டைரக்டர் கிச்சுகிச்சா இசையமைப்பாளர் மீஜிக் மன்னாருடன் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்அமர்ந்திருக்கிறார்.
“என்ன டைரக்டரே, இன்னும் பாடலாசிரியரைக் காணோம்?”
“பாடலாசிரியருக்கா வெய்ட் பண்ணீட்டிருக்கீங்க? நான்கூட இன்னும் உங்களுக்கு வர்லியோன்னு நினைச்சேன்”
“வந்திருச்சேய்யா, இப்போதானே டாய்லெட் போய்..”
“இல்லீங்க... மூடு வர்லியோன்னு கேட்டேன்..”
“அது கிடக்குது கழுத. பாடலாசிரியர் எங்கீங்க?”
“ஹி..ஹி.. நாந்தான் இந்தப் படத்துக்கு எல்லாப் பாட்டையும் எழுதறேன்”
“என்னது? நீதான் எழுதறியா? கிழிஞ்சது போ! நீ எழுதற வசனத்தையே எவனும் புரிஞ்சுக்க மாட்டீங்கறான். இதுல பாட்டு வேற எழுத வந்துட்டியா?”
“நீங்க போடற ம்யூசிக்ல பாட்டெங்கே கேக்கப் போகுது?”
“சரி... என்னமோ.. எழுதறது உம் பாடு, கேக்கறது கேக்கறவன் பாடு... சிச்சுவேஷன சொல்லு”
“அந்தக் கிராமத்துல இருக்கற..”
“என்னது? கிராமமா? நேத்துதான் தயாரிப்பாளர்ட்ட இதுவரைக்கும் போகாத நாட்டுக்கெல்லாம் போகணும்ன்னு ஆஸ்திரியாவிக்கு விசாவெல்லாம் ரெடி பண்ணச் சொன்ன?”
“அங்கதாங்க போய் கிராமத்து செட் போடப்போறேன்..”
”அதுசரி! ஏன்யா இங்க இருக்கற கிராமமெல்லாம் என்னாச்சு?”
”இந்த கிராமங்களெல்லாம் தன் சுயத்தை இழந்துவிட்டன. மரங்களில் கூடு கட்டிக் கொண்டிருந்த குருவிகள், இன்று ஃப்ளாட் வெண்டிலேட்டர்களிலே..”
“யோவ்... என்ன கேமராவா ஓடுது? எதுக்கு இவ்ளோ எமோஷன்?”
“சாரிங்க.. ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணீட்டிருந்தேனா.. அதான்..”
“ஓஹோ... மனப்பாடம் பண்ணித்தான் பேசறியா? அன்னிக்கு ஒரு இண்டர்வ்யூல எல்லாமே என் மனசிலேர்ந்து வருதுன்ன?”
“மனப்பாடம் பண்ணினா, மனசுக்குள்ளதானே இருக்கும்?”
“உன்னையெல்லாம்.. சரி. என்ன சிச்சுவேஷன்?”
”சிச்சுவேஷன் என்னன்னா ஹீரோ உக்கார்ந்திருக்கற கோவில்ல...”
“நீ என்ன `நான்கடவுளா எடுக்கற? ஹீரோவை கோவில்ல உக்காரவெச்சிருக்க?”
”இல்லிங்க நானெடுக்கறது `நான் பிச்சைக்காரன்’”
”தயாரிப்பாளரை மனசுல வெச்சுட்டு எடுக்கற போல... சரி சொல்லு”
“அந்தக் கோவிலுக்கு ஹெராயின்.. ச்சே.. ஹீரோயின் வர்றா, வந்து ஒரு ரூபா ஹீரோவுக்கு போடறா, அப்போ ஒரு ரூபாய்ல என்ன வாங்க முடியும்ன்னு கொதிச்சுப் போய், ஹீரோ நாட்டு விலைவாசிய பாட்டா பாடறான்”
”அடா.. அடா... பிச்சைக்காரன்கூட கேக்கற அளவுக்கு ஆயிடுச்சா நாட்டு நிலைமை?”
“சார்.. பிச்சைக்காரங்கள அவ்வளவு தாழ்வா நினைச்சுடாதீங்க”
“சரி, ம்ம்ம்ம், இது ஓக்கேவான்னு பாரு, தனனா தனனா தனனா, தந்தானா தந்தானா”
“தந்தாளா”ன்னு தானே வரணும்? தந்தானா’ன்னா ஆண்பால் வருது”
“ஆண்பாலா? உன் வாயில கள்ளிப்பால ஊத்த. இது மெட்டுய்யா..”
”ஓ! சரி.. சரி.. தனனா.. தனனா..” (மனதுக்குள் பாடிப்பார்த்து) இந்த வரிகள் ஓக்கேவா பாருங்க...”
“சொல்லு”
“தகஜம் தகஜம் தகஜம், தம்கிடதம் தம்கிடதம்”
“யோவ்... என்ன நக்கலா? மியீசிக்கெல்லாம் நான் போட்டுக்கறேன். நீ பாட்டு வரிய சொல்லு”
“பாட்டு வரிதாங்க இது...”
“பிச்சைக்காரன் எதுக்குய்யா தகஜம்னெல்லாம் பாடணும்?”
“எனக்கு பாரதத்து மேல ஆர்வம் அதிகம்க”
“பாரதத்து மேலயா? அடுத்த ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா?”
“ச்சே.. பரதத்து மேல’ன்னு சொல்ல வந்தேன்”
“அடிங்க... வேற சொல்லுய்யா” என்றபோது தயாரிப்பாளர் உள்ளே நுழைகிறார்.
“டைரக்டரே... நீரொண்ணும் பாட்டு எழுதிக் கிழிக்க வேண்டாம். அதுக்கு புதுசா மூணு பேரைக் கூட்டியாந்திருக்கேன்” என்கிறார்.
இயக்குனரும், இசையமைப்பாளாரும் வாசலைப் பார்க்க...
அங்கே...
சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட்!
-என் வலையுலக வரலாற்றில் (?) முதல் முறையாக
(தொடரும்)
-----------------------
டிஸ்கி 1: ஒண்ணுமில்ல.. எழுத எழுத இன்னைக்கு கொஞ்சம் நேரமா வரச்சொல்லி எம்.டி.-யிடமிருந்து ஃபோன். அதான் தொடரும் போட்டுட்டேன்.
டிஸ்கி 2: இந்தப் பின்குறிப்புகளை ‘டிஸ்கி’ன்னு ஏன் சொல்றாங்க? அதுக்கு என்ன அர்த்தம்? (அது தெரியாமயே இவ்ளோ நாள் எழுதீட்டிருந்திருக்கேன்!)
Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts
Tuesday, July 29, 2008
Saturday, July 26, 2008
ஆபரேஷன் சென்ஷி
அது ஒரு ஜூலை மாத மாலை.
கோவி.கண்ணன், முத்துலெட்சுமி கயல்விழி, வெண்பூ மற்றும் சில பதிவர்கள் அந்த காவல் நிலையத்திற்குள் செல்கின்றனர்.
“இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்”
‘வாங்க.. என்ன பிராது?’ வரவேற்கிறார் இன்ஸ்பெக்டர் வடகரைவேலன்.
”நாங்கெல்லாம் வலைப்பதிவர்கள்... பிளாக்கர்ஸ்ன்னு சொல்லுவாங்க” கோவியார் ஆரம்பிக்கிறார்.
“யாருலே சொல்லுதாக அப்பிடி?”
`ம்க்கும்! வெளங்குன மாதிரிதான்’ என்று மனசுக்குள் நினைத்த வெண்பூ, முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களைப் பார்த்து...
“கயலக்கா”
“அப்படிக் கூப்பிடாதீங்க”
“சரி.. சரி.. முத்தக்கா.. இந்த இன்ஸ்பெக்டர் ஏதாவது கோக்குமாக்கா கேக்கறதுக்கு முன்னாடி நீங்க எல்லாத்தையும் விலாவாரியா சொல்லீடுங்க”
”நாங்க இணையத்துல எங்க படைப்புகளை எழுதீட்டு இருக்கோம். எங்கள்ல ஒருத்தரான சென்ஷி-ங்கறவரை கொஞ்ச நாளா காணல. அது சம்பந்தமா ஒரு புகார் கொடுக்க வந்தோம்”
“ஓஹோ!” என்று புகாரை வாங்கி அவர்களை அனுப்பிவிட்டு ”வெயிலான்.. இங்க வாங்க” என்று அழைக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டர் வெயிலானிடம் புகாரை விளக்குறார் வேலன்.
“உங்களை நம்பி இந்தப் புகாரைக் குடுத்திருக்காங்க. இத கண்டுபிடிக்கலைன்னா உங்க மானம் கப்பலேறிடும்”
“நீ வேற கப்பல், கிப்பல்ன்னு பயமுறுத்தாதய்யா. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் வரப் போறாருல்ல. அவர்கிட்டயே இத ஒப்படைக்கலாம்”
அடுத்த சில மணிநேரங்களில்.. கௌபாய் மீஜிக் பின்னணியில் ஒலிக்க, பெரிய மீசையும் தொப்பியுமாய் தனது ஜீப்பில் வந்திறங்கினார் க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் லதானந்த். கூடவே அவரது பெட் கென்சி வாலாட்டியபடி வருகிறது.
வந்ததுமே இன்ஸ்பெக்டரை அழைக்கிறார்.
“ஏனுங்... எதுனா கேசு வந்துச்சுங்களாக்கும்?”
“ஆமாங்..“ என்று அவர் போலவே பேசவும் தனது மீசை துடிக்க ஒரு முறை முறைக்கிறார். உடனே வெயிலானை அழைத்து “அந்தப் புகாரை கொண்டாங்க” என்கிறார் வேலன்.
வெயிலான் அந்தப் புகாரோடு லதானந்திடம் வருகிறார்.
“அங்கிள்.....”
“அடக்கெரகமே.. என்னதிது.. இங்கிதம் இல்லாம... நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்? ச்சொம்மா அங்கிளு, ஆட்டுக்குட்டீன்னு. நானிப்போ ஆபீசர். தெரியுமில்ல?”
“சொரிங்க ஆபீசர்”
” `கெதக்’க்குங்குது எனக்கு. என்ரா சொன்ன?”
”சாரிங்க ஆபீசர்”
“ஆங்...” என்றபடி புகாரைப் படிக்கிறார். உதட்டைச் சுழித்தபடி “ம்க்கும்.. ஒரு எளவும் புரியல. என்னமோ வலைன்ராங்க, பதிவுன்ராங்க. தமிழ்மணம்ரானுங்க... நமக்கு வாய்மணம்தான் தெரியும்” என்று முனகியபடி தனது நண்பர் அப்பநாய்க்கம்பாளையம் அரங்கமுத்துசாமிக்கு தொலைபேசுகிறார்.
“அய்யா... இந்த வலைப்பதிவு, தமிழ்மணம்ங்கறதப்பத்தி ஒங்களுக்கு தெரியுமா”
“குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு காட்சி. தலைவன் தலைவியோடு ஊடல் கொள்கிறான். மலைகளும் மலைசார்ந்த இடமுமான..”
“இவரு வேற” என்று ஃபோனைத் துண்டித்தவராய் வெயிலானை அழைக்கிறாய்.
“வெயிலு... என்ன பண்ணலாம்?”
“நேரா ரூம் போட்டு, எனக்கு வோட்....” என்று சொல்ல ஆரம்பிக்க
“யோவ்... யோவ்.. வாய மூடு. அதெல்லாம் இங்கன பேசிராத. நம்ம இன்ஸ்பெக்டரைக் கூப்பிடு”
“இல்லீங்க. நமக்கு அந்தப் பழக்கமில்லைங்க” என்று வேலனின் குரல் பின்னால் கேட்கிறது.
“அட... அதில்ல. நீரு கம்ப்யூட்டர் சமாச்சாரத்துல கில்லாடியாச்சே... கொஞ்சம் இதெல்லாம் என்னன்னு பாரும்”
“அதத்தான் பாத்துட்டிருந்தேன்” என்று அவர்களை கம்ப்யூட்டர் அருகே அழைத்துச் செல்கிறார்.
“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.
பொறுமையாகப் பார்க்கிறார் லதானந்த். “இதென்ன... மட்டுறுத்தல், நடந்தது என்ன”
“அதெல்லாம் தொறந்துடாதீங்க. நமக்கு வேணாம். இதுல சென்ஷி-ங்கற பேரு இங்க இருக்கு பாருங்க”
“அட.. ஆமா...” என்று திறக்கிறார்கள். ஒரு சில பின்னூட்டங்களில் அவரது பெயர். அதில் ஒரு வலைப்பதிவருக்கு தொலைபேசுகிறார்.
”சென்ஷி வந்தாரா”
“இப்போதான் இங்க வந்து பின்னூட்டம் போட்டாரு. இதோ இருக்காரு. இருங்க லைன் தர்றேன்”
“வணக்கம்” என்கிறார் சென்ஷி.
“அட! ஆளப் புடிச்சுட்டனாட்ட இருக்கு” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் லதானந்த். `இது சென்ஷிதானான்னு தெரியலயே’ என்று வேலனிடம் சந்தேகமாய்க் கேட்டவாறு எதிர்முனையில் பேசுகிறார். “எங்க ராசா இருக்க நீ? ஒன்னையக் காணோமின்னு புகார் வந்திருக்கு ராசா”
“நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”
“அட.. எங்கன இருக்கன்னு தானப்பா கேட்டேன்”
“மீட்சிகளின் வழி கசியும் உதிரம்போல, காலச் சூழலும் இணையத்தொல்லைகளும் என்னை அடர் கானகத்தினுள் சிக்கிக்கொண்ட பெண்ணாய் தவித்து, பின்நவீனத்துவ”
“ஆஹா.. இது சென்ஷியேதாங்க” வேலன் உற்சாகமாகிறார்.
”எப்படிச் சொல்றீரு?”
“இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”
”சரி.. சரி.. இருங்க... என்ன சொல்றாருன்னு கேப்பம்”
“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”
”நிமிஷ கணமா? ஐய.. தல சுத்துதே ராசா”
“எதிராளியின் மீதும், எழுத்தின்மீதும் பழியைச் சுமத்தி தப்பித்துச் செல்லும் வழியில், தெளிந்த நீரோடையின் வடிவ உற்பத்தி வரும் பிரதிபலிப்பில் தொக்கித் தெரியும் நவீனத்துவம் எதேச்சாதிகாரமாய் ஒருத்தரிடமே ஒற்றைப்புள்ளியாய் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூழலில்...”
இங்கே லதானந்த்தின் செல்ஃபோன் வெடித்துச் சிதறுகிறது.
”அடக் கெரகமே.. பாலாஜிகிட்ட என்ன பதில் சொல்றது?” என்று உடைந்த ஃபோனை விரக்தியாய்ப் பார்த்தபடி “வேலன் சென்ஷி இப்படியாக என்ன காரணம்?” என்று கேட்க வேலன் அழைக்கிறார்.
“சார்... இங்கே பாருங்கள். தொலைதூர அடர் கானகத்தே வெளிச்சப் புள்ளியாய் ஒரு அடையாளம் தென்படுவதுபோல...”
“யோவ்... என்னாச்சுய்யா ஒனக்கு?”
“ச்சே” என்று தலையை சிலுப்பிக் கொள்கிறார் வேலன். “இதப் படிங்க” என்று ஒரு வலைப் பக்கத்தைக் காட்டுகிறார்.
படித்து, பிறகு கொஞ்ச நேரம் இணையத்தைப் புரட்டியவர் உற்சாகமாய் நிமிர்கிறார்.
“ஜீப்பை எடு.. வேலன் உக்காருங்க. அடரஸ் தெரியுமா?” என்று ஜீப்பில் தாவுகிறார்.
“வெயிலான் குடுத்தாப்ல” வேலன் சொல்ல, ஜீப் பயணிக்கிறது.
“வெரிகுட் வேலன். சரியான துப்பு கொடுத்தீங்க. ஒங்க சந்தேகம் நெசந்தேன். அவனப் புடிச்சு, முட்டிக்கு முட்டி தட்டினா எல்லாம் தெரியும்”
“ஆமா... சார். ஒழுங்கா கும்மி, மொக்கைன்னு இருந்தவரை கேள்விகேட்டு இப்படி ஆக்கிட்டான்”
“அதுமில்லாம அவன் எழுதியிருந்ததயெல்லாம் படிச்சீங்கள்ல? எப்பப் பாரு பழசையே பேசிகிட்டு, சரக்கே இல்லாத ஆசாமி அவன்” என்றவாறு அந்த வீட்டின் முன் நிறுத்தி காலிங்பெல்லை அழுத்துகிறார்.
------------------------------
பரிசல்காரன்: “ச்சே.. ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னா யாரோ வந்து கூப்பிடறாங்க.. இருங்க யாருன்னு பாத்துட்டு வர்றேன்”
கோவி.கண்ணன், முத்துலெட்சுமி கயல்விழி, வெண்பூ மற்றும் சில பதிவர்கள் அந்த காவல் நிலையத்திற்குள் செல்கின்றனர்.
“இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்”
‘வாங்க.. என்ன பிராது?’ வரவேற்கிறார் இன்ஸ்பெக்டர் வடகரைவேலன்.
”நாங்கெல்லாம் வலைப்பதிவர்கள்... பிளாக்கர்ஸ்ன்னு சொல்லுவாங்க” கோவியார் ஆரம்பிக்கிறார்.
“யாருலே சொல்லுதாக அப்பிடி?”
`ம்க்கும்! வெளங்குன மாதிரிதான்’ என்று மனசுக்குள் நினைத்த வெண்பூ, முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களைப் பார்த்து...
“கயலக்கா”
“அப்படிக் கூப்பிடாதீங்க”
“சரி.. சரி.. முத்தக்கா.. இந்த இன்ஸ்பெக்டர் ஏதாவது கோக்குமாக்கா கேக்கறதுக்கு முன்னாடி நீங்க எல்லாத்தையும் விலாவாரியா சொல்லீடுங்க”
”நாங்க இணையத்துல எங்க படைப்புகளை எழுதீட்டு இருக்கோம். எங்கள்ல ஒருத்தரான சென்ஷி-ங்கறவரை கொஞ்ச நாளா காணல. அது சம்பந்தமா ஒரு புகார் கொடுக்க வந்தோம்”
“ஓஹோ!” என்று புகாரை வாங்கி அவர்களை அனுப்பிவிட்டு ”வெயிலான்.. இங்க வாங்க” என்று அழைக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டர் வெயிலானிடம் புகாரை விளக்குறார் வேலன்.
“உங்களை நம்பி இந்தப் புகாரைக் குடுத்திருக்காங்க. இத கண்டுபிடிக்கலைன்னா உங்க மானம் கப்பலேறிடும்”
“நீ வேற கப்பல், கிப்பல்ன்னு பயமுறுத்தாதய்யா. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் வரப் போறாருல்ல. அவர்கிட்டயே இத ஒப்படைக்கலாம்”
அடுத்த சில மணிநேரங்களில்.. கௌபாய் மீஜிக் பின்னணியில் ஒலிக்க, பெரிய மீசையும் தொப்பியுமாய் தனது ஜீப்பில் வந்திறங்கினார் க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் லதானந்த். கூடவே அவரது பெட் கென்சி வாலாட்டியபடி வருகிறது.
வந்ததுமே இன்ஸ்பெக்டரை அழைக்கிறார்.
“ஏனுங்... எதுனா கேசு வந்துச்சுங்களாக்கும்?”
“ஆமாங்..“ என்று அவர் போலவே பேசவும் தனது மீசை துடிக்க ஒரு முறை முறைக்கிறார். உடனே வெயிலானை அழைத்து “அந்தப் புகாரை கொண்டாங்க” என்கிறார் வேலன்.
வெயிலான் அந்தப் புகாரோடு லதானந்திடம் வருகிறார்.
“அங்கிள்.....”
“அடக்கெரகமே.. என்னதிது.. இங்கிதம் இல்லாம... நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்? ச்சொம்மா அங்கிளு, ஆட்டுக்குட்டீன்னு. நானிப்போ ஆபீசர். தெரியுமில்ல?”
“சொரிங்க ஆபீசர்”
” `கெதக்’க்குங்குது எனக்கு. என்ரா சொன்ன?”
”சாரிங்க ஆபீசர்”
“ஆங்...” என்றபடி புகாரைப் படிக்கிறார். உதட்டைச் சுழித்தபடி “ம்க்கும்.. ஒரு எளவும் புரியல. என்னமோ வலைன்ராங்க, பதிவுன்ராங்க. தமிழ்மணம்ரானுங்க... நமக்கு வாய்மணம்தான் தெரியும்” என்று முனகியபடி தனது நண்பர் அப்பநாய்க்கம்பாளையம் அரங்கமுத்துசாமிக்கு தொலைபேசுகிறார்.
“அய்யா... இந்த வலைப்பதிவு, தமிழ்மணம்ங்கறதப்பத்தி ஒங்களுக்கு தெரியுமா”
“குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு காட்சி. தலைவன் தலைவியோடு ஊடல் கொள்கிறான். மலைகளும் மலைசார்ந்த இடமுமான..”
“இவரு வேற” என்று ஃபோனைத் துண்டித்தவராய் வெயிலானை அழைக்கிறாய்.
“வெயிலு... என்ன பண்ணலாம்?”
“நேரா ரூம் போட்டு, எனக்கு வோட்....” என்று சொல்ல ஆரம்பிக்க
“யோவ்... யோவ்.. வாய மூடு. அதெல்லாம் இங்கன பேசிராத. நம்ம இன்ஸ்பெக்டரைக் கூப்பிடு”
“இல்லீங்க. நமக்கு அந்தப் பழக்கமில்லைங்க” என்று வேலனின் குரல் பின்னால் கேட்கிறது.
“அட... அதில்ல. நீரு கம்ப்யூட்டர் சமாச்சாரத்துல கில்லாடியாச்சே... கொஞ்சம் இதெல்லாம் என்னன்னு பாரும்”
“அதத்தான் பாத்துட்டிருந்தேன்” என்று அவர்களை கம்ப்யூட்டர் அருகே அழைத்துச் செல்கிறார்.
“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.
பொறுமையாகப் பார்க்கிறார் லதானந்த். “இதென்ன... மட்டுறுத்தல், நடந்தது என்ன”
“அதெல்லாம் தொறந்துடாதீங்க. நமக்கு வேணாம். இதுல சென்ஷி-ங்கற பேரு இங்க இருக்கு பாருங்க”
“அட.. ஆமா...” என்று திறக்கிறார்கள். ஒரு சில பின்னூட்டங்களில் அவரது பெயர். அதில் ஒரு வலைப்பதிவருக்கு தொலைபேசுகிறார்.
”சென்ஷி வந்தாரா”
“இப்போதான் இங்க வந்து பின்னூட்டம் போட்டாரு. இதோ இருக்காரு. இருங்க லைன் தர்றேன்”
“வணக்கம்” என்கிறார் சென்ஷி.
“அட! ஆளப் புடிச்சுட்டனாட்ட இருக்கு” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் லதானந்த். `இது சென்ஷிதானான்னு தெரியலயே’ என்று வேலனிடம் சந்தேகமாய்க் கேட்டவாறு எதிர்முனையில் பேசுகிறார். “எங்க ராசா இருக்க நீ? ஒன்னையக் காணோமின்னு புகார் வந்திருக்கு ராசா”
“நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”
“அட.. எங்கன இருக்கன்னு தானப்பா கேட்டேன்”
“மீட்சிகளின் வழி கசியும் உதிரம்போல, காலச் சூழலும் இணையத்தொல்லைகளும் என்னை அடர் கானகத்தினுள் சிக்கிக்கொண்ட பெண்ணாய் தவித்து, பின்நவீனத்துவ”
“ஆஹா.. இது சென்ஷியேதாங்க” வேலன் உற்சாகமாகிறார்.
”எப்படிச் சொல்றீரு?”
“இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”
”சரி.. சரி.. இருங்க... என்ன சொல்றாருன்னு கேப்பம்”
“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”
”நிமிஷ கணமா? ஐய.. தல சுத்துதே ராசா”
“எதிராளியின் மீதும், எழுத்தின்மீதும் பழியைச் சுமத்தி தப்பித்துச் செல்லும் வழியில், தெளிந்த நீரோடையின் வடிவ உற்பத்தி வரும் பிரதிபலிப்பில் தொக்கித் தெரியும் நவீனத்துவம் எதேச்சாதிகாரமாய் ஒருத்தரிடமே ஒற்றைப்புள்ளியாய் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூழலில்...”
இங்கே லதானந்த்தின் செல்ஃபோன் வெடித்துச் சிதறுகிறது.
”அடக் கெரகமே.. பாலாஜிகிட்ட என்ன பதில் சொல்றது?” என்று உடைந்த ஃபோனை விரக்தியாய்ப் பார்த்தபடி “வேலன் சென்ஷி இப்படியாக என்ன காரணம்?” என்று கேட்க வேலன் அழைக்கிறார்.
“சார்... இங்கே பாருங்கள். தொலைதூர அடர் கானகத்தே வெளிச்சப் புள்ளியாய் ஒரு அடையாளம் தென்படுவதுபோல...”
“யோவ்... என்னாச்சுய்யா ஒனக்கு?”
“ச்சே” என்று தலையை சிலுப்பிக் கொள்கிறார் வேலன். “இதப் படிங்க” என்று ஒரு வலைப் பக்கத்தைக் காட்டுகிறார்.
படித்து, பிறகு கொஞ்ச நேரம் இணையத்தைப் புரட்டியவர் உற்சாகமாய் நிமிர்கிறார்.
“ஜீப்பை எடு.. வேலன் உக்காருங்க. அடரஸ் தெரியுமா?” என்று ஜீப்பில் தாவுகிறார்.
“வெயிலான் குடுத்தாப்ல” வேலன் சொல்ல, ஜீப் பயணிக்கிறது.
“வெரிகுட் வேலன். சரியான துப்பு கொடுத்தீங்க. ஒங்க சந்தேகம் நெசந்தேன். அவனப் புடிச்சு, முட்டிக்கு முட்டி தட்டினா எல்லாம் தெரியும்”
“ஆமா... சார். ஒழுங்கா கும்மி, மொக்கைன்னு இருந்தவரை கேள்விகேட்டு இப்படி ஆக்கிட்டான்”
“அதுமில்லாம அவன் எழுதியிருந்ததயெல்லாம் படிச்சீங்கள்ல? எப்பப் பாரு பழசையே பேசிகிட்டு, சரக்கே இல்லாத ஆசாமி அவன்” என்றவாறு அந்த வீட்டின் முன் நிறுத்தி காலிங்பெல்லை அழுத்துகிறார்.
------------------------------
பரிசல்காரன்: “ச்சே.. ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னா யாரோ வந்து கூப்பிடறாங்க.. இருங்க யாருன்னு பாத்துட்டு வர்றேன்”
Monday, July 21, 2008
இவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்
நேற்று நான் சொன்ன `சும்மா’ இதழிலிருந்து...
**********
இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..
மணிரத்னம்:
மணி: ”காபி”
சுஹாசினி: ”நேரமாகும்”
”எனக்கு வேணும். இப்ப வேணும்..”
”முடியாது”
”ஏன்?”
”முடியாதுன்னா முடியாது”
”அதான் ஏன்?”
”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”
”நிறுத்து”
”எதை..எதை நிறுத்தறது?”
”சாம்பாரை நிறுத்து..”
”ஏன்?”
”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”
டி.ராஜேந்தர்:
டி.ஆர்: ”ஏய்..உஷா.. மழை வருது லேசா.. நான் நேத்துப் பாத்தேன் பாட்ஷா.. ஒரு காபி போடு பேஷா..”
உஷா: ”அடுப்புல சாப்பாடு, சாம்பார் வெந்துட்டிருக்கு”
”எடை போடணும்னா தராசுல நிறுத்துப் போடு. காபி போடணும்ன்னா ஏதோ ஒண்ணை நிறுத்திப் போடு”
“முடியாது. சாப்பாடு போடலைன்னா விரலால வித்தை காட்டுவேன்னு பயமுறுத்தறான் சிம்பு”
“சிம்புவா? சிம்புவா அப்படிச் சொன்னான்? (உடனே கண்களில் நீர் வருகிறது.. தலையைக் கோதி விட்டபடி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டே..) ஏய் சிம்பு.. நீ ரெண்டு வயசுல பொம்மை கேட்ட. வாங்கித்தந்தேன். பத்து வயசுல படத்துக்குப் போக காசு கேட்ட. குடுத்தேன். ஆனா... ஆனா இப்ப இந்த அப்பாவுக்கு ஒரு காபி கேட்டா...
(`யோவ்..’ என்றபடி சிம்பு வர.. ஓடுகிறார்)
விஜயகாந்த்:
”ஏஏஏஏஏய்ய்! ஒரு காபி குடு”
”அடுப்புல சாப்பாடும், சாம்பாரும் வேகுதுங்க”
“இன்னொரு கேஸ்ல, இன்னொரு அடுப்புல பத்தவெச்சு போடு”
“ஒரு கேஸ்தான் இருக்கு”
“தமிழ்நாட்டுக்கு ஒரு வீட்டுக்கு ரெண்டு சிலிண்டர் தரணும்ன்னு எந்த அரசியல்வாதியாவது நெனச்சானா? ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு மூணு காபி குடிக்கணும். வருஷத்துக்கு 1095 காபி. ஒருத்தன் சராசரியா 60 வருஷம் உயிரோட இருப்பான்னு வெச்சுகிட்டாலும் மொத்தம் 65700 காபி குடிக்கணும்ன்னா எத்தனை சிலிண்டர் வேணும்? ஒரு சிலிண்டருக்கு 100 காபி-ன்னாலும் 657 சிலிண்டர் வேணும்.. அப்படீன்னா”
(திரும்பினால் அவரது மனைவி, வேலைக்காரர்களெல்லாம் மீட்டை முடிச்சோடு மதுரைக்கு ஓடுகிறார்கள்)
ரஜினிகாந்த்:
ரஜினி: ”ஜில்லு.. காபி..காபி”
லதா: ”முடியாதுங்க“
“ஏன்..ஏன்..ஏன்?”
“அடுப்புல சாப்பாடு, சாம்பார் வேகுது”
விரலைச் சுழற்றுகிறார்... “நான் ஒரு சிலிண்டர் வாங்கினா...”
“ஒரு சிலிண்டர்தான். நூறு சிலிண்டர் எல்லாம் ஆகாது.”
”ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ்ஹாஆஆ” ஸடைலாகச் சிரிக்கிறார்.
**********
இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..
மணிரத்னம்:
மணி: ”காபி”
சுஹாசினி: ”நேரமாகும்”
”எனக்கு வேணும். இப்ப வேணும்..”
”முடியாது”
”ஏன்?”
”முடியாதுன்னா முடியாது”
”அதான் ஏன்?”
”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”
”நிறுத்து”
”எதை..எதை நிறுத்தறது?”
”சாம்பாரை நிறுத்து..”
”ஏன்?”
”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”
டி.ராஜேந்தர்:
டி.ஆர்: ”ஏய்..உஷா.. மழை வருது லேசா.. நான் நேத்துப் பாத்தேன் பாட்ஷா.. ஒரு காபி போடு பேஷா..”
உஷா: ”அடுப்புல சாப்பாடு, சாம்பார் வெந்துட்டிருக்கு”
”எடை போடணும்னா தராசுல நிறுத்துப் போடு. காபி போடணும்ன்னா ஏதோ ஒண்ணை நிறுத்திப் போடு”
“முடியாது. சாப்பாடு போடலைன்னா விரலால வித்தை காட்டுவேன்னு பயமுறுத்தறான் சிம்பு”
“சிம்புவா? சிம்புவா அப்படிச் சொன்னான்? (உடனே கண்களில் நீர் வருகிறது.. தலையைக் கோதி விட்டபடி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டே..) ஏய் சிம்பு.. நீ ரெண்டு வயசுல பொம்மை கேட்ட. வாங்கித்தந்தேன். பத்து வயசுல படத்துக்குப் போக காசு கேட்ட. குடுத்தேன். ஆனா... ஆனா இப்ப இந்த அப்பாவுக்கு ஒரு காபி கேட்டா...
(`யோவ்..’ என்றபடி சிம்பு வர.. ஓடுகிறார்)
விஜயகாந்த்:
”ஏஏஏஏஏய்ய்! ஒரு காபி குடு”
”அடுப்புல சாப்பாடும், சாம்பாரும் வேகுதுங்க”
“இன்னொரு கேஸ்ல, இன்னொரு அடுப்புல பத்தவெச்சு போடு”
“ஒரு கேஸ்தான் இருக்கு”
“தமிழ்நாட்டுக்கு ஒரு வீட்டுக்கு ரெண்டு சிலிண்டர் தரணும்ன்னு எந்த அரசியல்வாதியாவது நெனச்சானா? ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு மூணு காபி குடிக்கணும். வருஷத்துக்கு 1095 காபி. ஒருத்தன் சராசரியா 60 வருஷம் உயிரோட இருப்பான்னு வெச்சுகிட்டாலும் மொத்தம் 65700 காபி குடிக்கணும்ன்னா எத்தனை சிலிண்டர் வேணும்? ஒரு சிலிண்டருக்கு 100 காபி-ன்னாலும் 657 சிலிண்டர் வேணும்.. அப்படீன்னா”
(திரும்பினால் அவரது மனைவி, வேலைக்காரர்களெல்லாம் மீட்டை முடிச்சோடு மதுரைக்கு ஓடுகிறார்கள்)
ரஜினிகாந்த்:
ரஜினி: ”ஜில்லு.. காபி..காபி”
லதா: ”முடியாதுங்க“
“ஏன்..ஏன்..ஏன்?”
“அடுப்புல சாப்பாடு, சாம்பார் வேகுது”
விரலைச் சுழற்றுகிறார்... “நான் ஒரு சிலிண்டர் வாங்கினா...”
“ஒரு சிலிண்டர்தான். நூறு சிலிண்டர் எல்லாம் ஆகாது.”
”ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ்ஹாஆஆ” ஸடைலாகச் சிரிக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)