Thursday, September 29, 2011

சவால் சிறுகதைப் போட்டி –2011

சென்ற வருடம் யாருக்கோ நான் அலைபேசியபோது எதிர்முனை சொன்ன ‘மை நேம் ஈஸ் யாமினி’ ஒரு பொறியாக மனதில் விழ, மிஸ்.யாமினி என்ற தொடர் ஒன்றை எழுதினேன். அதற்கு கொஞ்ச நாள் முன் ஆதியும், ஒரு மினி தொடர் எழுதியிருந்தார்.

இதுபற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது - மனதில் சிறு பொறியாகத் தோன்றி, பின்பு பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு.. மாற்றுக்கருத்துகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடத்தித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் சென்ற செப்டம்பரில் ‘சவால்சிறுகதைப்போட்டி’யை அறிவித்தோம். அதன் பின் நிகழ்ந்தது அந்த ஆச்சரியமும், பரபரப்பும், சுவாரசியங்களும் நிறைந்த நிகழ்வு.

அந்த முதல் அறிவிப்பு : இதோ இங்கே.

பொதுவான சிறுகதைப் போட்டியாக இல்லாமல், சிறுகதையில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் விடுத்த 'சவால்’ நண்பர்களை ஆர்வத்தில் தள்ளியிருக்கவேண்டும். அதன் பின்னர், எதிர்பாராத வகையில் சரியாக 84 சிறுகதைகள் போட்டிக்கு வந்தன. சக பதிவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோர் நடுவராக இருந்து வெற்றிபெற்ற கதைகளை தேர்ந்தெடுத்தனர். 84 கதைகளிலிருந்து முதல் கட்டமாக 15 கதைகளும் அதிலிருந்து 5 கதைகள் பரிசுக்குரியதாகவும் தேர்வுசெய்யப்பட்டன. முதல் பரிசுகளை சத்யா, பார்வையாளன், ஸ்ரீதர் நாராயணன் ஆகியோரும், ஆறுதல் பரிசுகளை வித்யா, RVS ஆகியோரும் தட்டிச்சென்றனர். சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. போட்டி குறித்த எங்கள் அனுபவங்கள் சுருக்கமாக இங்கே.

போட்டியின் முடிவுகள் இங்கே இருக்கின்றன.

வலையுலகில் ஒரு சிறிய சலசலப்பை உண்டுபண்ணிய நிகழ்வென்றே இதுகுறித்து சில மூத்த பதிவர்கள் எண்ணம் பகிர்ந்தார்கள்.

விதிமுறைகள் கடுமையாக இருந்தது, அடுத்த முறை இவை எளிமையாக்கப்படவேண்டும் எனவும், இவ்வளவு சீரியஸாக இந்தப்போட்டி நடத்தப்படும் என்று நாங்கள் எதிர்பர்க்கவில்லை எனவும் பாராட்டியும், குட்டியும் ஏராளமான கருத்துகளை எதிர்கொண்டோம். தொடர்ந்து வேறு போட்டிகள் நடத்தப்படுமா என்று ஆவலோடு நண்பர்கள் அவ்வப்போது கேட்டவண்ணமும் இருந்தனர். எங்களுக்கும் உள்ளூர ஆவல் இருந்தாலும் எடுத்துக்கொண்ட சிரமம் பயமுறுத்த ’வருடம் ஒருமுறை’ (சற்றேறக்குறைய செப்டம்பரில்) என முடிவு செய்தோம்.

அதன்படி இதோ.. 2011 ன் ‘சவால் சிறுகதைப்போட்டி’க்கான அறிவிப்பு.

முன்னதாக இன்னுமொரு முக்கியமான கூடுதல் தகவல். சமீபத்தில் ‘பதிவர்களால் பதிவர்களுக்காக..’ எனும் கேப்ஷனுடன் சிறப்பாக அறிமுகமாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘யுடான்ஸ்’ (www.udanz.com) எனும் புதிய தமிழ் வலைப்பூ திரட்டியை அறிவீர்கள். அதன் நடத்துனர்கள், நம் நண்பர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜோஸப் பால்ராஜ் ஆகியோர் தன்முனைப்போடு இந்த சிறுகதைப்போட்டியை ’யுடான்ஸு’டன் இணைந்து வழங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்வோடு ஒப்புக்கொண்டோம். போட்டிக்கான பரிசுத்தொகையை ‘யுடான்ஸ்’ ஏற்றுக் கொண்டது. அதன்படி ‘யுடான்ஸ்’ இணையதளத்தோடு நாங்கள் கரம் கோர்த்து இந்த ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம். யுடான்ஸ் திரட்டியில் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளும், அறிவிப்பும் காணக்கிடைக்கும்.

இனி களம் உங்களுடையது. மூத்த, இளைய பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்திக்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்-

பரிசல்காரன்
ஆதிமூலகிருஷ்ணன்.



*

சிறுகதைக்கான சவால் :



இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.



*

பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்..

சவால் சிறுகதைப்போட்டி -2011

விதிமுறைகள் :

1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்படவேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக்கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.

5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.

6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.

8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.

9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.

10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.

11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com

13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.

வாழ்த்துகள்!

.

21 comments:

CS. Mohan Kumar said...

நல்ல விஷயம். இந்த ஆண்டும் தொடரும் உங்களுக்கும் ஆதிக்கும் வாழ்த்துகள் !

நீங்க குடுத்த லீட் வச்சு கிரைம் கதை மட்டும் தான் பண்ண முடியும் போலிருக்கே? பாக்கலாம் நம் மக்கள் என்ன பண்றாங்கன்னு !

கார்க்கிபவா said...

All the very best..

Unknown said...

அடடா....ஆட்டம் ஆரம்பம் ... ஆயிடுச்சு...
//10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.//
இப்படிப் பார்த்தால் இந்த பத்துசதவீதத்தை பிரபல பதிவர்கள் மட்டுமே பெற வாய்ப்புண்டு. எங்களை மாதிரி சின்ன பதிவர்கள் அதில் காணாமல் போய்விடுவோம். கொஞ்சம் ரிவைஸ் பண்ணுங்க சார்.
அப்புறம் போட்டோவில் உள்ள குறியீடுகள் தெளிவாக தெரியவில்லை... எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஆவணசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

பரிசல்காரன் said...

நன்றி மோகன் & கார்க்கி

@ வெண்புரவி

ஜி.. அதைக் க்ளிக்கி தனி விண்டோல பெரிசா பாருங்க.. :))

சுசி said...

முயற்சிக்கு வாழ்த்துகள் :))

நளினா லாவண்யா said...

சார்,
வாழ்த்துகள். ப்ளாக் வைத்துக்கொண்டு பதிவு எதுவும் எழுதாதவர்களும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாமா?

பரிசல்காரன் said...

@ சுசி

நன்றி.

@ நளினா

ப்ளாக் இருக்குன்னா... அதுல இதுக்கு தகுந்தாப்ல ஒரு கதையை எழுதி ப்ளாக்ல போட்டுட்டு எங்களுக்கும் அனுப்புங்க.. தட்ஸ் ஆல்!

பல நாட்கள் ப்ளாக் எழுதிருக்கணும்.., ப்ளாக்ல இந்தக் கதையைத் தவிர வேற படைப்புகள் இருக்கணும்னெல்லாம் தேவையில்லை.. :))

ரைட்டர் நட்சத்திரா said...

நல்ல விஷயம்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கண்டிஷன்ஸ் படிக்கிறதுக்குள்ள கண்ணக் கட்டுதே !!

Thamira said...

for follow up.

செல்வா said...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா. நானும் எழுதப்போறேன்!

Learn said...

வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

KSGOA said...

வாழ்த்துகள்!!!

Unknown said...

சவால் சும்மா எல்லாருக்கும் சவாலா இருக்கனும்!!! ....கதை எழுத தயாராகும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

IlayaDhasan said...

பதிவர்களை கவுரவிக்கும் உங்கள் பணி , நல்ல எடுத்து காட்டு.

ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

கூத்தாடி said...

பெயர்கள் ராஜேஷ் குமார் பாணியில்!!!!

இரசிகை said...

all the best

Nat Sriram said...

ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங் காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா?

ஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல?

selva ganapathy said...

நானும் ஒரு கதை எழுதி அனுப்புகிறேன்... ஏதாவது சந்தேகம் வந்தால் யாரை கேட்பது?

சுபத்ரா said...

டைம் முடியறதுக்குள்ள நான் பார்த்த முதல் வலைப்பூ போட்டி இதுதான் :-)

தொடர்ந்து இவ்வருடமும் இப்போட்டியைச் செயல்படுத்த விழைந்த தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்! நன்றி..

கௌதமன் said...

போட்டி முடிவு தேதியை, நவம்பர் பதினான்கு என்று ஒத்திப் போட இயலுமா?