Thursday, November 5, 2009

டாப் டென் மறதிகள்



ரொம்ப நாள் கழிச்சு பத்து...

மறதி விஷயத்துல நம்மளை அடிச்சுக்க யாரும் கிடையாது. நம்மளைன்னு சொன்னா உங்களையும் சேர்த்துதான். நாம வழக்கமா மறக்கற பல விஷயங்களை பட்டியல் போட்டா டாப்ல வர்ற பத்து மறதிகள்...

1) ஏதாவது இடங்களுக்குப் போனா செல்ஃபோனை கைல வெச்சுகிட்டு, வர்றப்ப எங்க வெச்சோம்னு பத்து நிமிஷம் தேடிட்டு இருப்போம். கடைசில கையிலயும் இல்லாம, பையிலயும் இல்லாம, கடையிலயும் இல்லாம, காருக்குள்ளயே இருக்கும்.

2) வீட்டுக்குப் போறப்ப வழில இருக்கற கடைல இறங்கி ஏதாவது பொருள் வாங்க வேண்டியிருக்கும். அந்தக் கடையைத் தாண்டிப் போனப்பறமோ, வீட்டு காலிங்பெல்லை அடிக்கறப்பவோதான் அது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்.

3) விகடனோ, உயிர்மையோ, மணல்வீடோ படிச்சுட்டு இருப்போம். நல்ல கட்டுரையா இருக்கும். ‘இத இப்படிப் படிக்க்க் கூடாது. சண்டே பால்கனில உட்கார்ந்து பொறுமையா படிக்கணும்’ன்னு அத ஜம்ப் பண்ணீட்டுப் போவோம். அவ்ளோதான். அடுத்த இஷ்யூ வரும்போதுதான் ‘அட.. போன இஷ்யூல அதப் படிக்கலியே’ன்னு ஞாபகம் வரும். வீட்டைப் புரட்டிப் போட்டு, மனைவிகிட்ட திட்டு வாங்கி... ச்சே...

4) அலுவலக வேலையா யார்கூடயாவது எம்.டி.முன்னாடி உட்கார்ந்து ஃபோன்ல பேசிகிட்டிருப்போம். அப்போ கால்வெய்ட்டிங்ல இன்னொரு ஃப்ரெண்டு வருவார். எம்.டி.முன்னாடி எடுக்கவும் முடியாதா.. சரி அப்புறமா கூப்பிட்டுக்கலாம்னு விட்டுடுவோம். அது அவ்ளோதான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கூப்பிட்டு திட்டும்போதுதான் ஞாபகமே வரும். இல்லையேன்னு சமாளிக்கவும் முடியாது...

5) தெரிஞ்சவங்களோட பிறந்தநாள், திருமணநாள்னு குறிச்சு வெச்சிருப்போம். ‘அடுத்த வாரம் வருதா.. ம்ம்.. கூப்பிட்டு வாழ்த்தணும்’னு நெனைப்போம். கரெக்டா அதுக்கு அடுத்த வாரம்தான் ஞாபகத்துக்கு வரும்.

6) ஃப்ரெண்டுகிட்ட ஏதாவது கடன் வாங்கியிருப்போம். பட்ஜெட் போடும்போது அதுமட்டும் எப்படியோ....

7) ‘நாளைக்குக் குளிக்கறப்போ, காலை நல்லா தேய்ச்சுக் குளிக்கணும்’னு நெனைச்சுப்போம். ஆஃபீஸ்ல எப்பவாவது நம்ம காலை நாம பாக்கறப்பதான் அட மறந்துட்டோமேன்னு தோணும்.

8) ஏதாவது குறிப்புகளுக்காக ஆஃபீஸ்ல இணையத்துல உட்கார்ந்து தேடிப் பிடிச்சு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுட்டு, குறிப்பிட்ட மீட்டிங்குக்கு எல்லாத்தையும் வெச்சு கரெக்டா நோட்ஸ் எடுத்து வெச்சுட்டுப் போய் அசத்தணும்னு நெனைச்சுட்டே இருப்போம். கரெக்டா அந்த மீட்டிங்குக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்தப் பேப்பர்ஸெல்லாம் எங்க வெச்சோம்னு மறந்து போய்த் தேடிட்டே... இருப்போம்.. அதுக்குள்ள...

9) இந்த மாதிரி பதிவுகள் எழுத பத்து பாய்ண்ட்ஸை குறிப்பெழுதி கிறுக்கி வெச்சிருப்போம். கரெக்டா இத எழுதலாம்னு தோணித் தேடும்போது அது கிடைக்காம, ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு ஒம்பது பாய்ண்ட்ஸை எழுதி ஒப்பேத்தீடுவோம். அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்.....



.

81 comments:

தமயந்தி said...

( )

iniyavan said...

முடிவு அசத்தல் பரிசல்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எல்லோருக்கும் பொருந்தும் பெரும்பாலும் இவைகள் அனைத்தும் ....
nice

தராசு said...

கடைசி பாயிண்ட்ல தான் உங்க டச் நச்.

Cable சங்கர் said...

இதை படிச்சிட்டு நல்லதா ஒரு பின்னூட்டம் போடணுமினு நினைச்சேன்.. மறந்திருச்சு..:(

NO said...

அன்பான நண்பர் திரு பரிசல்,

உங்களின் டாப் பத்து மறதிகள் இப்படித்தானே இருக்கணுமுன்னு நினைத்தேன். அதான் ஏதோ என்னால் முடிந்தது........,,

(1) ஏதாவது இடங்களுக்கு போனாலும் பதிவு எழுதுவது மட்டுமே மனசில எப்பொழுதும் இருப்பதாலும், போன எடத்தப்பத்தி என்ன எழுதலாம் என்பதை நினைத்து ஒரு சப்ஜெக்ட்ஐ தேடோ தேடென்று தேடுவேன். ஏதாவது மொக்கை மாட்டும். சரி இத வச்சு நாளைக்கு ஓட்டலாம் என்று எண்ணும் பொழுது சில சமயம் மறந்து போய் விடும். மனசிலும் இல்லாமலும், மூளையிலும் இல்லாமலும், கனவில் மட்டும் அது கடைசியில் இருக்கும்!

(2) வீட்டுக்கு போறப்போ, வழியில பார்க்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதித்தள்ள மனசு வேண்டிக்கும். மொக்கை ஒன்றும் மாட்டிக்கும். மொக்கையை பற்றியே நினைத்து கார் ஓட்டியதால் நாலு பேரை இடித்து, நானும் அடி வாங்கி, அதனால் மொக்கையை மறந்து,அதையெல்லாம் கடந்து வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்தும்போதுதான், நாளை பதிவுக்கு மொக்கை ஏதும் இல்லையே என்ற ஞாபகம் வரும். அனாலும் அதெல்லாம் எதற்கு, எழுதுவதே சும்மா கதைதான, அதை பாத்து
எழுதினா என்ன பாக்காம எழுதினா என்ன அப்படின்னு எண்ணம் வந்து தொலைக்கும்!

(3) கோவி அண்ணன் பதிவையோ கார்கி தம்பி பதிவையோ படிச்சி தவிச்சிட்டு இருப்போம். கண்டபடி கப்சாவா இருக்கும். இதை இப்படி படிக்கக்கூடாது, சாவுற நிலைமைல யாராவது இருந்தா அவங்கள பக்கத்துல உட்காரவச்சு படிக்கணும், அப்பதான் காவு நம்மகிட்ட வராது அப்படின்னு நினைத்து அப்போதைக்கு விட்டுருவோம்! அவ்வளவுதான் அவங்க அடுத்த பதிவ பார்த்த பிறகுதான் அட ஒரு சாவ பாக்காம விட்டுடோமே என்று ஞாபகம் வந்து, மற்றொரு சாவும் நிலமையில்லுள்ளவரை தேடி ..... மனைவிக்கிட்ட திட்டு வாங்கி........

(4) அலுவுலகத்துல வேலையே செய்யாம, MD கூப்பிட்டாலும் கண்டுக்காம கண்டபடி பதிவு எழுதிக்கொண்டிருப்போம். அப்பொழுதுதான் கார்கி தம்பியும் தன்னோட லேட்டஸ்ட் பதிவ படிக்கச்சொல்லி மெயில் அனுப்புவாரு.... MD க்கே அல்வா கொடுத்து ஆபிசு நேரத்துல பதிவு எழுதுற நாங்க, கார்கி தம்பிக்கு உடனே பதில் தரலயுன்ன ஒன்றும் குடி முழுகி போகாது, வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம் அப்படின்னும் உட்டுருவோம்! ரெண்டு நாள் கழிந்து கூப்பிட்டு என்னுடையா மகா மொக்கையை படிக்கலையா என்று கேட்ட பின்னர்தான் ஞாபகம் வரும். சமாளிக்கவும் முடியாது!

தொடரும்....................

நன்றி

Thuvarakan said...

கடைசி பாயிண்ட் அசத்தல்

Ashok D said...

My points goes to Mr.No :B

Unknown said...

so niceeeeee

NO said...

(5) தெரிஞ்சவங்களோட பதிவுகளை எவ்வளவு கேவலமாக இருந்தாலும் பாராட்டி கும்மி அடிக்கணுமுன்னு குறிச்சு வெச்சிருப்போம். அதுவும் அந்த பதிவிலையே போயி சூப்பர் கலகிட்டீங்க அப்படின்னு கும்மி அடிக்கணுமுன்னு நினைப்போம். கரெக்டா அதுக்கு அடுத்த பதிவுலதான் ஞாபகம் வரும்!

(6) ஃப்ரெண்டுகிட்ட ஏதாவது கேவலமான மொக்கை பதிவுக்கும் பாராட்டு வாங்கிஇருப்போம். அவங்க இதே மாதிரி மொக்கை போடும்பொழுது பாராட்டு கும்மி மட்டும் எப்படியோ .......

(7) நாளைக்கு பதிவு எழுதிரப்போ காலை பதிவையும் இன்றைக்கு போல கேவலமாக எழுதக்கூடாது என்று நெனைச்சிப்போம். அனானிகள் சிலர் அதைப்படிச்சுட்டு காலாலேயே உதைப்பேன் என்று கும்மியடிச்ச பின்னர்தான் அட மறந்துட்டோமே அப்படின்னு தோணும்!

(8) ஏதாவது பதிவுக்கு எப்பவும் போல ஆபிஸ் நேரம் ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் இன்டர்நெட் எல்லாவற்றையும் சிறிதுகூட சங்கடமில்லாமல் மனசாட்சி இல்லாமல் உபயோகித்து ஒரு ரெண்டு பக்க ரம்பத்த எழுதியிருப்போம். நடுவுல திடீருன்ன MD பக்குத்துல வராமாதிரி இருந்தா எங்கேயோ டக்குன்னு சேவ் செய்து விடுவோம்.
அவரு போன உடனேயே, பதிவை முடிக்கிற ஆர்வம் பொங்கிய உடனேயே அதை எங்கே சேவ் செய்தோம் என்று மறந்து போய் தேடி............

(9) இந்த மாதிரி மொக்கையாக பதிவெழுத பத்து என்ன பத்தாயிரம் பாயின்ட்சு குறிச்சு வெச்சிருப்போம். இதை எல்லாத்தையும் எழுதனுமுன்னு தோன்றி, எட்டை மட்டும் முடித்து , மேலும் தொடரும் பொழுது, MD மற்றும் கம்பனியில் எனக்கு மேல உள்ளவர்கள் அதை எங்க கண்டு பிடித்து விடுவார்களோ, வேலையை விட்டு தூக்கி விடுவார்களோ என்று பயந்து அந்த பத்தாவது பாயிண்டு மட்டும்.............

நன்றி

கிருஷ்ண மூர்த்தி S said...

பத்து இல்லைன்னா பத்தாதுன்னு ஏதோ டூத்பேஸ்ட் விளம்பரத்துல வர சின்னப்பையன் மாதிரி, எங்க பாத்தாலும் பத்து'மயமாகிடப்போகுது!

Unknown said...

//1) ஏதாவது இடங்களுக்குப் போனா செல்ஃபோனை கைல வெச்சுகிட்டு, வர்றப்ப எங்க வெச்சோம்னு பத்து நிமிஷம் தேடிட்டு இருப்போம். கடைசில கையிலயும் இல்லாம, பையிலயும் இல்லாம, கடையிலயும் இல்லாம, காருக்குள்ளயே இருக்கும்.//

செல்ஃபோன் பேசிக்கிட்டே.. பேசறவங்க கிட்டயே செல்ஃபோன எங்கயோ வெச்சிட்டேன்னு சொல்லிட்டு தேடியதுண்டு... ஹி ஹி ஹி..

// அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்.....//

க்ளாஸ்.. :))))))))))))

கார்க்கிபவா said...

no நீங்க யாருன்னு மறந்துட்டிங்களா? அடிக்கடி இங்கிலிபீஷுல பீட்டர் விடுவீஙக்ளே? என்ன ஆச்சு?

இல்லை, இது டூப்ளிகேட் நோவா?

பின்னோக்கி said...

2,3,5,10 எனக்கும் இருக்கு

பின்னோக்கி said...

நல்ல வேளை பதிவ எழுதிட்டு அத போஸ்ட் பண்ணாம டிராப்ட்ல வைக்காம இருந்தீங்களே. அதுக்கே பாராட்டனும் உங்களை.

NO said...

அன்பான நண்பர் திரு கார்கி,

No தமிழிலும் எழுதுவான் இங்கிலிபிசிலும் எழுதுவான்!
உங்க கவிதை கும்மி நண்பர்களுக்கு ஏதோ எனக்கு தெரிந்த இங்கிலிபிசு, நண்பர் திரு பரிசல் அவர்களுக்கு ஏதோ எனக்கு தெரிந்த தமிழு!

By the way, how are your poet friends doing. Didn't get a further chance to look at their english poem mongering. Hope things are on track, I meant their vigour to give poor old Shakespeare a run for his money.

உங்க "பிடிக்க பிடிக்காத" மொக்கை பார்த்தேன், அதைவிட திரு பரிசல் அவர்களின் இந்த மொக்கை மகா மொக்கையாக இருந்ததால் இங்கே வந்தேன்! வேற ஒன்னும் இல்லை சார்.

நன்றி

கோவி.கண்ணன் said...

//கார்க்கி said...
no நீங்க யாருன்னு மறந்துட்டிங்களா? அடிக்கடி இங்கிலிபீஷுல பீட்டர் விடுவீஙக்ளே? என்ன ஆச்சு?

இல்லை, இது டூப்ளிகேட் நோவா?
//

கார்க்கி,

No பீட்டர் இல்லை, பீட்டரு மாமா. பதிவெழுதி பேர்வாங்கும் பதிவர்களுக்கு இடையே இவர் பின்னூட்டம் போட்டு எவனையாவது நொட்டை நொள்ளை சொல்லி பின்னூட்டம் இட்டு பேரு வாங்கின /வாங்கும் பீட்டரு மாமா.

கோவி.கண்ணன் said...

//No said...
அன்பான நண்பர் திரு கார்கி,

No தமிழிலும் எழுதுவான் இங்கிலிபிசிலும் எழுதுவான்!
உங்க கவிதை கும்மி நண்பர்களுக்கு ஏதோ எனக்கு தெரிந்த இங்கிலிபிசு, நண்பர் திரு பரிசல் அவர்களுக்கு ஏதோ எனக்கு தெரிந்த தமிழு!

//

மிஸ்டர் நோ ......நோ ரென்சன்.

மற்றவர்கள் மீது உங்களுக்கு இருப்பது போலவே உங்களை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் உண்டு.
:)

அப்பாவி முரு said...

சங்கம் களை கட்டுவது போலுள்ளது.



“ குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை”

நான் ஜகா வாங்கிக்கிறேன்

சிங்கை நாதன்/SingaiNathan said...

//இத இப்படிப் படிக்க்க் கூடாது. சண்டே பால்கனில உட்கார்ந்து பொறுமையா படிக்கணும்’ன்னு அத ஜம்ப் பண்ணீட்டுப் போவோம்//

அதனால தான் உங்க பதிவை மொதல்ல படிச்சுடறது. ;)
புரியல? மத்த நல்ல பதிவுகள சண்டே படிக்க ;)

அன்புடன்
சிங்கை நாதன்

NO said...

ஹா ஹா ஹா...........
பாதிக்க பட்டவருக்குதான் வலி தெரியும்!
கோவி அண்ணன் வந்துட்டார் பாருங்க.........

கோவி சார், அதான் கடைசி முறை உங்க சுற்றுலா சிறப்பிதழை சின்னதாக திட்டியதால் சுர் என்று உங்களுக்கு கோபம் வந்ததே, இன்னும் தீரலையா!
கோவி அண்ணனின் கோபம், அரும்பாடு பட்டு எழுதிய சிறப்பிதழை இந்த அனானி சிரிப்பிதழாக மற்ற பார்க்கின்றானே என்பதற்க்காகதானே.

அதை விடுங்க சார், உங்கள நான் போட்டு கலாய்ப்பது புதுசில்லையே, அதை பார்த்து பலர் விழுந்து விழுந்து சிரிப்பதும் புதுசில்லையே, ஆனால் திரு பரிசல் அண்ணன், மொக்கையாக எழுதினர் என்றால் நீங்க ஏன் சார் வந்து சம்பந்தம் இல்லாம "மற்றவர் மீது...விமர்சனம்.... உரிமை ...." அப்படி இப்படின்னு தொடங்கிட்டீங்க! இதுகெல்லாம்தான் "காலம்" இருக்கிறதே, அதாவது கதை விடுவதற்கென்றே நீங்கள் கட்டிய காட்சியகம்! அங்க நீங்க இத ஆரம்பித்தால் பொருத்தமாக இருக்கும். பஜனைக்கு மடம்தான் சரியான இடம், ஆசிர்வாதத்துக்கு தேவாலயம்தான் சரியான இடம், அதே போல உளறல்களுக்கு, உங்க "காலம்" தான் சரியான இடம்.

உங்களுக்கு இதெல்லாம் நன்றாக தெரியுமே, "காலத்தில் தேடுங்கள்" என்று வேறு சொல்லிட்டு, உங்க ஏரியாவுல தொலச்சத இங்க வந்து தேடுநீங்கன்னா எப்படி!

சரி, லேட்டஸ்ட் என்ன சார், உங்க சுற்றுலா, கோவியாரின் புதிய law எல்லாம் ஓவரா. புதுசா எதாவது இருந்தா சொல்லுங்க. இல்லாட்டி ஆரம்ப்பிப்போம், நம்ம அடுத்த படத்தை.....

கோவிஜி (The Gas),

உங்க பதிவப்பார்த்தாலே சும்மா அலரனுமில்ல!!!!!!

நன்றி

கோவி.கண்ணன் said...

//கோவி அண்ணனின் கோபம், அரும்பாடு பட்டு எழுதிய சிறப்பிதழை இந்த அனானி சிரிப்பிதழாக மற்ற பார்க்கின்றானே என்பதற்க்காகதானே.
//

மிஸ்டர் நோ,

நீங்கள் பக்கம் பக்கமாக என் பதிவிலும் என்னைப் பற்றிய காமடி என்று பின்னூட்டமாக பிறர் எழுதியதையும் நான் படிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விளம்பரம் கேட்கிறவர்களுக்கு செய்தாலும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனக்கு செய்வது வீன்.

NO said...

சரி விடுங்க கோவி சார், இதுக்கு போய் அப்செட்டாகி.........

யாருங்க இந்த திரு அப்பாவி முரு .........நச்சுன்னு 758 ஐ தட்டிவிட்டு போவது!

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது - இது மேன்மிகு மு.வ அவர்கள் கொடுத்த விளக்கம்!

இந்த குறளுக்கும் இந்த பதிவுகள் மற்றும் கும்மிகளுக்கும் என்ன சார் சம்மந்தம்???

குறள வச்சு காமடி கீமடி பண்ணலையே???

இந்த மாதிரி ஒரு அசாதாரண அறிவாளி தன்னுடிய ப்ளாகில என்னதான் எழுதிருப்பார் என்பதை பார்த்துவிட்டு பிறகு........

நன்றி

பீர் | Peer said...

2, 6 பல முறை நான் மறந்த மறதிகள்.

அந்த பத்துதான் பெஸ்ட். :)

அப்பாவி முரு said...

//No said...
சரி விடுங்க கோவி சார், இதுக்கு போய் அப்செட்டாகி.........

யாருங்க இந்த திரு அப்பாவி முரு .........நச்சுன்னு 758 ஐ தட்டிவிட்டு போவது!

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது - இது மேன்மிகு மு.வ அவர்கள் கொடுத்த விளக்கம்!//


NO அண்ணா, வணகங்ண்ணா...

நான் இங்க வர்றதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. அதனால எனது இன்னைய கைப்பொருளாக அமைதியை எடுத்துகிட்டேன். அது இருந்தாத்தான் யானைகளின் சண்டையை பாதுகாப்பாக பார்க்க முடியும்.

அதனால என்னையையும் அந்த 758யும் அப்படியே விட்டுடுங்க. மனசுல இருந்தாலும் அழிச்சுடுங்க.

மேவி... said...

நான் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, பில் எல்லாம் pay பண்ணிட்டு அந்த பையை கடையிலே வைத்துவிட்டு வந்துவிடுவேன் மறதியில். அடுத்த நாள் தான் ஞாபகம் வரும் ஏதோ பொருள் வாங்கி மறதியில் கடையிலே வைத்து விட்டு வந்து இருக்கிறோம் என்று ஆனா அது எந்த கடை என்று அப்பொழுது ஞாபகம் இருக்காது.

சில சமயம் ஒரே புத்தகத்தை மூன்று முறை வாங்கிய அனுபவம் எல்லாம் எனக்கு இருக்கு. இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு சீனியர்.

பாபு said...

முடிவு அசத்தல்

Beski said...

9 ஜூப்பரு.

//Cable Sankar said...
இதை படிச்சிட்டு நல்லதா ஒரு பின்னூட்டம் போடணுமினு நினைச்சேன்.. மறந்திருச்சு..:(//

யூத்துக்கு வயசாகுதுன்னு நினைக்கிறேன்... :)

Jawahar said...

பரிசல், ஒன்பது மட்டும் எழுதி பத்தாவதை மறக்கிறதை ஞாபகமா பண்ணியிருக்கீங்க...

http://kgjawarlal.wordpress.com

யுவகிருஷ்ணா said...

மிஸ்டர் நோ அவர்களின் பின்னூட்டங்கள் அபாரம்!

பரிசல்காரன் said...

அப்பாடா இப்பதான் சங்கம் களைகட்டுது!

@ நோ

ரொம்ப சந்தோஷம்ங்ணா.. நல்லா எழுதினப்ப எல்லாம் நீங்க குடுத்த ஆஸ்காரும், புக்கரும் வீடு முழுக்க நெறைஞ்சு இருக்கறதால அப்பப்ப இப்படியும் எழுதறேன்.. ஓகே?

நோ ரென்சன் ப்லீசு.. ஐயம் இலங்லீஸ் நாட் கமிங்கு..

அது ஒரு கனாக் காலம் said...

வந்த்ட்டான்யா வந்துட்டான் ( இர் ...போடுனுமோ ????) ... Dr .No வந்துட்டார் !!!!!!!!!

Thamira said...

http://www.aathi-thamira.com/2009/11/10.html

எப்பூடி.?? விடாம நாங்களும் போடுவோமில்ல பதிவு..

புடிச்ச/புடிக்காத பத்து புயல் வீசிக்கிட்டிருக்கும் போதே இந்த பத்தும் போட்டு கொழப்பட்டும்.

ஜெய் கும்மித்தாயே.! வெற்றி நமதே.!!

Karthikeyan G said...

Mr. No.. Superuu.. :)

எம்.எம்.அப்துல்லா said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
http://www.aathi-thamira.com/2009/11/10.html

எப்பூடி.?? விடாம நாங்களும் போடுவோமில்ல பதிவு..

புடிச்ச/புடிக்காத பத்து புயல் வீசிக்கிட்டிருக்கும் போதே இந்த பத்தும் போட்டு கொழப்பட்டும்.

ஜெய் கும்மித்தாயே.! வெற்றி நமதே.!!

//

மிஸ்டர்.நோ பிளீஸ் நோட் திஸ் பாய்ண்ட் :))

NO said...

// மிஸ்டர் நோ,

நீங்கள் பக்கம் பக்கமாக என் பதிவிலும் என்னைப் பற்றிய காமடி என்று பின்னூட்டமாக பிறர் எழுதியதையும் நான் படிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விளம்பரம் கேட்கிறவர்களுக்கு செய்தாலும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் எனக்கு செய்வது வீன் //

தாங்கமுடியவில்லை சாமி...அண்ணன் திரு கோவி கண்ணன் அவர்களின் மேலே உள்ள மறுமொழிக்கு என சொல்வதென்றே தெரியவில்லை.. ........

உடனே நினைவுக்கு வந்தது, Winner படத்தில் வந்த வடிவேலு காமெடி!!!!!!!!

அதையும், அண்ணன் திரு கோவி அவர்களின் சம்பந்தமில்லா இந்த திடீர் கோதா குதிப்பையும் வாங்கிக்கட்டிக்கொண்ட சதாய்ப்பையும் வடிவேலுவின் அடிவாங்கலுடன் compare செய்து சிரித்துகொண்டிருந்தேன்!

நீங்களும் கொஞ்சம் ரசியுங்கள்!

திரு கோவி அண்ணன், தனக்கு சம்பந்தமே இல்லாத விடயத்தில் தலையிட்டு, பஞ்சாயத்து செய்ய வருகிறார்!!!! (அதாவது ஓரி அனானி யாரோ ஒரு பதிவரை கிண்டல் செய்கிறார், அதற்க்கு அண்ணன் சண்டைக்கு வருகிறார்) அவருக்கு துணையாக, அண்ணன் திரு அப்பாவி முரு...........

அப்பாவி: துபாக்கி துப்பாய தப்பாக திட்டாய கட்டாய பஞ்சாயத்தாய!

அனானி: எனய்யா உளருற???

அப்பாவி: யாரு அது கண்டபடி பினூட்டம் போட்டு திட்டுறது! எங்க அண்ணன் வந்துருக்கார், பதில் சொல்லுங்க!

அனானி: யாருங்க உங்க அண்ணன்?

அப்பாவி: அண்ணன் கோவி கண்ணன். அவரு யாரு தெரியுமா? வார்த்தையின் வேகத்தில் கணினியின் பாகத்தை, நோக்கத்தின் தேக்கத்தை .......

அனானி: போதும் போதும் நிறுத்து.....அவரு கொஞ்சம் வரச்சொல்லு....

கோவி கண்ணன்: நாந்தான் கோவி,ஏய் அனானியே, உனக்கு தெரியுமா..காலத்தால் வெல்லப்படுவது யாதெனின், காலத்தில் மட்டும் தேடினால் கிடைக்கும் பொருள்!!

அப்பாவி: அனானி ... இப்போ பார்த்தியா.... நெறி கொள்வர், வரியார், வரி கொள்ளார் அறியார்......மேலும் தெரிஞ்சிக்கோ.. வாழ்வாங்கு வாழ்வார் நேற்றுவைத்த சாம்பார்..... இது கோவி அண்ணனோட நானும் சேர்ந்து எழுதின புது குறள்....
முக்கியமாக, பரிசல் அண்ணனை எந்த அனாநிடாகிண்டல் பண்ணது, அண்ணன் கேட்குறாரு......

அனானி: நாந்தான், அதுக்குமுன்னாடி, அப்பாவி அவர்களே, நீங்க சொல்லுறது எல்லாம் வெறும் உளறல்... தெரியாம வந்துட்டீங்க, போயிடுங்க........

சொன்னதும் அப்பாவி ஓடி மறைகிறார்........

தனியாக ஆகிப்போன கோவி அண்ணன்: இதோ பாரு அனானி, பேச்சு பேச்சாகதான் இருக்கணும், கண்டபடி கிண்டல் பண்ணீனா...........


தொடரும்............

மணிகண்டன் said...

நோ, முதலில் ஏதோ வெறும் hard criticism மட்டும் என்று ஆரம்பிச்சீங்க. இப்ப என்னன்னா பதிவு மொக்கையவிட உங்க மொக்கை தாங்கலை :)-

NO said...

அனானி: நான் யாரயோ விமர்சனம் பண்ணுறேன், உங்களுக்கு என்ன சார்? ரொம்ப பேசுவீர்கள் என்றால், உங்களையும் கிண்டல் பண்ணுவேன்!

கோவி: இதவரைக்கும் என் பதிவை யாரும் கிண்டல் பண்ணது இல்ல

அனானி: உங்க போன பதிவுல வந்து அரப்பக்கதுக்கு பினூட்டம் போட்டு கிண்டல் பண்ணேனே, மறந்துடீங்களா?

கோவி: அது போன பதிவுல, இன்னைக்கு காலைலதான் ஒரு பதிவு போட்டேன், அதுல சொன்னேன்....... மறுபடியும் சொல்லுறேன் பேச்சு பேச்சாகதான் இருக்கணும், கிண்டல் பண்ணக்கூடாது.... இல்லாட்டி.......

அனானி: என்ன பண்ணுவீங்க.........

கோவி: அழுதுருவேன் .........

நன்றி

அப்பாவி முரு said...

//அனானி: நாந்தான், அதுக்குமுன்னாடி, அப்பாவி அவர்களே, நீங்க சொல்லுறது எல்லாம் வெறும் உளறல்... //

நான் மட்டுமா?

NO said...

அன்பான நண்பர் திரு மணி,

என்ன சார் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு... இந்த மாதிரி வேண்டியவங்க வீட்டுக்கு, அதுவும் ஒரு விசேசத்திற்கு வந்தால்தான் உங்கள மாதிரி பெரிய மனிதர்களை எல்லாம் பார்க்க முடிகிறது! கொஞ்சம் லேட்டாக வந்துட்டீங்க பாஸ்..... ..

அன்பான அண்ணன் அப்பாவி,

சாரி சார், முழுசா முடிக்கவில்லை, கோவி அண்ணனையும் சேர்த்துதான், நீங்க நியூ என்ட்ரி........

அன்பான நண்பர் திரு யுவகிருஷ்ணா,

என்ன சார், நலமா? ஒரு விடயம் சொல்லனுமுன்னு நினைத்தேன்..... ஒரு தடவை உங்கள கண்டபடி திட்டி என் நல்ல நண்பர்களான திரு வினவு மற்றும் அவரின் துதிபாடிகள் (குறிப்பாக என்னுடன் மிக நடப்பாக பழகும் நண்பர் திரு கலகம் அவர்களும்) ஒரு பெரிய பதிவு போட்டாங்க! நானும் உங்கள defend செய்து போட்டு திருப்பி அடிச்சேன்...... என்ன என்னுடைய பின்நூட்டாங்களை அழித்துவிட்டார்கள்...... அனால் கொஞ்ச நேரம் அது பதிவில் இருந்தது, நீங்க படிச்சீங்களா தெரியலா...... என்ன சொல்ல வரேன் என்றால், உங்கள மாதிரி மொக்க பதிவர்களுக்குகூட, நான் வக்காலத்து வாங்கியிருக்கேன், அது புரியாம, அண்ணன் திரு பரிசல் கோபமா இருக்காரு........

நன்றி

NO said...

அன்பான நண்பர் திரு அப்துல்லா,

How are you sir? நீங்கள் சொன்னதை நோட் செய்தேன் சார், ஆனால் ஒரு விடயம்! திரு ஆதி அவர்கள், நான் பார்த்தவரையில் விமர்சனகளை விரும்புவதில்லை, Only ஆஹ்ஹா, சூப்பர், கலக்கல், நச் etc etc... போன்றவைகள்தான் allow செய்கிறார்.......

நண்பர் திரு Mr. கனாக்காலம் .... எப்படி வேனும்முன்னாலும் கூப்பிடுங்க, நாயே பேயே என்றாலும் கூட எனக்கு OK! அனால் ஒண்ணு, MBBS டாக்டருங்கதான் எங்க ஊரில் Dr. போட்டுப்பாங்க, டாக்டரேட் என்பது வேறு! அது ஒரு பட்டம் அல்ல!!! நாங்க போட்டுக்கொள்வது இல்லை!!!

Unknown said...

நாளைக்கு Lunch Time'க்கு ஒரு நல்ல Topic கெடச்சிருச்சு கிருஷ்ணா........

Romeoboy said...

பரிசல் பதிவ 5 நிமிசத்துல படிச்சேன் .. ஆனா அதற்கு வந்து இருக்கும் பின்னுடம் படிக்க 15 நிமிஷம் ஆச்சு .. என்ன கொடுமை சார் ..

பரிசல்காரன் said...

பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் தனித்தனியா சொல்ல முடியல.. அதுனால ஒட்டு மொத்தமா... நன்றி!

@ நோ


நோ! என் பதிவில் வந்து என் நண்பர்களை கிண்டச் செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இரும்புத்திரை said...

நோ நீங்க வெறும் நோவா இல்ல டாட்டா நானோவா - ஏன் இப்படி மொக்கை போடுறீங்க

முடிந்தால் ஏன் பிளாக் பக்கம் வரவும்

NO said...

அன்பான நண்பர் திரு பரிசல்.

...இதுதான் கடைசி....I promise ...... (வேற ஒண்ணும் இல்லை சும்மா இருக்க விடமாட்டேன் என்கிறார்கள்.)

அடுத்த என்ட்ரி அன்பான நண்பர் திரு ரோமியோபாய் அவர்கள்,

அந்த காலத்தில், என் நண்பரின் சித்தப்பாவை, அவரு எங்க டீமுக்கு ஒரு ரெண்டு மூன்று கிரிகெட்டு மட்டைகள் அவர் செலவில் வாங்கிக்கொடுத்த்தால், மிக மரியாதையாக, ரபிஃ பாய் அண்ணா என்று அழைத்து, அவரை ஒரு VIP போல நடுத்துவோம்! அவருக்கும் தெரியும், சின்ன பசங்க கொஞ்சம் நேரம் கொடுக்குற மரியாதையை வாங்கிட்டு உடனே கிளம்பனும், அதை சாக்கா வைத்து நானும் பேட் செய்கிறேன் கொஞ்சம் நேரம் பந்தப்போடுங்கள் என்றால், பசங்க ஆடுற கட்ட பாலுல (Cork ball) எங்கயாவது அடிபட்டு அதை பசங்க கிண்டல் பண்ண, எதுக்கு வம்பு என்று! நாங்களும் இதைப்புரிந்துகொண்டு, இருந்தாலும் சும்மா ஒரு மரியாதைக்காக, அண்ணா வந்து கொஞ்சம் நேரம் பேட் செய்யுங்களேன் என்போம், அவரும் சொல்லிவைத்தார்போல, வேணாம் தம்பிகளா, எனக்கு அஞ்சு நிமிடத்திற்கு மேல இந்த விளையாட்டை தாங்க முடியாது, ரொம்ப கொடுமை, எப்படி தான் சும்மா இதெல்லாம் ஆடுகிரீர்களோ, ஏதோ நம்ம ஏரியா பசங்க அதுக்காகதான் உங்களுக்கு வாங்கி கொடுத்தேன் மற்றபடி இது எல்லாம் ஒரு விளையாட்டா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார்!

அவர் போய் சிறிது நேரம் பிறகு, நண்பன் அன்சாரி எங்களை அழைத்து அப்படியே என் வீட்டுப்பக்கம் வந்து கொஞ்சம் எட்டிப்பார்க்கலாம் வாங்க என்று அழைத்து செல்வான்! போனால், அங்கே ரபிஃ பாய், ஒரு நாலைந்து ஐந்து அல்லது ஆறு வயதுள்ள வண்டுகளுடன், கையில் ஒரு சின்ன மட்டையை வைத்துக்கொண்டு, பிளாஸ்டிக் பால் ஒன்றை ஒரு வாண்டின் கையில் கொடுத்து காஜடித்துக்கொண்டிருப்பார்! இதைப்பார்பதற்கு, அன்சாரியின் தத்தா, அவரின் அம்மா, அக்கம் பக்கம் இருக்கிற கண் தெரியா சில தாத்தாக்கள், மற்றும் அம்மா குடுத்த உணவை சாப்பிடாமல் அடம்பிடிக்கும் கால் டிக்கெட்டுகள் என்று ஒரு கூட்டமே கூடி கூவிக்கொண்டிருக்கும்! ரபிஃ பாய் பெரும் முனைபோடு ஒரு வெறியோடும் ஆடிக்கொண்டிருப்பார்!

எங்கள் விளையாட்டை நாங்கள் முடித்து அவரிடம் அப்பாவியாக போய் நின்றவுடன், எப்படி தம்பி நீங்களெல்லாம் இவ்வளவு நேரம் இப்படி ஆடுரீன்களோ, கொடுமை அப்பா என்பார்...........

NO said...

ஏன் இந்த மொக்கையை சொல்லுகிறேன் என்றால், Romeoboy என்றவுடன் எனக்கு நினைவில் வந்தது ரபிஃ பாய்தான்!!!!!!!!!!!!

இவர் போடுவது ஒரு மொக்கை, இவரு ஒரு பதினைந்து நிமிடங்கள் வேறு ஒரு மொக்கையை படிக்கமுடியவில்லையாம்!!!!! என்ன கொடுமை சாராம்!!!!!!!

இவரின் ப்ளாகின் பெயர் "என்னமோ எழுதுறேன்" ................ அப்பா உண்மைய ஒப்புக்கொள்கிறார்!!!

புத்தகங்கள் என்றால் அண்ணனுக்கு ரொம்ப பிடிக்குமாம்!!!!! அனால் எதற்கு புத்தகங்கள் என்பதை சரியாக விளக்கவில்லை. அவரின் ப்ளாகில் உள்ள மொக்கைகளைப்பார்த்தால், புத்தகங்களை தலையனைகளாய் வைத்து தூங்க பிடிக்கும் என்று சொல்லுகிறாரோ என்று தோன்றுகிறது!

இவரின் Interests என்னவென்றால், வேறென்ன , படிப்பதாம்!!!!!

ஒரு வேளை, புத்தகத்தின் மேல் படுத்துக்கொண்டு, தலையணையை படிப்பாரோ??? தெரியவில்லை!!!

நண்பரின் ப்ளாகில் பார்த்தால், as usual, இவரும் தன்னால் முடிந்த பிடித்தது X பிடிக்காதது மொக்கையை போட்டு தாக்கியிருக்கிறார்! போதாக்குறைக்கு மற்ற பலரை வாங்க நீங்களும் பத்துக்கு பத்து அடிங்க என்று அழைக்கிறார்!
அதுல பார்த்தா, பிடித்த பதிவர் எனுமிடத்தில், வேறு யார் ...... ஜிங் ஜிங் ஜாங்......ஜிங் ஜாங்...ஜாங்...ஜாங்.........அண்ணன் .பரிசல்தான்!!!!!!!!!!!!!

சரி அதவிடுங்க, அடுத்த பதிவுல அண்ணன் திரும்பி பார்க்கிறாராம்! ஏதோ எழுதறாரு........ எம்மா.....எப்படி தெரியுமா இருக்கு.. ஒரு காக்கை வந்து ஒரு கல்லை எடுத்து தண்ணீருக்குள் போட்டது, தண்ணீர் கால் மில்லி மீட்டெர் உயர்ந்தது.. அதே காக்கை இன்னொரு கல்லை எடுத்து வந்தது... தண்ணீருக்குள் போட்டது இன்னுமொரு கால் மில்லி மீட்டெர் உயர்ந்தது.........on and on and on and so on and so forth.......

... இதுக்கு பேருதான் மொக்கை சார்........!!!!!!!!!

உங்களுக்கு இந்த மாதிரி மகா மொக்கை காவியத்தை எழுதும் திறமை இருக்கும்பொழுது, ஒரு சின்ன மொக்கையை படித்து கொடுமை சார் என்றால் என்ன ஞாயம்!!!!!!

சார் தொடர் கதை எல்லாம் கூட எழுதுவாராம்.........

இந்த குருவி கதை கேட்டுருக்கீங்களா சார், அதான் முதல் குருவி வந்து ஒரு மூட்டையிலிருந்து ஒரு அறிசிப்பருக்கையை எடுத்துப்போனதாம், இரண்டாவது குருவி, இரண்டாவது அறிசிப்பருக்கையை எடுத்துப்போனதாம்... பின்னர் முதல் குருவி மீண்டும் வந்து மூன்றாவது அரசிப்பருக்கையை .................so on and on ........குருவி ஒரு தொடர் கதை!!!! Or தொடர் வதை!!!!!!!

நல்லா எழுதுங்க சார்... நாங்களும் நீங்க எழுதினத ஐந்து நிமிடத்தில் படித்து ஒரு ஐந்து மாதம் ஆகாரம் இல்லாமலே இருக்குறோம்........

வாழ்க அண்ணன் திரு ரோமியோ........ வளர்க அவரின் என்னமோ எழுத்துகள்!!!!!!

நன்றி

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

பரிசல்காரன் said...

நோ....

அந்தக் காய் புளிக்கும் பாஸு... எட்டலீன்னா விட்டுடுங்களேன்...

NO said...

அன்பான நண்பர் திரு பரிசல்,

இப்படி சொல்லணும் நண்பரே..........

" மூக்கில கொஞ்சம் ரத்தம், ரெண்டு பல்லுதான் போச்சு, மத்தபடி ஒண்ணும் இல்ல... இதெல்லாம் ஒரு அடியா...அடிக்க முடியலேன்னா விட்டுருங்க பாஸ் ........ உங்களுக்கு ஏன் இதெல்லாம்....... வேற இடத்துல வாங்கிக்குறேன்....... """

நன்றி .

கடைக்குட்டி said...

இந்த மாதிரி பதிவுகள் எழுத பத்து பாய்ண்ட்ஸை குறிப்பெழுதி கிறுக்கி வெச்சிருப்போம். கரெக்டா இத எழுதலாம்னு தோணித் தேடும்போது அது கிடைக்காம, ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு ஒம்பது பாய்ண்ட்ஸை எழுதி ஒப்பேத்தீடுவோம். அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்.....
//

இது க்ளாஸ் :-)

வெண்பூ said...

//
" மூக்கில கொஞ்சம் ரத்தம், ரெண்டு பல்லுதான் போச்சு, மத்தபடி ஒண்ணும் இல்ல... இதெல்லாம் ஒரு அடியா...அடிக்க முடியலேன்னா விட்டுருங்க பாஸ் ........ உங்களுக்கு ஏன் இதெல்லாம்....... வேற இடத்துல வாங்கிக்குறேன்....... """
//

ஆனாலும் உண்மையை இப்படி ஒத்துக்குறீங்க.. நீங்க ரொம்ப நல்லவருங்க..

நோ, உங்க பின்னூட்டங்கள் இந்த பதிவுல நல்லா இருந்தது, கடைசியில நீங்களும், "நாந்தான் பெரியவன், மத்தவனெல்லாம் மட்டம்"னு ஆரம்பிச்சிட்டீங்க.. உங்க அட்ரஸ் குடுத்தீங்கன்னா, ஊசியும் நூலும் என் செலவுல அனுப்புறேன், பின்ன எவ்ளோ நேரம்தான் கிழிஞ்ச சட்டயவே போட்டுகிட்டு இருப்பீங்க, தைச்சு போட்டுகிட்டு ஃப்ரெஷ்ஷா கிழிச்சிக்குங்க :)))

ஆரூரன் விசுவநாதன் said...

அசத்தல் மறதிகள்.....
இல்லை இல்லை....
அசத்தல் இயல்புகள்.

அத்திரி said...

கடேசி மேட்டர் கலக்கல்

NO said...

இந்த நண்பர் திரு வெண்பூவை எங்கோ பார்த்திருக்கிறேன், எங்கே என்றுதான் நினைவில்லை! இருந்தாலும், விகடன் குமுதம் மற்றும் குங்குமம்தான் "Favorite Books" என்று சொல்பவரிடம் இதுக்குமேல ஒண்ணும் சொல்லுவதற்கு இல்லை!
சார், வாரா வாரம் ஆறு வித்யாசங்களை பார்த்து உங்க அறிவை வளர்த்துக்கோங்க!

வெண்பூ said...

நீங்க இவ்லோ அறிவை ஆறு வித்தியாசத்துல இருந்துதான் வலத்துகிட்டீங்களா நோ சார்.... இங்கிலிபீஷுல எல்லாம் பேசுறீங்களே.. அரிவாலியா இருக்கீங்களே அதனால கேட்டேன்..

பி.கு: நான் சொள் அலகன் அல்ல.. அவரு வேற..

வெண்பூ said...

உங்க அட்ரஸ் குடுக்க மாட்டேன்றீங்களே?? ஊசி நூல் வேணாமா.. அப்புறம் கிழிஞ்ச சட்டை போட்டுகிட்டு ப்ளாட்ஃபாரத்துல தூங்குனா கஷ்டமா இல்லையா?? :))))

மங்களூர் சிவா said...

/
அலுவலக வேலையா யார்கூடயாவது எம்.டி.முன்னாடி உட்கார்ந்து ஃபோன்ல பேசிகிட்டிருப்போம். அப்போ கால்வெய்ட்டிங்ல இன்னொரு ஃப்ரெண்டு வருவார். எம்.டி.முன்னாடி எடுக்கவும் முடியாதா.. சரி அப்புறமா கூப்பிட்டுக்கலாம்னு விட்டுடுவோம். அது அவ்ளோதான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கூப்பிட்டு திட்டும்போதுதான் ஞாபகமே வரும். இல்லையேன்னு சமாளிக்கவும் முடியாது...
/

தீவாளி அன்னைக்கு கூட மீட்டிங் போல போன் செஞ்சா எடுக்கவே இல்லை பரிசக்காரரே??

நல்லா இருய்யா!

NO said...

இந்த திரு வெண்பூவைப்பற்றி முன்னமே தெரியாம போச்சே ச்சே!!!!

என்ன சார் :)))))) இப்படி போட்டால் ஜோக்கு என்று அர்த்தமா??? அம்புலிமாமா படிக்கும் சின்ன பசங்க எல்லாம் கொஞ்சம் சிரியுங்க, அண்ணன் காமடி கிண்டல் பண்ணுறாராம்!!! அப்புறம் திடீருன்னு "சொள் அலகன் அல்ல" அப்படின்னு ஒரு கமெண்ட்டு????? என்ன வீட்டுல யாராவது அடிச்சாங்களா, கோவிச்சிக்கிட்டு வீட்டவுட்டு ஓடியாந்து பேந்த பேந்த முழ்ச்சி, சம்மந்தா சம்மந்தமில்லாமல் இப்படி கத்துரீங்களா!!!! சொல்லுங்க, கைக்காச போட்டு பஸ் ஏத்திவுடுறேன்!!!

மகாஜனங்களே , இங்கே ஒரு விந்தையான பெயர் கொண்ட அனாமத்து பையன், திக்கு தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்! திடீர் திடீரென்று ஊசி, கிழிஞ்ச சட்டை என்கிறார்! ஒரு வேளை தையல் கடையில் காஜா போடும் பையனோ தெரியாது. மேலும் தமாஷாக பேசுவதாக நினைத்து, ஏதோ உளறி, சிலரிடம் அடிவாங்கும் நிலைமையில் உள்ளார்!! யாராவது தெரிந்தால் கூட்டிக்கொண்டு போகவும், தகுந்த சன்மானம் கொடுக்கப்படும்!

ஒரு additional செய்தி இவரைப்பற்றி. வண்டலூர் அருகே உள்ள இவரின் சில நண்பர்களுக்கும் அவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களை சொன்னால்தான் கடிக்காம இருப்பேன் என்கிறார். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் நாலு, அதில் ஒரு நாயும் அடங்கும்! அதனிடத்திலும் ஆறு வித்தியாசங்கள் கேட்டு அது லொள் லொள் என்று ஐந்து முறை மட்டுமே கத்தியதால் அதை துரத்திக்கொண்டு ஓடினார்! குமுதம் இதழ் ஒன்றையும், குச்சி மிட்டாய் ரெண்டையும் வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்திரிக்கிறோம்! ஆறு வித்யாசங்களை அவர் கண்டு பிடிப்பதற்கு முன்னரோ அல்லது குச்சி மிட்டாய் தீருவதற்கு முன்னரோ வந்து கூட்டிக்கொண்டு போகவும்!

கடைசியாக இவரை கூட்டிக்கொண்டு போக எண்ணம் உள்ளோருக்கு ஒரு சின்ன எச்சரிக்கை. வந்தால் ஊசி நூலோடதான் வருவாராம்! யாருக்காவது வீட்டு பரணில் இருக்கும் பழைய கிழிந்த கோணிகளை தைக்க வேண்டும் என்றால் தெய்த்துக்கொடுப்பார்! என்ன ரெண்டு குச்சி மிட்டாயும் ஒரு ஆறு வித்தியாசங்களும்தான் செலவு!!!!!

Dedicated to dear அண்ணன் திரு வெண்பூ

வெண்பூ என்ற ஒருவர் திடீரென்று குதித்து வந்தார்
தான் இருக்க வேண்டிய இடம் வண்டலூர் Zoo என்று அடித்து சொன்னார்!

காமடி செய்வதாக மனிதல் நினைத்துக்கொள்ளும் இந்த வெண்பூ
தொட்டாலே அறிப்பை வரவைக்கும் கெட்டுப்போன சுண்ணாம்பூ!

ஊசி நூல்தான் அண்ணனுக்கு பிடிக்குமாம்
எப்படி மறைத்தாலும் வால் மட்டும் வெளிய வந்து குதிக்குமாம்!

தெரியாதவர் இடத்திலெல்லாம் தயக்கமின்றி ஆறு வித்தியாசம் கேட்ப்பார்
சொல்லாவிட்டால் ஊசி நூலால் உங்கள் உடலை பதம் பார்ப்பார்!

தம்பியும் அடிக்கடி கேட்ப்பார் உங்களின் முகவரி
கொடுக்காவிட்டால் அவரிடமிரிந்து வரும் பல வரி!

வந்த வரிகளுக்கு அவர் கொடுக்கும் பெயர் அறிவார்ந்த காமெடி
அதைக்கேட்ட பலருக்கு தொணுவதோ, Oh what a Tragedy!

நடந்ததைப்பார்த்த நன்மனம் கொண்ட பலரிடம்
நான் கேட்ப்பதெல்லாம் இந்த புதுமாதிரி லூசுக்கு அடைக்கலமாக ஓரிடம்

தயங்காமல் அழைத்து செல்லுங்கள் இவரை சீக்கிரம்
இவர் கேட்ப்பதெல்லாம் ஏதோ ஒரு ஆறு வித்தியாசங்களை மாத்திரம்!

நன்றி

பரிசல்காரன் said...

@ நோ

உங்கள் பின்னூட்டத்தையெல்லாம் பார்க்கும்போது உங்கள் பெயருக்கு முன்னால் ‘மன’ பின்னால் ‘யாளி’ என்ற வார்த்தைகள் விடுபட்டிருப்பதாய்த் தெரிகிறது. பாரபட்சமில்லாமல் எல்லாரையும் வம்புக்கிழுப்பது அசிங்கமாக இருக்கிறதேயன்றி ரசிக்குமாறு இல்லை.

சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள்.

வெண்பூ said...

ஹி..ஹி.. நோ எழுதுறத பாக்குறப்ப, சினிமால அடிக்கடி பாக்குற ஒரு காமெடி சீன்தான் நினைவுக்கு வருது.. ஒரு பைத்தியத்துகிட்ட போயி பைத்தியம்னு தெரியாம ரொம்ப நேரம் ஹீரோ / காமெடியன் பேசிட்டு அப்புறம் அவன் பைத்தியம்னு தெரிஞ்சவுடனே "லூசாடா நீயி?"ன்னு அழுதுட்டே கேப்பாங்க, அதுக்கு பதில் வரும் பாருங்க... "யாரு லூசு? நீ லூசு, உன் ஃப்ரெண்டு லூசு, உன் பரம்பரையே லூசு" அப்படின்னு..

மேலே தலைவரு போட்ட பின்னூட்டத்தப் படிச்சவுடனே இதுதான் ஞாபகம் வருது. :))))

NO said...

மொக்கையை மொக்கை என்றால் @ பரிசலுக்கு வந்தது பார் ஆத்திரம்
கூடவே வந்தது வெண்பூ என்ற இந்த பரிதாப பாத்திரம்

ஆளை அடிப்பதைவிட்டு ஆட்றா ராமா என ஆடியது இந்த பக்க வாத்தியம்
காளையாய் வந்து காமெடியாய் ஆகிப்போவது இவரால் மட்டுமே சாத்தியம்

வண்டலூரில் வாடகைக்கு இருக்கும் இந்த வெண்பூ அண்ணன்
காமடி என்று கண்டதைக்கொட்டுவதில் மன்னாதி மன்னன்

பார்க்கத்தான் நேரமில்லை வெண்பூ அண்ணனின் தளத்தை
ஒரு நாலு வரி படித்தாலே எடை போடலாம் அண்ணனின் தரத்தை

குரங்குக்கு குஷி வந்தால் குப்புறப்படுத்து கக்கா போகுமாம்
வெண்பூவுக்கு குஷி வந்தால் கண்ணாடியை பார்த்தால்கூட காமடி பண்ணுமாம்

பரிசல் அண்ணனுக்கு அரிதாய் கிடைத்த இந்த அசட்டு அண்ணாசாமி
அடிப்பட இடத்தை பார்த்து கேட்டது இதெல்லாம் ஒரு புண்ணாசாமி

கண்டதை எழுதிவிட்டு காவியம் என்று சொல்லும் இந்த பரிசல் தம்பி
சகிக்கவில்லை என சுட்டிக்காட்டினால் திட்டித்தள்ளும் துரு பிடித்த தகரக்கம்பி

இந்த தம்பிக்கு கிடைத்தது வெண்பூ என்ற கைத்தடி
தயங்காமல் வாங்குவார் தன் தலைவனின் சார்பில் நல்ல செருப்படி

மற்றவரை மன நோயாளி என்று திட்டும் இந்த எழுத்து ஆவலர்
முட்டாள் தனமான பதிவுகளை முக்கி முக்கி போடும் ஒரு மொக்கை பாவலர்

கூடவே கொக்கரிக்கும் வெண்பூ என்ற இந்த பரமசிவனின் பாம்பு
தான் மூளையையே தொலைத்து மூன்று வருடங்களாக தேடும் ஒரு துப்பறியும் சாம்பு

ஆப்புகளை ஆனந்தமாக வாங்கத்துடிக்கும் இந்த அபூர்வ அறிவிலி
தனுக்குதான் ஆப்பு என்றே தெரியாமல் குஷியாக எழுப்புவார் நல்ல கரவொலி

காமெடி வீச்சுக்கும் கேணை பேச்சுக்கும் வித்தியாசம் தெரியாத my dear அரை லூசு
கண்டதை மொக்கை போடும் பரிசல் அண்ணனே உனக்கேத்த பாஸு

வாழ்க உங்கள் பாசம்
வளர்க உங்கள் அசட்டு அட்டகாசம்!

நன்றி

வெண்பூ said...

செல்லம்.. பரவாயில்ல விடும்மா.. இது ரொம்ப சின்ன பிரச்சினைதான், அலோபதி வேணாம்னா ஏர்வாடிக்கோ குணசீலத்துக்கோ போனா குணப்படுத்திலாம்... (மும்தாஜ் வாய்ஸில் படிக்கவும்) அய்யோ பாவம்... :))))

தாரணி பிரியா said...

இந்த கான்செப்டை சுட்டு நானும் ஒரு பதிவு போட்டுகிட்டேன். மிக்க நன்றி பரிசல்

NO said...

வெண்பூ,

"Beat the man by the strength of your sarcasm not by exhibiting your crackpotism!"

(Just tailored something for you from the nonsense blog of yours)

NO said...

வெண்பூ

Iam quite impressed by the astonishingly low level of intellect that you exhibit! So Some Nursery rhymes dedicated to you!

Hickory Dickory Dock
-------------------------

Hickory dickory dock
When அண்ணன் வெண்பூ began to Bark
Some one struck on his head one
Then வெண்பூ went down
Knowing that he is a real clown
Hickory dickory dock!

Little Jack Horner
-----------------------

Little brained வெண்பூ
Sat like a சொம்பு
Reading his foolish blog
He put his thumb and pulled out his eyes
And said "what an Idiot Iam"

Some more to follow. Please stay tuned!!!!

வெண்பூ said...

//
low level of intellect
//

Low level intellect??? those reading the comments will know who exhibits one... :))))

வெண்பூ said...

//
Some more to follow. Please stay tuned!!!!
//

waiting sir... :)))

வெண்பூ said...

BTW... thanks for reading my post and giving your honest comment..

I am seriously thanking you on this comment and hence no smileys..

NO said...

Johny Johny
----------------

வெண்பூ வெண்பூ ஒரு டப்பா
Writing Blogs, சத்தியமா இல்லப்பா
Telling Lies, அமாம்பா
Please close down your blog
ha ha ha

Ding Dong bell
-------------------

Ding Dong bell
வெண்பூ's blogs are a lousy hell

Who put those in
Such a brainless din

Who can put his idiocy out
Only God without a doubt

What a shitty blog was that
Writing always like a crazy nut

Who ever did such nonsense
வெண்பூ alone sir, who is always out of his sense

London Bridge
---------------------

வெண்பூ is a blogging clown
Blogging clown blogging clown
My dear கடி
Built the blog with a mental clog
mental clog Mental clog


தொடரும்.....

கார்க்கிபவா said...

no,

உங்கள பார்த்தே ஆகனும் பாஸ்.. எங்க வர சொன்னாலும் வரேன்..

(அப்பாடா இன்னைக்கு ஒரு 50ஹிட்ஸ் எக்ஸ்ட்ரா கிடைக்கும்)

Ramya Devanathan said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

கமெண்ட் மாடரேஷன்???

நோ??????

NO said...

ஏதோ கிரிக்கி தள்ளுறேன் Mr அறிவிலி, உங்கள மாதிரிதான். அதை விட்டு கையை சும்மா வெச்சிருந்தா யாராவது கார் கொடுப்பாங்களா இல்லாட்டி காத்தாடி கொடுப்பாங்களா என்ன?

Ribosme நீங்க நினைக்குரா மாதிரி புரிந்து கொள்ள ஒரு கடினமான விடயம் இல்லை!
உயிரினங்கள், அது எதுவாக இருந்தாலும், அதன் ஆதார சாப்ட்வேர் DNA எண்ணப்படும் coded three dimensional instructions. Bequethed in most of the cases by both the Parents! இந்த DNA வின் சில sequence கள் தேவையான ப்ரோடீன்களை தயாரிக்க வல்ல information ஐ உள்ளடக்கி உள்ளது! ப்ரோடீன்கள் தான் உயிரினத்தை உயிரனமாக, ஒரு physical entity ஆக நிலைநிறுத்துகின்றன! In a way we all are nothing but the result of various proteins in action. அனால், DNA ஆல் மட்டும் தனியாக இந்த ப்ரோடீன்களை செய்யமுடியாது! எப்படி ஒரு டேப் ஆனது, recorder இல்லாமல் தனியாக இயங்கமுடியாதோ, DNA தனியாக இருந்து ஒன்றும் செய்யமுடியாது! அதில் என்ன code செய்திருக்கிறது என்பதை படிக்க வேண்டும், அதன் மூலம் ப்ரோடீன்களை செய்யவேண்டும்!

இந்த வேலையை செய்வது ribosome. (DNA --> mRna (both are called Nucleic acids) ---> Read by Ribosome --> creates amino acids --> builds Proteins ---> Ends up as Mr. அறிவிலி who inspite of having such a grand machinery inside him ceases to think many times, as seen in his blog!

DNA வின் code mRNA என்ற மற்றொரு extension ஆக மாறி, இந்த extension ஐ படிக்க வல்லதாக உபயோகப்படுவதுதான் ribosome!
ரிபோசம், படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், ப்ரோடீன்களையும் முப்பரிமாணங்களில் manufacture செய்கிறது!

இந்த ரிபோசொம்மின் இயக்கத்தை பல நிலைகளில் ஆராய்ந்து பல புதிய விடயங்களை கண்டுபிடத்தவர்கள் பலர். Latest person to excell in this field is venkatraman Ramakrishnan. His reasearch can give great insights about how immune systems work.

If only he does that with your DNA, he might end up shocked!!!!!!

நன்றி

அறிவிலி said...

ஹ்ம்ம்ம்ம்ம்.... என் பதிவுல வர வேண்டிய பின்னூட்டமெல்லாம் இங்க வருது...

கார்க்கிபவா said...

சகா 500 ஆயிடுச்சு.. வாழ்த்துகள்..:)))

Hisham Mohamed - هشام said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னு நினைச்சு மற்றகாம போட்டுட்டம்ல......

கௌதமன் said...

அடியாத்தீ - ஆளுக்காளு என்னமா ஜல்லியடிக்கிறாங்கப்பு - இங்கன!

கண்ணகி said...

அப்பா, பின்னூட்டமே ஒரு புத்த்கம் போடலாம்போல. நானும் பின்னூட்டம் போட மறந்துட்டேன். யாருங்க உங்க எம்.டி, சொல்லிவைககலாம் உங்க மறதியை. வாழ்த்துக்கள்.

TXBlogger said...

ஏதோ பின்னூட்டம் போடணும்னு நெனச்சேனே பாஸ்.. மறந்திட்டது!

பட்டாம்பூச்சி said...

Nice :)