எனக்கு ஸஸியைப் பழக்கமானது இன்னொரு நண்பனான வேலுச்சாமி மூலம்தான். என்னவோ ஆரம்பத்திலேயே அவன் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போனது என்றெல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு கமலஹாசனைத் தான் பிடிக்கும். எனக்கு ரஜினி என்று வேறுபாடுகள் இருந்தனதான். ஆனாலும் அவன் என்னவோ எனக்கு நெருக்கமானவனான ஆனான்.
உடுமலைப்பேட்டையில் இருந்தபோது ஸஸி அவனது அண்ணனின் ஜனனி ஆர்ட்ஸில் அவரோடு சேர்ந்து வரைந்து/எழுதிக் கொண்டிருந்தான். அந்த ஐடியா இந்த ஐடியா என்று பேசிப் பழகி இருவருக்குள்ளும் நெருக்கம் வளர ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் அவனோடு வேறு யாராவது பேசினால் கோவம் வந்தது. அவனுக்கு கவிதைகள் எழுதினேன். அவனே ‘என்னடா பண்ணினேன் நான் என் மேல இவ்ளோ பாசமா இருக்க’ என்றெல்லாம் கேட்க ஆரம்பத்தான்.
அந்த சமயத்தில் ஒரு வதந்தி உலா வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் நள்ளிரவோடு உலகம் முடிந்துவிடப்போகிறது என்று. நானும் அவனும் ’ ‘அப்படி ஆச்சுன்னா நான் உன்கூடதான் இருப்பேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டோம். அந்தக் குறிப்பிட்ட நாளில் அவன் இந்தியா சில்க் ஹவுஸ் விளம்பர பேனர் வேலைகளுக்காக திருப்பூர் சென்று தங்கியிருந்தான். நான் அங்கே இங்கே காசு கடன் வாங்கி உடுமலையிலிருந்து கிளம்பி திருப்பூர் சென்று அன்றிரவு அவனோடு தங்கினேன். காலையில் கண்விழித்தபோது சுற்றிலும் குஷ்பூவும், சுகன்யாவும் சிரித்துக் கொண்டிருக்க ‘நாம் இருக்கறது சொர்க்கமா நரகமா’ என்று ஆராய்ந்தபோது பெய்ண்டை முகத்தில் கொட்டி ‘எழுந்திருடா நாயி’ என்று திட்டியபோதுதான் உலகமெல்லாம் அழியவில்லை. இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புரிந்தது.
அவனும் நானும் இன்னொரு நண்பரான நாகராஜும் (பாக்யா ஆர்ட்ஸ்.. இப்போது பாரதி ஆர்ட்ஸ்) சேர்ந்து பாண்டிச்சேரி சென்றோம். முதல்முதலாக நான் வெளியூருக்கு நண்பர்களோடு சென்றது அதுதான். அங்கே பாலாஜி தியேட்டரில் பலான படம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அதுக்கேண்டா அங்க போனீங்க என்று கேட்பீர்களானால்…
ஸஸி உடுமலையில் எல்லா தியேட்டர்களிலும் ஆர்ட்ஸ் வேலை செய்யவதால் எல்லாரையும் பழக்கப் படுத்திக் கொண்டு இந்த மாதிரி அஜால் குஜால் படங்களுக்குப் போய்ப் பார்த்துவிடுவான். எனக்கு உடுமலையில் அந்த மாதிரிப் படங்களை போஸ்டரில் ஓரக்கண்ணால் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஒரு படமாவது பார்க்க வேண்டுமென்பது என் லட்சியமாக இருந்தது.
ஒரு வழியாக ரிக்ஷாக்காரர் அந்த தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது நேரமாகி அதற்குப் பதில் வேறு ப்ரோக்ராமை ஏற்படுத்திக் கொண்டு அதை கேன்சல் செய்தோம். பாண்டிச்சேரியைப் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் அங்கேதான் நாங்கள் மூவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம்.
“நாம மூணு பேரும் இப்படியே இருக்கணும். கல்யாணமானாலும் மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும். (வீடு கட்டணும் என்று கூட சொல்லத் தெரியவில்லை அப்போது!) நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கமோ, அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸா இருக்கற மூணு பேரை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்” - இப்படிப் போனது அந்த ஒப்பந்தம்.
அங்கிருந்து வந்து உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் மூவருமாக க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ‘ஸ்டூடியோவுக்குள்ள வேண்டாம்ணா. வெளில வந்து எடுங்க. வித்தியாசமா இருக்கணும்’ என்று சொல்லி வெள்ளை சுவர் பிண்னணியில் எடுத்த அந்த புகைப்படத்தில் மூவரும் ஒரே மாதிரி கைகட்டிக் கொண்டதால் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட மாதிரி ஆனது வேறு கதை!
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு..
எனக்கு திருமணம் நடந்தபோது ஸஸியோ நாகராஜோ என்னுடன் இல்லை. அதே மாதிரிதான் மற்ற இருவருக்குமே. ஸஸியும் என்னைப் போலவே கந்தர்வ கல்யாணம் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான்.
சென்ற மாதத்தில் “ஜூலை 2 குழந்தைகளுக்கு காதுகுத்து வெச்சிருக்கேன்” என்று அழைப்பிதழோடு வந்தான். ஸ்டிக்கர் பொட்டை கம்மல் மாதிரி ஒட்டி வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்திருந்தான். மேடைக்குப் பின்னால் பேனர் வைக்க “ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு”ன்னு எழுதவா என்று கேட்டு என்னிடம் திட்டு வாங்கிக் கொண்டான்.
அப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவன் அழைத்துப் பேசியது புனைவை விட சுவாரஸ்யம்.
அதே ஜூலை 2 மாலை அவன் அழைப்பு வந்தபோதுதான் “ஐயையோ எனப் பதறினேன். என்ன சொல்வது என்று தெரியாமல் ‘கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடறேண்டா’ என்று கட் செய்துவிட்டு ‘மறந்துவிட்டேன் என்ற உண்மையைச் சொல்லிவிடலாம்’ என்று அடுத்த நாள் தயக்கத்தோடே அலைபேசினேன்.
எடுத்த உடனே “மன்னிச்சுக்கடா... என்னாச்சுன்னா” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தான்.
“ஏன் வர்லன்னு கேட்க கூப்பிடலடா.. ஏதாவது வேலை இருந்திருக்கும் விடு. நான் கூப்டது… ஆடித்தளுபடிக்கு குறிஞ்சி சில்க்ஸுக்கு நோட்டீஸ் அடிக்கணும். கலக்கலா ஒரு மேட்டர் யோசி. சாயந்திரமா கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.
எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
உங்களுக்கும் இதேபோன்ற நண்பர்கள் இருக்கக் கூடும். எந்த பிரதிபலனும் இல்லாமல், எதிர்பார்க்காமல் புரிந்துணர்வோடு உங்களோடு அவர்கள் இருக்கக்கூடும். பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!
ஐ லவ் யூ ஸஸி!
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts
Tuesday, July 7, 2009
Saturday, July 12, 2008
சென்ஷி இனி என் நண்பர் அல்ல!
நானொரு கேள்வி நண்பர் சென்ஷியைக் கேட்டதும், அவர் அதற்கு பதில் சொல்லி என்னை மூக்குடைத்ததும் நாடறிந்த விஷயம்!
சென்ஷியின் அந்தப் பதிவுக்கு நான் எப்போதும் போலல்லாமல் செம மூடில் ஒரு – ஸாரி – பல பின்னூட்டம் போட்டிருந்தேன். அது எத்தனை பேர் பார்வையில் பட்டதோ என்று தெரியாததாலும், அவற்றைத் திரட்டி ஒரு பதிவாகப் போடவேண்டுமென்று நானும் சென்ஷியும் நினைத்ததாலும், அவரு போடறதுக்கு முந்தி நான் போடணும்னு நினைப்பதாலும், இன்னைக்கு மேட்டர் எதுவும் கிடைக்காததாலும்..... (சரி... சரி... முடிஞ்சுடுச்சு!) அந்தப் பின்னுட்டங்களின் தொகுப்பே இங்கு பதிவாக..
என் கேள்விக்கு அவர் பதிலை படிச்சீங்கதானே?
இப்போ என் பின்னூட்டங்கள்:-
//ஐயா..அம்மா.. எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.. நம்ம சென்ஷி இப்படி ஆனதுக்கு நாந்தான் காரணம்.. இதுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்..
எந்த எடத்துல சென்ஷி இப்படி ஆயிட்டாருன்னு பாப்போம்.//
(கதாபாத்திரங்கள்:- ஒரு புது ப்ராக்டீஸ் பண்ற டாக்டர், நர்ஸ் & ஒரு சீஃப் டாக்டர்.)
//எனது உறவுச்சங்கிலியின் மிகமுக்கியமான வளையமாக நான் நினைக்கும் //
இப்ப நல்லா இருக்காரு.
//காரணம், கேள்வி என்ற குறிப்புகளின் வழி தொலைதூர எல்லைகளை கடக்க வேண்டிய பதில்கள் நமக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கின்றது//
அருமையாச் சொல்லிருக்கார்.. இங்க அவர் அறிவுபூர்வமா யோசிச்சுட்டு இருக்கார்..
//தெளிவான நீரில் நனையும் செருப்பில்லாத காலை காட்டுவதில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி //
என்ன ஒரு உவமை! இந்த ஒரு வரிக்காகவே இவரை குணப்படுத்த ஆகற செலவை நான் ஏத்துக்கறேன்!
Senshe.. From my heart I'm telling you, these lines broken me! Great!! (ஹூம்.. இத படிக்கற மனநிலைல அவரு இல்லையே!!)
//இனி பரிசல்காரனுக்கான பதில் விரிவாக 50 வரிகளில்...
மனித நாகரிகத்தின் பரிணாமம் பேச்சிற்கு முன்பிருந்தே குறியீடுகளாக //
இங்கதான் லைட்டா அவருக்கு ஆரம்பிக்குது..
//எளிமையாகக்கூறும் முயற்சியில் ஈடுபட்டதில் கிடைத்த வார்த்தை "பாத்திரத்தில் நிரம்பிய நீராக நீர் இருக்கிறீர்".//
இப்போ மறுபடி நல்லாயிடறார்..
//குறியீட்டு வடிவங்கள் குறிப்பிடத்தகுந்த எழுத்துக்களை சிந்தனைகளின் வடிகாலாக சிதறடிக்கத்தொடங்கிய சமயத்திலும் எதிர்மாறான கருத்துக்கள் //
ஐயையோ.. ரிப்போர்ட் தாறுமாறா ஒடுது.. நர்ஸ் அவரைப் புடிச்சு பெட்ல படுக்க வைங்க..
//எழுதியவனின் மேலுள்ள குற்றத்தை எழுத்துக்களின் மேல் சுமத்தி கிழித்து எரிக்கின்ற புதிய சமுதாயம் வளர்ச்சியில் முன்னிலை கொண்டு அதிர்வுகளின் படியில் ஏறி அதிகாரத்தை அடைகிறது.//
இங்கதான் எனக்கு நம்பிக்கை போகுது.. ப்ச்..நம்ம கைல ஒண்ணுமில்ல..
//கரையோரம் கட்டப்பட்ட ஓட்டைப்படகில் சவாரி செய்யும் நிலையில் தப்பிக்க முயற்சிக்கிறான்//
சொல்லீருந்தா நான் கொண்டுபோய் சேர்த்திருப்பேன்ல.. நம்மளுது நல்லாத்தான் இருக்கு
// நிச்சயமற்ற சூழலில் கிடைக்கின்ற வார்த்தைகளின் வரிசைகள் எதேச்சதிகாரமாக தன்னை நிலைநிறுத்த அல்லது தனது படிம சூழலைக் கொண்டாட வைக்க கவர்ச்சியை அள்ளிப்பூசிக் //
நர்ஸ்.. சீஃப் டாக்டரைக் கூப்பிடுங்க..
//எழுத்துக்கள் சாக்கடையில் கிடந்தாலும் எழுத்தாளன் சந்தனத்தை ரசிக்கத்தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் //
//எங்களிடம் உள்ளது கழுதைதான் என்றாலும் அதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற நம்பிக்கை கிடைப்பதால்//
டாக்டர்..என்னமோ ஒரு பெரிய சோகம் இவருக்குள்ள இரூக்கு.. இருங்க என்னான்னு பாக்கலாம்
//நான் சமைத்ததை நானே சாப்பிட்டும் வாழ வேண்டிய இரு வேறு கொடுமைகள் இல்லாத காரணத்தாலும் //
//என்னுடைய காதலிகளின் வரிசைப்பட்டியலை மறந்து//
டாக்டர்.. இதுதான் காரணம் பார்த்தீங்களா? என்ன பிராக்டீஸ் பண்றீங்க நீங்க?
// மொக்கை கேள்வியை வலையுலக பெரிய கோணிஊசி திரு. லக்கிலுக்கிடம் //
நர்ஸ்.. சீக்கிரமா ஹாஸ்பிட்டலை விட்டு எல்லாரும் வெளில ஓடுங்க.. யாரைக் கூப்ப்ட்டுருக்காருன்னு பாத்தீங்கள்ல?
”ஐய்ய்ய் ஐஇய்ய்ய்.. ஒய்ய்ய்ய்”
நர்ஸ்; சார்... சார்.. சீஃப் டாக்டர் சட்டையை கழட்டீட்டு ஓடறாரு.. புடிங்க..
இந்தளவு அவரைக் கலாய்த்ததோடு விடவில்லை நான்.. இவ்வளவுக்குப் பிறகும்...
// எப்புவுமே ஒரு பின்னூட்டம் வந்தாலே.. பதில் சொல்லுவாரு சென்ஷி.. இன்னும் ஆளைக் காணோம் பாத்தீங்களா//
என்று கேட்டிருந்தேன்...
இப்படியெல்லாம் ஒருத்தர் என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டிருந்தால் நான் தையாதக்கா என்று குதித்திருப்பேனோ என்னவோ... ஆனால் சென்ஷி கொஞ்சமும் கோபப்படாமல்..
// என் பதிவ விட உங்க கமெண்டுதான் இன்னிக்கு ஹிட்டு.. கலாய்ச்சி எடுத்துருக்கீங்க. அதுவும் கரெக்டா எந்த எடத்துல கவுக்கணுமோ அங்கனயே கவுத்து மேல பெஞ்சு போட்டு ஏறி நின்னு அடிக்கறீங்க பாருங்க ஒரு டான்ஸ்.. எனக்கு அந்து போச்சு//
என்று நகைச்சுவையாகவும், என்னைப் பாராட்டியும் பின்னூட்டமிட்டிருக்கிறார்!!
இப்படிப்பட்ட சென்ஷியை என் நண்பர் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை!
சென்ஷி....
இன்றுமுதல் நீ என்..
நண்பன்!
சென்ஷியின் அந்தப் பதிவுக்கு நான் எப்போதும் போலல்லாமல் செம மூடில் ஒரு – ஸாரி – பல பின்னூட்டம் போட்டிருந்தேன். அது எத்தனை பேர் பார்வையில் பட்டதோ என்று தெரியாததாலும், அவற்றைத் திரட்டி ஒரு பதிவாகப் போடவேண்டுமென்று நானும் சென்ஷியும் நினைத்ததாலும், அவரு போடறதுக்கு முந்தி நான் போடணும்னு நினைப்பதாலும், இன்னைக்கு மேட்டர் எதுவும் கிடைக்காததாலும்..... (சரி... சரி... முடிஞ்சுடுச்சு!) அந்தப் பின்னுட்டங்களின் தொகுப்பே இங்கு பதிவாக..
என் கேள்விக்கு அவர் பதிலை படிச்சீங்கதானே?
இப்போ என் பின்னூட்டங்கள்:-
//ஐயா..அம்மா.. எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.. நம்ம சென்ஷி இப்படி ஆனதுக்கு நாந்தான் காரணம்.. இதுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்..
எந்த எடத்துல சென்ஷி இப்படி ஆயிட்டாருன்னு பாப்போம்.//
(கதாபாத்திரங்கள்:- ஒரு புது ப்ராக்டீஸ் பண்ற டாக்டர், நர்ஸ் & ஒரு சீஃப் டாக்டர்.)
//எனது உறவுச்சங்கிலியின் மிகமுக்கியமான வளையமாக நான் நினைக்கும் //
இப்ப நல்லா இருக்காரு.
//காரணம், கேள்வி என்ற குறிப்புகளின் வழி தொலைதூர எல்லைகளை கடக்க வேண்டிய பதில்கள் நமக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கின்றது//
அருமையாச் சொல்லிருக்கார்.. இங்க அவர் அறிவுபூர்வமா யோசிச்சுட்டு இருக்கார்..
//தெளிவான நீரில் நனையும் செருப்பில்லாத காலை காட்டுவதில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி //
என்ன ஒரு உவமை! இந்த ஒரு வரிக்காகவே இவரை குணப்படுத்த ஆகற செலவை நான் ஏத்துக்கறேன்!
Senshe.. From my heart I'm telling you, these lines broken me! Great!! (ஹூம்.. இத படிக்கற மனநிலைல அவரு இல்லையே!!)
//இனி பரிசல்காரனுக்கான பதில் விரிவாக 50 வரிகளில்...
மனித நாகரிகத்தின் பரிணாமம் பேச்சிற்கு முன்பிருந்தே குறியீடுகளாக //
இங்கதான் லைட்டா அவருக்கு ஆரம்பிக்குது..
//எளிமையாகக்கூறும் முயற்சியில் ஈடுபட்டதில் கிடைத்த வார்த்தை "பாத்திரத்தில் நிரம்பிய நீராக நீர் இருக்கிறீர்".//
இப்போ மறுபடி நல்லாயிடறார்..
//குறியீட்டு வடிவங்கள் குறிப்பிடத்தகுந்த எழுத்துக்களை சிந்தனைகளின் வடிகாலாக சிதறடிக்கத்தொடங்கிய சமயத்திலும் எதிர்மாறான கருத்துக்கள் //
ஐயையோ.. ரிப்போர்ட் தாறுமாறா ஒடுது.. நர்ஸ் அவரைப் புடிச்சு பெட்ல படுக்க வைங்க..
//எழுதியவனின் மேலுள்ள குற்றத்தை எழுத்துக்களின் மேல் சுமத்தி கிழித்து எரிக்கின்ற புதிய சமுதாயம் வளர்ச்சியில் முன்னிலை கொண்டு அதிர்வுகளின் படியில் ஏறி அதிகாரத்தை அடைகிறது.//
இங்கதான் எனக்கு நம்பிக்கை போகுது.. ப்ச்..நம்ம கைல ஒண்ணுமில்ல..
//கரையோரம் கட்டப்பட்ட ஓட்டைப்படகில் சவாரி செய்யும் நிலையில் தப்பிக்க முயற்சிக்கிறான்//
சொல்லீருந்தா நான் கொண்டுபோய் சேர்த்திருப்பேன்ல.. நம்மளுது நல்லாத்தான் இருக்கு
// நிச்சயமற்ற சூழலில் கிடைக்கின்ற வார்த்தைகளின் வரிசைகள் எதேச்சதிகாரமாக தன்னை நிலைநிறுத்த அல்லது தனது படிம சூழலைக் கொண்டாட வைக்க கவர்ச்சியை அள்ளிப்பூசிக் //
நர்ஸ்.. சீஃப் டாக்டரைக் கூப்பிடுங்க..
//எழுத்துக்கள் சாக்கடையில் கிடந்தாலும் எழுத்தாளன் சந்தனத்தை ரசிக்கத்தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் //
//எங்களிடம் உள்ளது கழுதைதான் என்றாலும் அதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற நம்பிக்கை கிடைப்பதால்//
டாக்டர்..என்னமோ ஒரு பெரிய சோகம் இவருக்குள்ள இரூக்கு.. இருங்க என்னான்னு பாக்கலாம்
//நான் சமைத்ததை நானே சாப்பிட்டும் வாழ வேண்டிய இரு வேறு கொடுமைகள் இல்லாத காரணத்தாலும் //
//என்னுடைய காதலிகளின் வரிசைப்பட்டியலை மறந்து//
டாக்டர்.. இதுதான் காரணம் பார்த்தீங்களா? என்ன பிராக்டீஸ் பண்றீங்க நீங்க?
// மொக்கை கேள்வியை வலையுலக பெரிய கோணிஊசி திரு. லக்கிலுக்கிடம் //
நர்ஸ்.. சீக்கிரமா ஹாஸ்பிட்டலை விட்டு எல்லாரும் வெளில ஓடுங்க.. யாரைக் கூப்ப்ட்டுருக்காருன்னு பாத்தீங்கள்ல?
”ஐய்ய்ய் ஐஇய்ய்ய்.. ஒய்ய்ய்ய்”
நர்ஸ்; சார்... சார்.. சீஃப் டாக்டர் சட்டையை கழட்டீட்டு ஓடறாரு.. புடிங்க..
இந்தளவு அவரைக் கலாய்த்ததோடு விடவில்லை நான்.. இவ்வளவுக்குப் பிறகும்...
// எப்புவுமே ஒரு பின்னூட்டம் வந்தாலே.. பதில் சொல்லுவாரு சென்ஷி.. இன்னும் ஆளைக் காணோம் பாத்தீங்களா//
என்று கேட்டிருந்தேன்...
இப்படியெல்லாம் ஒருத்தர் என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டிருந்தால் நான் தையாதக்கா என்று குதித்திருப்பேனோ என்னவோ... ஆனால் சென்ஷி கொஞ்சமும் கோபப்படாமல்..
// என் பதிவ விட உங்க கமெண்டுதான் இன்னிக்கு ஹிட்டு.. கலாய்ச்சி எடுத்துருக்கீங்க. அதுவும் கரெக்டா எந்த எடத்துல கவுக்கணுமோ அங்கனயே கவுத்து மேல பெஞ்சு போட்டு ஏறி நின்னு அடிக்கறீங்க பாருங்க ஒரு டான்ஸ்.. எனக்கு அந்து போச்சு//
என்று நகைச்சுவையாகவும், என்னைப் பாராட்டியும் பின்னூட்டமிட்டிருக்கிறார்!!
இப்படிப்பட்ட சென்ஷியை என் நண்பர் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை!
சென்ஷி....
இன்றுமுதல் நீ என்..
நண்பன்!
Subscribe to:
Posts (Atom)