Showing posts with label சவால் சிறுகதை. Show all posts
Showing posts with label சவால் சிறுகதை. Show all posts

Thursday, October 14, 2010

சவால் சிறுகதைப் போட்டி - அப்டேட்

வால் சிறுகதைப் போட்டிக்கு இதுவரை ஐம்பது கதைகள் வந்திருக்கின்றன.

உங்கள் ஆர்வமும், பங்கேற்பும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

கதைகளின் பெயர் மற்றும் இணைப்பை நாளையோ, நாளை மறுநாளோ தருகிறேன்.

சிறுகதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15 அக்டோபர் இந்திய நேரம் 12 மணி.

முடிவுகள் நவம்பர் 15 அன்று வெளிவரும்.

நேரடியாக, மறைமுகமாக இந்த சிறுமுயற்சிக்கு உதவிய, உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

போட்டி பற்றி அறிய http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html


.

Tuesday, September 14, 2010

சவால் சிறுகதை

ட்டுரைகளுக்கு அடுத்தபடியாக அல்லது இணையாக என்னைக் கவர்பவை சிறுகதைகள். ஆனால் யதார்த்த, சோக வகைகளல்ல. சுவாரஸ்யமானதாகவும், கதையின் இறுதியில் என்னை ஓர் ‘அட!’ போட வைப்பதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

சுஜாதா அதில் விற்பன்னர். அவரது ‘சசி காத்திருக்கிறாள்’ அதில் மாஸ்டர் பீஸ்.

சரி.. இனி விஷயத்துக்கு வருவோம்.

மினி & யாமினி தொடர்களுக்குப் பிறகு நானும் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தபோது எல்லாருக்கும் ஒரு சிறுகதைப் போட்டி வைத்தாலென்ன என்று பேச்சு வந்தது..

அதன் விளைவாகவே சனிக்கிழமை என் பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். இங்கே அதை விரிவாக வெளியிடுகிறேன்.

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, பிளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.

*** *** *** *** *** ***

கேள்விகள்:

கதையை என் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாமா?

லாம். ஒரே விஷயம் நீங்கள் வைக்கும் தலைப்புக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் ‘சவால் சிறுகதை’ என்று குறிப்பிடவும்.

வலையில் மட்டும் வெளியிட்டால் போதுமா?

போதாது. என் மின்னஞ்சல் முகவரிக்கு - kbkk007@gmail.com - கதை வந்த உங்கள் வலைப்பூ பக்க முகவரியையும், கூடவே முழுக்கதையையும் அனுப்ப வேண்டும்.

முழுக்கதையுமா? ஏன்?

நடுவர்களுக்கு உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் உங்கள் கதையை மட்டுமே அனுப்ப. அவர்கள் பதிவுகளைப் படிப்பவர்கள்தானெனினும் பதிவின் தலைப்பில் சவால் சிறுகதை என்றிருக்கும் கதைகளை அவர்கள் படிக்க மாட்டார்கள்.

நடுவர்கள்?

மூன்று பேர் கொண்ட குழு. (நான், ஆதி இல்லை அதில்)

இறுதித் தேதி?

கதை எழுத அக்டோபர் 15. முடிவுகள் அதிக பட்சம் நவம்பர் 15க்குள்.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் அனுப்பலாமா?

அனுப்பலாம்.

பரிசு?

மூன்று பரிசுகள். முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்துவதா, அல்லது பரிசுக்குரிய மூன்று கதைகள் என்று தேர்வு செய்வதா என்பது நடுவர்களின் கையில். மொத்தமாக ரூ. ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

என்ன புத்தகங்கள்?

பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைத தொகுப்புகள். பிரபலம் என்றால் பிரபலம். சுஜாதாவாக இருக்கலாம்.


எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட வரைமுறை ஏதுமில்லை. ஆனால் சிறுகதை, சிறுகதையாக இருந்தால் நலம்!

விஞ்ஞானம், க்ரைம், குடும்பம், காதல்.. என்ன வகைக் கதையாக இருக்க வேண்டும்?

எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். இந்தப் போட்டி பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி கலந்து கொள்ளச் செய்யவும்.

நன்றியும் வாழ்த்துகளும்!


.