Showing posts with label மூஞ்சில குத்து முடிஞ்சா கால்ல எத்து. Show all posts
Showing posts with label மூஞ்சில குத்து முடிஞ்சா கால்ல எத்து. Show all posts

Wednesday, July 21, 2010

மனைவி கணவனின் மூஞ்சிலயே குத்துவிட நினைக்கும் பத்து தருணங்கள்!








1) அன்னைக்குத்தான் வேலையெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு அக்கடான்னு உட்காருவாங்க. நம்மாளு திடீர்னு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸோட வீட்டுக்குப் போய் ‘யாரு வந்திருக்காங்க பாரு டார்லிங்’ன்னு டின்னருக்கோ, லஞ்சுக்கோ அடியப் போடும்போது....

2) ஒரு மாசமா சிரமப்பட்டு அவங்க மனசுல நெனைச்சமாதிரி வீட்ல அங்கங்க அந்தந்தப் பொருட்களை செட் பண்ணி, இண்டீரியரை நல்லவிதமா ரசனையா பண்ணி வெச்சிருப்பாங்க. டக்னு ஏதோ அவசரத்துக்கு ஒரு நாள் அம்மா வீட்டுக்கோ, வேற எங்கயாவதோ போய்ட்டு வருவாங்க. வந்து பார்த்தா வீடு பழையபடி கந்தலா கலைஞ்சிருக்கும் பாருங்க.. அப்ப ஒரு குத்து..

3) அன்னைக்குன்னு புருஷன் மேல ரொம்ப பாசம் பொங்கும்.. பாவம்யா அவன்னு தோணும். சரின்னு டின்னருக்கு அவருக்குப் பிடிச்ச டிஃபன் ஏதாவது செஞ்சு ஹாட் பாக்ஸ்ல வெச்சிருப்பாங்க. பிடிச்ச சட்னி, சாம்பார்ன்னு ரெடியா இருக்கும். அன்னைக்குன்னு ஒரு ஃபோன் கூட பண்ணாம நம்மாளு ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு போய்ட்டு, அவங்க கூப்பிடறப்பவும் ‘இதோ வந்துட்டேன்மா.. வந்துட்டே இருக்கேன்’ன்னு அடிச்சு விட்டுட்டு ’கண்டுபிடிக்க மாட்டா ஸ்மெல் இல்ல’ன்னு ஒரு நம்பிக்கைல வீட்டுக்குப் போவான். கதவைத் திறந்த உடனே மனைவியைப் பார்த்து கேனத்தனமா அசடு வழியறதுலேர்ந்தே அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அப்ப தோணும் இவன் மூக்குலயே ஒரு குத்து விட்டா என்ன’ன்னு..

4 - அ) குழந்தைகளைக் கூட்டீட்டு எங்கயாவது போலாம்ன்னு ப்ளான் பண்ணச் சொல்லுவாங்க. நம்மாளும் ப்ளானெல்லாம் பக்காவா போடுவாரு. கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி ‘லீவு சாங்ஷன் ஆகல’ அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டு ரெண்டு நாள் மூட் அவுட்லயே இருக்க வெச்சுட்டு, அப்பறமா ஏதோ எவரெஸ்ட்ல ஏறினவனாட்டம் ‘எப்படியோ சமாளிச்சுட்டேன் போலாம்’ன்னு சொல்லுவான் பாருங்க.. ‘எதுக்குய்யா டென்ஷனைக் குடுக்கற?’ன்னு ஒரு குத்து விடணும்னு தோணும் அப்ப..

4 -ஆ) டூர் போறப்ப அல்லது எங்கயாவது பிரயாணம் போறப்ப பஸ்ல/ட்ரெய்ல ஏறி எல்லாம் உட்கார்ந்த பிறகு ‘இரு வர்றேன்’னு தம்மடிக்க (அ) புத்தகம் வாங்கன்னு இறங்கிப்போவான் நம்மாளு. வண்டி எடுத்து கொஞ்சம் மூவ் ஆகும். மனைவி அவ்ளோ படபடப்பா தேடுவாங்க.. இவன் சாவகாசமா ஒரு இளிப்பு இளிச்சுட்டு வந்து உட்காருவான் பாருங்க.. எல்லார் முன்னாடி இருந்தாலும் பரவால்லன்னு அப்ப விடணும் ஒரு குத்து...

5) கல்யாணம், காட்சின்னு எங்கயாவது போனா அவங்க ஏதாவது பேசிகிட்டே வந்துட்டு இருப்பாங்க.. நம்மாளு சைஸா ஏதோ ஒரு செவப்புச் சேலைல வர்ற ஃபிகரை ரூட் விட்டுட்டு இருப்பான். அத கவனிக்காம அவங்க ’என்னங்க.. சரிதானே நாஞ்சொல்றது’ன்னு கேட்டு திரும்புவாங்க. இவன் தலையும் புரியாம வாலும் புரியாம ஒரு முழி முழிப்பான்லயா அப்ப விடணும்னு தோணும் அவன் சைட்டடிச்ச கண்லயே ஒரு குத்து...

6)அவங்க அம்மாவோ, அப்பாவோ வரும்போது வீட்டுக்கு வர்ற நம்மாளு, சிரிச்ச முகமா இல்லாம முஞ்சிய ஒரு மாதிரி வெச்சுகிட்டு வாங்க எப்ப வந்தீங்கன்னுகூட கேட்காம நேரா உள்ள போகும்போது அம்மாப்பா அவங்களை சங்கடமா ஒரு பார்வை பார்ப்பாங்க.. அப்ப டக்னு உள்ளாற போய் அவன் மூஞ்சிலயே ஒரு குத்து...

7) பையனோ, பொண்ணோ ஆசையா வந்து அவன் மேல விழுவாங்க... எங்கயோ இருக்கற எரிச்சலை அவங்க மேல காட்டி எரிஞ்சு விழும்போது குட்டீஸ் பாவமா ஒரு பார்வை பார்க்கும் அவங்கம்மாவை. அப்ப தோணும் அவங்களுக்கு...

8) மனைவி தனக்குப் பிடிச்ச/ரொம்ப நாள் தேடிகிட்டிருந்த கலர்ல ஒரு ட்ரெஸ்ஸை க்டைல பார்த்து கண்கள் விரிய.. ‘ஹை.. இதத்தாங்க தேடிகிட்டிருந்தேன்’ன்னு சத்தமா சொல்லிகிட்டே கைல எடுத்து ‘எப்படீங்க இருக்கு இது?’ன்னு கேட்பாங்க. நம்மாளு ஒரு சைஸா மூஞ்சிய வெச்சுகிட்டு ‘ம்ஹூம்’ன்னு உதட்டைப் பிதுக்கி ‘என்ன கலர்டி இது? இதுக்கா இந்த பில்டப்பு’ங்கறா மாதிரி ஒரு போஸ் குடுப்பான் பாருங்க.. அப்ப விடணும் அந்த வாய்லயே ஒரு குத்து..


9) எங்கயாவது ரொமாண்டிக்கான டூர் போயிருப்பாங்க. குட்டீஸ் வெளில விளையாடிகிட்டிருக்கும். மனைவி அந்த இயற்கையை ரசிச்சுகிட்டே ஒரு கப் டீயோ காபியோ கைல எடுத்துட்டு புருஷன்கூட வந்து உட்காரலாம் இங்க’ன்னுஅவனைத் தேடுவாங்க. நம்மாளு யாரு.. அங்கயும் பெரிய போர்வையைப் போத்திட்டு என்னமோ வெட்டி முறிச்சாப்ல தூங்கீட்டிருப்பான். அப்ப எழுப்பி கன்னத்துலயே ஒரு குத்து விடணும்னு தோணும் அவங்களுக்கு..

10) ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது நாலு வார்த்தை பேசி நேரங்காலமா தூங்காம கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு....




ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ........



.