Showing posts with label புதிர்கள். Show all posts
Showing posts with label புதிர்கள். Show all posts

Thursday, December 24, 2009

புதிர்கள் இங்கே… விடைகள் எங்கே?


சரியான போர் – ங்க. தமிழ் ‘போர்’ இல்ல. இங்க்லீஷ் Bore. இந்த மாதிரி போரடிக்கும்போதெல்லாம் மூளையைக் கசக்கினா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகும்ல?

அதுனால இன்னைக்கே – சில புதிர்கள். கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?

(அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)

2) ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.

கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?

3) ஒரு அரபுக்காரர் தன்னோட இரு மகன்களுமிடையே சொத்தைப் பிரிக்கறதுக்காக ஒரு போட்டி வைக்கிறார். ‘உங்க ஒட்டகங்களுக்கிடையே ஒரு போட்டி வைங்க. யாரோட ஒட்டகம் மிக மெதுவாய்ப் போகுதோ அவங்களுக்கு அதிக பங்கு’ –ன்னு சொல்லிடறாரு. இரண்டு மகன்களும் அவங்கவங்க ஒட்டகங்கள்ல ஏறி மெ-து-மெ-து-வாப் போறாங்க.

இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.

அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?

4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?

5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?

6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...

7) இது புதிரில்லை. ச்சும்மா...

கீழ உள்ளதுல என்ன கலர்ல எழுதிருக்குங்கறத விடுங்க.. எழுத்தை மட்டும் படிங்க... ஸ்பீடா...



வெரிகுட். இப்போ.. என்ன எழுதிருக்குங்கறத விடுங்க. என்ன கலர்ல எழுதிருக்குன்னு ஸ்பீடா சொல்லுங்க பார்ப்போம்...

***

கடைசியா வடகரை வேலன் அண்ணாச்சி எனக்கு அனுப்பின ஒரு எஸ்ஸெம்மெஸ்:-

I really appreciate your brain which is divided in 2 parts: Right & Left. In Right nothing is Left and in Left nothing is Right.


.

Saturday, December 13, 2008

வார இறுதி புதிர்கள் – 13.12.2008 (EXCLUSIVE PHOTOவுடன்!)





1.. காலீல நியூஸ் பேப்பர் படிக்கச் சொல்லோ, அதுல கீற மொத்த பேஜூல, ஒரு நாலு பேஜூ மிஸ்ஸாகுதுன்னு கண்டுக்கற நீ. மிஸ்ஸாகிப் பூட்ட 4 பேஜுல ஒரு பேஜோட நெம்பரு 21, அதே மாரி கடேசி பேஜூ நெம்பரு 28ன்னாக்கா, மிஸ்ஸான மத்த மூணு பேஜ் நெம்பர் இன்னாபா?

என்னாது? சாய்ஸா? அடிங்....


2. க்ரிக்கெட் மேட்ச் முடிஞ்சு, மூணு பேர் பேசிட்டிருக்காங்க. அவங்க சொன்னது கீழே..

கங்குலி: “சச்சின் சிக்ஸர் அடிக்கவில்லை”
ட்ராவிட்: “நான் சிக்ஸர் அடிக்கவில்லை”
சச்சின்: “நான்தான் சிக்ஸர் அடித்தேன்”


மேற்கண்டதில் குறைந்தது ஒன்று உண்மை. குறைந்தது ஒன்று பொய்.

யாருப்பா சிக்ஸர் அடிச்சது?


3. 12=10, 32=26ன்னா, 22= எவ்வளவு?

அ) 16
ஆ)18
இ)20
ஈ)19


4. ஒருத்தனிடம் 4 ஆடு, 2 கழுதை, 3 கோழி, 6 பசு உள்ளது. அவன் ஆட்டையும் கழுதை என்றே அழைப்பது வழக்கம். அப்படியானால் அவனிடம் எத்தனை கழுதைகள் உள்ளன?

5. ரொம்பப் பழசுதான். ஆனாலும் கொஞ்சநேரம் உங்க மூளையை ரி-ஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்காகக் கேட்கறேன்.

ஆற்றின் கரையில் ஓர் ஆள். ஒரு புலி. ஓர் ஆடு. எல்லாரும் அக்கரைக்குப் போகவேண்டும். அங்கிருக்கும் பரிசலில் ஒரு சமயத்தில் பரிசல்காரன் உட்பட இரண்டுபேர்தான் (புல்கட்டையும் ஆள்கணக்கில் சேர்க்கவும்) போக முடியும். நான்கு தடவைக்குமேல் போக முடியாது. எனில் எப்படி எல்லாவற்றையும் அக்கறையாக அக்கரைக்கு கொண்டு செல்வான் அந்த புத்திசாலி பரிசல்காரன்?

தேவையில்லாத குறிப்பு: ஆட்டையும் புலியையும் தனியே விட முடியாது. ஆட்டையும், புல் கட்டையும் தனியே விட முடியாது.


6. போற போக்குல பேசற மாதிரி சில வாசகங்களைச் சொல்றேன். அத வெச்சு இந்தப் பதிவர்களைக் கண்டுபிடிங்க. க்ளூ: பதிவர்கள் பேராவும் இருக்கலாம். அங்க வலைப்பூ பேராவும் இருக்கலாம்!

a) நல்ல வேளை, இவர் பேர்ல ஆட்டோ இல்ல.

b) இப்படி ***** இல்லாம பேசலாமா?

c)மொதல்ல ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன். மீரா ஜாஸ்மினுக்கு மாண்டலின் ராஜேஷா? இப்போ சங்கீதாவுக்கு பாடகர் க்ரிஷ்..

d) இந்த மாதிரி கேள்விகேட்கறதெல்லாம் என்னோட ** ****தான்.

e) உருப்படியா ஏதாவது வேலைக்குப் போகாம சும்மா ******* கணக்கா சுத்திகிட்டிருக்க?

f) என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். சரியான *****!


7) ஒரு நூறுகிலோ சர்க்கரை மூட்டை இருக்கிறது. உடன் ஒரு மூன்று கிலோ படியும், ஐந்து கிலோ படியும் மட்டுமே இருக்கிறது. இது இரண்டையும் பயன்படுத்தி நாலு கிலோ சர்க்கரை எடுக்க வேண்டும். இந்த இரண்டு கலன்கள், அந்த மூட்டை தவிர வேறெங்கும் சர்க்கரையைக் கொட்டக் கூடாது. எப்படி அளப்பீர்கள்?

8) 1942ல் அமெரிக்க நைட் கிளப்பான தி கோகனட் குரோவ்-வில் நடந்த ஒரு தீ விபத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர். ஒரு சின்ன குறையால்தான் இந்த அளவுக்கு உயிரிழப்பு என்று கண்டுபிடிக்கப் பட்டு, அதற்குப் பிறகு கட்டப்படும் பொதுக் கட்டடங்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டது. அது என்ன தெரியுமா?

9) ஒரு புயலும், மழையும் கொண்ட இரவில் ஒருத்தன் அவசர அவசரமாக தன் மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தான். திடீரென பாதி வழியில் கார் பழுதடைந்தது. மனைவியைத் தனியே விட்டுப் போக பயந்து, காரின் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு அருகில் மெக்கானிக்கைத் தேடிச் செல்கிறான் கணவன்.

திரும்பி வரும்போது, கதவு திறக்கப்படவில்லை. ஆனால் இவன் திறந்து பார்க்கையில், உள்ளே மனைவி இறந்து கிடக்கிறாள். காருக்குள் ஒரே ரத்தம். பின் சீட்டில் இன்னொருத்தனும் இருக்கிறான்!

எப்படி சாத்தியம்?

10) இந்த வக்கியத்திலுள்ள மூன்று தவறுகளைக் கண்டுபீடியுங்கள்.


******************************************

பின்குறிப்பு:
1) வீக் எண்ட் புதிர்கள் முழுதும் எந்தச் சொந்தச் சரக்கல்ல. பதிவர்கள் சம்பந்தமானது மட்டுமே நான் கேட்பது. மற்றவையெல்லாம் படித்த, கேட்ட சமாச்சாரங்கள்தான்.

2) நெருங்கிய நண்பர்களின் வாரிசுகள் சிலருக்காக சில பழைய ஈஸியான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. கண்டுக்காதீங்கப்பா...!

Saturday, December 6, 2008

வீக் எண்ட் புதிர்கள் - 06.12.08




1) பதிவர்கள் குறித்த கேள்விகள்....


a) இவர் பெயரை திருப்பிப் போட்டால் என்னா? நேராய்ச் சொன்னால் சுத்தமான நெடில்.

b) இவர் பெயரின் கடைசி எழுத்தில் ஒரு நல்ல படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!

c) நல்லது... கர்ணனாக சிவாஜி நடித்ததும்!

-இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரெழுத்து எடுத்து இந்தப் பதிவரைக் கண்டுபிடியுங்க பாஸ்!

d) முதல் + கடைசி எழுத்து.. ம்ம்ம்... ஏதாவது சாப்பிடணுமே..

நடு எழுத்து எழுத உதவும்! கண்ணிலும் எழுதலாம்.


e) முதல் + கடைசி எழுத்து = வடஇந்திய யார்?
இரண்டாவது + கடைசி எழுத்து = வெற்றி
மூன்றாவது + கடைசி எழுத்து = தீவிரவாதிகளிடமும் இருந்தது, நம்ம படைவீரர்களிடமும் இருந்தது!


f) முதல்+ கடைசி எழுத்து = கொஞ்சம் நீட்டிச் சொன்னால் ஆங்கிலநிலா.

இரண்டாவது + கடைசி எழுத்து = லிங்குசாமிக்கும், பி.டி.உஷாவுக்கும் பிடிக்கும்!

இதற்கு முன்னவருக்கும், இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.


பதிவர்கள் குறித்த மேலுள்ள ஆறு கேள்விக்கும் பொதுவான ஒரு க்ளூ... முதல் கேள்வி, இரண்டெழுத்துப் பதிவர், இரண்டாவது கேள்வி மூன்றெழுத்துப் பதிவர்.. மூன்றாவது – நான்கெழுத்து........ இப்படியே தொடருங்கள்..

என்ன ஈஸீயாய்டுச்சா இப்போ?


2) (அ) உங்களுக்குச் சொந்தமானது, உங்களை விட அடுத்தவர்களே அதிகம் பயன்படுத்துவது எது?

(ஆ) யாருக்காக உபயோகப் படுத்தப் படுகிறதோ, அவர்கள் வாங்கமுடியாது. அது என்ன?


3) எட்டுமணிக்கு பார்ட்டிக்கு விருந்தினர்கள் வந்தாயிற்று. 9 மணியளவில் இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சென்றுவிட்டார்கள். பார்ட்டி தொடர... 10 மணியளவில் மீதி இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விடைபெற்றுப் போய்விட்டார்கள். மீதமிருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 11 மணிக்கு போய்விட்டார்கள்.. இப்போது எட்டுபேர் பார்ட்டியைத் தொடர்கிறார்கள்...

8 மணிக்கு இருந்த மொத்தவிருந்தினர் எத்தனைபேர்?


4) லாஜிக்கலாகச் சொல்லுங்கள்.. ரோடுகளில் மேன்ஹோல் இருக்கிறதல்லவா? அதற்கு சதுரமூடி, வட்டவடிவ மூடி.. இரண்டில் எது பெஸ்ட்? ஏன்?

5) நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா என்றால் ஒரு ஆரஞ்சு எவ்வளவு பைசா?

6) ஒரு தெருவில் குறிப்பிட்ட அளவு எதிரெதிர் வரிசையிலான வீடுகள் உள்ளன. ஒரு பக்கம் 1,2,3,4 என்று ஆரம்பித்து எதிர்வரிசையில் அப்படியே எண்கள் தொடர்ந்து கீழ்வரிசையில் போடப்பட்டுள்ளன.(அதாவது 1ம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீடு கடைசி நம்பர்)

பத்தாம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீட்டு எண் 23 எனில்.. மொத்தம் எத்தனை வீடுகள் அந்த வீதியில்?


7) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி..

தாஜ்ஹோட்டலின் பாருக்கு சென்று ஒருத்தன் அவசரமாக தண்ணீர் கேட்கிறான். பார் அட்டெண்டர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, தனது துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் வைக்கிறான்.


ஒரு நிமிடம் கழித்து, தண்ணீர் கேட்டு வந்த கஸ்டமர் சிரித்தபடி நன்றிகூறி வெளியேறுகிறான்.

என்ன மேட்டர்?


8) இது லாஜிக்கல்...


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கொன்று என்று சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. (ஜூஸெல்லாம் போடலைப்பா!) கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

9) க்ரிக்கெட் க்விஸ்... 1946ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியா டூர் ரத்தானது. ஏற்கனவே முடிவான இந்தத் தொடர் ரத்தானதற்கு காரணம்..

அ) போருக்குப்பின் உடனே பயணம் சாத்தியமில்லை என மே.இ. பயணக்குழுவினர் மறுத்துவிட்டதால்.

ஆ) மே.இ.போர்ட், இந்தியாவின் செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்டில் திருப்திப் படாததால்.

இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால்.

ஈ) மேற்கிந்திய வேகப்பந்து வீரர்களைப் பற்றி கேள்விப்பட்டு, இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததால்.

10) இது இளையராஜாவின் பிரபலமான ஒரு பாட்டின் இரண்டாவது சரணம்..

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

கலைபலவும் பயிலவரும்
அறிவுவளம் பெருமைதரும்

என் நினைவும் கனவும் இசையே
இசை இருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய...

பல்லவிக்குப் போக இன்னும் ஒரு வரிதான் பாக்கி. அதைச் சொன்னால் பாடல் ஈஸீயாகத் தெரிந்துவிடும்.

கண்டுபிடுங்க பார்க்கலாம்!

***********************

யோசிச்சு பதில் சொல்லுங்கப்பா. கமெண்ட் மாடரேஷன் போட்டுடறேன். ஓக்கேவா?

Sunday, November 30, 2008

வீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்

1) சில குறிப்புகள்ல சில பதிவர்களைச் சொல்லிவிட முடியும்.. ‘சகா’-ன்னா கார்க்கி, குறுந்தொகைன்னா நர்சிம், அண்ணே-ன்னா அப்துல்லா.. இப்படி... அது மாதிரி சில குறிப்புகள் சொல்றேன். யாரிந்தப் பதிவர்கள்ன்னு சொல்லுங்க.

அ) ‘அடடே.. வாட் எ கோ இன்சிடென்ஸ்’

அதிஷா

ஆ) மீ த.. (அடுத்த வார்த்தையைச் சொல்லவே வேண்டாம்)

ராப் – வெட்டியாபீசர்

இ) என்னுடைய கார் அந்த இடத்தை அடைந்தபோது...

டோண்டூ


2) இரண்டு இரட்டைப் படை எண்கள். அவற்றைக் கூட்டினால் வரும் விடையை விட, மூன்று மடங்கு அவற்றைப் பெருக்கினால் வரும். அவை எவை?

4 & 12 (ஆறு, ஆறும் சரிதான். வெவ்வேறு எண்கள் என்று நான் குறிப்பிடாததால்!)


3) GTTTT – இது என்ன?

ஒரிஜினாலிடி


4) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

விதவை என்றாலே, அந்த ஒருவன் இறந்தவனாகிறான். ஆகவே நோ சான்ஸ்.




5) இந்த வார யோசிக்க வைக்கற கேள்வி. மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?


கரெக்டா சொல்லியிருந்தாங்க. ஒரு சுவிட்சை கொஞ்ச நேரம் போட்டிருந்து, அணைத்து விட்டு இன்னொரு சுவிட்சை போட்டுவிட்டு மேலே செல்ல வேண்டும். எரியும் பல்புக்கானது இப்போது போட்ட சுவிட்ச். மற்ற இரண்டு பல்புகளைத் தொட்டுப் பார்த்து கொஞ்சம் சூடாக இருப்பது முதலில் போட்ட சுவிட்ச். மூன்றாவது, தெரிந்துவிடுமே..


6) இதுவும் யோசிக்க வைக்கும்.

மூன்று வீடுகள் கொண்ட காம்பவுண்டிற்கு ஆப்பிள்காரி ஒருத்தி செல்கிறாள். தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதி + அரை ஆப்பிளை முதல் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். இப்போது அவள் கூடை காலி! அப்படியானால் அவள் கொண்டுவந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.

பாதி என்றால் பத்தில் பாதி ஐந்து. நாலில் பாதி இரண்டு.. இப்படி.

அரை என்பது ஒன்றை அறுத்தால் வரும் பாதி = அரை!

மறுபடி சொல்கிறேன்.. ஆப்பிளை நறுக்கக்கூடாது!

ஏழு ஆப்பிள். முதல் வீட்டிற்கு மூன்றரை + அரை = 4 ஆப்பிள். மீதமிருப்பது மூன்று. அதில் பாதி ஒன்றரை + அரை = 2. மீதமிருப்பது ஒன்று. அதில் பாதி, அரை + அரை = ஒன்று. ஓக்கே?

7) 1975 இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்ரிக்காவுக்குமான ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சாதனை நிகழ்ந்தது. அது..

அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

ஆ) உலகக் கோப்பையில் முதல் ஹாட்-ரிக் எடுக்கப்பட்டது.

இ) உலகக் கோப்பையில் முதல் செஞ்சுரி எடுக்கப்பட்டது.

ஈ) மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டமானது அடுத்தநாளும் தொடர்ந்தது.

விடை: அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

(காப்பிஅடித்து பதில் சொன்ன வெண்பூவுக்கு, ஒரு நாளைக்கு பிரியாணி கட் பண்ணுங்க சிஸ்டர்..)


8) இவர் பதிவர். இவரது பெயரின் கடைசி இரண்டெழுத்து வழக்கா... காசா? நல்லவர்.... சோ..இவருக்கு நிறைய நண்பர்கள்!

துக்ளக் மகேஷ்.


9) இவரும் பதிவர். அழகானவர். பெயரின் 2 மற்றும் மூன்றாவது எழுத்துக்களைச் சேர்த்தழைத்தால் மரியாதைக் குறைவாக எண்ணக்கூடும். அத்வானிக்கு இவரை ரொம்பப் பிடிக்குமோ?

இதற்குதான் யாரும் பதில் சொல்லவில்லை.

அழகானவர் – சுந்தர்

2வது, 3 வது எழுத்துகள் = யோவ்

அத்வானிக்குப் பிடிக்குமா = ராம்.

ஜ்யோவ்ராம் சுந்தர்!

10) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி. அதாவது ஒரு இண்டர்வ்யூவுல இந்தக் கேள்வியைக் கேட்டு நீங்க என்ன பதில் சொன்னா, உங்களுடைய அறிவு மெச்சப்படுமோ, அப்படி பதிலைச் சொல்லணும்.

ஒரு மழைநாளின் இரவு. நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பஸ் ஸ்டாப்பில் மூன்றுபேரைக் காண்கிறீர்கள்.

a) வயதான மூதாட்டி
b) ஒருமுறை உங்கள் உயிரையே காப்பாற்றிய நண்பர்
c) நீங்கள் வெகுநாள் ப்ராக்கெட் போட்டுக் கொண்டிருக்கும், ஓரளவு உங்களுக்கு சிக்னல் கிடைத்துவிட்ட உங்கள் கேர்ள்ப்ரெண்ட்.

உங்கள் காரில் ஒருவரை மட்டுமே ஏற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்வீர்கள்?

இதுக்கு கரெக்டா போட்டுத் தாக்கிருக்காங்கப்பா நம்ம ஆளுக. நண்பன்கிட்ட கார்சாவியைக் குடுத்து, பாட்டியை கூட்டீட்டு போகச் சொல்லி, கேர்ள்ஃப்ரெண்ட் கூட......
.
.
.
.
.
.
.
.
.
...பேசிகிட்டிருக்கலாம்.


நெக்ஸ்ட் வீக் கமெண்ட் மாடரேஷன் போட்டு, இன்னும் சுவாரஸ்யமான கேள்விகளால தாக்கீடுவோம்!

Saturday, November 29, 2008

வீக் எண்ட் புதிர்கள் – 29.11.08

சென்ற வார வீக் எண்ட் புதிர்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு. மொத்தம் ஏழு பேர் (ஆமா.. ஏஏஏஏஏழு பேர்!) வாரா வாரம் இதைத் தொடருங்கள்ன்னு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக இதோ இந்த வாரமும்..

மொதல்ல ஈஸியா ஆரம்பிக்கலாம்..

1) சில குறிப்புகள்ல சில பதிவர்களைச் சொல்லிவிட முடியும்.. ‘சகா’-ன்னா கார்க்கி, குறுந்தொகைன்னா நர்சிம், அண்ணே-ன்னா அப்துல்லா.. இப்படி... அது மாதிரி சில குறிப்புகள் சொல்றேன். யாரிந்தப் பதிவர்கள்ன்னு சொல்லுங்க.

அ) ‘அடடே.. வாட் எ கோ இன்சிடென்ஸ்’
ஆ) மீ த.. (அடுத்த வார்த்தையைச் சொல்லவே வேண்டாம்)
இ) என்னுடைய கார் அந்த இடத்தை அடைந்தபோது...


2) இரண்டு இரட்டைப் படை எண்கள். அவற்றைக் கூட்டினால் வரும் விடையை விட, மூன்று மடங்கு அவற்றைப் பெருக்கினால் வரும். அவை எவை?

3) GTTTT – இது என்ன?

4) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

5) இந்த வார யோசிக்க வைக்கற கேள்வி. மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?

6) இதுவும் யோசிக்க வைக்கும்.

மூன்று வீடுகள் கொண்ட காம்பவுண்டிற்கு ஆப்பிள்காரி ஒருத்தி செல்கிறாள். தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதி + அரை ஆப்பிளை முதல் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். இப்போது அவள் கூடை காலி! அப்படியானால் அவள் கொண்டுவந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.

பாதி என்றால் பத்தில் பாதி ஐந்து. நாலில் பாதி இரண்டு.. இப்படி.

அரை என்பது ஒன்றை அறுத்தால் வரும் பாதி = அரை!

மறுபடி சொல்கிறேன்.. ஆப்பிளை நறுக்கக்கூடாது!

7) 1975 இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்ரிக்காவுக்குமான ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சாதனை நிகழ்ந்தது. அது..

அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

ஆ) உலகக் கோப்பையில் முதல் ஹாட்-ரிக் எடுக்கப்பட்டது.

இ) உலகக் கோப்பையில் முதல் செஞ்சுரி எடுக்கப்பட்டது.

ஈ) மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டமானது அடுத்தநாளும் தொடர்ந்தது.

8) இவர் பதிவர். இவரது பெயரின் கடைசி இரண்டெழுத்து வழக்கா... காசா? நல்லவர்.... சோ..இவருக்கு நிறைய நண்பர்கள்!

9) இவரும் பதிவர். அழகானவர். பெயரின் 2 மற்றும் மூன்றாவது எழுத்துக்களைச் சேர்த்தழைத்தால் மரியாதைக் குறைவாக எண்ணக்கூடும். அத்வானிக்கு இவரை ரொம்பப் பிடிக்குமோ?

10) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி. அதாவது ஒரு இண்டர்வ்யூவுல இந்தக் கேள்வியைக் கேட்டு நீங்க என்ன பதில் சொன்னா, உங்களுடைய அறிவு மெச்சப்படுமோ, அப்படி பதிலைச் சொல்லணும்.

ஒரு மழைநாளின் இரவு. நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பஸ் ஸ்டாப்பில் மூன்றுபேரைக் காண்கிறீர்கள்.

a) வயதான மூதாட்டி
b) ஒருமுறை உங்கள் உயிரையே காப்பாற்றிய நண்பர்
c) நீங்கள் வெகுநாள் ப்ராக்கெட் போட்டுக் கொண்டிருக்கும், ஓரளவு உங்களுக்கு சிக்னல் கிடைத்துவிட்ட உங்கள் கேர்ள்ப்ரெண்ட்.

உங்கள் காரில் ஒருவரை மட்டுமே ஏற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்வீர்கள்?


ரெடி.. ஸ்டார்ட்.. மீஜிக்...

Saturday, November 22, 2008

வீக் எண்ட் புதிர்கள்



வீக் எண்ட்- டிற்காக நமீதாவையோ, நயன்தாராவையோ.. இருங்கள்... முழுசாகச் சொல்லி விடுகிறேன்... நமீதா ஃபோட்டோவையோ, நயன்தாரா ஃபோட்டோவையோ போடலாம் என்று நினைத்தேன். சரி.. அதுக்குத்தான் பாச்சிலர்கள் சென்ஷி, சஞ்சய் என்று இருக்கிறார்களே என்று புதிர்போடலாம் என்ற ஐடியா வந்தது...

ஒரு குறிப்பிட்ட வகை என்றில்லாமல் கலந்து கட்டி இருக்கும், ஈஸியாக இருக்கும், கஷ்டமாக இருக்கும், கடித்தனமாக இருக்கும், அறிவார்த்தமாக இருக்கும், லூசுத்தனமாக இருக்கும், பொறுத்துக்கோங்க. விடை எப்போ-ன்னு தெரியாது. ஜமாயுங்கள்.


1) இவரு நடிகரு. பேர்ல குளிருக்குத் தேவையானது இருக்கு. இவர் அண்ணன் இவரளவுக்கு ஃபேமஸாகல. (ஆனா வாளமீனை வளைச்சுப்போட்ட மேட்டர்ல மட்டும் ஃபேமஸானாரு.) யாரிவரு?

2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.

3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!

4) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?


5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..

அ) டி.வி.காமிராக்கள் ஆன் செய்யப்படவில்லை.
ஆ) பெய்ல் காணாமல் போயிருந்தது
இ) இந்திய காப்டன் தங்கள்மீது சத்தியம் செய்ததாகக் கூறினார்கள்.
ஈ) பாகிஸ்தான் வீரர் ஒருவர் வரத் தாமதமாகியது.

6) இவரும் பதிவர்தான். கார் வெச்சிருக்கற எல்லாருக்கும் கண்டிப்பா தேவை.

7) இது கொஞ்சம் ஃபேமஸானதுதான். இருந்தாலும் கேட்கறேன்..

விஜய்க்கு இருக்கு, சூர்யாவுக்கு இருக்கு. ஏன் ஜெமினி ஹீரோயின் கிரணுக்குக் கூட இருக்கு. ஆனா ஜெமினி ஹீரோ விக்ரமுக்கு இல்ல. அது என்ன?

8) இளம் அரசியல்வாதி. ராத்திரில குல்லால இருக்காரு.

9) இதுவும் பழசுதான்.

மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?

10) கொஞ்சம் யோசிக்க வைக்கற புதிர்..

மூடப்பட்ட மூணு பாக்ஸ். ஒண்ணுல ‘ஆப்பிள்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு. ஒண்ணுல ‘ஆரஞ்சு’ன்னு லேபிள் ஒடியிருக்கு. இன்னொண்ணுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு.

மூணுமே தப்புத் தப்பா ஒட்டிருக்கு. இப்போ நீங்க அதுல ஏதாவது ஒரு பாக்ஸ்ல இருக்கறதை மட்டும் கைவிட்டு எடுத்துப் பார்த்துட்டு, என்ன பழம்ன்னு பார்த்துக்கலாம். அதைப் பார்த்தபின்னாடி, நீங்க மூணு பாக்ஸ்லயும் என்னென்ன இருக்கும்ன்னு யோசிச்சு கரெக்டா லேபிள் ஒட்டீடணும். எப்படிக் கண்டுபிடிப்பீங்க?

***********************

ஒரு இண்ட்ரஸ்டிங்க் மேட்டர்...

93 டெஸ்ட் மாட்ச்களில் விளையாடி, 50+ பாட்டிங் ஆவரேஜில் இருந்த இவர் ஒரே ஒருநாள் போட்டிதான் விளையாடினார்.. அதில் எடுத்த ரன் - 0!

அவர்: கேரி சோபர்ஸ்!

*****************

மறுபடியும் சொல்றேன். பதிவோட தலைப்பை க்ளிக் பண்ணி, தம்ஸ் அப்ல ஓட்டுப் போடுங்க. ஆமா.....