வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
*************
ஊர்தோறும் சுடுகாடு
ஒருபோதும் குறையலியே
வாழ்க்கை பற்று.
*****************
மேற்கண்ட கவிதைகள் எங்கள் ஊர்க்காரர் மகுடேசுவரன் எழுதியவை.

மகுடேசுவரன் எழுதிய பல கவிதைகள் எங்கள் தலைவர் வெயிலானின் வலைத்தளத்திலும், பிற நண்பர்களின் வலைத்தளத்திலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
அண்ணாச்சியின் பதிவில் மகுடேசுவரன் கவிதை - http://www.vadakaraivelan.com/2009/05/5509.html
வெயிலானின் பதிவுகளில் மகுடேசுவரன் கவிதை - http://veyilaan.wordpress.com/2010/04/23/checking/ / http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_7649.html
குணா என்ற பதிவரின் பார்வையில் மகுடேசுவரன் - http://espalani.blogspot.com/2009/05/blog-post_23.html
காமக் கடும்புனல் கவிதைத் தொகுப்பு பெரிதும் பேசப்பட்டது - புத்தக மதிப்புரை - ஆர்.பி.ராஜநாயஹம்
இப்போது பாடலாசிரியராகவும்/வசனகர்த்தாவாகவும் புது அவதாரமெடுத்திருக்கிறார் - http://www.pesumcinema.com/news1.asp?imgNo=554http://vaarthaikal.wordpress.com/2010/04/15/magudeswaran/
நீங்கள் கவிதை எழுத ஆசைப்படுகிறீர்களென்றால், மகுடேசுவரனின் கவிதைகளைப் படியுங்கள் என்று சுஜாதாவே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் கவிதைகள் அச்சுக்கு வருமுன்னே, அவரது அழகான கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிற எங்கள் வெயிலானின் நெடுநாள் திட்டமாக கவிஞர் மகுடேசுவரனுடன் ஒரு சந்திப்பை இந்த ஞாயிறு திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிறோம்
அவரது வலையகம்: http://kavimagudeswaran.blogspot.com/
காமக் கடும்புனல் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்களுக்காக..
(இங்கிருந்து எடுக்கப்பட்டது)
(கடைசி கவிதையை தவிர்க்காமல் படியுங்கள்.. கொங்குதமிழ் என்றால் என்னவென்று அறிய...)
உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
‘உன் தாயாருடையதைப்
போலிருந்ததா’
என்றாள் மானபங்கப்பட்டவள்
முறையல்லாதன செய்கிறாய்....
சொன்னால் கேள் அண்ணா.....
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்.
இப்பொழுது தெரிகிறது
பிரம்மச்சரியம்
கடும் நோன்பு
முதிர் கன்னிமை
கொடிய பட்டினி
ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகளல்லாத
பரஸ்திரீ
மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலொன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.
என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்.... ஆமா....
*********************************
சந்திப்பு பற்றி:
நாள்: 25 ஜூலை 2010 ஞாயிறு
நேரம்: மாலை 5.30
இடம்: பதிவர் ராமனின் அலுவலகம். குமரன் சாலை, திருப்பூர் (அரோமா உணவகம் எதிரில் - மாடியில் ஜிகுஜிகு ஃப்ளோரசண்ட் வண்ணமடித்த பில்டிங்!)
தொடர்புக்கு அலைபேசி எண்கள்:
செந்தில்நாதன்: 98947 83597
ராமன்: 96006 00688
முரளிகுமார் பத்மநாபன்: 98433 41223
வெயிலான்: 90954 79791
பரிசல்காரன்: 95665 43262
.