Sunday, June 1, 2008

இதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்

சென்னையில் திருடியவன்
நெல்லையில் கைது
அமெரிக்க டாலர்
மதுரையின் அச்சடிப்பு
கேரள மந்திரவாதி
ஆந்திராவில் மோசடி
கோவைத் தொழிலதிபர்
மும்பையில் தலைமறைவு
யாதும் ஊரே

் சொத்து மறுத்த தந்தை
சுட்டு வீழ்த்தினான் மகன்
காதலை எதிர்த்த கணவனை
கழுத்து நெறித்துக் கொன்றாள் மனைவி
வரதட்சிணைக் கொடுமையில்
அண்ணியை கொன்றான் ஒருவன்
வயல் வரப்புத் தகராறில்
அண்ணனைக் கொன்றான் தம்பி.
யாவரும் கேளிர
-----------------------------------------------------
சகுனம்

வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!

4 comments:

சென்ஷி said...

//சகுனம்

வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!//

கடைசி கவிதை நச்சுன்னு இருக்குது...

பத்தினி பேர கேட்டா நளாயினி பேர சொன்ன கதை மாதிரி :))

தமிழ் said...

/சென்னையில் திருடியவன்
நெல்லையில் கைது
அமெரிக்க டாலர்
மதுரையின் அச்சடிப்பு
கேரள மந்திரவாதி
ஆந்திராவில் மோசடி
கோவைத் தொழிலதிபர்
மும்பையில் தலைமறைவு
யாதும் ஊரே/

நல்ல இருக்கிறது

anujanya said...

நல்லா இருக்கு. இன்னும் கவிதை எழுதுங்கள்.

Anonymous said...

//
சகுனம்

வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!
//

நச்