்டுகளை எடுத்துக்கொண்டு மெனக்கெட்டு தாம்பரத்திலிருந்து சிட்டிக்குள் போன கதையெல்லாம் வேறு நடந்தது. அந்தக் கதையை தனிப் பதிவாகவே எழுதலாம். பதிவுலகுக்காக செலவு செய்யும் சில மணி நேரங்களையும் பல நாட்கள் இந்தப் பணிக்காகவே நாங்களும், நடுவர்களும் செலவு செய்ய நேர்ந்தது எனில் அது மிகையாகாது. தகுந்த இணைப்புகளுடன் கதைகளின் விமர்சனங்களைக் கோர்த்தது பரிசலின் சாதனை என்று கூட சொல்லலாம், ஏனெனில் அவரது வீட்டு இணைய இணைப்பின் வேகம் அத்தகையது. கடந்த நாட்களில் அவர் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், பிறர் பதிவுகளில் அவர் நடமாட்டமும் இதன் சாட்சி.

அதுவும் நடுவர்கள் ஒரு நாளில் சுமார் 5 கதைகளை மட்டுமே வாசித்துக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இதனால் தொடர்ந்து வாசிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கவும், ஆர்வத்தைத் தக்கவைத்து முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ளவும் ஏதுவாயிற்று. மேலும் முழுமையான, திருப்தியான முடிவையும், அத்தனைக் கதைகளின் சுருக்கமான விமர்சனங்களையும் அவர்களால் தரமுடிந்தது.

முதலாவது முக்கிய விதியாக கொடுக்கப்பட்ட விதிகளுக்குள் கதை அமைந்திருக்கிறதா எனப் பார்த்தார்கள். பின் கதைக்களம், நடை, சுவாரசியம் போன்ற அடிப்படையில் தனித்தனியாக மதிப்பெண்கள் தந்து முதலிடம் பெற்ற கதைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலிடம் பெற்ற பதினைந்து கதைகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவற்றுள் பரிசுக்குரியவற்றை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை பங்குபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடுவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோருக்கு எங்கள் அன்பு.

பதிவர்கள் என்றில்லாமல் பின்னூட்டம் போடும் வாசகர்களையும், வலைப்பூவே இல்லாதவர்களையும் எழுத வைத்ததுதான் இந்தப் போட்டியின் வெற்றி என்று எங்களிடம் தெரிவித்த - எங்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பை அளித்த - பிரபலங்கள் பலருக்கும் இந்த நேரத்தில் எங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான். முதல் கதை முயற்சி என்று சொல்லி எழுதிய பலரும் மேலும் முயன்று, இன்னும் பல சிறப்பான படைப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி.

-ஆதிமூலகிருஷ்ணன்


.

Monday, November 15, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள்

நாங்களோ, நடுவர்களோ எதிர்பார்த்தது போல அத்தனை சுலபமானதாக இல்லை முடிவுகளை அறிவிப்பது! குறிப்பிட்டிருந்த நாள் கடந்து கொண்டிக்கிறதே என்று அவசர அவசரமாக அறிவிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுக்கும் சுருக் - விமர்சனங்களை நடுவர்கள் அனுப்பிவிட்டனர். கடைசி கட்ட தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

விமர்சனங்களைப் பதிவிட்டபின் முடிவு அறிவிக்கப்படும்.

நிச்சயமாக இந்தவாரத்தில்!

தாமதத்திற்கு தலை குனிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

*****************************

இனி விமர்சனங்கள்

*** **** ***


1. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

ஆரம்பிக்கும்பொழுது நன்றாக இருப்பதாக தோன்றினாலும் நடைபுரண்டு சிறுகதைக்கான அழுத்தத்தை தரவில்லை. சிவா என்று மூன்றாம் மனிதராக ஆரம்பிப்பது நடுவில் நான் என்று மாறி மீண்டும் சிவா என்று மாறுகிறது. சுத்த தமிழிலும் இல்லாமல் வழக்குத் தமிழிலும் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான வார்த்தைகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. அதேபோல் முடிவில் எதற்காக பரந்தாமன் & காமினிகளின் தற்கொலைகள் சரியாக ஜஸ்டிஃபை செய்யப்படவில்லை.

*** *** ***

2. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

நல்ல முயற்சி. இந்த மூன்று வரிகளையும் ஒரு சீரியல் கதாசிரியர் எழுதி குழப்படைவதைப் போல முடித்திருப்பது நல்ல எதிர்பாராத திருப்பம். என்னதான் போட்டியின் விதிமுறையில் எத்தனை வரிகள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் டெவலப் செய்திருந்தால் அருமையாக வந்திருக்கும். நல்ல முயற்சி.

*** *** *** ***

3) மணிகண்டன் விஸ்வநாதன் எழுதிய கதைக்கான விமர்சனம் (என் இந்த போஸ்டில் ஒன்பதாவது கதை)

பரிசல் கொடுத்திருந்த மூன்று வரிகளை மட்டுமே எழுதி முற்றும் போட்டிருக்கிறார் நண்பர். பள்ளிக்கூடம் / காலேஜில் படிக்காமல் எக்ஸாமிற்கு போய் கேள்வியை மட்டும் நாலு தடவை எழுதி பக்கத்தை நிரப்புவது நினைவுக்கு வருகிறது.. :)

ஒருவேளை கதையை படிப்பவர்களே இந்த வரிகளைச் சுற்றி கதையை கட்டமைத்துக்கொள்ளும் சுதந்திரத்துடன் எழுதப்பட்ட பின்நவீனத்துவ கதையா என்றும் சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை :)

*** *** *** ***


4) காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

காமினியை ஒரு துப்பறியும் புலியாக காட்டி அதற்கு நமக்கு தெரிந்த கதாபாத்திரங்களை உதாரணத்துடன் முதல் பத்தி : ஒரு நல்ல ஆரம்பம். நடை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். எழுத்துப்பிழைகளை மறுவாசிப்பில் திருத்தி இருந்தால் (உலவு, விரம்) இன்னும் நன்றாக இருந்திருக்கும். வைரம் என்பதை அந்த பெயரில் உள்ள சிறுவனைக் கடத்த முயல்வதாகக் காட்டி இருப்பது நல்ல முயற்சி

5. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

கொடுக்கப்பட்ட மூன்று வரிகளையும் அப்படியே எழுதி நான்காவதாக இன்னொரு வரியை சேர்த்து கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். சுமார் 50 வரிகளிலாவது சொல்ல வேண்டியதை இரண்டே வரிகளில் சொல்ல முயற்சிப்பதால் ஒருமுறை படித்து புரிந்து கொள்ள இயலவில்லை. கதை புரிந்து கொள்ளவே மறுவாசிப்பு தேவைப்படுகிறது. விரிவான சிறுகதையாக எழுதியிருந்தால் நல்ல முயற்சியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

6.
விபூதி வாசனை - விதூஷ்

பதிலளிக்கப்படாத பல கேள்விகள். மலையடிவாரத்தில் வந்தவர் யார்? சிவாவை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் டாக்டர் ஏன் அவரை முதலிலேயே பிடிக்கவில்லை. கதையோ அல்லது அதன் நடையோ புரியவில்லை. கழுத்து நெறிபட்டு சாவின் விளிம்பில் மர்மக்குரல்கள் கேட்பதும் அது நிஜத்தில் நடப்பதும்
என்று நல்ல தீம், சரியாக டெவலப் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

7. காமினி - கோபி ராமமூர்த்தி


பதிவுலகின் கதைப்போட்டிக்கு பதிவர்களையே கதாபாத்திரங்கள் ஆக்கியிருப்பது அழகு. அதிலும் ஒவ்வொருவரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் பொருத்திப் பார்க்க முடிகிறது.. ஆனால் ஆதியை கமிஷ்னராக... ஹி..ஹி..

மைனஸ் பாயிண்ட்: கதாபாத்திரங்களில் பதிவர் பெயர்களுக்கு பதில் வேறு பெயர்களைப் போட்டால் கதை படு மொக்கையாக காட்சியளிக்கிறது. இதை ஒரு ’சிரி’யஸ் முயற்சியாக இருந்தாலும் சீரியஸ் முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

8. காமினி என் காதலி - ஆசியா உமர்

ரயிலில் ஆரம்பிக்கும் கதை லேசாக வேகமெடுப்பதுபோல் தோன்றும்போது போட்டிக்கான முதல் வரி வந்ததுமே டீரெயில் ஆகிவிடுவது போன்ற தோற்றம். மூன்று வரிகளையும் அப்படியே வரிசைக்கிரமமாக எழுதி மேலும் கீழும் கதையை ஒட்டி சாண்ட்விச் செய்யும் முயற்சி அவ்வளவு விறுவிறுப்பை தரவில்லை. சொல்ல வந்திருக்கும் கதை (ரயிலில் டைமண்ட், சேர்க்க முடியாமல் தடைகள்) என்று அழகாக தெரிந்தாலும் அதை சொன்ன விதம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக / விரிவாக இருந்திருக்கலாம். ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங்... என்று வடிவேலு பாணியில் சொல்லலாம்.

9. டைமண்ட் - முகிலன்


ஒரு வெற்றிகரமான முயற்சி என்றே சொல்லலாம். ஒரு நல்ல துப்பறியும் கதைக்கான களன். ஆஸ்பத்திரியில் டைமன்ட் கடத்துறாங்களா? அதுக்கு காமினி உதவியா? போட்டி விதிகளின் படி காமினியைத்தான் கெட்டவளா காட்டகூடாதே என்று நமக்கு தோன்றுவதை எல்லாம் அழகாக க்ளைமாக்ஸில் புறந்தள்ளுகிறார். மருத்துவமனையில் நோயாளிகளின் பார்ட்டை திருடி விற்கும் கும்பல், டைமண்ட் என்பது கிட்னிக்கான கோட்வேர்ட் என்று நன்றாக சிந்தித்திருக்கிறார்.

மைனஸ்: ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணப்படவேண்டிய கிட்னியை இப்படி பார்சல் செய்யப்பட்ட குலோப் ஜாமூன் கணக்காக இடுப்பில் கட்டிக்கொண்டு ஜன்னலில் குதிப்பது, ஆட்டோவில் போவது, சண்டை போடுவது எல்லாம் சினிமாத்தனம்.

10. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

காமினியை நடிகையாகவும் அவளுக்கு கோவில் கட்ட அவள் ரசிகர்கள் முயற்சி எடுக்க, அவளது புதிய படத்தில் வருவதாக போட்டிக்கான மூன்று வரிகளும் காட்டப்படுகின்றது. பொருந்தவில்லை. முக்கியமாக காமினி சோகமாக இருப்பதால் அந்த காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். மூன்றாவது வசனத்திற்கு எதற்காக காமினி சோகப்படவேண்டும் என்று புரியவில்லை. உண்மையில் அந்த சினிமாவின் கதையை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதை எதிர்பாராத முடிவு என்று சொல்லலாம், ஆனால் போட்டிக்கு பொருத்தமாக இல்லை.

11. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்


நல்ல முயற்சி... எதிர்பாராத முடிவாக காமினியை காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. எதிர்பாராத முடிவுடனான ஒருபக்க கதைக்கு நல்ல ஆப்ஷன் இது.

12. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

ஒரு துப்பறியும் கதைக்கான திருப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் சாதாரணமாக அவ்வளவு வலுவில்லாமல் இருப்பது போன்ற தோற்றம். காமினி போலீஸின் ஆள் என்றால் போலீஸ் ஏன் சிவாவை வைத்து வைரத்தை திருட வேண்டும் என்ற முக்கியமான கேள்விக்கு பதில் இல்லை, அதேபோல் முதலில் வரும் விமானக்கடத்தலும் கதையோடு ஒட்டவில்லை (கதையில் போட்டிக்கான முதல்வரியை கொண்டுவர முனைந்து சேர்க்கப்பட்டதால் தனியாக தெரிகிறது). சிவாவை ஒரே ஒரு முறை பார்த்தவருக்கு எதற்கு கிளைமாக்ஸில் அவரைப் பார்த்து வெட்கப்படவேண்டும்.

எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். (பதினைத்து, பிளாட்டில்)

13. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

போட்டியின் விதியான ”காமினியை கெட்டவராக சித்தரிக்கக் கூடாது” என்பது இதில் அடிபட்டு போய்விட்டது. கதை நன்றாக இருந்தாலும் விதிமுறைக்குள் வராத காரணத்தால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது

14.எஸ்கேப் - ரோமியோ

கதை ஆரம்பிக்கும்போது பாலகிருஷ்ணன் பார்வையில் அவர் சொல்வது போல் ஆரம்பித்து சடாரென வாசகர் பார்வைக்கு மாறுவது சறுக்கல். கதையுடன் ஒன்ற முடியவில்லை. அதை சரி செய்வதற்காக கிளைமாக்ஸில் பாலகிருஷ்ணன் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற ரீதியில் கொண்டு செல்கிறார். கதை எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்று எதுவும் தெளிவாக இல்லை. இன்னும் சிறப்பாக முயற்சிக்கலாம்.

15. காமினி - பலா பட்டறை ஷங்கர்

சயின்ஸ் ஃபிகஷன் முயற்சி.. காமினி மனித இனமே இல்லை, ரோபோ போல என்ற ரீதியில் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் எல்லாரும் எல்லார் பார்ப்பதையும் பார்க்க முடிவது, யாரும் யார் போலவும் மாறுவது என்று சராசரி வாசகனுக்கு குழப்பம் அதிகமாக வர வைக்கிறது. காமினி நல்லவளா / கெட்டவளா என்பதே புரியவில்லை. நல்லவளாக காட்ட வேண்டும் என்ற விதி அடிபட்டு போகிறதா என்பதும் புரியவில்லை. இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம்.

16. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

இரண்டு காமினிகள் : ஒருவர் நடிகை மற்றவர் மாடல் அழகி... நடிகை ஏர்போர்ட்டில் நடித்துக் கொண்டிருக்க, அதில் குழப்பம் விளைவித்து மற்றொரு காமினியின் மூலம் வைரம் கடத்த முயற்சி என்று ஒன்லைனர் அழகாக இருக்கிறது. ஆனால் இன்னும் சிறப்பாக டெவலம் செய்திருக்கப்பட வேண்டிய கதை. முதலில் வரும் மருத்துவமனைப் பகுதி கதையுடன் ஒட்டவில்லை, போட்டிக்கான வரியை கொண்டு வர முனைந்து சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. நல்ல கரு.. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்

17. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். கதை எந்த ஒரு இம்பேக்ட்டையும் ஏற்படுத்தாமல் மிகவும் ப்ளெயினாக இருக்கிறது. போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. இந்த போட்டிக்கு இந்த கதை பொருத்தமாக இல்லை என்பதே உண்மை.


18. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி


போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. கதைக்கான வரிகள் மட்டுமில்லாமல் கதைப்போட்டிக்கான விதிமுறைகளையும் உரைநடையில் கொடுத்து முடிவில் நவம்பர் 15க்குள் தங்களுக்குத் தேவையான கதை கிடைத்துவிடும் என்று முடித்திருக்கிறார். இது சீரியஸ் முயற்சியும் இல்லை, சிரிக்க வைக்கவும் இல்லை.


19. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

இந்த கதை எழுதியவரை எழுத்தாளர் சுபா மிகவும் இம்ப்ரெஸ் பண்ணியிருப்பது தெரிகிறது. காமினி - வைஜ், சிவா - நரேன், பரந்தாமன் - ராமதாஸ் என்று பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் கதையிலும் நடையிலும் அந்த துள்ளலும், திருப்பங்களும் மிஸ்ஸிங். கடைசியில் அவர்கள் வைரம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை, சத்தியசீலனை சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெளிவாக பொருந்தவில்லை.


20. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

டைமண்ட் என்பதை வைரமணி என்ற பெண் என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கிறது. வழக்கமான துப்பறியும் கதைக்களன். ஆனால் திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ புத்திசாலித்தனமான மூவ்களோ இல்லாமல் ப்ளையினாக இருக்கிறது. அடுத்து என்ன வரும் என்று யூகிக்க முடிகிற நடை. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்.


21. டைமண்ட் 2 - முகிலன்


டைமண்ட் என்பது நாய், அது போலீஸ் என்ற பைத்தியக்காரனிடம் சிக்கி விட்டது, காப்பாற்றி டாக்டரிடம் அழைத்து வருகிறார்கள் என்ற ரீதியில் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்குறது. நல்ல முயற்சி என்ற அளவில் பாராட்டலாம். நடையிலும் கருவிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்
ஆனால் போட்டி விதிமுறைகளின் படி கதையில் கனவு வரக்கூடாது. போட்டிக்கான முதல் வரி கனவில் வருவது போல் இருப்பதால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது


22. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்


ஒரு வைரக்கடத்தல் அதன் ஊடான குழப்பங்கள் என்று கதையும் குழப்பமாகவே நகர்கிறது. கதையில் இரண்டு சிவா வருவது வேறு குழப்பத்தை அதிகப்படுத்துகிறது (அல்லது ஒரே சிவாதானா?). காமினியை நல்லவளாக காட்டவேண்டும் என்ற நிபந்தனைக்காக அவளை பரந்தாமன் ப்ளாக்மெய்ல் செய்வதாக சொல்லியிருப்பது ஒட்டவில்லை. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


23. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்


முற்றிலும் வித்தியாசமான கதைக் களன். பூமியில் எக்ஸ்டிங்க்‌ஷன் ஆரம்பிக்கும் தருணத்திற்கு முன்னால் உயிரினம் தழைக்க பரந்தாமன் + சிவா (இந்துக் கடவுள்கள்?) எடுக்கும் முயற்சி, உயிரினங்களை புதிய பூமிக்கு தாங்களே கொண்டு செல்லாமல் அவர்களையே தங்களுக்கான இடத்தை தேர்வு / தெரிவு செய்துக் கொள்ள வைப்பது என்று புதிய வாசிப்பனுப்பவத்தை இந்த கதை கொடுக்கிறது எனலாம்.

டாக்டர் வில்கின்ஸை பிரம்மாவாக உருவகப்படுத்தி இருக்கலாம். அல்லது ஏற்கனவே அப்படித்தானா? :)

கதையின் சிறு சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. கதையில் இந்து மித்தாலஜி, டெக்னாலஜி என்று கலந்து கட்டி அடித்திருப்பது ஒரு மாதிரி புரியாத மனநிலையில் வாசகனை இருக்க வைக்கிறது. ஒரு செல்லில் இருந்து உயிரினம் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்ற அறிவியல் கூற்றை மறுப்பது போல் நேரடியா உயிரினங்கள் பூமியில் உருவானதாக சொல்லும் அதே நேரம் காமினி என்ற புதிய இனம் உருவாவதே டெக்நாலஜியால் என்றும் சொல்லியிருப்பது கதாசிரியர் அறிவியலை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை தெளிவாக சொல்லாமல் குழப்புகிறார் என்றே தோன்றுகிறது.
ஒரு சிறந்த முயற்சி இந்த கதை. பாராட்டுகள்.

24. காமினி - மயில் ராவணன்


நல்ல முயற்சி... போட்டிக்கான மூன்று வரிகளுக்கும் வித்தியாசமான அர்த்தம் கொடுத்ததற்கு பாராட்டுகள். முக்கியமாக “காமினி.. வெல்டன்” என்பதற்கான அர்த்தம் வாசிக்கும்போது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர்த்து கதை பெரிய அளவில் கவரவில்லை. வைரம் கடத்தும் தந்தையை காதலன் உதவியுடன் காட்டிக் கொடுக்கும் பெண் என்ற ஒன்லைனர் மிகவும் ப்ளைனாக இருக்கிறது.


25. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

ஒரு நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் போல இருப்பதே இதன் குறை. சொல்ல வந்த கதை இந்த ஃபார்மேட்டினால சரியாக வாசகனை அடையவில்லை போன்ற தோற்றம். அயோத்தி பிரச்சினையைத் / அதைப் போன்ற ஒன்றை தொட்டிருப்பது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. கடைசியில் காமினி வருத்தப்படவேண்டிய அவசியமும் இல்லை, மீண்டும் சிவாவை சந்தித்து விளக்கி இருக்க முடியாதா?


26. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை


சீரியலை மட்டுமே பார்த்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்காத அம்மா, அதனாலயே அன்புக்கு ஏங்கி வீட்டை விட்டு போகும் மகள் என்று ஒரு வாரமலர் டைப் கதை. போட்டிக்கான மூன்று வரிகளும் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் சீரியலுக்குள் இருப்பது மைனஸ். முக்கியமாக மூன்றாவது வரி அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. இன்னும் நன்றாக முயற்சித்து இருக்கலாம்.


27. இனிமேல் வசந்தம் - வானதி

போட்டிக்கான வரிகளை கதையின் முக்கிய ஃப்ளோவில் உபயோகித்து எழுதப்பட்டுள்ள கதை. அதுவே இந்த கதையின் பலமும் கூட. அடுத்ததாக போட்டிக்கான வரிகளைப் படிக்கும் எவருக்கும் கதை நடப்பது ஒரு மேல்தட்டு குடும்பத்தில் / ஆட்களிடம் என்ற தோற்றம் தோன்றும். ஆனால் அதே வரிகளை வைத்து ஒரு மீனவ குடும்பத்து கதையை எழுதியிருப்பது நல்ல முயற்சி..

விறுவிறுப்பில்லாத நடையும் யூகிக்க முடிகிற முடிவும் இதன் மைனஸ்.

28. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

போட்டிக்கான வரிகளை எழுதி மேலும் கீழும் வேறு கதையை எழுதி வந்துள்ள இன்னொரு சாண்ட்விச் கதை. ஒரு எழுத்தாளனின் மன ஓட்டத்தை எழுத்தில் கொண்டுவரும் முயற்சி என்பதாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே தெறிக்கும் நக்கல் புன்னகைக்க வைக்கிறது.


29. காட்சிப்பிழை - செல்வகுமார்

துப்பறியும் + சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம அளவில் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் கதை.. போட்டிக்கு சிறப்பான முயற்சி. வைரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க கும்பலுக்குள் நுழையும் காமினி போலீஸால் சுடப்பட அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் குற்றவாளிகளை மடக்கும் போலீஸின் கதை. விறுவிறுப்பான நடையும் தெளிவாக விளக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்பும், சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் போட்டிக்கான வரிகளும் பாராட்டப்படவேண்டியவை.


30. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

வித்தியாசமாக ஆரம்பித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு அதை சரியாக தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். முக்கியமாக போட்டிக்கான வரிகள் கொஞ்சமும் கதையில் ஒட்டவில்லை. தனித்து தெரிகிறது. அதே மாதிரி இவர் இந்து சம்பிரதாயங்களை நக்கல் அடிக்கிறாரா அல்லது விளம்பரப்படுத்துகிறா என்பதும் சரியாக புரியவில்லை. வித்தியாசமான தளம், இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.

31. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

தலைப்பே சொல்லி விடுகிறது, இது மெசேஜ் சொல்வதற்காகவே எழுதப்பட்ட கதை என்பது. பதிவர்களை பாத்திரங்களாக வைத்து எழுதப்பட்டுள்ள மற்றொரு கதை, பைரசி தவறு என்பதை அழுத்திச் சொல்கிறது. போட்டிக்கான வரிகளை வரிசையாக எழுதி மேலும் கீழும் கதையை எழுதியுள்ள சாண்ட்விச் கதை, ஆனாலும் அந்த வரிகள் சரியாகவே உபயோகப்பட்டிருக்கின்றன. சட்டென்று கதை முடிந்ததைப் போன்ற உணர்வு. இன்னும் கொஞ்சம் நடையை விறுவிறுப்பாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்


32. கமான்.. கமான்.. காமினி - வித்யா

முதல் பாதியில் எழுதப்பட்டுள்ள கதை அட்டகாசம். அதை அப்படியே கண்டின்யூ செய்து முடித்திருந்தால் முதல் மூன்று இடத்திற்கான போட்டியில் கட்டாயம் இருந்திருக்கும் என்ற ரீதியில் விறுவிறுப்பு, சயின்ஸ் பிக்‌ஷன், யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று எக்ஸ்ப்ரஸ் செல்லும் கதை, இரண்டாவது பாதியில் டீரெயில் ஆவது என்னவோ உண்மை. நமக்கு பழக்கப்பட்ட கதாபாத்திரங்களை (கணேஷ், வசந்த், கோகுல்நாத்) என்று கொடுத்திருப்பது கதையை வாகனுக்கு நெருக்கமாக உணரவைக்கிறது. வசந்த் சொல்வது போல், கதையின் முடிவையும் வாசகனே யூகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது, :-)


33. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

உண்மையில் பெரும்பாலான கதைகளில் காட்டப்பட்டிருக்கும் வித்தியாசத்தை (அந்த மூன்று வரிகளை எப்படி எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை) அழகாக தொகுத்திருக்கிறார். வெறுமனே விளக்கமாக இல்லாமல் ஒரு கதையினூடே இதை சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது. முடிவு கொஞ்சம் மொக்கையாக இருப்பது நிஜம்..


34. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்


கதையின் தலைப்பைப் போலவே கதையின் க்ளைமாக்ஸ்ம் புரியவில்லை. ராபிட் ஐ மூவ்மெண்ட்டுக்கு பதில் கதையின் கடைசி மூன்று வரிகளை விளக்கி இருக்கலாம்.


35. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

புதையலில் கிடைத்த வைரம் திருடப்பட அதை மீட்க உதவும் ஆட்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்ற ஒன்லைன் அழகாக இருந்தாலும் கதை துண்டு துண்டாக இருப்பதாக தோன்றுகிறது. நடை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.


36. காமினி - ராஜகுரு பழனிசாமி

சவால் சிறுகதைப் போட்டியினால் மறை கழண்டு போகும் ஒருவன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.


37. டைமண்ட் - குகன்

போட்டியின் மூன்று வரிகளை அப்படியே ப்ளையினாக டெவலப் செய்திருக்கும் கதை. காமினி ஆஸ்பத்திரியில் இருந்து டைமண்டை திருடி வர சிவா அதை திருட முயல அவனைக் கொன்று பரந்தாமனிடம் சேர்க்கும்போது போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து காமினியைப் பாராட்டுகிறார்கள். தொய்வில்லாத நடை. ஆனால் எதிர்பார்த்த திருப்பங்களும் யூகிக்க முடிக்கிற முடிவும் விறுவிறுப்பு குறைந்த நடையும் மைனஸ்


38. ளவாளி - குகன்

இதற்கு முந்தைய கதையும் (டைமண்ட்) இந்த கதையும் ஒரே வரிகளுடன் உள்ளது... ஆனால் இந்த கதையில் வரிகள் போட்டிக்கான அதே வரிசையில் வரவில்லை, அதனால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது

39. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

கதையின் ஃப்ளோ கொஞ்சமும் சரியாக கருத்தை சொல்லவில்லை.துண்டு துண்டாக விறுவிறுப்பு குறைவாக இருக்கிறது. எழுத்துப்பிழைகளையும் தவிர்த்திருக்கலாம்.


40. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

துப்பறியும் கதைக்கான கரு என்ற அளவில் ஓகே.. நடை மிகவும் தொய்வாக இருக்கிறது, இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். முதலில் நடிகரைப் பற்றி சொல்லிவிட்டு பிறகு கடைசியில் கிளைமாக்ஸில் காமினி கதையுடன் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி.


*********** *********** ************ **********

மற்ற விமர்சனங்கள் அடுத்த பதிவில்.


.

Wednesday, October 20, 2010

கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு



கம் ஆன், காமினி


அந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. சுத்தம் என்பதை விட வெறுமையாக இருந்தது என்பது தான் சரியான வார்த்தை. அவள், அவன் மற்றும் அந்த சித்திரத்தைத் தவிர அவ்வறையில் வேறு பொருட்கள் இல்லை. மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும் காமினியின் பார்வை சுற்றுப்புறத்தை ஆழமாக அளவிட்டுக் கொண்டிருந்தது. அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். வேறு யாரும் தேடி கண்டுபிடிக்கும் முன் வைரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வம், வெறி அவள் முகத்தில் தெரிந்தது.

‘ஆளையும் முழியையும் பாரு’ என்று சிவாவை முறைத்துக் கொண்டே, ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அதே சித்திரத்தை திரும்பவும் ஆராய்ந்தாள். அதில் சந்திரமுகி படத்தில் வருவது போல ஒரு கதவு, அதன் கீழே ஒரு மிதியடியில் “Welcome Back” என்று எழுதப்பட்டிருந்தது. வைரத்தை அடையும் ஒரே வழி இதில் மறைந்துள்ள செய்தியை அறிவது தான், ஆனால்...

Welcome Back.. மறைந்துள்ள செய்தி.. இந்த எண்ணம் ஓடியதும், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காமினி சட்டென்று எதிர்புறம் திரும்பினாள். படத்திற்கு நேர் எதிரே உள்ள சுவற்றை தட்ட, சுவற்றோடு ஒன்றி போய் இருந்த கதவு திறந்து கொண்டது. அந்த அறையின் சுவற்றில் பெரிதாக 234445387 என்ற நம்பர் எழுதியிருந்தது. அதன் பக்கத்தில் கண், கடல் ஆகிய படங்களும், அதன் அருகில் ‘நீ’ என்ற வார்த்தையும் எழுதியிருந்தது. சிவா அவளை குழப்பத்துடன் பார்க்க, காமினி ஒரு புன்னகையுடன் தன் கைபேசியை இயக்கிக் கொண்டிருந்தாள்.

‘என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில உள்ள SM ஹாஸ்பிடலோட நம்பர் அது. கண் – Eye = I, கடல் – Sea = C, நீ = U. ஸோ, அந்த ஹாஸ்பிடலோட ICU வார்ட்ல ஏதோ குறிப்பு இருக்கு.. சீக்கிரம் அங்கே போவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்’ என்று அவள் சொல்லி முடிக்கும் நேரம் சிவா காமினியின் மூக்கில் ஒரு கர்சீப்பை வைத்து அழுந்த மூடினான். இது என்ன வாசனை, என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே காமினி மூர்ச்சையானாள்.

------------------------------------------------

மயக்கத்தில் இருந்து காமினி எழுந்த போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள். முகத்தில் மாஸ்க், கையில் ட்ரிப்ஸ் மற்றும் சில வயர்களும், அங்கிருந்த மெஷின்களும் அவளை பயமுறுத்தின. டாக்டர் சிவாவிடம் “உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில எழுந்திடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல இருவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.

‘சிவா ஆபத்தானவன். ஏதோ சதி நடக்கிறது. இவனிடம் இருந்து முதலில் தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள். குறிப்பில் இருந்த அறை இதுவாகத் தான் இருக்கும் என்பது புரிய, அறை முழுவதையும் கண்களால் துழாவினாள். எழுந்து தேடலாம் என்று மாஸ்க்கை கழட்ட போகும் போது டாக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார். வேறு வழியில்லாமல் பாதி முடிய கண்களால் அசுவாரசியமாக நோட்டமிட்டவள் பார்வையில் அது பட்டது.

ரிப்போர்ட்டில் எதையோ எழுதிவிட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். நல்லவேளை சிவாவிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே பைப்பை பிடித்து இறங்கியவள், பைக்-கை ஸ்டார்ட் செய்து அவள் வருகைக்காக ரெடியாக நின்ற சிவாவை பார்த்து திகைத்தாள்.

‘உனக்கு.. உங்களுக்கு எப்படி நான் வருவது தெரியும்’ என்று திணறியவாறே கேட்டாள். ‘என் மனைவி என்றவுடன் உன் பல்ஸ் ரேட் ஏறியதை அந்த மெஷின் காட்டிவிட்டது. மயக்கம் தெளிந்து விட்டதால், குறிப்பை கண்டுபிடிக்க உனக்கு டைம் கொடுத்து விட்டு, உனக்காக இங்கே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்’ என்றான் சிவா. ‘சரி, என்ன கண்டுபிடுத்தாய்’ என்று கேட்டவன், அவள் பதில் சொல்ல தயங்கவும், ‘என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது, போலிஸுக்கு தகவல் கொடுக்கக் கூடாது என்பது உனக்கு இடப்பட்ட உத்தரவு. மறந்து விடாதே’ என்று அழுத்தமாக கூறினான்.

காமினி அந்த அறையில் இருந்த எடுத்து வந்த டவலை அவனிடம் காண்பித்தாள். ‘இந்த டவலில் இருக்கும் Patternஇல் Morse Code உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், ரகசிய செய்திகள் இந்த முறையில் நெய்யப்பட்டு, ஒற்றர்கள் அணியும் ஆடைகளில் சேர்க்கப்பட்டன. இது ஒரு வகை Steganography. இந்த காலத்தில் படங்களுக்குள் செய்திகளை ஒளித்து இண்டெர்நெட் மூலமாக அனுப்புவது போல’ என்று சொல்லிவிட்டு அந்த டவலை ஆராய்ந்தாள். இன்னும் அங்கே நிற்பது ஆபத்து என்பதால், இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி அருகிலிருக்கும் பார்க்-கில் நுழைந்தனர்.

அந்த டவலில் இருக்கும் குறிப்பை படித்து கண்டுபிடிக்க காமினிக்கு அரை மணி நேரமானது. முடித்ததும், அந்த பேப்பரை சிவாவிடம் நீட்டினாள். அவ்வளவு நேரம் சோம்பலுடன் படுத்துக் கொண்டிருந்த சிவா ஆர்வத்துடன் எழுந்து படித்தான். அதில்..

55, LAKSHMANAN ST, GANDHI NAGAR, PALLAVARAM

A THEFT REVISION

என்று எழுதியிருந்தது. “அந்த அட்ரெஸ் காலையில் நம்ம முதலில் இருந்த அதே இடம் தான். ஆனா, ரெண்டாவது லைன் தான் என்னன்னு புரியல. எதற்கும் அங்கேயே போய் பார்ப்போம்” என்றாள் காமினி.

அடுத்த பதினைந்து நிமிடத்தில், காலையில் பார்த்த அதே ‘Welcome Back’ அவர்களை திரும்பவும் வரவேற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மூலை முடுக்கு எல்லாம் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்வளவு அலைந்த பின்னும் வைரம் கிடைக்கவில்லை என்ற நினைப்பு சோர்வை அதிகமாக்கியது. எரிச்சல் மேலிட அவனுடைய டீசர்ட்டில் இருந்த “Admirable?? I’m real bad!!” என்பதை பார்த்த உடன் கைபேசியை இயக்கினாள்.

வியப்பு மேலிட சிவாவைப் பார்த்து “Anagram!! வார்த்தை விளையாட்டு!! A THEFT REVISION என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை பிரித்து சேர்த்தால் ‘IT IS OVER THE FAN’ என்று வருகிறது” என்றாள். தாமதிக்காமல், சிவா ஃபேனை கழட்ட மேலிருந்து ஒரு வெல்வட் டப்பா கீழே விழுந்தது. உள்ளே பளபளவென்ற வைரமும் ஒரு அட்ரஸும் இருந்தது. நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த அட்ரஸுக்கு இருவரும் விரைந்தனர்.

அந்த வீட்டின் வரவேற்பறையை நுழைந்த அந்த நிமிடம், “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. உடனே, காமினி அவன் பின்புறம் பார்த்து “நீங்களா??” என்று அதிர்ச்சியுடன் திடுக்கிட்டாள். அதைக் கேட்டு சிவா தடுமாறிய அந்த நொடியில் அவளுடைய கராத்தே கை கொடுக்க, அடுத்த நொடி துப்பாக்கி காமினியிடம் இடம் மாறியிருந்தது. அதே நேரம், அறைக்குள் வந்து கொண்டே,காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“இல்லை, என்னை அறியாமல் எதாவது சதி வேளையில் ஈடுபடுத்த பட்டிருக்கிறேனோ-ன்ற சந்தேகம் இருந்ததால், காலையில் இருந்து இங்கே நுழையும் வரை உள்ள தகவல்களை எல்லாம் என் மொபைல் வழியாக ஒரு mailஆக போலீசுக்கு எழுதி வைத்திருக்கிறேன். நாளை 10 மணிக்கு முன் நான் அதை delete செய்யாவிட்டால் அது automatically send ஆகிவிடும்.” என்று சொல்லிவிட்டு பரந்தாமனை பார்த்தாள்.

பரந்தாமன் சிரித்த படியே “வெல்டன் காமினி.. எங்கள் குழுவில் Investigative Journalist-ஆக சேர்வதற்கு முழு தகுதியும் உனக்கு இருக்கிறது. இந்த வேலைக்காக நாங்கள் தேர்வு செய்த ஐந்து பேரில் நீ தான் முதலில் வைரத்தை கண்டுபிடித்திருக்கிறாய். உங்களுடைய அறிவையும், ஆர்வத்தையும், தைரியத்தையும் சோதிப்பதற்காகவே இந்த போட்டி. உங்களை கண்காணிக்க ஒரு சீனியரை ஒவ்வொருவருடனும் அனுப்பி வைத்தோம். அப்படி உன்னுடன் வந்தவர் தான் சிவா.


எங்களை முழுவதாக நம்பாமல், நாங்களும் உன்னை சதி வேலையில் ஈடுபடுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணி போலிசுக்கு mail எழுதிய உன் சாமர்த்தியத்தை பாராட்டுகிறேன். நாளையில் இருந்து நீ வேலையில் சேரலாம்” என்றார். காமினி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தன்னுடைய லட்சிய கனவான வேலையை பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தாள்.

*******************************************

குறிப்பு: நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த படி - அனு எழுதிய சிறுகதை இது. பின்னூட்டங்கள் மட்டுமே எழுதி வந்தவரின் இந்த முதன் முயற்சியைப் பாராட்டுவோம்.
-பரிசல்காரன்
.

Tuesday, October 19, 2010

சவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு - (2)

.
முந்தைய நாற்பது கதைகளின் இணைப்பிற்கு இங்கே செல்லவும்.

---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------


41. காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

42. காமினி - பிரபாகரன்.ஜி.

43. டைமண்ட் 2 - முகிலன்

44. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

45. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

46. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்

47. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்

48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்

49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

53. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

54. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி

இவர் எழுதிய கதைகள் இரண்டு. இவர் வலைப்பூ இணைப்பும் கொடுக்கவில்லை. வலைப்பூவில் எழுதியிருந்து அதைத் தெரிவித்தால் இணைப்பு கொடுக்கிறேன். இல்லை அவர் விருப்பமுடன் - அனுமதி அளித்தால் - என் வலைப்பூவிலேயே அவர் கதையை வெளியிடுகிறேன்.

அப்டேட்: இவரும் வலையில் வெளியிட்டுவிட்டார். இணைப்பு அளிக்கப்பட்டு விட்டது.

55. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி

56. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்

57. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா

58. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி

59. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

60. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி

62. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்

63. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்

64. திருடி - சாம்ராஜ்ப்ரியன்

65. காமினி - அப்பாவி தங்கமணி

இவர் இன்னும் கதையை தன் வலையில் வெளியிடவில்லை. ஆகவே கதைக்கு இணைப்பு கொடுக்காமல் அவர் பெயருக்கு, அவரது வலைப்பூவையே இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.


66. காம்ஸ் - விசா

67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி

இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்.

அப்டேட்: இவர் வலையில் வெளியிட்டு விட்டார். இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.

68. காதல் ரோபோ - ஷைலஜா

69. அதே நாள் அதே இடம் - சத்யா

70. எந்திரன் - நீச்சல்காரன்

71. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

72. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்

73. பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்

74. கம் ஆன், காமினி - அனு

இவருக்கும் வலைப்பூ இல்லை. பின்னூட்டத்திற்காக துவங்கிய ப்ரொஃபைல் இணைப்புதான் கொடுத்திருக்கிறேன். இவர் அனுமதி கிடைக்குமாயின் என் வலையில் இவர் கதை வெளியிடப்படும்.

75. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்

76. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி

77. சிவா - ஸ்டார்ஜன்

78. காடு வித்து கழனி வித்து - கிரி

79. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்

80. காமினியீயீயீயீ - இரும்புத்திரை

81. தொலைந்து போன நிஜங்கள் - HVL

82. காணாமல் போன கதை - நந்தா

83. சவால் - புதுவை பிரபா

83. வைரம் உன் தேகம் - அபி


__________________________________________________

யாருடைய கதையாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

மீண்டும்... நன்றியும் வாழ்த்துகளும்!


.

Sunday, October 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு (1)

பிரமிப்பாய் இருக்கிறது என்ற சொல்லைப் படித்திருக்கிறேன்.. எழுதியிருக்கிறேன்..

உணர்வது இதுவே முதல்முறை!

நாங்கள் அறிவித்த இந்த சிறுகதைப் போட்டிக்கு பதிவர்களின் ஆதரவு, முழுக்க முழுக்க அன்பு வயப்பட்டதேயன்றி வேறில்லை. கிட்டத்தட்ட 75 + கதைகள்.

அனைத்தையும் தொகுத்து இங்கே தரச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற்கட்டமாக 40 கதைகளின் அணிவகுப்பு இங்கே.

மற்றவை அடுத்த பதிவில்.

பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்..

***********************


1. காமினி - பலா பட்டறை ஷங்கர்

2. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

3. விபூதி வாசனை - விதூஷ்

4. டைமண்ட் - முகிலன்

5. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

6. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்

7. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

8. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

9. மணிகண்டன் விஸ்வநாதன் (இவர் எழுதின கதை இங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது)


டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.


(முற்றும்)

இதுதான் அவர் எழுதி அனுப்பின கதை. லிங்கெல்லாம் குடுக்கல.. பாராட்டறவங்க இங்கயே அவரைப் பாராட்டலாம்.



10. காமினி என் காதலி - ஆசியா உமர்

11. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

12. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

13. எஸ்கேப் - ரோமியோ

14. டைமண்ட் - சுபாங்கன்

15. காமினி - மயில் ராவணன்

16. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

17. காமினி - கோபி ராமமூர்த்தி

18. கேரக்டர் காமினி - அன்னு

19. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

20. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

21. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை

22. இனிமேல் வசந்தம் - வானதி

23. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி

24. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

25. காட்சிப்பிழை - செல்வகுமார்

26. அக்டோபர் 1: கவர் ஸ்டோரி - கோபி ராமமூர்த்தி

27. கமான்.. கமான்.. காமினி - வித்யா

28. கணினி எழுதும் கதை - கோபி ராமமூர்த்தி

29. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்

30. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

31. காமினி - ராஜகுரு பழனிசாமி

32. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

33. டைமண்ட் - குகன்

34. நண்பண்டா - இம்சை அரசன் பாபு

35. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

36. உளவாளி - குகன்

37. வைர விழா - R V S

38. நடுநிசி மர்மம் - இரகுராமன்

39. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஜி.ஒய். ராமன்

40. காமினி - நசரேயன்


(பிற கதைகளின் தொகுப்பு அடுத்த பதிவில் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில்..!)


குறிப்பு:

வலைப்பூ இணைப்பு தவறாக இருந்தாலோ, நீங்கள் வலையில் எழுதி நான் இணைப்பு கொடுக்காமல் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.




.