என்னை எழுத அழைத்த அன்னுவிற்காக....
*********************************
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பரிசல்காரன்.
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை. காரணம் ஏற்கனவே கூறியதுதான்.. இங்கே படித்தால் தெரியும்..
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இதற்கும் இரண்டாவது பதிலில் குறிப்பிட்டிருக்கும் இணைப்பைக் க்ளிக்கினால் போதுமானது. (அதுக்காக காலடி எடுத்து வைக்கறதெல்லாம் பெரிய வார்த்தைங்க.. தவிரவும்... வலைப்பதிவுன்னா கைவிரலடிதானே எடுத்து வைக்கணும்??)
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ம்க்கும்..
முதலில் அப்போதைய அமெரிக்க ப்ரசிடெண்ட் GEORGE W BUSHஷிடம் என் வலைப்பூவைப் பிரபலமாக ஆக்க, அவரை இந்தியா -சிங்கப்பூர் - இங்கிலாந்து - பாரீஸ் - லண்டன் - நார்வே - ஃப்ரான்ஸ் என்று என் வாசகர்கள் வசிக்கும் மூலை முடுக்கிற்கெல்லாம் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர் மறுத்ததால் அடுத்து நடந்த தேர்தலில் அவருக்கெதிரான டெமாக்ரடிக் கட்சிக்கு நான் ஆதரவளித்து ஒபாமாவை ப்ரசிடெண்ட் ஆக்கிய விபரம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அடுத்ததாக.. சச்சின் டெண்டுல்கரை எனது வலைப்பூவின் ப்ராண்ட் அம்பாசிடராக ஆக்கும் முயற்சிகள் மேற்கொண்டேன். அவர் ‘ ப்ராண்ட் பி எம் டபிள்யூவாகவோ, ப்ராண்ட் புகாட்டியாகவோ வேண்டுமானால் வருவேன், ப்ராண்ட் அம்பாசிடராக வரமாட்டேன்’ என்று வட்டதிட்டமாகக் கூறியதால் எங்களிருவருக்கும் லேசான மனக்கசப்பு நேர்ந்து அப்போதைய காலகட்டத்தில் இது குறித்து BARஆளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..
மேலும்..
என்னது போதுமா? சரி.. சரி..
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
1) என் மனைவி, மகள்களின் பெயர்களை அப்படியே குறிப்பிடுவேன். விளைவு என்றால் எல்லாருடைய அன்பும், யார் அழைத்தாலும் உமா, மீரா, மேகா எப்படி இருக்காங்க என்ற விசாரிப்பு கிடைப்பதும்தான்.
2) முன்பெல்லாம் மகள்களின் ஃபோட்டோஸ் போடுவேன்.. சென்னை சென்றபோது ஒருமுறை ‘என் மருமகள்கள் ஃபோட்டோஸ் போட்டா மண்டைலேயே குட்டுவேன்’ என்று அப்துல்லா மிரட்டல் விடுக்கவே அதைக் குறைத்துக் கொண்டேன்..
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் எழுதாவிட்டால் இந்த தமிழையும் தமிழ் உலகத்தையும் காப்பாற்ற யாருமில்லையே என்ற ஆற்றாமையில் பதிவெழுதுகிறேன்.
(யாருய்யா இந்தப் பதிலுக்குச் சிரிக்கறது.. சீரியஸா சொல்றேனாக்கும்.. ஆமா..)
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒரு வலைப்பூவுக்கே போதும் போதும்ங்க தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாங்க.. இதுல மொழிவாரி வலைப்பூக்களா? கிழிஞ்சது போங்க..
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
எல்லார் மேலயும் பொறாமை உண்டு. ஏதாவது ஓர் பதிவில் அவர்கள் தொட்டிருக்கும் விஷயம் + அதை எழுதியிருக்கும் விதத்தைப் படித்து ‘நாம் எழுதினால் இப்படி வந்திருக்காதே’ என்று பொறாமைப் பட்டிருக்கிறேன்..
கோபம்? To Be Honest... ஒருவர் மீது வந்ததுண்டு..! ஏன் எதற்கு என்பது வேண்டாமே...
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
‘தொடர்புகொண்டு’ மீன்ஸ், பின்னூட்டங்களில்லாமல் அலைபேசியில் அல்லது நேரில் என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். அப்படியானால் என் கஸின் க்ரேசி கிரி.
படித்துவிட்டு அவன் சொன்னது: ‘வேணாண்ணா.. விட்டுடலாம்.. ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டுட்டா பின்னாடி சரிபண்றது ரொம்பக் கஷ்டம்’
ப்ச்.. நல்ல விஷயத்தைச் சொல்லி எவன் கேட்டிருக்கான் சொல்லுங்க...?
10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
தெரியவேண்டியவை அனைத்தும் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.. அதுனால இந்தக் கேள்வியை சாய்ஸ்ல விட்டுடலாம்.
இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது...
ஹலோ.. ஹலோ... ப்ச்.. உங்களைத்தாங்க.. நில்லுங்க.. எங்க ஓடறீங்க?..
ச்சே.. யாரையும் காணோமே......
.
டிஸ்கி: எல்லா கேள்விகளுமே ஏற்கனவே நான் எழுதிட்ட மாதிரியே இருக்கு. அப்படி எழுதியிருந்து, மெனக்கெட்டு தேடி அதைக் கண்டுபிடிச்சு ‘அன்னைக்கு அப்படிச் சொல்லிருக்கீங்களே.. இன்னைக்கு இப்படிச் சொல்லிருக்கீங்களே’ன்னெல்லாம் கேள்வி கேட்டு கோர்ட்டுல நிக்க வெச்சீங்கன்னா.. பிச்சுப்புடுவேன் பிச்சு.. ஆமா..
.
Wednesday, September 29, 2010
Tuesday, September 28, 2010
28 செப்டம்பர் 2010
அ
நிறுவனத்தின் வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை ட்ராஃபிக் போலீஸ் பிடித்து ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அவரும் காண்பித்திருக்கிறார். காண்பிக்கும்போது ‘டைமாச்சு சார்.. கொஞ்சம் டெலிவரி அர்ஜெண்ட்’ என்று ஏதோ பேசியிருப்பார் போல. சார்ஜெண்டுக்குக் கோவம் வந்து ‘உன் மேல கேஸ் போடாம விடக்கூடாதுய்யா' என்று வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்து எதையெதையோ குறிப்பெடுத்துக் கொண்டாராம். ட்ரைவர் மறுபடியும் ‘என்னத்தை சார் தேடறீங்க.. எல்லாம் கரெக்டாதானே இருக்கு’ என்று கேட்கவும் ‘எங்க கரெக்டா இருக்கு? நீ ஷேவிங் பண்ணாம வந்திருக்கியே’ என்று சொன்னாராம். கடைசியில் விளக்கு முகப்பில் கறுப்பு ஸ்டிக்கர் இல்லாததற்கு ஃபைன் கட்டச் சொன்னாராம்.
அலுவலகத்தில் இதுபற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்கையில், காவலர் செய்தது சரிதான் என்றும்... வாகனம் ஓட்டுகையில் ட்ரைவர் முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்டம் சொல்கிறது என்றும் சொன்னார் சக நண்பர் ஒருவர். அப்படியா? யாருக்காவது இதுபற்றித் தெரியுமா?
*** *** *** *** ***
வி
ஒரு நண்பர்.. ஒரு வாக்கியத்தில் இரண்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது எண்ணினேன்.. பதினைந்து நிமிடப் பேச்சில் பதினெட்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ வந்துபோனது. ‘அதை மட்டும் சொல்றதை நிறுத்தினீங்கன்னா உங்க எனர்ஜி நிறைய சேவ் ஆகும் சார்’ என்று அவரிடமே கூறினேன்.
‘கரெக்ட்தான் கிருஷ்ணா.. ஆனா அது.. வந்து பாத்தீங்கன்னா.. அப்படி சட்னு ஆகறதில்லை. ஏன்னு.. வந்து பாத்தீங்கன்னா.. எனக்கே தெரியாம அது வருது.. வீட்ல.. வந்து பாத்தீங்கன்னா.. அவங்களும் இதைச் சொல்லுவாங்க.. ஆனா.. வந்து பாத்தீங்கன்னா..’
‘கொஞ்சம் வேலையிருக்கு சார். இப்ப வந்துடறேன்’ என்று வந்துவிட்டேன். பிறகு வந்து பார்க்கவேயில்லை அவரை!
நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை ‘சரியா’ அல்லது ‘புரிஞ்சுதா’. என் நண்பன் ஒருவர் ‘பக்கா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். இன்னொருவர்.. ‘சான்ஸே இல்ல’. அதிகம் பேர் இந்த சான்ஸே இல்லையைத்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். சகா கார்க்கி இந்த சான்ஸே இல்லையை அழகாக ‘வாய்ப்பே இல்ல சகா’ என்பான்.
நீங்க எந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?
*** *** ** *** *** ***
ய
ரசித்த எஸ்ஸெம்மெஸ்:
‘நேத்து ஒரு பொண்ணை ரேப்லேர்ந்து காப்பாத்தீட்டேண்டா..’
‘வெரிகுட்ரா! எப்படி?’
‘செல்ஃப் கண்ட்ரோல் மச்சி.. செல்ஃப் கண்ட்ரோல்!’
ரசித்த கேள்வி பதில்:
‘சூர்யா – கார்த்தி இருவருக்குமான போட்டியில் ஜெயிப்பது யார்?’
‘சிவகுமார்’
(தினகரன் – நாட்டாமை பதில்கள்)
ரசித்த பதிவு:
ரமேஷ் வைத்யாவின் ‘ஐயடிகள் காடவர்கோன் தொடர்கதை’
ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:
‘இறகைப் போலே அலைகிறேனே’ – நான் மகான் அல்ல
ரசிக்கும் விஷயம்:
எங்கள் சவால் சிறுகதைப் போட்டிக்கு நண்பர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவர்களின் வித விதமான வித்தியாசமான கதைகளும்!
ல்
ட்விட்டர் அப்டேட்ஸ்:
# கிருஷ்ணஜெயந்திக்கு அவரை வீட்டுக்கு அழைக்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அவரை கடலில் போடுகிறார்கள். பாச்சுலர்ஸை யாருமே மதிக்கறதில்லைப்பா!
# பொண்ணுக்கு 25க்கு மேல இருந்தா கல்யாணம் என்றார். வயசு ஜாஸ்தியா இருக்கே என்றேன். நான் சொன்னது சம்பளம் என்கிறார். #பேராசை
# செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது. ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.
# ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்
# திருமணநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பர் சொன்னார்: ‘உனக்கு வாழ்த்துக்கள்.. சிஸ்டருக்கு ஆறுதல்கள்’ #தெளிவாத்தான் யோசிக்கறாங்கப்பா..!
# அசின் நீச்சலுடையில் நடிக்கிறார் என்று நினைத்து விட்டேன். ‘அரசின் சிக்கன நடவடிக்கை’ என்பதை ”அசின்” சிக்கன நடவடிக்கை என்று படித்து...
# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!
# ராஜபக்ஷே அத்தனை குண்டு வீசி அத்தனை பேரோட ஆயுளைக் குறைச்சப்ப வராத கோவம் ரந்தீவ் ஒரு நோபால் வீசி ஒரு செஞ்சுரியைக் குறைச்சதுக்கு வருது!
***************************************************
வேண்டுகோள்:
கேபிள் சங்கரின் இந்தப் பதிவில் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் விஷயத்திற்கு உதவப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றி!
.
நிறுவனத்தின் வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை ட்ராஃபிக் போலீஸ் பிடித்து ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அவரும் காண்பித்திருக்கிறார். காண்பிக்கும்போது ‘டைமாச்சு சார்.. கொஞ்சம் டெலிவரி அர்ஜெண்ட்’ என்று ஏதோ பேசியிருப்பார் போல. சார்ஜெண்டுக்குக் கோவம் வந்து ‘உன் மேல கேஸ் போடாம விடக்கூடாதுய்யா' என்று வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்து எதையெதையோ குறிப்பெடுத்துக் கொண்டாராம். ட்ரைவர் மறுபடியும் ‘என்னத்தை சார் தேடறீங்க.. எல்லாம் கரெக்டாதானே இருக்கு’ என்று கேட்கவும் ‘எங்க கரெக்டா இருக்கு? நீ ஷேவிங் பண்ணாம வந்திருக்கியே’ என்று சொன்னாராம். கடைசியில் விளக்கு முகப்பில் கறுப்பு ஸ்டிக்கர் இல்லாததற்கு ஃபைன் கட்டச் சொன்னாராம்.
அலுவலகத்தில் இதுபற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்கையில், காவலர் செய்தது சரிதான் என்றும்... வாகனம் ஓட்டுகையில் ட்ரைவர் முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்டம் சொல்கிறது என்றும் சொன்னார் சக நண்பர் ஒருவர். அப்படியா? யாருக்காவது இதுபற்றித் தெரியுமா?
*** *** *** *** ***
வி
ஒரு நண்பர்.. ஒரு வாக்கியத்தில் இரண்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது எண்ணினேன்.. பதினைந்து நிமிடப் பேச்சில் பதினெட்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ வந்துபோனது. ‘அதை மட்டும் சொல்றதை நிறுத்தினீங்கன்னா உங்க எனர்ஜி நிறைய சேவ் ஆகும் சார்’ என்று அவரிடமே கூறினேன்.
‘கரெக்ட்தான் கிருஷ்ணா.. ஆனா அது.. வந்து பாத்தீங்கன்னா.. அப்படி சட்னு ஆகறதில்லை. ஏன்னு.. வந்து பாத்தீங்கன்னா.. எனக்கே தெரியாம அது வருது.. வீட்ல.. வந்து பாத்தீங்கன்னா.. அவங்களும் இதைச் சொல்லுவாங்க.. ஆனா.. வந்து பாத்தீங்கன்னா..’
‘கொஞ்சம் வேலையிருக்கு சார். இப்ப வந்துடறேன்’ என்று வந்துவிட்டேன். பிறகு வந்து பார்க்கவேயில்லை அவரை!
நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை ‘சரியா’ அல்லது ‘புரிஞ்சுதா’. என் நண்பன் ஒருவர் ‘பக்கா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். இன்னொருவர்.. ‘சான்ஸே இல்ல’. அதிகம் பேர் இந்த சான்ஸே இல்லையைத்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். சகா கார்க்கி இந்த சான்ஸே இல்லையை அழகாக ‘வாய்ப்பே இல்ல சகா’ என்பான்.
நீங்க எந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?
*** *** ** *** *** ***
ய
ரசித்த எஸ்ஸெம்மெஸ்:
‘நேத்து ஒரு பொண்ணை ரேப்லேர்ந்து காப்பாத்தீட்டேண்டா..’
‘வெரிகுட்ரா! எப்படி?’
‘செல்ஃப் கண்ட்ரோல் மச்சி.. செல்ஃப் கண்ட்ரோல்!’
ரசித்த கேள்வி பதில்:
‘சூர்யா – கார்த்தி இருவருக்குமான போட்டியில் ஜெயிப்பது யார்?’
‘சிவகுமார்’
(தினகரன் – நாட்டாமை பதில்கள்)
ரசித்த பதிவு:
ரமேஷ் வைத்யாவின் ‘ஐயடிகள் காடவர்கோன் தொடர்கதை’
ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:
‘இறகைப் போலே அலைகிறேனே’ – நான் மகான் அல்ல
ரசிக்கும் விஷயம்:
எங்கள் சவால் சிறுகதைப் போட்டிக்கு நண்பர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவர்களின் வித விதமான வித்தியாசமான கதைகளும்!
ல்
ட்விட்டர் அப்டேட்ஸ்:
# கிருஷ்ணஜெயந்திக்கு அவரை வீட்டுக்கு அழைக்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அவரை கடலில் போடுகிறார்கள். பாச்சுலர்ஸை யாருமே மதிக்கறதில்லைப்பா!
# பொண்ணுக்கு 25க்கு மேல இருந்தா கல்யாணம் என்றார். வயசு ஜாஸ்தியா இருக்கே என்றேன். நான் சொன்னது சம்பளம் என்கிறார். #பேராசை
# செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது. ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.
# ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்
# திருமணநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பர் சொன்னார்: ‘உனக்கு வாழ்த்துக்கள்.. சிஸ்டருக்கு ஆறுதல்கள்’ #தெளிவாத்தான் யோசிக்கறாங்கப்பா..!
# அசின் நீச்சலுடையில் நடிக்கிறார் என்று நினைத்து விட்டேன். ‘அரசின் சிக்கன நடவடிக்கை’ என்பதை ”அசின்” சிக்கன நடவடிக்கை என்று படித்து...
# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!
# ராஜபக்ஷே அத்தனை குண்டு வீசி அத்தனை பேரோட ஆயுளைக் குறைச்சப்ப வராத கோவம் ரந்தீவ் ஒரு நோபால் வீசி ஒரு செஞ்சுரியைக் குறைச்சதுக்கு வருது!
***************************************************
வேண்டுகோள்:
கேபிள் சங்கரின் இந்தப் பதிவில் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் விஷயத்திற்கு உதவப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றி!
.
Tuesday, September 21, 2010
1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....
நடந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டதால் இந்த அவரச உலகில் இது கொஞ்சம் பழைய செய்திதான்.
சென்ற பதிமூன்றாம் தேதி. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் காலையில், பள்ளியிலிருந்து வெளியே வந்த பதினோராம் வகுப்பு மாணவன் சுரேஷ் என்பவர், வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
உடனே கூடிய கிராம மக்கள் – வெளியே நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து, பள்ளித் தாளாளரின் இன்னோவா கார் ஆகியவற்றைக் கொளுத்தியும் வெறி அடங்காமல் பள்ளி கட்டடம் முழுவதையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள் உட்பட அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
கூட்டத்தினரின் மற்றொரு பகுதியினர், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பள்ளித் தாளாளரின் வீடு நோக்கிப் புறப்பட்டனர். வழியில் வந்து கொண்டிருந்த மற்றொரு பள்ளிப் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை இறக்கி அதையும் கொளுத்தினர். தாளாளரின் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த பேருந்தையும் கொளுத்தி, அவரது வீட்டையும் அடித்து நொறுக்கினர்.
இந்த உக்கிரத்துக்கு என்ன காரணம்?
சுரேஷ், பள்ளிக்குச் செல்லும்போது விபத்து நடக்கவில்லை. பள்ளிக்குச் சென்றிருக்கிறார். நோட்டு வாங்க 2500 ரூபாய் செலுத்த கடைசி நாள் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்பா பணம் கொண்டு வருவார்’ என்றிருக்கிறார் சுரேஷ். ஒத்துக் கொள்ளாத ஆசிரியர்கள் அவரை வகுப்பறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, திரும்ப வரும்போதுதான் நுழைவாயிலில் விபத்து நடந்து இறந்திருக்கிறார்.
அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை?
அந்த மக்களின் கோபம், அந்த ஒரு நாள் கோபமல்ல. வெகுநாள் ஆத்திரம் அடக்கி வைத்திருந்து அடக்கி வைத்திருந்து அன்றைக்கு வெளிப்பட்டு விட்டது.
அரசு நிர்ணயித்த கட்டணம் எந்தப் பள்ளியில் வாங்குகிறார்கள்? ம்ஹூம். அதை எதிர்த்து மனு தாக்கல் செய்து, தடை வேறு வாங்கிவிட்டார்கள்.
இதேபோல..
திருப்பூரில் ஒரு பள்ளியில் ஈட்டி எறிதலில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது நடந்து வந்த மற்றொரு மாணவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது.
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன் பெயர் கோகுல். கராத்தே சாம்பியன். சர்வதேச அளவில் விளையாடுபவன். இதுவரை 144 பதக்கங்களைக் குவித்துள்ளான். முதல்கட்டமாக 1.75 லட்சம் வரை செலவானதில் 75 ஆயிரம் மட்டுமே பள்ளி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதாக தினசரி சொல்கிறது.
75ஆயிரமும் பள்ளி நிர்வாகமா கொடுத்தது?
“இருநூறு ரூபாயாவது கொடுங்கம்மா என் கூடப் படிக்கறவங்க 500, ஆயிரம்னு கொண்டுவரப்போறாங்களாம்” – இது என் மகள் அம்மாவிடம் சொன்னது.
ஆம். அது என் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த சம்பவம்தான். 6ம்வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களிடம் வசூல் நடத்தி, அதையும் சேர்த்து மருத்துவமனைக்குச் செலுத்தியிருக்கிறார்கள். தவறேதும் இல்லை. ஆனால் நிர்வாகம் கொடுத்தது எவ்வளவு, மாணவர்களிடம் வசூலித்தது எவ்வளவு என்று எங்காவது கணக்கு காண்பிக்கக் கூடாதா? கேட்டால்தான் சொல்வீர்களா? தேர்வுக் கட்டணம், பேருந்துக் கட்டணத்திலெல்லாம் நயா பைசா பாக்கி என்றாலும் டைரியில் எழுதி அனுப்புகிறீர்களே ஐயா?
அந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.
ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்?
இதை அந்தப் பள்ளியில் சென்று கேட்டேனா? ம்ஹூம். இல்லையே. முடியவில்லையே.. எனக்கு என் குடும்பம், மகள் படிப்பு எல்லாம் முக்கியம். இதே மிடில்க்ளாஸ் மனநிலையில்தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில் அன்றைக்கு இந்த மிடில்க்ளாஸ் மனநிலைக்காரர்களின் கொந்தளிப்பே அப்படிப்பட்ட சம்பவத்திற்குக் காரணம். ‘சாது மிரண்டால்..’’‘ கதைதான்.
இனியாவது சுதாரித்துக் கொள்வார்களா தனியார் பள்ளி நிர்வாகத்தினர்?
எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாம்! பெற்றோரோ, பொதுமக்களோ பள்ளிகளுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட, கூட தடை விதிக்க வேண்டுமென்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது.
எதனால் இந்த ஆர்பாட்டங்கள்.. கூட்டங்கள் என்று யோசித்து அதைக் களையாத வரை பொதுமக்கள் மனதில் இருக்கும் அக்னிக் குஞ்சு பெருந்தீயாய் மாறும் சூழலைத் தவிர்க்க முடியாது.
.
சென்ற பதிமூன்றாம் தேதி. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் காலையில், பள்ளியிலிருந்து வெளியே வந்த பதினோராம் வகுப்பு மாணவன் சுரேஷ் என்பவர், வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
உடனே கூடிய கிராம மக்கள் – வெளியே நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து, பள்ளித் தாளாளரின் இன்னோவா கார் ஆகியவற்றைக் கொளுத்தியும் வெறி அடங்காமல் பள்ளி கட்டடம் முழுவதையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள் உட்பட அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
கூட்டத்தினரின் மற்றொரு பகுதியினர், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பள்ளித் தாளாளரின் வீடு நோக்கிப் புறப்பட்டனர். வழியில் வந்து கொண்டிருந்த மற்றொரு பள்ளிப் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை இறக்கி அதையும் கொளுத்தினர். தாளாளரின் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த பேருந்தையும் கொளுத்தி, அவரது வீட்டையும் அடித்து நொறுக்கினர்.
இந்த உக்கிரத்துக்கு என்ன காரணம்?
சுரேஷ், பள்ளிக்குச் செல்லும்போது விபத்து நடக்கவில்லை. பள்ளிக்குச் சென்றிருக்கிறார். நோட்டு வாங்க 2500 ரூபாய் செலுத்த கடைசி நாள் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்பா பணம் கொண்டு வருவார்’ என்றிருக்கிறார் சுரேஷ். ஒத்துக் கொள்ளாத ஆசிரியர்கள் அவரை வகுப்பறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, திரும்ப வரும்போதுதான் நுழைவாயிலில் விபத்து நடந்து இறந்திருக்கிறார்.
அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை?
அந்த மக்களின் கோபம், அந்த ஒரு நாள் கோபமல்ல. வெகுநாள் ஆத்திரம் அடக்கி வைத்திருந்து அடக்கி வைத்திருந்து அன்றைக்கு வெளிப்பட்டு விட்டது.
அரசு நிர்ணயித்த கட்டணம் எந்தப் பள்ளியில் வாங்குகிறார்கள்? ம்ஹூம். அதை எதிர்த்து மனு தாக்கல் செய்து, தடை வேறு வாங்கிவிட்டார்கள்.
இதேபோல..
திருப்பூரில் ஒரு பள்ளியில் ஈட்டி எறிதலில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது நடந்து வந்த மற்றொரு மாணவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது.
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன் பெயர் கோகுல். கராத்தே சாம்பியன். சர்வதேச அளவில் விளையாடுபவன். இதுவரை 144 பதக்கங்களைக் குவித்துள்ளான். முதல்கட்டமாக 1.75 லட்சம் வரை செலவானதில் 75 ஆயிரம் மட்டுமே பள்ளி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதாக தினசரி சொல்கிறது.
75ஆயிரமும் பள்ளி நிர்வாகமா கொடுத்தது?
“இருநூறு ரூபாயாவது கொடுங்கம்மா என் கூடப் படிக்கறவங்க 500, ஆயிரம்னு கொண்டுவரப்போறாங்களாம்” – இது என் மகள் அம்மாவிடம் சொன்னது.
ஆம். அது என் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த சம்பவம்தான். 6ம்வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களிடம் வசூல் நடத்தி, அதையும் சேர்த்து மருத்துவமனைக்குச் செலுத்தியிருக்கிறார்கள். தவறேதும் இல்லை. ஆனால் நிர்வாகம் கொடுத்தது எவ்வளவு, மாணவர்களிடம் வசூலித்தது எவ்வளவு என்று எங்காவது கணக்கு காண்பிக்கக் கூடாதா? கேட்டால்தான் சொல்வீர்களா? தேர்வுக் கட்டணம், பேருந்துக் கட்டணத்திலெல்லாம் நயா பைசா பாக்கி என்றாலும் டைரியில் எழுதி அனுப்புகிறீர்களே ஐயா?
அந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.
ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்?
இதை அந்தப் பள்ளியில் சென்று கேட்டேனா? ம்ஹூம். இல்லையே. முடியவில்லையே.. எனக்கு என் குடும்பம், மகள் படிப்பு எல்லாம் முக்கியம். இதே மிடில்க்ளாஸ் மனநிலையில்தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில் அன்றைக்கு இந்த மிடில்க்ளாஸ் மனநிலைக்காரர்களின் கொந்தளிப்பே அப்படிப்பட்ட சம்பவத்திற்குக் காரணம். ‘சாது மிரண்டால்..’’‘ கதைதான்.
இனியாவது சுதாரித்துக் கொள்வார்களா தனியார் பள்ளி நிர்வாகத்தினர்?
எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாம்! பெற்றோரோ, பொதுமக்களோ பள்ளிகளுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட, கூட தடை விதிக்க வேண்டுமென்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது.
எதனால் இந்த ஆர்பாட்டங்கள்.. கூட்டங்கள் என்று யோசித்து அதைக் களையாத வரை பொதுமக்கள் மனதில் இருக்கும் அக்னிக் குஞ்சு பெருந்தீயாய் மாறும் சூழலைத் தவிர்க்க முடியாது.
.
Subscribe to:
Posts (Atom)