Friday, January 23, 2009

ஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்

எனக்கு அவனை பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். இடையில் தொடர்பற்றுப் போனது. இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மீண்டும் அவனோடு பழக்கம்.

அவன் ஒரு குடிகாரனல்லன். ஆனால் அவ்வப்போது குடிப்பான்.

டாஸ்மாக் பார்களைப் பொறுத்தவரை அதன் ஒழுங்கின்மை அவனுக்கு மிகவும் பாதிப்பைத் தரும். ஆனால் ஒரு சில சிறப்பானவைதான்.

பொள்ளாச்சியில் ஒரு டாஸ்மாக் பார். (அப்போது ஏது டாஸ்மாக்? செந்தூர் ஒயின்ஸ் என்று ஞாபகம்) அது அவனுக்கு மிகப் பிடித்தமானது. காரணம் அங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம். இன்று வரை அவனுக்கு அந்த சுகம் வேறெங்கும் கிட்டவில்லை.

சாம்பார் வடை என்றதும் அவனுக்கு வேறொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருமுறை அவன் திண்டுக்கல்லோ, ஒட்டன்சத்திரமோ போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சாம்பார் வடை கேட்டான். சர்வர், “சாம்பார் இருக்கு, வடை இருக்கு. ரெண்டையும் தர்றேன் சாப்பிடுங்க” என்றிருக்கிறான். இவன் “இல்லீங்க உளுந்து வடையை சாம்பார்ல ஊறவெச்சிருப்பாங்க. அதுதான் சாம்பார்வடை” என்றிருக்கிறான். சர்வரோ விடாப்பிடியாய் ‘நான் முப்பது வருஷமா பல ஊர்ல பல ஹோட்டல்ல சர்வர் வேலை பாத்தவன். சாம்பார் வடைன்னு ஒண்ண நான் கேள்விப்பட்டதே இல்ல’ என்றிருக்கிறான். இவனுக்கு கோவம் வந்து வாக்குவாதமாகி, கவுண்டர் ஆசாமி வந்து சமாதானப் படுத்தி.... ப்ச்.. அது தனிக் கதை! (அதுதான் சொல்லீட்டில்ல! அப்பறம் என்ன!!)

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆங்... டாஸ்மாக் பார்களைப் பற்றி...

சென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது். டாஸ்மாக் பார்களில் இருக்கும் எந்தவிதக் கூச்சல், குழப்பமோ, பீடி, சிகரெட் குப்பைகளோ, சர்வரின் அலம்பல்களோ அங்கே பார்க்க முடியவில்லை. ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு பணிவிடை இருந்ததாம். ‘இல்லீன்னா நாங்கல்லாம் இங்க வருவோமா?’ என்று அவன் நண்பர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவனிடம் இதைச் சொன்னபோது நம்பவே இல்லை. 'மொதல்லயே அடிச்சுட்டுப் போயிருப்ப. டாஸ்மாக் பார் ஏ.ஸியாம்... பெரிய ஸ்க்ரீன்ல படமாம்' என்று கிண்டலடித்தான். ஒருமுறை அவனை அங்கே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

கோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.

தனியார் பார்களில் சைட் டிஷ்களுக்கு ஆகும் நேர விரயம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ஒருமுறை நண்பர்களோடு சென்றிருந்தபோது ‘பள்ளிபாளையம்’ என்று அவர்கள் ஆர்டர் செய்தார்கள். ‘அதென்னடா’ என்று விசாரிக்க (நண்பனுக்கு நான்வெஜ் பரிச்சயமில்லை) ‘சிக்கனை அந்த ஊர் ஸ்டைலில் செய்வார்கள்’ என்று பதில் வந்தது. அந்த பள்ளிபாளையம் வர ‘கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருடா’ என்று அவர்கள் சொல்ல இவன் ஸ்போர்க்கால் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு ‘நல்லாத்தான் இருக்கு’ எனச் சொல்ல ‘நீ எடுத்தது தேங்கா. சிக்கனைச் சாப்பிடு’ என்று மிரட்டப் பட்டிருக்கிறான்.

இரண்டாவது முறை அந்த பள்ளிபாளையத்தை ஆர்டர் செய்து அரை மணிநேரம் கழித்து வந்தபோது உப்பு அதிகம் என்று சொல்லி திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட அந்த பள்ளிபாளையம் அதே ப்ளேட்டில் கொஞ்சம் சூடுசெய்யப் பட்டு எந்த மாறுதலுமின்றி வந்தபோது ‘ஆங்.. இது ஓக்கே’ என்று நண்பர்களால் பாராட்டப் பட்டு உட்கொள்ளப் பட்டபோது இவன் எந்த வித்தியாசமுமறியாமல் சர்வரைக் கேட்டபோது ‘மாஸ்டர் கால்மணிநேரம் கழிச்சு இதையே குடுன்னு குடுத்தார். மப்பு ஏறியிருக்கும்ல.. அதான் ஒண்ணும் வித்தியாசம் தெரியல’ எனச் சொல்லப்பட்டான்.

அவனை நான் மதிக்கக் காரணம் குடித்துவிட்டு உளறவோ, கூத்தடிக்கவோ அவனுக்குத் தெரியாது. அதிக பட்சம் அவன் குடித்துவிட்டுச் செய்யும் கொடுமை என்னோடு பேசிக் கொண்டிருப்பதுதான்.

“டேய்.. நீ பெரிய எழுத்தாளனாடா?”

எனக்கு பகீர் என்றாகும். எழுத்தாளன் என்பதே பெரிசு. இதில் பெரிய எழுத்தாளன் வேறா.. அடக் கடவுளே....

“எழுத்தாளன்னெல்லாம் இல்லடா. ஏதோ கிறுக்கீட்டிருக்கேன்”

“அப்ப நான் சொல்றத எழுதுடா”

“சொல்லு”

“நேத்து என் கம்பெனில ஒரு நாதாரி என்ன பண்ணினான் தெரியுமா?”

“தெரியாது... சொல்லு”

“அவனுக்குக் கீழ வேலை பாக்கற ஒரு பொண்ணுக்கு ஒடம்பு சரியில்ல. காய்ச்சல்-ன்னு லீவு கேட்டிருக்கு. இவன் வேணும்னே அவ கழுத்துல கை வெச்சுப் பார்த்து, ‘காய்ச்சலெல்லாம் இல்லியே’ ன்னுருக்கான்.அதுக்கு அந்தப் பொண்ணு ‘உள் காய்ச்சல் இருக்குங்க’னிருக்கு. அதுக்கு இந்தக் கம்மனாட்டி என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?”

“...........”

“’உள் காய்ச்சல்ன்னா.. உள்ள கை வெச்சுப்பார்க்கவா’ ன்னிருக்கான்”

“அவனைச் செருப்புல அடிக்கலியா நீ?”

“எனக்கு மேல வேலை செய்யற நாயி அவன். ஒண்ணும் பண்ண முடியல. இப்படித்தான் போன மாசம் என்னாச்சுன்னா..”


இப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.

அது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்....

23 comments:

அத்திரி said...

நாந்தான் முதல்ல

அத்திரி said...

//இப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.
அது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்....//

ஒன்னும் சொல்ல முடியல

Jenbond said...

\\கோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.\\

அது நீங்க தானே உண்மையை சொல்லுங்க (முட்டைப் பொரியலை ஸ்வாஹா பண்ணியது) aunty ஒன்னும் சொல்லமாட்டாங்க. சகாவுக்கு (கார்கி) போட்டியாவா? உங்கள் நண்பன் பேரு (எழுமலை இல்லை தானே) என்ன சொல்லவே இல்ல.

Jenbond

ஜெகதீசன் said...

:))

ILA (a) இளா said...

\\இடையில்\\
யாரோட இடையில்?

Cable சங்கர் said...

இந்த மாதிரி ஆட்கள் கூட குடிக்க ஆள் கூட்டி போவதே இவர்களீன் புலம்பல்களை கேட்கத்தானே..

எம்.எம்.அப்துல்லா said...

// Krish_007 said...

aunty ஒன்னும் சொல்லமாட்டாங்க

//

பரிசல்காரன் அங்கிள்தான். ஆனா எங்க அண்ணி aunty கிடையாது.

ரொம்ப சந்தோஷமா இருக்கு பரிசலோட உண்மையான வயசக்கண்டுபிடிச்சதுக்கு

க்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கி

கார்க்கிபவா said...

எப்பவாது(?) உங்க கூட தண்ணியடிக்கிற வாய்ப்பு கிடைச்சா நான் பேசவே மாட்டேன் சகா

கார்க்கிபவா said...

// சகாவுக்கு (கார்கி) போட்டியாவா? உங்கள் நண்பன் பேரு (எழுமலை இல்லை தானே) என்ன சொல்லவே இல்ல//

சகா இப்போ நிறைய பேரு சொல்றாங்க.. நான் இல்லாத கடையில் கூட அந்த வார்த்தை கண்ணுல படுது.. ஏழுமலைக்கும் சகாவுக்ம், சகா Jenbondக்கும் நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

கணேஷ் said...

//தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம்.

அதெல்லாம் சொன்னா புரியாது சார். அடிச்சி பாத்தா தான் தெரியும். என்னோட ஃபேவரிட் சைட் டிஷ் :))

//சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி்.

இது சென்னையில் எந்த ஏரியா? போனதே இல்லீயே?

பதிவை படித்து முடித்தவுடன் கை நடுங்க ஆரம்பித்து விட்டது. இன்னிக்கி நைட் மொட்டை மாடியில் கச்சேரி உண்டு .

Jenbond said...

\\எம்.எம்.அப்துல்லா said...
பரிசல்காரன் அங்கிள்தான். ஆனா எங்க அண்ணி aunty கிடையாது.\\
சாரி அப்துல்லா. சரியான உறவு முறைக்காக aunty change to Sister (Because parisal uncle). Ok va

Jenbond

narsim said...

//சென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது்//

சென்னை வந்ததும் இல்லாம இந்த மேட்டர் வேற நடந்துருக்கா?? யார் அந்த நண்பர்கள் தல?? பை த வே.. டாஸ்மாக்னா இன்னா?

kuma36 said...

(:: (::

கார்க்கிபவா said...

//சென்னை வந்ததும் இல்லாம இந்த மேட்டர் வேற நடந்துருக்கா?? யார் அந்த நண்பர்கள் தல?? பை த வே.. டாஸ்மாக்னா இன்னா//

ங்கொய்யால...

பரிசல்காரன் said...

@ நர்சிம்


சொல்லவா....?

Kathir said...

//தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும்.//

புது மேட்டரா இருக்கே சார்.....

:))

பாண்டி-பரணி said...

சகா கார்கி மாதிரி உங்களுக்கும் ஒரு ஏழுமலை மாதிரி ஒரு சகாவா

இனிமே சிரிப்புக்கு அளவே இல்லா :)

☼ வெயிலான் said...

குடிகார நண்பர்களின் குறிப்புகள்ன்றதுனால இந்தப் பதிவுல இருக்கிற பாதி வார்த்தைகள் புரியவே இல்லை.

வால்பையன் said...

நெசமாவே நீங்க பெரிய எழுத்தாளர் தான்

சின்னப் பையன் said...

சரி வுடுங்க. நான் என் வேலையை பாக்கறேன்... ( நீங்க அடுத்த பதிவு போடும்வரை!!!)

Kumky said...

:--))

Thamira said...

ரசித்தேன்.!