Thursday, April 30, 2009

ஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப்....

இது எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு கடிதம்.

பயப்படாதீங்க.. வழக்கமான கடிதம் அல்ல.

உண்மையா என்று தெரியவில்லை... ஜேப்பியார் என்றொரு ப்ரொஃபசர் இருந்தாராம். அவர் ஆங்கிலத்தில் கொல்வதை... ச்சே.. சொல்வதையெல்லாம் தொகுத்து அவரது மாணவர்கள் புத்தகமே வெளியிட்டிருக்கிறார்களாம். அதிலிருந்து சில பகுதிகள்..


****************************

# க்ரவுண்டில்....

“All of you stand in a straight circle”

“There is no wind in the balloon.”

“The girl with the mirror please comes her front” (கண்ணாடி போட்ட பொண்ண முன்னாடி வரச்சொல்றாராம்!)

***************************

# ஒரு பையன்கிட்ட ரொம்பக் கோவமா....:

“I talk , he talk , why you middle middle talk?”

**************************

# மாணவர்களை தண்டிக்கும்போது..:

“You , rotate the ground four times...” (க்ரவுண்ட நாலு தடவை சுத்தச் சொல்றாரு!)

“You , go and understand the tree...”

“You three of you stand together separately.”

“Why are you late - say YES or NO ......”

***************************

# ட்ரஸ் கோடுல தலைவர் ரொம்ப ஸ்டிரிக்டாம். அது சம்பந்தமா பேசும்போது...


“Every body should wear dress to college
Boys no proplum
Girls are pig proplum . (pig=big)
Girls should wear only slawar no nitee.
Girls should not wear T shirt , U shirt , V shirt.. but if you want to wear .... remove it when inside the campus and put it out side the campus”

***************************

க்ளாஸ் (CLASS!)ல அவரோட சில Class பேச்சுகள்...

“Open the doors of the window. Let the atmosphere come in.”

“Open the doors of the window. Let the Air Force come in.”

“Cut an apple into two halves - I will take the bigger half.”

“Shhh...Quiet , boys...the principal JUST PASSED AWAY in the corridor”

“You , meet me behind the class. (Meaning AFTER the class..)”

"Both of u three get out of the class."

“Close the doors of the windows please. I have winter in my nose today.”

“Take Copper Wire of any metal especially of Silver..... Take 5 cm wire of any length....”

****************************

சார் ஒரு விழாவுக்கு லேட்டா வர்றாரு.... நேரா மேடைக்குப் போய் மைக்ல பேசறாரு...

“Sorry.. I am late , because on the way my car hit 2 muttons (Meaning goats).


**********************

ஒரு காலேஜ்ல புதுசா சேர்ந்த மாணவர்கள்கிட்ட...

"This college strict, u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"


"No ragging this college. Anybody rag we arrest the police "


*******************

# அவரது ஆகச் சிறந்த பேச்சு....

சார் ஒரு சினிமாக்கு போயிருக்காரு.. மனைவி கூட. அங்க இவரோட ஸ்டூடண்டைப் பார்த்துட்டாரு. அவன் இவரைப் பாக்கல. அடுத்த நாள் க்ளாஸ்ல...

"Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theater"



.


முடியல!




.

Wednesday, April 29, 2009

(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009

இந்த அவியல் நான் எழுதியதுதான் எனவும் நான் என்பது பரிசல்காரன் ஆகிய என்னைத்தான் குறிக்கும் என்பதையும், என்னை என நான் குறிப்பிடுவது கிருஷ்ணகுமார் ஆகிய...

சரி விடுங்க... கற்பூரம் அடிச்சு சத்தியமா பண்ண முடியும்? நம்புங்கப்பா...

*************************************

ரெண்டு வாரம் முன்னாடி படிச்ச ஒரு நியூஸ். த்ரிஷா நடிச்ச டப்பிங் படம் ஒண்ணு ‘பட்டுக்கோட்டை அழகிரி’ என்கிற பெயரில் வெளிவருவதாக வந்த அறிவிப்பை அடுத்து, பலர் அந்தப் பெயர் நிஜமான பட்டுக்கோட்டை அழகிரியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகக் கருதியதால் பெயரை மாற்றிவிட்டார்களாம். புதிய பெயரைக் கேள்விப்பட்டதும் என் ரத்தம் கொதித்தது.. இந்தப் பெயர் நிஜமாகவே நம்ம நண்பர் அப்துல்லாவைக் குறிக்கிறதே என்று. உடனே இதுகுறித்து பதிவுலக நண்பர்களிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

படத்தின் புதிய பெயர்: புதுக்கோட்டை அழகன்.

*************************************************

ஜெயா டி.வி-யில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் வி.பி.எல். (வெட்டிப் பேச்சு லீக்) வயிற்று வலிக்கு காரணியாய் இருக்கிறது. பாஸ்கி, நீலுவை விட நீலுவுக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் (பேரென்னப்பா?) நபர் ரகளை தருகிறார். ஆங்கிலம் என்று அவர் பேசுவதும், நீலு டென்ஷனாவதும் நிஜம் போலவே இருக்கிறது. ஆனால் நீலுவின் முகம் காட்டும் கடுமை நடிப்பல்ல என்று சொல்கிறது.

இரண்டு நாள் முன் தனிமனித ஒழுக்கம் குறித்த விவாதம் நடந்தது அதில். நீலு ஒரு சம்பவம் சொன்னார். அவர் பல வருடங்களுக்கு முன் ப்ரான்ஸ் சென்றிருந்த போது அவர் நண்பர் காரோட்டிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவு. சாலையில் யாருமே இல்லை. இருந்தும் ரெட் சிக்னலுக்கு நின்று சென்றாராம் நண்பர்.

இதைக் கேட்ட நாணா (சரியா இவர் பெயர்? பாஸ்கிக்கு வலதுபுறம் இருப்பவர்) ‘இது பரவால்ல நான் ரஷ்யா போயிருந்தேன். நானும் ஃப்ரெண்டும் நடந்து போய்ட்டு இருந்தோம். ரோட்ல யாருமே இல்ல. ஆனாலும் ரெட் சிக்னல் பார்த்து ஃப்ரெண்ட் நின்னு போனான்’ என்றார்.

உடனே நம்ம இங்க்லீஷ்காரர் சொன்னார்.

“இது பரவால்ல. நான் செக்கோஸ்லோவாக்கியா போய்ட்டிருந்தேன். ஃப்ளைட்ல. கீழ ரெட் சிக்னல் விழுந்தது. ரோட்ல தானே ரெட் சிக்னல்னு அலட்சியப்படுத்தாம பைலட் நடு வானத்துல அந்தரத்துல ஃப்ளைட்டை நிறுத்தினாரு”

அரை மணிநேரத்துக்கு இடைவிடாமல் சிரித்தேன்!

**********************************************

தமிழ் விளம்பரங்களில் பிரபலங்களின் டப்பிங் குரல் தருவது யார் யார் என்று ஏன் எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைளும் எழுதுவதில்லை? சச்சின், அமிதாப், ஷாருக் எல்லாரும் தமிழில் பேசினால் எப்படிப் பேசுவார்களோ அதே மாடுலேஷன், குரலில் பேசுவது பாராட்டுக்குரியதல்லவா?

பாவம் இந்தக் கலைஞர்கள்.. 100% பெர்ஃபக்‌ஷன் குடுத்தும் மீடியாக்களில் அடிபடாமல் ஒரு பாராட்டு கூட இல்லாமல் உழைப்பது வேதனைதான்.

எல்லார்க்கும் என் சார்பில் பூச்செண்டுகள்!

***********************************

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய நண்பன். இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது. சமீபமாக அவனுடன் வெளியில் செல்லும் போது பர்சை ஒன்றுக்கு பலமுறை திறந்து பார்த்துக் கொள்வதைக் கவனித்தேன்.

‘தம்பி... என்னத அப்படி அடிக்கடி பார்த்துக்கற?” நேரடியாகவே கேட்டேன்..

பர்சைத் திறந்து அதை எடுத்தான். 10000, மற்றும் 1000 ருபையா (இந்தோனேஷியன் கரன்ஸி) நோட்டுகள்.

“கல்யாணத்து வந்த எங்க சொந்தக்காரர் குடுத்தார் சார். இந்தியன் ருபீஸா மாத்தற வரைக்கும் பத்திரமா வெச்சுக்கணும்ல சார். எவ்வளவு சார் வரும் ரூபாய்ல?” என்று கேட்டார்.

“பார்த்து சொல்றேன்” என்று அலுவலகம் வந்து xe.com பார்த்தேன்.

11000 இந்தோனேஷியா ருபையா = 50.78 இந்தியன் ரூபாய்கள் என்று வந்தது.

வெறும் அம்பது ரூபாய் 78 காசு!

சொன்னேன்.

“அடுத்த லீவுக்கு அந்தாளு வரட்டும் சார்” என்றான்.

“அப்படியெல்லாம் சொல்லாதப்பா” என்றதுக்கு சொன்னான்.


“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.

பாவமாய் இருந்தது!

*************************
இன்றைக்கு தனது புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தும் அண்ணாச்சி வடகரை வேலனது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் தழைத்தோங்க வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்!

*******************

இனி...

கவிதை – ம்ம்ம்ம்.. சரி வேணாம் சில ஜோக்ஸ்...

நாய் வளர்த்துட்டிருந்த ஒருத்தர் அது குட்டியே போடலன்னு நண்பர்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினாராம். நண்பர் சொன்னாராம்..

“நாயைத் தூக்கி காலி பாத்திரத்துல வெச்சுட்டு காலைல திறந்து பாரு”ன்னாராம் நண்பர்.

இவர் அதே மாதிரி பண்ணி, காலைல பார்த்தா பாத்திரத்துக்கு உள்ளே ஏகப்பட்ட நாய்கள்!

எப்படி?

‘எம்ட்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்!’ (EMPTY VESSELS MAKES MORE NOISE)

************

ஊர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.

ரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா?”

இவன் சொன்னான்:

“இல்ல சார். டெத்”

***************
மூணாவது.. ஹலோ.. ஹலோ.. சரி விடுங்க சொல்லல...

.

Tuesday, April 28, 2009

வாங்கிமுடிக்காத ஒன்று!

கடனின் அசல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது..
வட்டி அதிலிருந்து வந்து கறுப்புப் பணமாய் சேர்கிறது.


இந்த வாசகத்தைப் படித்துவிட்டு என்னை அழைக்கிறாய்.

‘எத்தனை கொடூரமானவன் நீ..?’

தொடர உன்னிடம் வார்த்தைகளில்லை. என்னிடமும் பதிலாகத் தர ஏதுமில்லை. நாம் பேசி எத்தனை மாதங்களிருக்கும்.. ஸாரி, வருடங்களிருக்கும்? இல்லை. யுகங்களாகிவிட்டன தோழா. நன் குடுத்த கடனை நீ திருப்பிக் கொடுக்காமல் ஆளனுப்பி வெறும் வட்டி வாங்கி வட்டி வாங்கியே நான் பணக்காரனானது உனக்கு வயிற்றெரிச்சலைத் தந்திருக்காலாம். அது வேறு உலகம், வேறு காலம். அங்கிருந்தது நீயல்ல.. அவன் இறந்து போய்விட்டான்.

கடன்காரன் என்பது வேறு. நண்பன் என்பது வேறு. நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் கடன்காரர்களிடெமெல்லாம் பாக்கெட்டை, பர்சை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது. இவன் இன்னும் எத்தனை வங்கிகளில் பணம் வைத்திருப்பான் என்று அது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. பணம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆனால் என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்தது கடன்.. வேறு வழியின்றி அசல் கிடக்காமல் வட்டியைத் தின்றே பெருத்துவிட்டது. அது ஆயிற்று எத்தனையோ வருடங்கள். உறவிருப்பதாய் எண்ணினால் அந்த வட்டியின் சதவிகிதத்தைக் கூட்டலாம்



காரணங்களா? அதன் தேவையென்ன இப்போது? விந்தையானது இந்த வாழ்க்கை.! பணத்தையெல்லாம் தனியார் வங்கிகளும், க்ரெடிட் கார்டு காரர்களுமே அடித்துச் செல்கின்றன. இந்த வாசகம் எப்படி உன்னில் என்னை நினைவூட்டியது? உன்னுடன் வரவு செலவு செய்துகொண்டிருந்த போது கடன் ஒரு தளிராகத்தான் இருந்தது.

வட்டிகள் பல வகைப்படலாம். கடனின் ஐ.பிநோட்டீஸாகவும் அது இருக்கிறது, அரஸ்ட் வாரண்டின் விலங்காகவும் அது இருக்கிறது. அப்போது ஐ.பி.நோட்டீஸை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். கடனை ஒழுங்காகக் கட்டி வட்டியை நீ குறைத்திருக்கவேண்டும். ஆனால் உனக்கு கடன் கொடுத்தபோது கொல்லப்பட்டபோது நான் வட்டி வாங்கியே உன்னைக்கொன்றேன். அசல் தனித்துவிடப்பட்டது. மனது பணப்பேய் பிடித்து தனித்தே திரண்டு வளர்ந்திருக்கும் இப்போது உனது அழைப்பு.. கண்ணியமா? அப்படியென்றால்.? நான் உன் பாங்க் பாலன்ஸ் பார்த்தே பேசுவேன்..

“ரெடிகேஷ், இல்லைன்னா செக்கா?"

*
Photo Courtesy: www.myspace.com

*************************

(மக்கள்ஸ்... இது ஒண்ணும் புரியலன்னா ஆதிமூலகிருஷ்ணனோட இந்தப் பதிவப் படிங்க..)

ஆதி.. ஸாரி!


.