Showing posts with label Actor Vijay. Show all posts
Showing posts with label Actor Vijay. Show all posts

Monday, January 4, 2010

விஜய்: ரசிகனும் விமர்சகனும்



மீபத்தில் (அல்லது) சென்ற வருடம் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது நான்கைந்து பேர் கொண்ட கொலைவெறிக் கும்பல் ஒன்று “நீ எப்படி வேட்டைக்காரன் பாஸ்ன்னு எழுதலாம்” என்று என்னைத் தாக்க முற்பட்டது குறித்து திரைத்துறையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்க வந்த மற்றொரு நண்பர் (இவரொரு விஜய் ரசிகர் என்பதறிக) அவரோடு உரையாடினார். அந்த உரையாடலின் சிறு பகுதி:-

**************************************

“நானும் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்.. ஒப்பனிங் லைன் மட்டும்தான் சொன்னேன். ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான். ஒரு ஆளு ஊர்லேர்ந்து சென்னைக்கு வந்து பெரிய தாதாகிட்ட அடியாளா சேரணும்னு ட்ரை பண்றான். அவனை காமெடி பீஸாவே எல்லாரும் பார்ப்பாங்க.. ஒரே ஒரு கட்டத்துல, அந்த தாதாவோட குருவா இருக்கறவரை இவன் காப்பாத்தறான். அப்பறம் ரெண்டு தாதா க்ரூப்புக்கும் சண்டை. யாராலன்னு பார்க்கறப்ப, ஹீரோ! க்ளைமாக்ஸ் என்னான்னா, “நீ ரௌடியா இருக்கறதுன்னா இரு. இல்லையா ஒண்ணு நாங்க உன்னை காலி பண்ணீடுவோம், இல்லையா ரெண்டு க்ரூப்ல ஒருத்தர் உன்னைப் போட்டுவாங்க”ன்னு போலீஸ் சொல்லுது. ஹீரோ என்ன முடிவெடுக்கறாங்கறதுதான் க்ளைமாக்ஸ்!” இப்படிதான் ஆரம்பிகிறார் அந்த விமர்சகர் உரையாடலை. எதிரில் விஜய்யின் ரசிகர் இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“இது நான் கண்டுபிடிச்சேன்னு சொல்ல மாட்டேன். பாட்ஷாவோட வேற ட்ரீட்மெண்ட்ல ஆன ஸ்க்ரிப்ட். அவ்ளோதான். ஆனா அதுக்குள்ள ப்ரகாஷ்ராஜ் விஜய்யைப் பார்த்து போக்கிரியைப் பத்தி பேசி, நம்ம கழண்டுக்க வேண்டியதாச்சு” குரலில் வருத்தமில்லாமல் சொல்வதை ரசிகர் ஆர்வமாய்க் கேட்கிறார்.
“விஜய்க்கு தேவை சாதாரண கதைதான். ஆனா பவர்ஃபுல் ஸ்கிர்ப்ட் தேவை. அத ஏன் யாரும் பாக்கறதில்லைன்னுதான் எனக்கு வருத்தம்”

“கரெக்ட் சார். என் வருத்தமும் அதுதான். ஒரு விஜய் ரசிகனா நான் பார்க்கறது என்னான்னா ஒரு படத்துல கதை மத்த மேட்டரெல்லாம் என்னான்னு பார்ப்பேன்.. அப்பறம் விஜய் ரசிகனான எனக்கு அவர் என்ன தர்றாருன்னு பார்ப்பேன்.. அப்படி பிரிச்சுதான் பார்ப்பேன். மத்த படங்களை நான் பார்க்கறதுக்கும் விஜய் படத்தை பார்க்கறதுக்கும் இதுதான் வித்தியாசம்”

“ஆனா ஒண்ணுப்பா... நடிக்கறதுக்குன்னு வந்துட்டா விஜய்யோட டெடிகேஷன் யாராலயும் அடிச்சுக்க முடியாது”

“எப்படிச் சொல்றீங்க?”

“நான் 27 நாள் இருந்தேன். போக்கிரி ஷூட்டிங்க்ல. நானும் நடிக்க போயிருந்தேன். மூணு சீன் நடிச்சும் ஒரு ஃப்ரேம்ல கூட வர்ல அதுவேற விஷயம். ஆனா ஸ்பாட்ல விஜயோட இன்வால்வ்மெண்டும், டெடிகேஷனும் பார்த்து அசந்துட்டேன்.”

“ஆமாமா.. நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி ஆயிரத்தெட்டு குத்தம் குறை சொல்லுவாரு. கௌதம்மேனன் கூட சொல்லிருந்தார். ஆனா ஒத்துகிட்டு ஃபீல்டுக்கு வந்தா ஒரு கேள்வி கேட்காம நடிப்பாராமே?”


“ஆமாமா”

“திருமலை, கில்லி, மதுரை, திருப்பாச்சின்னு கலெக்‌ஷன்ல பெரிய நாலு படம் நடிச்சு அடுத்ததா ச்ச்சின்ல நடிக்கறாரு. அதுல மாஸ் ஹீரோன்னு எதுவும் காமிச்சுக்காம ஜாலியா நடிப்பாரு. வசீகராவுலயே சின்னப்பொண்ணு கால்ல விழுந்தெல்லாம் நடிச்சாரு. அதுமாதிரி விஜய்ட்ட பிடிச்சது அவர் டைரக்டருக்கு கொடுக்கற மரியாதை”

ரசிகர் தொடர, இடை மறிக்கிறார் விமர்சகர்: “மரியாதையெல்லாம் ஒண்ணும் கிடையாது.விஜய் படத்துல டைரக்டர் ஒண்ணும் கிடையாது. விஜய் கோவிச்சுட்டு செட்டை விட்டு போய்ட்டா மொத்தமும் காலி. அந்த பயத்தோடவேதான் வேலை செய்யணும். பிரபுதேவாவே ஒண்ணும் பண்ண முடியாது. விஜய்யை திட்டறதுக்கு பதிலா பக்கத்துல நிக்கறவனைத் திட்டலாம். அவ்ளோதான்”

“மரியாதையே இல்லைன்னா அப்பறம் எப்படி மறுபடி விஜய்கூடவே பண்றாங்க?”

“காசுதான். மத்தவங்க படம்னா 1000ஆ.. விஜய் படம்னா 5000!. பண்ணமாட்டாங்களா?”

“ஆனா என்னதான் கிண்டல் பண்ணினாலும் விஜய் படம் ஓப்பனிங் பிரமிக்க வைக்குதா இல்லையா? 2000ல என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு நாலு ஃப்ளாப்புக்கப்பறம் ‘குஷி’க்கான ஓப்பனிங் எல்லாரையும் பிரமிக்க வெச்சுது. அதே மாதிரி புதிய கீதை, வசீகரா, பகவதி எல்லாம் ஃப்ளாப். திருமலைக்கு சரியான ஓப்பனிங்”

“கரெக்ட்தான். விஜய்யும் அஜீத்தும் இன்னைக்கு டாப் லிஸ்ட்ல இருக்காங்கன்னா எத்தனை ஃப்ளாப் குடுத்தாலும், மொத நாள் ஒப்பனிங் உலகம் பூரா இருக்குங்கறதுதான்”

“ஆமாம். அதுவும் என்கூட முதல்நாள் ஷோ பார்த்துட்டு வெறுத்து வித்தியாசமா விமர்சனம் எழுதினவர், அவரோட மகன் அடம்பிடிச்சான்னு அடுத்த நாளே குடும்பத்தோட போயிருக்காரு. நானும் தனியாப் பார்த்தேன். அடுத்த நாள் என் ரிலேஷன் பையனோட போய்ப் பார்த்தேன். இந்த ஃபேமலி ஆடியன்ஸ் மத்தவங்களுக்கு இல்லைங்கறதுதான் உண்மை. அதுதான் விஜய் படம் நூறு நாள் ஓடறதோட காரணம்”

“நூறுநாள், நூத்தம்பதுநாள் ஓட்டறதுக்கு பின்னாடி வேற ஒரு பெரிய கதை இருக்கு. அது நடிகனுக்காகன்னு நம்பீட்டிருந்தா உங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது”

“அப்பறம்?”

“தியேட்டர் வாடகை தயாரிப்பாளர்தான் குடுக்கணும் பார்த்துக்கங்க.. அதெல்லாம் சினிமா ரகசியம்பா”

-என்றவர் மேற்கொண்டு இதைப் பற்றி பேசமறுக்கிறார்.

அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...

அது....


நீங்களே சொல்லுங்களேன்..


.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்!



ஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!

வேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது...?


வழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி... ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.

விஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.



அனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!

முதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.

படத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா! குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு!) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு!

விஜய்?

ஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக்கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்....

சீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி - க்ளாஸ்! அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது!

வசனங்கள் - பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.

இசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல!) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்‌ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.

இடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் - விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்!


வேட்டைக்காரன் - 42%



.

Monday, May 25, 2009

நடிகர் விஜய்க்கு....



அன்புள்ள ‘இளைய தளபதி’ விஜய்க்கு..


சமீபகாலமாக பலரையும் பிடித்து ஆட்டும் பார்ட்டி மேனியா உங்களையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என பல்வேறு குறிப்புகளின் மூலம் உணர்கிறோம்.

’பார்ட்டி மேனியா’ என நான் குறிப்பிடுவது சிம்பு, த்ரிஷா, விஷால் வகையறா நடிகர்களுக்கு இருக்கும் சாட்டர்டே பார்ட்டி அல்ல. கட்சி. கட்சி ஆரம்பிக்கும் நோய்.


நான் சூப்பர்ஸ்டார் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் நடுவில் ரஜினி எதற்கு என்று டைரக்டாக எம்.ஜி.ஆரின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வில்லு படத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற பாட்டில் டைட்டில் ஆரம்பிக்கும்போதே என்னைப் போன்ற பலருக்கும் கிலி பிடித்து ஆட்டியது. அடுத்த படத்தின் பெயரும் வேட்டைக்காரன். அதற்கடுத்து ‘உரிமைக்குரல்’ என்று உறுதிப்படுத்தாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. சரி.. திடீரென்று ஏன் இந்த எம்.ஜி.ஆர் பாசம் என்றால்.. டைட்டிலில் கொடியைக் காண்பித்து கட்சி துவங்கும் ஆசையை வெளிக்காட்டி விட்டீர்கள்.


மேலும் அதை உறுதிப்படுத்துவது.. ஆனந்த விகடனில் வெளியான உங்கள் பதில். ‘நான் கட்சி துவங்க வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்.

உங்களைக் கட்சி துவங்கச் சொல்லுபவன் உங்களின் உண்மையான ரசிகனாய் இருக்க முடியாது. அதை நம்பி நீங்கள் கட்சி துவங்கினால் அது எப்படி இருக்கும் என்பது கடந்த கால கட்சி துவங்கிய வரலாறுகளைப் பார்த்தாலே புரியும்.

டிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னால் தீக்குளிக்கக் கூட தயாராக இருந்த இளைஞர் கூட்டம் இருந்தது. நாம் மிகவும் மதிக்கும் இலக்கியப் பேச்சாளர் தமிழருவி மணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாஜி கணேசனுக்காக ஒரு நண்பரை அடித்த கதை சொல்லியிருந்தார். தி.மு.க. ஆதரவாளனான சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்தது விமர்சனத்துக்குள்ளாகவே மனக்கசப்போடு இருந்து 1961ல் காமராஜர் மீதுள்ள அன்பால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க ஆரம்பித்தார். 1982ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். பிறகு 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற முன்னணி என்று சொந்தக் கட்சி ஆரம்பித்தார். 1989 தேர்தலில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோற்றது அந்தக் கட்சி. சிவாஜி கணேசனே திருவையாறு தொகுதியில் தி.மு.க வேட்பாளரிடம் பத்தாயிரத்து சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்விக்குப் பிறகு வி.பி.சிங்கின் அழைப்பின் பேரில் கட்சியை கலைப்பதாக அறிவித்து விட்டு தொண்டர்களை ஜனதா தளத்தில் சேரச் சொன்னார். அப்போது அவர் சொன்னது.

ட்சி ஆரம்பிக்கும் அவசியம் எனக்கிருக்கவில்லை. ஏனோ நிர்பந்திக்கப்பட்டேன். எனது கட்சியும் நானும் அடைந்த தோல்வி என் வாழ்வின் மிக சங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று. என்ன செய்ய? தவறான முடிவுகளை நாம் எடுக்கும்போது அதனால் வரும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்?”

டுத்தது விஜய டி. ராஜேந்தர். பல காலமாக தி.மு.கவிற்காக உயிரைக் கொடுக்கும் தொண்டராக இருந்த இவர், 1991ல் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்கிற கட்சியைத் துவங்கினார். துவங்கும்போது மிகுந்த பரபரப்பு ஏற்படுத்திய இவர், மீண்டும் 1996ல் தாய்க்கழகத்துடன் இணைந்து பார்க் டவுனில் போட்டியிட்டு வென்றார். அதே பார்க் டவுனில் 2001 தேர்தலில் தோற்ற இவர் 2004ல் தி.மு.கவிலிருந்து விலகி ‘அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியைத் துவங்கி தி.மு.கவிற்கு எதிரான அ.தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை (?) அளித்தார். ‘அள்ளி அள்ளிக் குடுப்பாங்க அம்மா. கிள்ளிக்கூட குடுக்க மாட்டார் கருணாநிதி’ என்றெல்லாம் அடுக்குமொழி பேசிய இவர், 2006 தேர்தலில் அம்மா ஒரு சீட்டைக்கூட தனது கட்சிக்கு ஒதுக்காதது கண்டு ‘நான் வாழ்வதில்லை தன்மானத்தை விட்டு.. சுயமரியாதை என் சொத்து.. உதயசூரியனுக்கு ஓட்டைக் குத்து’ என்று வசனத்தையும், ஆதரவையும் ஒருசேர மாற்றினார். இன்றுவரை அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் மட்டுமே இவர் தலை தெரிகிறது. மற்றபடி இவர் யாரை ஆதரிக்கிறார்.. இவர் கட்சியால் மக்களுக்கு.. அட்லீஸ்ட். இவருக்கு என்ன லாபம் என்பதெல்லாம் இவரது நியூமராலஜி குருவுக்கே வெளிச்சம்.


கே. பாக்யராஜ். ‘என் வாரிசு’ என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டவர் இவர். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்கக்கூடிய அளவு அவர்மீது பற்று கொண்ட இவர் தனிக்கட்சி தொடங்கி, ஜெயலலிதாவை ஆதரித்து இப்போது தி.மு.கவை ஆதரிக்கிறார். இந்தப் பதிவை எழுதுவதற்காக எத்தனை தேடினாலும் இவரது கட்சியின் பெயர் கிடைக்கவில்லை.. நினைவிலும் இல்லை. இதிலிருந்தே இவர் கட்சியின் நிலையை அறியலாம். இவரும் இப்போது தி.மு.கவில்தான் ஐக்கியமாகி பிரச்சாரம் செய்தி கொண்டிருக்கிறார்.


இப்போது ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் சாதித்தது என்ன? எல்லா இடங்களிலும் ஓட்டைப் பிரிக்கும் வேலையின்றி வேறு என்ன சாதிக்க முடிந்தது அவர்களால்? அதுவும் விஜயகாந்த் அந்த வேலையையாவது செய்கிறார் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். சரத்குமார் நிலை படு பரிதாபம். உங்களைப் போன்ற நடிகர்கள் அல்லாது கொங்கு முன்னேற்றப் பேரவை போல சாதிக்காரர்களும் கட்சி ஆரம்பித்து மக்களையும் நாட்டையும் குழப்புவதும், தங்கள் சுயலாபத்தைப் பெருக்குவதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் மாதிரியானவர்கள் 2001ல் நான், 2016ல் நான், 2021ல் நான், 2025ல்நான் என்று ஆளாளுக்கு முதல்வர் பதவியை ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்காதீர்கள். எனக்கும், என் மகள்களுக்கும், மனைவிக்கும் உங்கள் வேகம் பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும். என்னைப் போன்ற மக்களுக்கு இனி ஒரு புதிய கட்சி தேவையே இல்லை. அப்படி அரசியல் பாதைதான் வேண்டும் என்றால் ஜே.கே.ரித்தீஷ் போல பிரபலமான கட்சி ஒன்றில் இணைந்து கொள்ளுங்கள். எம்.ஜி.ஆரில் தொடங்கி பலரும் தி.மு.க/அ.தி.மு.க போன்ற ஆலமரத்தின் விழுதுகளாகத்தான் தங்கள் அரசியல் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒரு கட்சியில் சேர்ந்து தொண்டனாக உழைத்து கஷடமெல்லாம் பட்டு பின்னாளில் ஏதேனும் பதவி கிடைத்தால் அதைத் தந்த மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்து...

இதெல்லாம் முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்...

அதை விடுத்து தனிக்கட்சி கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.

நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள். கமலஹாசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். திரைத்துறையிலேயே முழுமூச்சாய் இருங்கள். மனத்ருப்திகாக சேவை செய்ய கட்சியெல்லாம் அவசியமே இல்லை. ஆனானப்பட்ட ரஜினிகாந்தே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் களம் அது. அவரை ஆரம்பியுங்கள் என்று தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கட்சி ஆரம்பிக்காமல் மறைமுகமாக அவர் நல்லது செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.

எங்களுக்குத் தேவை கட்சியல்ல. உங்களால் முடிந்த நல்லது ஏதாவதை செய்து கொண்டே இருங்கள். அதுபோதும் எந்த பிரபல்யமுமின்றி இருக்கும் பலரும் பல சேவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு எந்த கட்சி பின்புலமோ, தலைவனாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தமோ இல்லை.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!

அளவில்லா அன்போடு
உங்கள் குத்துப்பாட்டுக்கு ஆட்டம்போடும்
சாதாரண ரசிகன்.



.