Showing posts with label thamizmanam star. Show all posts
Showing posts with label thamizmanam star. Show all posts

Tuesday, September 23, 2008

இரு இளிச்சவாயன்கள் – தமிழ்மணம் கவனத்திற்கு!!

இரண்டொரு நாட்களுக்கு முன், சரியாக 20ம் தேதி... அதிஷாவிடமிருந்து ஒரு அழைப்பு.

“பரிசல்... ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்னாச்சு. நெஜமாவே ஒனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சா?”


“அதுவும்தான். ஆனா இப்போ சொல்ல வந்தது அதில்ல”

“பின்ன?”

“தமிழ்மணத்துல அக்டோபர் 20-லிருந்து நான்தான் ஸ்டார்! இப்போதான் மெயில் பார்த்தேன்”

“ம். சூப்பரு. கலக்குங்க” என்று அவர் பாணியிலேயே வாழ்த்தினேன்.

கொஞ்சநேரம் வேலை பார்த்துவிட்டு என் மெயில் பாக்ஸைத் திறந்தால்... எனக்கும் ஒரு மின்னஞ்சல்! ‘அக்டோபர் 6 லிருந்து நட்சத்திரப் பதிவராகச் சம்மதமா? புகைப்படத்தை அனுப்புங்கள்’ என்று கேட்டு. சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அதெப்படி, ஒரே நாள்ல எங்க ரெண்டு பேருக்கும் மெயில் அனுப்பியிருக்காங்க-ன்னு ஒரு சந்தேகமும் தமிழ்மணத்தோட ஐ.டி. ஜி.மெயில்லயா இருக்கும்?’ன்னு ஒரு சந்தேகமும் வந்தது. எதுக்கும் இருக்கட்டும்ன்னு ‘ப்ரொஃபைல் போட்டோ ஒண்ணுதானே..’ன்னு கேட்டு வழக்கமா எழுதறா மாதிரி அளவில்லா அன்போடு – கிருஷ்ணா’ன்னு ஒரு ரிப்ளையைப் போட்டு வெச்சேன்.





அதிஷாகிட்ட கூப்ட்டு சொன்னேன்.


“ம்... சூப்பரு. கலக்குங்க” ன்னவருகிட்ட

“ஏன்யா.. யாராவது கலாய்க்கறாங்களா?” ன்னு கேட்டேன்.


“இல்ல.. இதே மாதிரிதான் இதுக்கு முன்னாடி நட்சத்திரமா இருந்தவங்களுக்கும் மெயில் வந்திருக்காம்”ன்னாரு.

“என்ன எழுதப்போறோம்ன்னு முன்னோட்டம் கேட்டிருக்காங்க?”

“அதெல்லாம் தேவையில்லயாம். சும்மா அறிமுகம் மட்டும் குடுத்துட்டு, எழுத ஆரம்பிங்க”

சந்தோஷத்தோட வடகரைவேலன் கிட்ட கூப்ட்டு பகிர்ந்துகிட்டேன். வாழ்த்தினாரு. (என்ன சந்தோஷமான செய்தின்னாலும் அண்ணாச்சிக்குதான் முதல் ஃபோன் போகும்!) அடுத்ததா, அந்த மின்னஞ்சலோட ப்ரிண்ட் அவுட் ஒண்ணு எடுத்துவெச்சுகிட்டு இரவு வெயிலானை சந்தித்து காமிச்சேன். அவரும் வாழ்த்துக்கள்-ன்னாரு.

அடுத்தநாள் ஞாயிறு. ‘டாப்டென்ல இருக்கிங்களே’ன்னு கூப்ட்ட நர்சிம்கிட்ட கூட சொன்னேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். “என்ன எழுதணும்ன்னு ப்ரிப்பேர் பண்ணிக்க ரெண்டு, மூணு வாரம் டைம் இருக்குல்ல? ஜமாயுங்க”ன்னாரு.


அன்னைக்கு பூரா தமிழ்மணத்தைத் திறந்து வெச்சுகிட்டு இதுக்கு முன்னாடி நட்சத்திரப்பதிவர்கள் என்ன மாதிரி அறிமுகம் குடுத்திருக்காங்க, என்ன பதிவு போட்டிருக்காங்க-ன்னு ஆராய்ச்சி செஞ்சேன். நாம எப்படி எழுதலாம்... வித்தியாசமா ஏதாவது பண்ணலாமா... ஏழு நாளும் நட்சத்திரம் சம்பந்தமா ஏழுவிதமா பதிவு போடலாமா, ஒண்ணு, ரெண்டுன்னு ஏழுவரைக்கும் வர்ற மாதிரி ஏழு பதிவு ரெடி பண்ணி ஒவ்வொண்ணா போடலாமா, திருப்பூர் சாயக் கழிவுகள்பத்தி நிச்சயமா ஒரு நாள் எழுதணும்-இப்படி பலவித சிந்தனைகள்!


நேத்து, திங்கள் காலையில பதிவு போட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு மெயில் பாக்ஸைத் திறந்தா.... இந்த மெயில் வந்திருந்தது.









”ஸ்டார் பக்கத்துல ஒரு ஃபோட்டோ இல்லாம, பத்து ஃபோட்டோவா கேப்பாங்க.. அதென்ன அளவில்லா அன்போடு.. நாங்க மட்டும் என்ன, அன்பை அளந்துகிட்டா இருக்கோம்?”

-இப்படிக்கு விளையாடியது
உங்கள் ரசிகனில் ஒருவன்


இப்படி மெயில் வந்திருந்தது!


‘எவ்வளவோ தாங்கியிருக்கோம். இதத் தாங்கமாட்டோமா?ன்னு கம்னு இருந்துட்டேன். அதிஷாவுக்கு ‘பாருய்யா இந்தக் கொடுமையை’ன்னு மெயிலை ஃபார்வேர்ட் பண்ணிவிட்டேன்.

‘அடப்பாவிகளா’ன்னு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு ரூம்ல உட்கார்ந்து வருத்தப்பட்டுட்டு இருந்தாரு அவரு!

வேறொரு நண்பர்கிட்ட இது பத்தி சொன்னப்ப, ‘நீங்க ஓக்கே பரிசல். உங்களுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும். ஆனா யாராவது பெண்பதிவர்களுக்கு இதுமாதிரி புகைப்படமும், அறிமுகமும் கேட்டு, அவங்க அனுப்பி அது தவறா பயன்படுத்தப்பட்டா என்ன ஆகறது? ஏற்கனவே பெண்பதிவர்கள் எழுதறது குறைஞ்சுகிட்டே வருது’ன்னு ஆதங்கப்பட்டார் அவர். நியாயம்தான்னு பட்டுது!

அதுக்காக, இதை ஒரு பதிவா போட்டு, ‘தமிழ்மணத்துல இருந்து மின்னஞ்சல் வந்தா எப்படி வரும், அதை எப்படி ஃப்ராட் ப்ரூஃப் (!?!) பண்ணிவெச்சிருக்காங்க-ன்னு அவங்களையே கேட்டா என்னன்னு தோணிச்சு!


நட்சத்திரப்பதிவர்கள் பற்றி ‘உதவி’ பக்கத்துலயே இது பற்றி ஒரு விளக்கம் குடுத்தீங்கன்னா சந்தோஷம்!


ஏன்னா, நான் கலாய்க்கறதையும், கலாய்க்கப் படுவதையும் ரசிச்சே பழகிட்டேன். எல்லாரும் அப்படின்னு சொல்லமுடியாது. இந்த மாதிரி ஒரு அங்கீகாரம் கிடைக்காதான்னு ரொம்ப எதிர்பார்த்து ஏமாற்றமானா ஒருமாதிரி வெறுத்துப் போற மனநிலைக்குப் போய்ட்டாங்கன்னா.. கஷ்டமில்லையா.. பாவம்! நானும் எதிர்பார்த்தேன். இல்லைங்கல. ஆனா, இது விளையாட்டுக்காக யாரோ பண்ணினதுன்னு தெரிஞ்சப்ப அவ்வளவா மூட் அவுட் எல்லாம் ஆகல. ‘ஆஹா... என்னைப்போல் ஒருவன்’ ன்னு நெனைச்சுகிட்டேன்!


கடைசியா அந்த நண்பருக்கு ஒரே ஒரு எச்சரிக்கை....

இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினீங்க.....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அழுதுடுவேன்!



பி.கு. 1: இரு இளிச்சவாயன்கள்ன்னு சொல்லிகிட்டது என்னையும், அதிஷாவையும்தான். தலைப்பு தப்பு... எனக்கும் இப்படி ஒரு மெயில் வந்ததுன்னு சொல்றவங்க.. கூச்சப்படாம பின்னூட்டத்துல சொல்லுங்க. சோகத்தைப் பகிர்ந்துக்கலாம்!


பி.கு.2: இந்த விளையாட்டை விளையாடின நண்பர் யாருன்னு கண்டுபிடிக்க வடிவேலுவோட செல்வாக்கைப் பயன்படுத்தி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கேன். விரைவில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு, பலவித கலாய்த்தல்களுக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்படுகிறது!