Tuesday, June 8, 2010

பேயோன் 1000

ல வருடங்களுக்கு முன் எல்லாரும் திருட்டு விசிடியை எதிர்த்தபோது கமலஹாசன் ஒன்று சொன்னார். ‘அறிவியலின் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து உங்கள் கலைகளை கொண்டு செல்லாவிட்டால் உங்களுக்குத்தான் கஷ்டம்’ என்று. இன்று வரை திருட்டு விசிடியை ஒழிக்க முடியவில்லை. அது திருட்டு டிவிடியாக வளர்ந்துதான் இருக்கிறது.

எழுத்திலக்கியம் கணினிக்குள் வந்து வலையுலகம் வாயிலாக பரந்து விரிந்து கொண்டிருக்க வந்தது ட்விட்டர். எனக்கு ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் ஓசியில் கிடைக்கும் எதையும் விடாத நான் அதையும் விடாமல் ஒரு கணக்கைத் தொடங்கினேன். கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே புரியவில்லை. (இப்போது ஒன்றாவது புரிந்திருக்கிறது) தினமும் என்னை ஃபாலோ செய்வதாக பலரும் வர கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்தேன்.

ஒரு விஷயம் - அதில் கொஞ்சம் கொஞ்சமாய் அல்ல, கொஞ்சமேதான் எழுத முடியும். 140 எழுத்துகளுக்குத்தான் அனுமதி. இப்படியாகப்பட்ட கால கட்டத்தில் தமிழ் ட்வீப்பிள்ஸையெல்லாம் கவர்ந்தார் ஒருவர்.

ரைட்டர் பேயோன்.

தன்னை எழுத்தாளர் என்று தானே விளித்துக் கொள்கிறார். வசனகர்த்தா, முன்னணி எழுத்தாளர் என்று சொல்கிறார். யாரென்று யாருக்குமே தெரியவில்லை. இன்று வரை. ஆனால் அவர் நிச்சயமாக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர்தான் என்பது அவரது ட்வீட்களிலிருந்து புலனாகிறது.

‘வித்தியாசமாக பண்ண வேண்டும் என லிங்குசாமி சொல்கிறார். ஹிட்ச்சாக் டிவிடி தொகுப்பை வாங்கிச் சென்ற நண்பரோ இன்னமும் திரும்பத் தரவில்லை. தவிக்கிறேன்’ - இதுதான் இவரை நான் கண்ட முதல் ட்விட் என்று நினைக்கிறேன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும், சமயத்தில் எள்ளலாய் எழுதிக் கொள்வதும், உலக சினிமாவை 140 வார்த்தைகளில் விமர்சிப்பதும், ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதை எழுதுவதும் என்று புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ரைட்டர் பேயோன்.

இவரது ட்விட்கள் ஆயிரம் சேர்ந்ததும் புத்தகமாக வரவிருக்கிறது என்று செய்தி பரவத் தொடங்கியதுமே எனக்கு ஆர்வம் அதிகமானது. இரண்டு நாட்கள் முன் சென்னை சென்றிருந்த போது கடை கடையாய் விசாரித்து, ஒரு வழியாய் வாங்கிவிட்டேன்.

புத்தகத்தின் வடிவம், உள்ளே உள்ள எழுத்துரு, அட்டைப்படம் எல்லாமே கவர்கிறது. இதிலும் பேயோன் யாரென்று சொல்லாமல் பின்னட்டையில் அவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆனால் ‘இரண்டாயிரம் ஆண்டு கால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் பதிவுகள் நூல் வடிவம் பெறுவது இதுவே முதல் முறை’ என்பதெல்லாம் ஓவர். ட்விட்டர் வந்து இரண்டாயிரம் ஆண்டா ஆகிறது? ஒருவேளை இதையும் பகடியாக பேயோனே எழுதிக் கொடுத்திருக்கலாம்)

புத்தகத்துக் கொடுத்த காசு அந்த முன்னுரைக்கே சரியாகப் போய்விட்டது. வாய்ப்பே இல்லை. முன்னுரைக்குப் பதிலாக, முன்னுரையில் ‘முன்னுரைக்குப் பதிலாக’ என்று ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி? என்ற தலைப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன்.

‘முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக் கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிச் சொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக..’ என்று ஆரம்பித்து சிக்ஸராக அடித்துத் தள்ளியிருக்கிறார்.

ட்வீட்கள்?

பல ஆகா அபாரம்களும், சில ஏமாற்றங்களும்.

49 ட்வீட்கள் முடிந்ததும் ஐம்பதாவதாக ஒரு ட்வீட். ‘எனது ட்விட்டரை தொடங்கியபின் 49 ட்வீட்களை எழுதிவிட்டேன். இன்றிரவுக்குள் 50 ட்வீட்களை எட்டிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்’ என்பதையே 50வது ட்வீட்டாய் தருகிறார். உத்தி ரசிக்க வைக்கிறது. ஆனால் அதையே நூறாவதுக்கும், இன்னோரிரு இடங்களிலும் தருவது அயர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. போலவே சுவாரஸ்யமற்ற காலை வணக்கங்களை தவிர்த்திருக்கலாம். இரவு வணக்கங்களை கவிதை கலந்து தருவதால் ரசிக்க வைக்கிறது.

இரண்டொரு ட்வீட்கள் மறுபடி அச்சாகியிருக்கிறது. அவரே ஒரு ட்வீட்டில் ‘வெளியிடுவதற்கு முன் முகமன்கள், context இல்லா மறுமொழிகள், நன்றிகளை நீக்கினால் மின்னூல் முழுமையாக இருக்கும்’ என்றிருக்கிறார். ஆனால் பதிப்பாகும்போது அதைச் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டியும் சில ட்வீட்கள் குபீர் சிரிப்பையும் சில ட்வீட்கள் !ஐயும் வரவைக்கிறது.

‘பொதுவாக என் பத்திகளை என் வீட்டு வாட்ச்மேனிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அவருக்குப் புரியவில்லை என்றால்தான் பிரசுரத்திற்கு அனுப்புவேன்’

‘ஜப்பானியப் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாயகன் நாயகியுடன் உடலுறவு கொள்கிறானா அவளது அம்மாவுடனா எனத் தெரியாமல் எழுதுவது சிரமம்’

‘இயக்குனர் பியரி பலர்டியு இறந்துவிட்டார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ. அவரைப் பற்றி அறிந்தபின் 2002லேயே அவர் படங்களை பார்த்ததுபோல் எழுதவேண்டும்’

‘சென்னையில் அன்னா அக்மதோவா, அன்னா கரீனனா, அன்னா கிரிகோரிவ்னா (கிரிகோர்வினா) எல்லோருக்குமாக சேர்த்து ஒரு அன்னா அறிவாலயம் எழுப்பப்பட வேண்டும்

‘நேற்றிரவு தூங்கப் போனபோது நல்ல இருட்டு. காலை எழுந்து பார்த்தால் நல்ல வெளிச்சம். இடைப்பட்ட நேரத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’

‘1. ஆஸ்கார் ரவிச்சந்திரன் கதை சொல்ல அழைத்திருந்தார். நான் கதை சொல்ல துவங்கியதும் தூங்கிவிட்டார். 2. அவரது மேஜையில் கிடந்த ப்ரிஸ்கிரிப்ஷனில் என் பெயரைப் பார்த்ததும்தான் எனக்கு விஷயமே புரிந்தது’

‘படிப்பது என்றால் மற்றவர்கள் எழுதியதை படித்தல். வாசிப்பது என்றால் எனது படைப்புகளை படித்தல்’

‘ஜெயமோகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்று புரிந்தது. தஸ் புஸ் என்று பேசினால் ஆங்கிலம். தஸ்ய புஸ்ய என்று பேசினால் சமஸ்கிருதம்’

‘தன்னடக்கத்தில் எனக்கு நிகர் நானேதான்’

‘எனது புத்தகம் ஒன்றை ஒரு இந்தி பேராசிரியரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்தேன். ‘பஹூத் போர் ஹே’ என்றார். போர்ஹேயுடன் ஒப்பிடுகிறார்’


‘போலான்ஸ்கியை சிறையில் தள்ளிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். ஒரு கலைஞன் குற்றம் செய்தால் குற்றமாகுமா? குற்றவுணர்வு தரும் தண்டனை போதாதா?’

இவை ஒரு சில.

யார் இந்த பேயோன் என்று தெரியாவிட்டாலும் எஸ்.ராவாக இருக்கும் என்பது என் அனுமானம். அதை உறுதிப்படுத்துவதாக பல தகவல்கள். பெண்களைக் குறிப்பிடும்போதெல்லாம் துப்பட்டா பற்றி எழுதுகிறார். விகடனில் எழுதுகிறேன் என்கிறார். என் தொடர் ‘இன்னும் பரவும்’ என முடிக்கிறேன் என்கிறார். (விகடனில் வரும் எஸ்.ரா-வின் சிறிது வெளிச்சம் அப்படித்தான் வாரா வாரம் முடிகிறது) அலைதலே தேசாந்திரிக்கு வித்திட்டது என்கிறார்.

யுவகிருஷ்ணாவோ, எஸ் ரா என்று தன்னை எல்லாரும் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறார் என்கிறார். நமக்கு உள்ள ஹீரோவைக் கொண்டாடும் மனப்பான்மை, அவராக நான்தான் அது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாமல் பேயோன் யாரென்று தெரியாமல் இருப்பதன் ரசிப்பில் மூழ்கி அதிலிருந்து வெளிவர விரும்பாமல் தடுக்கிறது. அதை அவர் புரிந்து கொண்டு புகுந்து விளையாடுகிறார் என்கிறேன் நான்.

பேயோன் எஸ்.ரா. இல்லையென்றால் நிச்சயமாக அது பா.ரா-தான் என்பது என் அனுமானம். ஏனென்றால் பேயோன் பா.ரா இல்லை என்று இரண்டு பேர்தான் சொல்கிறார்கள். 1) பா.ரா. 2) யுவகிருஷ்ணா.

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் ட்விட் தொகுப்பு என்ற பெருமை பெற்ற இந்தப் புத்தகத்தில் என் பெயரும் மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் அவசியமாகிறது. போலவே நீங்கள் வாங்க வேண்டும் என்பதும்.

பேயோனைட்விட்டரில் பின் தொடர:- இங்கே க்ளிக்கவும்.

என்னை ட்விட்டரில் பின் தொடர இங்கே க்ளிக்கவும். (நெல்லுக்கிழைத்த நீர்....)

பேயோன் 1000
ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு
விலை: ரூ.60
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை,
யுனைடட் இந்தியா காலனி
கோடம்பாக்கம், சென்னை - 24
044-237202939

.

ஆன்லைனில் வாங்க:- இங்கே க்ளிக்கவும்.



*

33 comments:

ஆயில்யன் said...

நல்ல பகிர்வு நன்றி பரிசல் :)


ரைட்டர் பேயோன் பேரவை

Raju said...

நோ டவுட்.அது அவரேதான்!

செந்தில் நாதன் Senthil Nathan said...

+1 :-) RT @ஆயில்யன்
நல்ல பகிர்வு நன்றி பரிசல் :)
#டுவிட்டர்பழக்கம்

கார்க்கிபவா said...

சில சுட்டிகள் தவறாக தந்திருப்பது, இவர் யார் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்பது தெரிந்தாலும் கேள்வி என்ன்வென்று தெரியாமல் இருப்பது போன்ரவை சில குறைபாடுகள்.

அடுத்த தொகுப்பு வருமா என தெரியவில்லை. இருந்தாலும் இருக்கட்டும் என்று சில கேள்விகள் கேட்டு வைத்தேன் இன்று காலையில். பதிலும் சொல்லியிருக்கிரார். எனவே அடுத்த தொகுப்பிற்கு நான் விமர்சனம் எழுதுகிறேன்

//பொதுவாக என் பத்திகளை என் வீட்டு வாட்ச்மேனிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அவருக்குப் புரியவில்லை என்றால்தான் பிரசுரத்திற்கு அனுப்புவேன்//

இதற்கு அடுத்த ட்வீட் இன்னும் சூப்பர்

“கோணங்கிக்கு வாட்ச்மேன் கிடையாது. அவர் பேராசிரியர்களிடம் தருகிறார்”

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கொரு புத்தகம் வாங்கிவந்து அன்போடு தந்த உங்களுக்கு நன்றி.

அது பா.ரா.தான் :)

Prathap Kumar S. said...

படித்திருக்கிறேன் பரிசல்... சுவராஸ்யம்..


//நமக்கு உள்ள ஹீரோவைக் கொண்டாடும் மனப்பான்மை, அவராக நான்தான் அது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாமல் பேயோன் யாரென்று தெரியாமல் இருப்பதன் ரசிப்பில் மூழ்கி அதிலிருந்து வெளிவர விரும்பாமல் தடுக்கிறது//


இது சுத்தமா பிரியல...

Anonymous said...

நபநப

manjoorraja said...

இவர் ஜெமோ என நினைக்கிறேன்.

பேயோன் said...

ஆக்கபூர்வமான மதிப்புரைக்கு நன்றி. இருந்தாலும் ஏமாற்றம் என்கிற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் உங்களை போனில் அழைத்து ஆளை வைத்து அடிப்பதாக மிரட்டுவது அவசியமாகிறது.

Bruno said...

பேயோனும், பாராவும் சமகால டிவிட்டர்கள்

அப்படி என்றால்

இவர் ஆன்லைனில் இருக்கும் அதே நேரம் தான் அவரும் ஆன்லைனில் இருப்பார்

தராசு said...

ஓ, இது புத்தக விமர்சனமா, நான் எதோ பேய் கதையோன்னு நினைச்சேன்.

Prakash said...

140 வார்த்தைகளுக்குத்தான் அனுமதி//

வார்த்தையா? சரியா போச்சு!

ILA (a) இளா said...

//ஆளை வைத்து அடிப்பதாக மிரட்டுவது அவசியமாகிறது//
அதெல்லாம் முடியாது என சவால் விடுக்கிறேன், மாறு கால் மாறு கை வாங்க கூட முடியாது

HVL said...

பா.ரா. வாகத்தான் இருக்க வேண்டும்.

பரிசல்காரன் said...

// Prakash said...

140 வார்த்தைகளுக்குத்தான் அனுமதி//

வார்த்தையா? சரியா போச்சு!//

தகவல் பிழை அதிமுக்கியம் என்பது குருஜி பேயோனின் அறிவுரை!

ஸ்வாமி ஓம்கார் said...

நாங்க எல்லாம் ’முன்’னாடியே அவரை ’பின்’ தொடர்கிறோம்.

சமீபத்திய என் டிவிட்...

// இனி அடிக்கடி டிவிட்டரில் குருசிஷ்யனுக்கு இடையே நடைபெறும் குறு(ரு)ங்கதை எழுதலாம் என இருக்கிறேன்.//

//ஆயிரம் குறுங்கதை சேர்ந்ததும் யாரேனும் புத்தகமாக வெளியிடுங்கள். நான் புத்தக அச்சடிக்க 'pay'யோனாக இருப்பேன் :)//

Aranga said...

மிக சுவாரஸ்யமாக டிவிட்கள் , டிவிட்டரை இப்படியும் சுவாரஸ்யமாக்கலாம் என்று சொன்னவரும் .

ஜெ அல்ல என்பது நிச்சயம் (எழுத்து அவரு போல இருந்தாலும் எழுதுவது அவரல்ல என நிச்சயமாக சொல்வேன்,

எஸ்ராவை குறித்துதான் அதிகமும் கிண்டல்கள் , அவருடைய எழுத்து நடையை , வார்த்தைகளை வைத்தே அவரை கிண்டலிக்கிறார் , அதனால் எஸ்ரா போல தெரிகிறார் .

யார்தான் பேயோன் ? முகம் காட்டாமலேயே எப்படி புத்தகம் வெளியிட்டார் ? மில்லியன் டாலர் !!!!!!

Asir said...

அது பா.ரா.தான் :)

கொல்லான் said...

அது எஸ்.ரா. தான்

அன்பேசிவம் said...

என்ன தல இப்படு ஒரு மேட்டர் இருக்குறதே தெரியாதே?
முதலில் நன்றி அதற்கு. எனக்கு ஒரு புக் பார்சேல்...............

Kumky said...

நமக்கு உள்ள ஹீரோவைக் கொண்டாடும் மனப்பான்மை, அவராக நான்தான் அது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாமல் பேயோன் யாரென்று தெரியாமல் இருப்பதன் ரசிப்பில் மூழ்கி அதிலிருந்து வெளிவர விரும்பாமல் தடுக்கிறது. அதை அவர் புரிந்து கொண்டு புகுந்து விளையாடுகிறார் என்கிறேன் நான்...



அடப்பாவிங்களா....

Sanjai Gandhi said...

//என் பெயரும் மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பதால்//

ஏன் தேடிப் புடிச்சி வாங்கினிங்கன்னு இப்போ புரியுது :)

கபிலன் said...

பிளாக்கர், ஆர்குட், பேஸ்புக் தவிரவும்
டுவீட்டரில் என்னைத் தொடர்.

-கவிஞர் கூகுலூர் கிழார்.

கபிலன் said...

தொடர்ந்து விரட்ட ட்விட்டர் என்னுமோர்
குறும்பதிவு உலகம் காண்.


-கவிஞர் கூகுலூர் கிழார்.

கபிலன் said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்பர்
டுவிட்டரில் விரட்டி யவர்.

-கவிஞர் கூகுலூர் கிழார்.

Unknown said...

வாங்க டிவிட்டலாம்ன்னு நீங்க சொன்னப்ப கணக்கை துவங்கினேன்.

அதுக்கப்புறம் அந்த பக்கம் எட்டிப் பாக்கவேயில்லை.

வால்பையன் said...

சுவா”ரசம்”

Katz said...

//தமிழிலக்கிய வரலாற்றில் முதல் ட்விட் தொகுப்பு என்ற பெருமை பெற்ற இந்தப் புத்தகத்தில் என் பெயரும் மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் அவசியமாகிறது. போலவே நீங்கள் வாங்க வேண்டும் என்பதும்.//

இதை முதலிலே போட்டிருக்கலாம்...

பாலா அறம்வளர்த்தான் said...

கவிஞர் கூகுலூர் கிழார்/கபிலன் அவர்களே!!!

நானும் இப்படி சில பின்னூட்டங்களை குறள் வெண்பா வாய் போட்டேன் - யாரும் கண்டு கொள்ளவில்லை :-( மிக நல்ல முயற்சி .

மூன்றாவதில் 'குறையாதென்பர்' சரி இல்லை எனத் தோன்றியது . நாலசைச்சீர் என்று இருக்கிறதா?

ப்ரியமுடன்,
--பாலா

ஷர்புதீன் said...

பேயோன் வேற யாருமில்லை., பரிசல்தான்
:)

ஜெயந்தி said...

பேயோன் யாருன்னு போட்டிருப்பாங்கன்னு பார்க்கத்தானே அவசரமா புத்தகம் வாங்கினீங்க?

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

sarvan said...

very nice