கருப்பு: கண்டனம். ஜ்யோவராம் சுந்தர் மீது நடந்த வன்முறைக்கு. இங்கே நான் வன்முறை எனக் குறிப்பிடுவது அவர் மூக்கில் விழுந்த குத்தை அல்ல. அந்தக் குத்து விடுமுன் அழைக்கப்பட்டு நம்பிக்கையோடு திரும்பினாரே, அந்த நம்பிக்கையை ரோசா வசந்த் சிதைத்ததுதான் மிகப் பெரிய வன்முறை. ‘எனக்கு உங்களுடைய ஒரு கருத்தில் உடன்பாடில்லை ஜ்யோவ். வாருங்கள் சண்டையிடலாம்’ என்றே அழைத்திருக்கலாம். எழுத்திற்காக மூக்கில் அடிவாங்க நேருமென்றால் எழுத்தாளர்கள் எல்லாருமே ப்ளாஸ்திரி சுற்றப்பட்ட மூக்கோடுதான் இருக்க வேண்டிவரும். ‘உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன்.
சிகப்பு: வன்முறை. மீண்டும் போன பாராவின் டாபிக்கே வருகிறது. வேண்டாம். சிகப்பு - ரத்தம். ம்ஹூம். மறுபடி அங்கேயே போகிறது விஷயம்.
ம்ம்ம்ம்....
உறவினர் ஒருவரின் சிகிட்சை காரணமாக மருத்துவமனை செல்ல நேர்ந்தது. அப்போது அவசர சிகிட்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரக்சரில் கொண்டு வரப்பட்டார் ஒரு இளைஞர். தலைமுழுக்க வறுமையின் நிறம் சூழந்திருந்தது. பைக் விபத்து. எப்போதுமே ஹெல்மெட் போடுவாராம். அன்றும் போட்டிருந்தாராம். ‘அப்புறம் எப்படி?’ என விசாரிக்கையில், ஹெல்மெட்டின் பட்டியை (STRAP) போட மாட்டாராம். எதிரில் வந்த காரால் எகிறி அடிக்கப்பட்டதில் பத்தடி உய்ரத்தில் பறந்தபோது ஹெல்மெட் கழன்று எங்கோ விழுந்திருக்கிறது. எத்தனையோ நண்பர்களுக்கு இதை நான் சொல்லியிருக்கிறேன். அன்றைக்கு, அதுவும் அத்தனை ரத்தத்தோடு அந்த இளைஞனைப் பார்த்த பிறகு இதனைக் கேள்விப்பட்டதும் அவனது அஜாக்கிரதைக்காக மனதுக்குள் அவனைத் திட்டினேன். Get well soon buddy!
பச்சை: பசுமை. மரங்கள். இயற்கையின் காதலன் நான். எங்கே மரம் வெட்டப்பட்டாலும் என் மனம் அழும். எங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஒரு மரம் வெட்டப்பட்டது. வேறு எந்த வழியுமில்லாமல் போனது. அன்றைக்கு முழுதுமே ஏதோ கொலையாளி போல என்னை நானே உணர்ந்தேன். பிராயச்சித்தமாக குறைந்தது ஐந்து மரங்களையாவது நட எண்ணம். நிச்சயம் செய்வேன்.
நீலம்: அன்பு. என் இப்போதைய அன்பை ஆதிமூலகிருஷ்ணனுக்கு அளிக்கிறேன். வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. அந்த விஷயத்தில் ஆதியின் சிரமத்தை நானும் அறிவேன். அதையெல்லாம் மீறி நேரமொதுக்கி என்னை வரைந்து பரிசளித்த அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தவிரவும், ஒருவன் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள எவ்வளவும் சலிக்க மாட்டான். தன்னைத் தவிர, தன்னை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது தான் நேசிக்கும் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல அந்தப் படத்தை வரையும் வரை அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் என்பதைவிடவும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆதி... உங்கள் திறமைக்கும், அன்பிற்கும்..... I LOVE YOU DA!
மஞ்சள்: எச்சரிக்கை. நாட்டை செல்ஃபோன் வியாதி மிகத் தீவிரமாக பற்றிக் கொண்டு வருகிறது. ஒரு ஃபோன் என்பதைத் தாண்டி, இரண்டு ஃபோன்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. (அதில் ஒன்று டபுள் சிம் ஃபோன்!) பொது இடத்தில் புகைக்கத் தடை இருப்பதுபோல (இருக்கிறதுதானே?) செல்ஃபோன் பேசவும் தடைவிதிக்கலாம். விதிக்கும் காலம் வரலாம். அத்தனை உரக்கக் காதலிக்கிறார்கள் ஃபோனில். அத்தனை உரக்கச் சிரிக்கிறார்கள். அத்தனை உரக்க உரையாடுகிறார்கள். அத்தனை உரக்கக் கட்டளையிடுகிறார்கள். அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது. அவர்களின் வெட்கம் என்னைப் பற்றிக் கொள்கிறது. மருத்துவமனையில் சிலரின் வேதனை முகங்களுக்கு நடுவே, அவர்களின் சிரிப்பொலி எனக்கு எரிச்சலைத் தருகிறது. அவர்கள் வீட்டு சாம்பாரில் என்ன காயென்று எனக்குத் தெரிகிறது. அவர்களின் கோவம் என்னை நடுங்கச் செய்கிறது. அவர்களின் கட்டளை என்னையும் செலுத்துகிறது. அவர்களுக்கு நடுவே, அலைபேசியை மௌனித்து வைத்திருக்கும் நான் அந்நியனாகிறேன். என்னிடம் அலைபேசி இல்லையென்று அவர்கள் நினைப்பார்களோ, அப்படி இருப்பது கௌரவக்குறைவோ எனும் பேதமை எண்ணம் என்னைச் செலுத்த, வெறுமனே எடுத்துப் பேசுகிறேன். கத்துகிறேன். சிரிக்கிறேன். தொலைக்காட்சியை இடியட் பாக்ஸ் என்கிறீர்கள். அதன் அப்பனுக்கு அப்பனை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு திரிகிறோம். உபயோகிக்கும் முறை தவறி. உடனடியாக எல்லாரும் அலைபேசி சாத்தானிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Be Alert!
வெண்மை: அமைதி. ஒன்றுமே எழுதாமல் அமைதியாகவே இருக்கிறேன். விட்டால், எதையும் பேசாமல் ரொம்பவும் அமைதியாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசை எனக்கும்கூட கொடுத்துவிடுவார்கள் என்பதால் இதை எழுதுகிறேன். வெண்மை சமாதானத்திற்கும் அடையாளமாகச் சொல்வார்கள். பதிவுலகின் சண்டைகளும், பொறாமைகளும், சமாதானமடைய என்னை நானே வேண்டிக் கொள்கிறேன். அதை நோக்கி அனைவரும் செயல்படலாம். ஆதிமூலகிருஷ்ணன் ஒன்றை ஆரம்பித்தது போல, எல்லாரும் பகைமைகளை, வேதனைகளை மறக்கச் செய்ய ஏதாவது எழுதி, நம்மை படிக்க மட்டுமே வரும் இணைய வாசகர்களை ஆற்றுப்படுத்தலாம். Let’s Make it Happen!
.
Tuesday, October 13, 2009
Wednesday, October 7, 2009
ரஜினியின் எந்திரன் படப் பாடல்கள் – ஒரு இசை ரசிகன் பார்வையில்

மூணாறு அல்லது வால்பாறை.. சரியாக ஞாபகமில்லை. இதில் ஏதோ ஒரு ஊரில் நண்பர்களோடு சுற்றுலாவில் இருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு கடையிலிருந்து அந்தப் பாடல் கேட்டது...
“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலுந்தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நல்லவங்க பேச்சுக்காரன்
நல்லாப்பாடும் பாட்டுக்காரன்...”
எங்களை அந்த இடத்திலேயே நிற்க வைத்து, அந்தக் கடைக்காரரிடம் விசாரிக்க வைத்தது அந்தப் பாடல்.
“பாட்ஷாவாணு. ரஜினி ரஜினிதன்னே. எந்தா ஒரு ஸ்பீடு ஈ பாட்டில” என்றவாறு அந்த மலையாளத்துக்காரர் இசையமைத்த தேவாவை விடுத்து ரஜினியைப் பாராட்டினார். அன்றைக்குத்தான் கேசட் ரிலீஸாகி இருந்தது. தனது அடையாளத்தை மறைத்து சூப்பர் ஸ்டாரை மனதில் கொண்டுவந்த தேவா ஜெயிச்சுட்டாருடா என்று பேசிக்கொண்டோம் நாங்கள். அந்தப் படத்தில் இந்த ஒரு பாடல்தவிர 'பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' என்ற எஸ்.பி.பியின் சிம்மகர்ஜனையில் வரும் பிட் பாடல் மனதைக் கவர்ந்தது. மற்றபடி அழகு அழகு, தங்கமகன் இன்று, ஸ்டைலு ஸ்டைலுதான் போன்ற பாடலுக்கெல்லாம் கிடைத்தது படத்தாலான ஹிட்டே தவிர... பாடலுக்கான ஹிட் ஆகவில்லை. எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ ஓரளவு ஹிட்டானது என்றே சொல்லவேண்டும்.
(ஆட்டோக்காரன் பாடலில் வரும் அஜக்குன்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான் ‘அர்த்தமற்ற வரிகள்’ என்று சர்ச்சைக்குள்ளானபோது லியோனி சொன்னார். ‘அர்த்தமற்றதுன்னு சொல்லக்கூடாது, அதான் அவரே அர்த்தம் சொல்லீட்டாரே.. அஜக்குன்னா – அஜக்குதான். குமுக்குன்னா – குமுக்குதான்!’)
அடுத்த படம் முத்து. நான் பெங்களூரில் இருந்தேன் ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலாக தலைவருக்கு இசை. சொதப்புவாரோ என்று பயந்துகொண்டே இருந்தோம். (லேட்டாக 2002ல் சொதப்பினார்!). கேசட் வந்த அன்று காலை வாங்கி, அண்ணனின் வாக்மேனில் கேட்டபோது இரண்டாவது பாட்டை கேட்கவே முடியாமல் அந்த ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாட்டையே திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். குலுவாலிலேயும், கொக்கு சைவக் கொக்கும், பிட் சாங்கான விடுகதையாவும் ஏமாற்றவில்லை. அந்தத் தில்லானா தில்லானா! – இந்தப் படத்திற்குப் பிறகுதான் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இப்படி ரசிகர்களைக் கட்டிப் போட ஒரு பாட்டு வைக்கும் ட்ரெண்டையே கொண்டுவந்ததா? (முரளிகண்ணன் & கேபிள் சங்கர் – ப்ளீஸ் ஹெல்ப்!) என்ன பாட்டு.. என்ன இசை! ஏ.ஆர்.ரகுமானுக்கு சபாஷ் போட வைத்தது!
1995ல் இரண்டே மாத இடைவெளியில் அடுத்தடுத்து வந்து விருந்து படைத்த அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு 1997ல் அருணாச்சலம், 1999ல் படையப்பா. இதில் அருணாச்சலம் படத்தின் ‘அதாண்டா இதாண்டா’ ரஜினிக்காக மட்டுமே ஹிட் ஆனது. ‘சிங்கமொன்று புறப்பட்டதே’வும் அதே மாதிரிதான். மற்றபடி நகுமோ, மாத்தாடு மாத்தாடு, அல்லி அல்லி அனார்கலி எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அண்ணாமலை, பாட்ஷாவில் கூட நல்லாப் பண்ணினாரே தேவா.. இப்படி ஏமாத்திட்டாரே’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.
படையப்பாவில் INTRO SONGஆன ‘எம் பேரு படையப்பா’ ஓகே சொல்லவைத்தது. இந்தப் படத்தில் தன்னைவிட ரம்யாகிருஷ்ணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ரஜினி. அவர் எண்ணம் போலவே ஏ.ஆர். ஆரும் ரம்யாகிருஷ்ணன்-ரஜினி பாட்டான 'மின்சாரப் பூவே’ பாடலை மிக அருமையாக அமைத்திருந்தார். மற்ற வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, ஓஹ்ஹோஹோ கிக்கு ஏறுதே பாடல்களும் நன்றாகத்தான் அமைந்திருந்தன என்றாலும் ஏ.ஆர்.ரகுமான் தேவாவின் ஸ்டூடியோவில் உட்காருந்து கம்போஸ் பண்ணியிருப்பாரோ என்பது போல இருந்தது பாடல்கள்.
மூன்று வருடம் கழித்து பாபா(2002). ஏற்கனவே சொன்னதுபோல மண்டை காய வைத்துவிட்டார் ஏ.ஆர். ரகுமான். மாயா மாயா பாடல் மட்டும் ஏதோ பரவாயில்லை ரகம். மற்ற பாடல்கள் – கேட்கவே வேண்டாம்!
அதன் பின் 2005ல் சந்திரமுகி. காய்ந்து கிடந்த ரஜினி படப் பாடல் பிரியர்களை விருந்து வைத்துக் கவர்ந்தார் வித்யாசாகர். தேவுடா தேவுடா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், அத்திந்தோம் எல்லாமே ஓக்கே என்றாலும் 'ரா ரா சரசகு ராரா' அள்ளிப்போனது பாராட்டுக்களை. சபாஷ் வித்யாசாகர்!
சிவாஜி. இரண்டு வருட இடைவெளி. பல்லேலக்கா பல்லேலக்காவென்று ரஜினி ஸ்பீட் பாடல். அதிரடிக்காரன் மச்சான், சஹாரா சாரல் தூவுதோ, ஒரு கூடை சன்லைட், வாஜி வாஜி என்று ரஜினி ரசிகனை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் பாடல்கள். ஹிட்டா... ஹிட்டில்லையா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
அதன்பின் குசேலன். சொல்வதற்கே ஒன்றுமில்லாத பாடல்கள். பேரின்பப் பேச்சுக்காரன் பாடல் மட்டும் ஓகே ரகம். ஆனால் இரைச்சலால் அந்தப் பாடலும் காணாமல் போனது. சொல்லம்மா சொல்லம்மா நல்ல மெலடி. ஆனால் டைரக்டர் பி.வாசு ஒட்டு மொத்த படத்தையே சொதப்பியதில் இந்தப் பாடல் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஆட்டுக் குட்டியானது!
இதெல்லாம் எதற்குச் சொல்லவருகிறேன். (அதானே)
'ரஜினி படமா என்ன பாட்டு வேணா போடு என்று நினைக்கிறார்களோ’ என்று நினைக்கவைத்து வைக்கிறார்கள் இப்போதெல்லாம். தளபதி வந்தபோது தினமும் விசாரித்து விசாரித்து கேசட் வந்த அன்று முதல் ஆளாய் வாங்கி அந்த ஜாங்குஜக்கு ஜஜக்கு ஜக்கு என்று ஆட்டம் போட்டதும், காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்று கத்தியதும், சின்னத்தாயவள் என்று உருகியதும்... அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரஜினிக்காக மட்டுமல்ல இசைப் பிரியர்களுக்காகவும் ஹிட்டானதும் யாராவது மறுக்க முடியுமா?
மன்னன், எஜமான், தர்மதுரை, வீரா, ராஜாதிராஜா என்று எல்லா பாடல்களையும் இசைப் பிரியர்களையும் மனதில் வைத்து, ரஜினிக்கும் தக்கவாறு இசையமைத்த காலம் எங்கே போயிற்று?
2010ல் எப்படியும் வரப்போகிறது எந்திரன். ஒன்றிரண்டு பாடல்கள் கம்போஸ் செய்திருக்கலாம். மற்றவற்றிலாவது இதைக் கருத்தில் கொள்வார்களா ஷங்கரும், ரகுமானும், சூப்பர் ஸ்டாரும் - லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் - சன் பிக்சர்ஸும்?
என்னைப் போன்றவர்களுக்கு விருந்தளிப்பார்களா?
பொறுத்திருந்து பார்க்கலாம் – ஸாரி - கேட்கலாம்!
*
நன்றி: முரளிகண்ணன் & டைரக்டர் (கேபிள்) சங்கர்!
*
(இது ஒரு மீள்பதிவு. இன்னும் ஒரு வருஷம் கழிச்சும் எழுதலாம்போல.... அப்பவும் பாடல்கள் வரப்போறதில்ல!)
.
Tuesday, October 6, 2009
கிருஷ்ணகதா 06.10.09
“அன்புள்ள பரிசல்.... வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி என்று அறிந்து கொண்டேன். ஆனால் எழுத்து என்பது வரவே இல்லை. என்ன எழுதினாலும் அது நீங்களெல்லாம் எழுதுவது போல வருவதில்லை” – இந்தக் கருத்துடன் மாதத்திற்கு ஒரு ஆறரை பேரின் (கவனியுங்கள்... லட்சமெல்லாம் இல்லை) மின்னஞ்சல்கள் வந்துவிழுகின்றன.
‘என்னைப்போல எழுதவரவில்லையென்றால் அதற்கு சந்தோஷம்தானே படவேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், எழுத யோசனை கேட்டு வரும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் கதையொன்றுண்டு.

சாமுராய்களின் ஆயுதம் கத்தி. கத்திச்சண்டை வீரனென்று சொல்லிக் கொள்வதில் மிகப் பெருமை கொள்பவர்கள் அவர்கள். சாமுராய் பிரிவைச் சார்ந்த ஒரு பெரிய கத்திச்சண்டை வீரன் இருந்தான். நிக்கிச்சி அவன் பெயர். அவனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் நிக்கிச்சி. இந்த நிக்கிச்சி-2 ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவனுக்கு கத்திசண்டையோ, வேறு கலைகளோ வரவே இல்லை. நிக்கிச்சி மிக வெறுப்பாகி, “நீ என் மகனே இல்லை. போடா” என்று வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
நிக்கிச்சி-2 மிகவும் வருத்தத்துடன், மலையொன்றின் மீதிருந்த பான்சி என்ற வீரரைத் தேடிப்போனான். இந்தச் சண்டை வீரர்கள் ஜென் குருமார்களும் கூட. நிக்கிச்சி-2, பான்சியிடன் சென்று தன் கதையைச் சொன்னதும், அவர் இவனை மூன்றடி நடக்கச் சொன்னார்.
அவன் நடந்ததைப் பார்த்த பான்சி, “மன்னித்து விடு. நீயெல்லாம் வீரனாக வாய்ப்பே இல்லை. புறப்படு இங்கிருந்து” என்றுவிட்டார். நிக்கிச்சி-2 அழமாட்டாத குறையாக அவரது காலில் விழுந்து கெஞ்சினான்.
“உனக்குக் கற்றுத்தர உன் முழு ஆயுளும் தேவைப்படும்” என்றார் பான்சி. ‘அதற்குள் என் தந்தை இறந்து விடுவார். கத்திச்சண்டையில் நான் வீரனாகி அவருக்குக் காட்டவேண்டும்’ என்றான் இவன்.
பான்சி யோசித்து, “சரி.. பத்து வருடங்களில் சொல்லித்தருகிறேன். உன்னை நான் வீரனாக்கும் வரை நான் என்ன சொன்னாலும், செய்தாலும் என்னோடே இருக்க வேண்டும். என் முதல் நிபந்தனை என்ன தெரியுமா?” என்றார். அவனும் ஒப்புக்கொண்டு முதல் நிபந்தனையைக் கேட்டான்.
“இன்றிலிருந்து நீ கத்தியைப் பற்றிப் பேசவே கூடாது. சமையல் வேலை செயது, பாத்திரம் கழுவி பராமரித்துக் கொண்டு இங்கேயே இரு” என்றார். அவனும் ஒப்புக் கொண்டான்.
ஒரு வருடம்.
இரண்டு வருடம்.
மூன்று வருடம்.
கத்தி என்ற பேச்சே இல்லை. ஆனால் நிக்கிச்சி-2 தன் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்தான். ஏன் எதற்கு என்றே கேட்கவில்லை. என்றேனும் ஒரு நாள் குரு தனக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார் என்று நம்பினான்.
பயிற்சிக்காலம் நான்கு வருடங்களைத் தொட்டது.
நிக்கிச்சி-2 பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். பயிற்சிக்கு பயன்படுத்தும் மரத்தாலான வாளோடு வந்த பான்சி, நிக்கிச்சி-2வின் பின்னால் வந்து ஓங்கி அடித்தார். துள்ளி விழுந்தானவன். அவனுக்குள் எதிர்ப்புத்தன்மை உருவானது. ஆனாலும் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. தாவிக் குதித்து மறுபுறம் போனான். மறுபடி அவனைத் தாக்கினார் பான்சி. அப்படியும் இப்படியும் குதித்து, ஓடி கடுமையான காயங்களுடன் தப்பித்தான் நிக்கிச்சி-2.
பிறகு சில நாட்கள் எப்போதும்போலக் கடந்தது. ஒரு நாள் திடீரென்று அதேபோல தன் தாக்குதலை ஆரம்பித்தார் பான்சி. இவ்வாறு அவ்வப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தாக்கத் தொடங்கினார்.
இதனால் எப்போதும் ஒருவித விழிப்புணர்வு நிலையிலேயே இருக்க ஆரம்பித்தான் நிக்கிச்சி-2. ஆறாவது வருடத்தில், திருப்பித் தாக்காவிட்டாலும் பான்சி தாக்குதல் நட்த்துகையில் லாவகமாக விலகிப் போக ஆரம்பித்தான் அவன். ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் என்னென்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான் அவன். ஊருக்கு வந்து தன் தந்தையிடம் கத்திச் சண்டையில் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தான்.
ஆக பயிற்சி என்பது ஆளாளுக்கு மாறுபடும். எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்கும் சாமுராய் போல உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து வந்தீர்களானால் தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். ஒன்றுமில்லாவிட்டால் இன்றைக்கு கவனித்ததையெல்லாம் எழுதி, எதிலுமே எனக்கு எழுத எதுவுமே (எத்தனை எ?) கிடைக்கவில்லையே எனக்கூட எழுதலாம்!
கடைசியாக....
என் நண்பன் ஒருவன் சேலத்தில் இருக்கிறான். சி. கண்ணன். (இதோ இந்தக் கடிதம் பற்றிய பதிவில் அவனைக் குறிப்பிட்டிருக்கிறேன்) அந்தக் கண்ணனை போன மாதம் ஒருநாள் வேறொரு நண்பர் மூலமாக கண்டுபிடித்துவிட்டேன்.
‘நீயெல்லாம் வலைப்பூ எழுத ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்டா’ என்றேன். எப்படி ஆரம்பிக்க என்று கேட்டான்.
“உன் மெய்ல் ஐ.டி. குடு. அதுக்கு விவரமா அனுப்பறேன்”
அவன் கேட்டான்:
“மெய்லா.. அப்டீன்னா? ஸ்பீட் போஸ்ட் மாதிரி ஏதாவதா?”
இவனுக்குத் தேவை வேறுவிதமான பயிற்சி.
.
‘என்னைப்போல எழுதவரவில்லையென்றால் அதற்கு சந்தோஷம்தானே படவேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், எழுத யோசனை கேட்டு வரும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் கதையொன்றுண்டு.

சாமுராய்களின் ஆயுதம் கத்தி. கத்திச்சண்டை வீரனென்று சொல்லிக் கொள்வதில் மிகப் பெருமை கொள்பவர்கள் அவர்கள். சாமுராய் பிரிவைச் சார்ந்த ஒரு பெரிய கத்திச்சண்டை வீரன் இருந்தான். நிக்கிச்சி அவன் பெயர். அவனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் நிக்கிச்சி. இந்த நிக்கிச்சி-2 ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவனுக்கு கத்திசண்டையோ, வேறு கலைகளோ வரவே இல்லை. நிக்கிச்சி மிக வெறுப்பாகி, “நீ என் மகனே இல்லை. போடா” என்று வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
நிக்கிச்சி-2 மிகவும் வருத்தத்துடன், மலையொன்றின் மீதிருந்த பான்சி என்ற வீரரைத் தேடிப்போனான். இந்தச் சண்டை வீரர்கள் ஜென் குருமார்களும் கூட. நிக்கிச்சி-2, பான்சியிடன் சென்று தன் கதையைச் சொன்னதும், அவர் இவனை மூன்றடி நடக்கச் சொன்னார்.
அவன் நடந்ததைப் பார்த்த பான்சி, “மன்னித்து விடு. நீயெல்லாம் வீரனாக வாய்ப்பே இல்லை. புறப்படு இங்கிருந்து” என்றுவிட்டார். நிக்கிச்சி-2 அழமாட்டாத குறையாக அவரது காலில் விழுந்து கெஞ்சினான்.
“உனக்குக் கற்றுத்தர உன் முழு ஆயுளும் தேவைப்படும்” என்றார் பான்சி. ‘அதற்குள் என் தந்தை இறந்து விடுவார். கத்திச்சண்டையில் நான் வீரனாகி அவருக்குக் காட்டவேண்டும்’ என்றான் இவன்.
பான்சி யோசித்து, “சரி.. பத்து வருடங்களில் சொல்லித்தருகிறேன். உன்னை நான் வீரனாக்கும் வரை நான் என்ன சொன்னாலும், செய்தாலும் என்னோடே இருக்க வேண்டும். என் முதல் நிபந்தனை என்ன தெரியுமா?” என்றார். அவனும் ஒப்புக்கொண்டு முதல் நிபந்தனையைக் கேட்டான்.
“இன்றிலிருந்து நீ கத்தியைப் பற்றிப் பேசவே கூடாது. சமையல் வேலை செயது, பாத்திரம் கழுவி பராமரித்துக் கொண்டு இங்கேயே இரு” என்றார். அவனும் ஒப்புக் கொண்டான்.
ஒரு வருடம்.
இரண்டு வருடம்.
மூன்று வருடம்.
கத்தி என்ற பேச்சே இல்லை. ஆனால் நிக்கிச்சி-2 தன் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்தான். ஏன் எதற்கு என்றே கேட்கவில்லை. என்றேனும் ஒரு நாள் குரு தனக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார் என்று நம்பினான்.
பயிற்சிக்காலம் நான்கு வருடங்களைத் தொட்டது.
நிக்கிச்சி-2 பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். பயிற்சிக்கு பயன்படுத்தும் மரத்தாலான வாளோடு வந்த பான்சி, நிக்கிச்சி-2வின் பின்னால் வந்து ஓங்கி அடித்தார். துள்ளி விழுந்தானவன். அவனுக்குள் எதிர்ப்புத்தன்மை உருவானது. ஆனாலும் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. தாவிக் குதித்து மறுபுறம் போனான். மறுபடி அவனைத் தாக்கினார் பான்சி. அப்படியும் இப்படியும் குதித்து, ஓடி கடுமையான காயங்களுடன் தப்பித்தான் நிக்கிச்சி-2.
பிறகு சில நாட்கள் எப்போதும்போலக் கடந்தது. ஒரு நாள் திடீரென்று அதேபோல தன் தாக்குதலை ஆரம்பித்தார் பான்சி. இவ்வாறு அவ்வப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தாக்கத் தொடங்கினார்.
இதனால் எப்போதும் ஒருவித விழிப்புணர்வு நிலையிலேயே இருக்க ஆரம்பித்தான் நிக்கிச்சி-2. ஆறாவது வருடத்தில், திருப்பித் தாக்காவிட்டாலும் பான்சி தாக்குதல் நட்த்துகையில் லாவகமாக விலகிப் போக ஆரம்பித்தான் அவன். ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் என்னென்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான் அவன். ஊருக்கு வந்து தன் தந்தையிடம் கத்திச் சண்டையில் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தான்.
ஆக பயிற்சி என்பது ஆளாளுக்கு மாறுபடும். எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்கும் சாமுராய் போல உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து வந்தீர்களானால் தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். ஒன்றுமில்லாவிட்டால் இன்றைக்கு கவனித்ததையெல்லாம் எழுதி, எதிலுமே எனக்கு எழுத எதுவுமே (எத்தனை எ?) கிடைக்கவில்லையே எனக்கூட எழுதலாம்!
கடைசியாக....
என் நண்பன் ஒருவன் சேலத்தில் இருக்கிறான். சி. கண்ணன். (இதோ இந்தக் கடிதம் பற்றிய பதிவில் அவனைக் குறிப்பிட்டிருக்கிறேன்) அந்தக் கண்ணனை போன மாதம் ஒருநாள் வேறொரு நண்பர் மூலமாக கண்டுபிடித்துவிட்டேன்.
‘நீயெல்லாம் வலைப்பூ எழுத ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்டா’ என்றேன். எப்படி ஆரம்பிக்க என்று கேட்டான்.
“உன் மெய்ல் ஐ.டி. குடு. அதுக்கு விவரமா அனுப்பறேன்”
அவன் கேட்டான்:
“மெய்லா.. அப்டீன்னா? ஸ்பீட் போஸ்ட் மாதிரி ஏதாவதா?”
இவனுக்குத் தேவை வேறுவிதமான பயிற்சி.
.
Subscribe to:
Posts (Atom)