கடந்த மாதத்தின் ஒரு மாலையில் நண்பர் வெண்பூ அழைத்திருந்தார்.
“பரிசல்.. ஃப்ரீயா இருக்கியா?”
நாயகன் ஸ்டைலில் ‘தெரியலயேப்பா’ என்றேன்.
அதீதம் முதல் இதழில் அவரது கதையைப் பற்றிப் பேசினார்.
“நல்ல ரெஸ்பான்ஸுன்னு இந்த இதழிலும் எழுதச் சொல்லிக் கேட்டிருக்காங்க” என்றார்.
“சூப்பர்..!” என்றேன். அவர் கேட்டார்: “அதீதத்துக்கு நீ ஏதும் எழுதலியா?”
“ரெண்டு மூணு மெய்ல் வந்துச்சு. ஆனா வழக்கம்போல டைம் இல்ல. எதுவும் திருப்தியா அமையல” என்றேன்.
“சரி.. நான் ஒரு கரு வெச்சிருக்கேன்.. ஆஃபீஸ்ல ஏக டென்ஷன். அதை நீ டெவலப் பண்ண முடியுமா?”
அன்றைக்கு சூரியன் மேற்கே உதித்திருக்க வேண்டும். அமைதியாக வேறெந்த இடையூறும் இல்லாமல் அவர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.
முழுக் கருவையும் சொன்னார்.
“நல்லாருக்கு. ஏதாவது-இப்படித்தான் வரணும்-ன்னு ஐடியா வெச்சிருக்கியா?” - கேட்டேன்.
“அதெல்லாம் இல்ல பரிசல். இது கரு. இதை எப்படி வேணா உன் ஸ்டைல்ல டெவலப் பண்ணி எழுது. உன் பேர்லயே வந்தாலும் சரி...”
அன்றைக்கு இரவுக்குள் மனதுக்குள் முழு ட்ராஃப்டும் ரெடியாக - எழுதி வெண்பூவுக்கு அனுப்பினேன்.
“வாவ்! செம.. நான் நெனைச்சதை விட நல்லாவே வந்திருக்கு பரிசல்..” என்று சின்னச் சின்ன மாற்றமும் சொன்னார்.
இந்த இதழ் அதீதத்தில் வெளியாகியிருக்கிற அந்தக் கதை.. இதோ உங்களுக்காக..
---------------------------------------------
இறப்புக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் (வெண்பூ - பரிசல்)
கரு: வெண்பூ
கதையாக்கம்: பரிசல்காரன்
ஹைதராபாத்தின் சம்சாபாத் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. மாடர்ன் உடைகளில் இளைஞர்கள் / இளைஞிகள் ஃப்ளைட் செல்லவிருக்கும் லண்டனை இங்கேயே நினைவுபடுத்தினர். தொப்புள் தெரியும் லோ ஹிப் சேலைகளில் பணக்காரப் பெண்கள். தொப்பையும், சஃபாரியுமாய் சிலர். அருகிலிருந்தவர்களைப் பற்றிய கவலையில்லாமல் அலைபேசியில் பலர்.
லேப்டாப் பேக்குடன் அமர்ந்திருந்த கிரிதர் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். அவன் கண்களில் ஒரு வெறுமை அமர்ந்திருந்தது. டைட்டான டீ ஷர்ட்டில் க்ளிவேஜ் தெரிய ஸ்டைலாக நடந்து வந்து இவனருகில் அமர்ந்து ஸ்னேகமாய்ப் புன்னகைத்தவளுக்கு பதில் புன்னகையளிக்கும்போதும் அவன் உதட்டில் உயிர்ப்பில்லாமல் இருந்தது. அவளை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் அதைப் பற்றி யோசிக்கும் மனநிலையில் அவனில்லை.
ஜோதிடர் நாகமாணிக்கம் அவனிடம் சொன்னது அவனுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
“கிரி... நான் ஜோசியத்தைத் தொழிலாப் பண்றவனில்லன்னு உனக்குத் தெரியும். உங்கம்மா இறப்பு, தொழில்ல நீயும் அண்ணனும் வந்து அப்பாக்கு எவ்ளோ பக்கபலமா இருப்பீங்கன்னது முதற்கொண்டு பலதும் நான் சொன்ன மாதிரியே நடந்திருக்கு. ஆனா.. நான் பல வருஷமா உன்கிட்ட சொல்லாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போறேன்” என்ற பீடிகையோடு அவர் சொன்ன விஷயம்தான் இன்றைக்கு கிரிதரின் இந்த மனநிலைக்குக் காரணம்.
“கிரி.. என் கணிப்பு இதுவரைக்கும் பொய்யாப்போனதில்ல. உன் ஜாதகப்படி வர்ற ஜனவரி 31 உனக்கு கடைசி நாள். இதை உங்கப்பா, அண்ணன்கிட்ட சொல்லப் போறதில்ல. உன்கிட்டயும் சொல்லணும்ன்னு நினைக்கல. நீ ஏதாவது ஆசைப்பட்டிருந்தா செஞ்சுக்கோ. அவ்ளோதான் சொல்லமுடியும். நானும் ஒரு வருஷமா இது சரியான்னு எல்லா வகையிலையும் ஆராய்ஞ்சுட்டேன். எல்லாமே இதைத்தான் சொல்லுது”
“ஹாய் மிஸ் பூர்ணிகா.. வாழ்வே வசந்தம் சீரியல்ல பின்றீங்க!”” உற்சாகக் குரலொன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. அப்போதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது. அருகில் வந்தமர்ந்தவள் டி வி நடிகை. ஜீன்ஸும், சிகப்பு ரிப் நெக் டீ ஷர்ட்டுமாய் அவளைப் பாராட்டியபடி கைகுலுக்கிக் கொண்டிருந்தவன் “எக்ஸ்யூஸ் மி.. இஃப் யு டோண்ட் மைண்ட்...” என்று கிரிதரை ஒரு சீட் தள்ளியமரச் செய்து அந்த டிவி நடிகையிடம் நட்பு பாராட்டலானான்.
அவள் அதை விரும்பாதவளாய் அவனிடம் எக்ஸ்க்யூஸிவிட்டு எழுந்து வேறிடம் சென்றாள். ஜீன்ஸ் இளைஞன் கிரிதர் பக்கம் திரும்பினான்.. "தமிழ்?" என்று நெற்றியை சுருக்கினான். கிரிதர் தலையாட்டிவுடன் அவன், “பாருங்க பாஸு.. சீரியல்ல அழுமூஞ்சி. நேர்ல செம ஃபிகரா இருக்கா. கரெக்ட் பண்ணலாம்னா எஸ்கேப் ஆய்ட்டா..” என்று சிரித்தபடி சொல்லி “ஐ’ம் ஆண்ட்ரூஸ்..” என்று கை நீட்டினான். “ஐ’ம் கிரிதர்” என்று இவன் கைநீட்ட, பற்றி குலுக்கி “லண்டன் வர்ற வரைக்கும் இதே மாதிரி உர்ர்னுதான் மூஞ்சியை வெச்சுக்கப் போறீங்களா?” என்று கேட்டான். அவன் கையில் ஒரு டின் இருந்தது. பேச்சில் பிஸ்கட் வாசனை. உயர்ரக மதுவாக இருக்க வேண்டும்.
ஃப்ளைட் வரும் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் உற்சாகக் குவியலாய் இருந்த ஆண்ட்ரூஸுடன் கொஞ்சம் நெருக்கமானான் கிரிதர். ஃப்ளைட்டில் ஏறி அருகருகே அமரும் நிமிடத்தில் தன்னைப் பற்றி ஆண்ட்ரூஸிடம் முழுவதுமாகச் சொல்லிவிட்டிருந்தான்.
“ஹெஹ்ஹெஹ்ஹே..... ஜோக் ஆஃப் த இயர். நீங்க நாளைக்குள்ள சாகப்போறீங்களா? வாட் எ ரப்பிஷ் திங் மிஸ்டர் கிரிதர்...? எந்த யுகத்துல வாழ்ந்துட்டிருக்கீங்கன்னு தெரியுமா” என்றவன் தொடர்ந்து கேட்டான்: “சரி.. நாளைக்குச் சாகப்போறீங்கன்னா இன்னைக்கு எதுக்கு ஃப்ளைட்ல லண்டன் ட்ராவல்?”
“சொன்னா முட்டாள்தனமா இருக்கும். தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் அஞ்சரை மணிநேர வித்தியாசம். அப்படீன்னா நாளைக்கு நைட் இங்க பன்னெண்டு மணின்னா அங்க இன்னும் அஞ்சரை எக்ஸ்ட்ரா ஆகணும் அந்த நேரம் வர. ஆக என் மரணத்தை கொஞ்ச நேரமாவது தள்ளிப்போடறேன்.. புரியுதா?”
“புரியுது.. ஆனா செம காமெடியா இருக்கு. சரி சாகப்போறீங்க.. எதுக்கு லேப்டாப்?”
“எனக்கும் மனசுல ஒரு ஓரமா துளியூண்டு நம்பிக்கை இருக்கு ஆண்ட்ரூஸ்... ஒருவேளை சாகலைன்னா.. கம்யூனிகேஷனுக்கு என்ன பண்றது?“ என்று முதல்முறையாக வாய்விட்டு சிரித்தான்.
ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. கிரிதர் தன் வாட்சில் மணி பார்த்தான் 10.45.
“கிரிதர்.. இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருக்கற ஆளை நான் இப்பத்தான் பார்க்கறேன். யு ஆர் க்ரேஸி!” என்றான் ஆண்ட்ரூஸ்.
“ஆண்ட்ரூஸ்.. இதுவரைக்கும் அந்த ஜோசியர் சொன்னது தப்பினதே இல்லை. அதுவுமில்லாம அவரு ஜோசியத்தைத் தொழிலாப் பண்றவரில்லை. ஜோசியம் பொய்ன்னு நிரூபிக்கறதுக்காக ஜோசியம் படிக்க ஆரம்பிச்சவர் விஞ்ஞான ரீதியா அதை அலசி ஆராய்ஞ்சிருக்கார். தினமும் பகல்ல பலரையும் சந்திச்சுப் பேசி இரவு முழுக்க தன் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களை கம்ப்யூட்டர்ல போட்டு சேமிச்சு... அவரைப் பார்த்துப் பேசினீங்கன்னா இப்படிச் சொல்ல மாட்டீங்க”
“ஓகே கிரிதர்.. என்னோட பிறந்த நேரத்தை வெச்சு என்னைப் பத்தி சொல்லுவாரா?” எனக் கேட்டான் ஆண்ட்ரூஸ்.
“நிச்சயமா..”என்றவன் தன் லேப்டாப்பை ஆன் செய்து விமானத்தின் சீட்டில் இணைக்கப்பட்டிருந்த டேட்டா கார்டை சொருகி இணைய இணைப்பைக் கொடுத்தான்.
“மொதல்லெல்லாம் ஃப்ளைட்ல நெட் கனெக்ட் பண்ண முடியாது. ஏன் போனமாசம் கூட இல்ல.. இப்ப அதெல்லாம் வந்துடுச்சு. இந்தக் காலத்துல போய் ஜோசியம் கீசியம்ன்னுட்டு” என்ற ஆண்ட்ரூஸிடம் “மணி பதினொண்ணே கால் ஆகுது.. அவர் இப்ப ஆன்லைன்ல இருந்தா இப்பவே கேட்டுச் சொல்றேன்.. வெய்ட்” என்று தன் மெயிலை உயிப்பித்த போது ஜோசியரின் பெயரருகே பச்சை நிறமொளிர்ந்து கொண்டிருந்தது.
“குட்.. ஆன்லைன்ல இருக்காரு..” என்றவன் ஜோசியரை சாட்டுக்கு அழைத்தான்.
“ஹை டெக் ஜோசியர்தான் போல.. ஒத்துக்கறேன்..” என்ற ஆண்ட்ரூஸ் தன் பிறந்த நாள், நேரம், இடத்தைச் சொன்னான்.
சில பல நல விசாரிப்புகள் ‘ச்சாட்’டில் நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘நீ என்ன செய்தாலும் ஜாதகத்தை ஏமாற்றவோ, மாற்றவோ முடியாது கிரிதர்’ என்ற வரிகளை மட்டும் எட்டிப் படித்தான் ஆண்ட்ரூஸ்.
“உங்களைப் பத்திச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கேன். கொஞ்ச நேரத்துல ரிப்ளை மெய்ல் வரும்.. ‘நீ இப்ப எதைக் கேட்டாலும் செய்யறேன்’ங்கறார்” என்றான் கிரிதர் ஒருவித செயற்கைப் புன்னகையோடே.
ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு வெரி அர்ஜெண்ட் என்ற சப்ஜெக்டுடன் ஜோசியரிடமிருந்து மெய்ல் வந்திருந்தது. திறந்தான் கிரிதர்.
‘கிரிதர்.. இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். உனக்கு நாளை இறுதிநாள் என்றேனல்லவா.. என் ஜோசியம் பொய்க்காதெனின் உன் சக பயணிக்கு இன்றைக்கு இறுதிநாள். இதில் மாற்றமில்லை’ – இவ்வளவுதான் இருந்தது.
ஆண்ட்ரூஸிடம் காண்பித்தான். ‘ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஹ்ஹாஆ’ என்று அவன் சிரித்த குரலுக்கு முன் சீட் பயணிகள் திரும்ப.. “ஸாரி.. ஸாரி” என்று வழிந்து, “என்ன கிரிதர் தமாஷ் பண்றாரு உங்காளு?” என்றபடி கிரிதரின் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தான். 11.45. “இன்னும் கால் மணிநேரத்துக்குள்ள் நான் சாகப்போறேனா? ஃபூலிஷ்!” என்றபடி எழுந்து “எக்ஸ்க்யூஸ் மி.. வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்” என்று நகர்ந்தான். ஆண்ட்ரூஸின் முகம் தற்போது கொஞ்சம் களையிழந்ததாய்ப் பட்டது கிரிதருக்கு. ‘இல்லை நாந்தான் நினைத்துக் கொள்கிறேனோ?’ என்றும் சமாதானப்படுத்திக் கொண்டான்.
நிமிடங்கள் கரைய... திரும்பி வந்தமர்ந்தான் ஆண்ட்ரூஸ். கிரிதரின் மணிக்கட்டைத் திருப்பி வாட்சில் மணி பார்த்தான். 11.59. “இன்னும் ஒரு நிமிஷம் கழிச்சும் நான் இருந்தா.. உங்க ஜோசியம் பொய்.. சரிதானே?” என்று அவன் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்தான் கிரிதர்.
11:59:55
11:59:56
11:59:57
11:59:58
11:59:59
..
..
..
..
..
..
..
..
..
..
..
ஐ!! அதெப்படி பூராக்கதையையும் இங்கயே படிக்க முடியுமா? கதையைத் தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக்கவும்! பின்னூட்டத்துல கருத்து தெரிவிக்கவும்!
.
Tuesday, February 1, 2011
Sunday, January 23, 2011
அவியல் 24 ஜனவரி 2011
டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பொருட்களைப் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருக்கும்போது, முன் சென்ற ஒரு குடும்பத்தில் நடந்தது:
“ஏங்க.... சாம்பார்த் தூள் ரெண்டு பாக்கெட் எடுத்து கூடைல போடுங்க”
கணவன் இரண்டு பாக்கெட் சாம்பார் தூளை எடுத்துப் போடுகிறார்.
“என்னங்க... ஒண்ணு ஆச்சி மசாலா, இன்னொண்ணு சக்தி மசாலா? ஒரே ப்ராண்ட் எடுங்களேன்..”
“ஆச்சி மசாலா வாங்கலைன்னா ஆச்சி கோச்சுப்பாங்கள்ல?”
“அப்ப சக்தி மசாலா?”
கணவன் வழிந்தபடி சொன்னார்: “ஹி..ஹி.. அது தமன்னாவுக்காக..”
------------------
நண்பன் கூப்பிட்டான்: “டேய்... சரக்கு வாங்கலாம்னு டாஸ்மாக் போனேண்டா.. சரியான கூட்டம்..”
“டாஸ்மாக்ல கூடறதுன்னா அது தப்பான கூட்டம்டா.. அதெப்படி சரியான கூட்டமாகும்?”
ஃபோன் என்பதால் அடிக்க வரவில்லை. இந்த சரியான என்பதை எங்கெங்கே பயன்படுத்துகிறோம் என்று யோசித்தேன். சரியான கோவம் வந்தது.
“அவளைப் பார்த்தன்னு வையி... சரியான ஃபிகர்டா!”
“மேனேஜர்கிட்ட சொன்னேன். கேட்கவே இல்ல. சரியான முசுடு அந்தாளு..”
“உன்கிட்ட போய்ச் சொன்னேன்பாரு.. சரியான ஆளுடா நீ!” - இதே வேறு அர்த்தத்தில்... “உன்கிட்ட சொன்னதுனால ஆச்சு.. நீதாண்டா சரியான ஆளு”
இதே போல சம்பந்தமே இல்லாமல் நடுவே சேர்த்திக் கொள்கிற இன்னொரு வார்த்தை - பயங்கரம்!
“ப்பா.. பயங்கரக் கூட்டம்டா பஸ் ஸ்டாண்ட்ல”
“நீ பயங்கரமான ஆளுடா..!”
“சாம்பார் பயங்கர காரமா இருந்துச்சு” இதே வேறு விதமாய்.. “சாம்பார் பயங்கர டேஸ்ட்மா!”
இப்படி வார்த்தைகளை சம்பந்தமில்லாம பயன்படுத்தற யோசிச்சா சரியான கோவம் வருகிறது என்றேனா.. இப்ப பயங்கரமா கோவம் வருது!
----------------------------------
கோ பாடல்கள். சிடி கவர் பின்னால் பாடல்கள் / பாடியவர் / எழுதியவர்களைக் குறிப்பிட்டிருக்கும் ஐடியாவுக்கு ஒரு பூச்செண்டு!
கார்க்கி சொல்லியிருக்கற மாதிரி யுவனை முந்துகிறார் ஹாரிஸ். ஒரு கன்ஸிஸ்டென்ஸி இருக்கிறது. எனக்கு அமளிதுமளி அவ்வளவு பிடித்தது. நடுநடுவே வரும் ‘யய் யவ்டதை யவ்டதை யய்யே’ சூப்பர்! (அதுக்கென்ன பேரு... கொன்னக்கோல்.. சரிதானே?)
அப்பறம் அகநக பாடலில் பெண்குரல் ராப்பும் கவர்கிறது! என்னமோ ஏதோ பாடல் - காதை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் ஹாரிஸ் பாட்டு என்று!
சரி.. ஒரு புகார்:
எங்கேயும் காதல், சிறுத்தை, ஆடுகளம்.. இப்ப இதுன்னு வர வர யாரும் லிரிக் புக் அட்டாச் பண்றதில்லை.. ஏற்கனவே ஒரிஜினல் சிடி வாங்கறவங்க கம்மி.. இப்படி பண்ணா சரியில்லை.. சொல்லீட்டேன் ஆமா..
----------------------------------------

நண்பர் பகிர்ந்துகொண்ட இந்தப் போஸ்டரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. +2, 10வது மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி என்று மாணவர்களிடையே அரசியலைக் கலக்குவது வருத்தத்துக்குரிய விஷயம்.
----------------------
லொன்வபோ சொட்சொபி.
திட்டறேன்னு நெனைக்காதீங்க.. முடிஞ்சு போன சௌத் ஆஃப்ரிகா சீரிஸ்ல பிரகாசமான பௌலர். முதல் ஒன் டேல சச்சின் விக்கெட்டை எடுத்தவர்கிட்ட “சச்சின் விக்கெட்! எப்படி ஃபீல் பண்றீங்க?”ன்னு கேட்டிருக்காங்க. மனுஷன் வெவரம். “ஒண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணி பேசி அவர் கோவத்துக்கு ஆளாக விரும்பல”ன்னு சிரிச்சுட்டே சொன்னாராம். அப்பறம் ஒலங்காவுக்கு ஆன கதிதான்னு நெனைச்சிருப்பாரு!
ஓகே.. இன்னைக்கு மேட்ச்ல தோத்தாலும் நல்ல ரன்ரேட். அவங்க 46 ஓவர்ல 250. 5.43 RR. நாம 40.2 ஓவர்ல 234. RR - 5.80. என்ன விக்கெட் இல்லாமப் போச்சு, யூசுஃபோட ஃபார்ம் நல்ல விஷயம். பார்த்திவ், ரோகித்ன்னு இன்னைக்கு ஓபனிங் பண்ணவங்களுக்கு பதிலா உலகக் கோப்பைல காம்பீர், சேவக்ன்னு இறங்கும்போது பொறி பறக்காது? மிடில் ஆர்டர்ல ரெய்னாவோட அவுட் ஆஃப் ஃபார்ம்தான் கொஞ்சம் பயமுறுத்துது. டவுன் ஆர்டர்ல - லான்ஸ் க்ளூன்ஸ்னர் ஒருக்கா செஞ்ச மேஜிக்கை இந்த உலகக் கோப்பைல செய்ய யூசுஃப் பதான் இருக்காரு. போதாததுக்கு ஹர்பஜன் / ஜாகீர் நல்லா பார்ட்னர்ஷிப் தர்றாங்க.. அப்பறமென்ன?
Get Ready Folks!
---------------------------------
என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்ப்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி
.
“ஏங்க.... சாம்பார்த் தூள் ரெண்டு பாக்கெட் எடுத்து கூடைல போடுங்க”
கணவன் இரண்டு பாக்கெட் சாம்பார் தூளை எடுத்துப் போடுகிறார்.
“என்னங்க... ஒண்ணு ஆச்சி மசாலா, இன்னொண்ணு சக்தி மசாலா? ஒரே ப்ராண்ட் எடுங்களேன்..”
“ஆச்சி மசாலா வாங்கலைன்னா ஆச்சி கோச்சுப்பாங்கள்ல?”
“அப்ப சக்தி மசாலா?”
கணவன் வழிந்தபடி சொன்னார்: “ஹி..ஹி.. அது தமன்னாவுக்காக..”
------------------
நண்பன் கூப்பிட்டான்: “டேய்... சரக்கு வாங்கலாம்னு டாஸ்மாக் போனேண்டா.. சரியான கூட்டம்..”
“டாஸ்மாக்ல கூடறதுன்னா அது தப்பான கூட்டம்டா.. அதெப்படி சரியான கூட்டமாகும்?”
ஃபோன் என்பதால் அடிக்க வரவில்லை. இந்த சரியான என்பதை எங்கெங்கே பயன்படுத்துகிறோம் என்று யோசித்தேன். சரியான கோவம் வந்தது.
“அவளைப் பார்த்தன்னு வையி... சரியான ஃபிகர்டா!”
“மேனேஜர்கிட்ட சொன்னேன். கேட்கவே இல்ல. சரியான முசுடு அந்தாளு..”
“உன்கிட்ட போய்ச் சொன்னேன்பாரு.. சரியான ஆளுடா நீ!” - இதே வேறு அர்த்தத்தில்... “உன்கிட்ட சொன்னதுனால ஆச்சு.. நீதாண்டா சரியான ஆளு”
இதே போல சம்பந்தமே இல்லாமல் நடுவே சேர்த்திக் கொள்கிற இன்னொரு வார்த்தை - பயங்கரம்!
“ப்பா.. பயங்கரக் கூட்டம்டா பஸ் ஸ்டாண்ட்ல”
“நீ பயங்கரமான ஆளுடா..!”
“சாம்பார் பயங்கர காரமா இருந்துச்சு” இதே வேறு விதமாய்.. “சாம்பார் பயங்கர டேஸ்ட்மா!”
இப்படி வார்த்தைகளை சம்பந்தமில்லாம பயன்படுத்தற யோசிச்சா சரியான கோவம் வருகிறது என்றேனா.. இப்ப பயங்கரமா கோவம் வருது!
----------------------------------
கோ பாடல்கள். சிடி கவர் பின்னால் பாடல்கள் / பாடியவர் / எழுதியவர்களைக் குறிப்பிட்டிருக்கும் ஐடியாவுக்கு ஒரு பூச்செண்டு!
கார்க்கி சொல்லியிருக்கற மாதிரி யுவனை முந்துகிறார் ஹாரிஸ். ஒரு கன்ஸிஸ்டென்ஸி இருக்கிறது. எனக்கு அமளிதுமளி அவ்வளவு பிடித்தது. நடுநடுவே வரும் ‘யய் யவ்டதை யவ்டதை யய்யே’ சூப்பர்! (அதுக்கென்ன பேரு... கொன்னக்கோல்.. சரிதானே?)
அப்பறம் அகநக பாடலில் பெண்குரல் ராப்பும் கவர்கிறது! என்னமோ ஏதோ பாடல் - காதை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் ஹாரிஸ் பாட்டு என்று!
சரி.. ஒரு புகார்:
எங்கேயும் காதல், சிறுத்தை, ஆடுகளம்.. இப்ப இதுன்னு வர வர யாரும் லிரிக் புக் அட்டாச் பண்றதில்லை.. ஏற்கனவே ஒரிஜினல் சிடி வாங்கறவங்க கம்மி.. இப்படி பண்ணா சரியில்லை.. சொல்லீட்டேன் ஆமா..
----------------------------------------

நண்பர் பகிர்ந்துகொண்ட இந்தப் போஸ்டரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. +2, 10வது மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி என்று மாணவர்களிடையே அரசியலைக் கலக்குவது வருத்தத்துக்குரிய விஷயம்.
----------------------
லொன்வபோ சொட்சொபி.
திட்டறேன்னு நெனைக்காதீங்க.. முடிஞ்சு போன சௌத் ஆஃப்ரிகா சீரிஸ்ல பிரகாசமான பௌலர். முதல் ஒன் டேல சச்சின் விக்கெட்டை எடுத்தவர்கிட்ட “சச்சின் விக்கெட்! எப்படி ஃபீல் பண்றீங்க?”ன்னு கேட்டிருக்காங்க. மனுஷன் வெவரம். “ஒண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணி பேசி அவர் கோவத்துக்கு ஆளாக விரும்பல”ன்னு சிரிச்சுட்டே சொன்னாராம். அப்பறம் ஒலங்காவுக்கு ஆன கதிதான்னு நெனைச்சிருப்பாரு!
ஓகே.. இன்னைக்கு மேட்ச்ல தோத்தாலும் நல்ல ரன்ரேட். அவங்க 46 ஓவர்ல 250. 5.43 RR. நாம 40.2 ஓவர்ல 234. RR - 5.80. என்ன விக்கெட் இல்லாமப் போச்சு, யூசுஃபோட ஃபார்ம் நல்ல விஷயம். பார்த்திவ், ரோகித்ன்னு இன்னைக்கு ஓபனிங் பண்ணவங்களுக்கு பதிலா உலகக் கோப்பைல காம்பீர், சேவக்ன்னு இறங்கும்போது பொறி பறக்காது? மிடில் ஆர்டர்ல ரெய்னாவோட அவுட் ஆஃப் ஃபார்ம்தான் கொஞ்சம் பயமுறுத்துது. டவுன் ஆர்டர்ல - லான்ஸ் க்ளூன்ஸ்னர் ஒருக்கா செஞ்ச மேஜிக்கை இந்த உலகக் கோப்பைல செய்ய யூசுஃப் பதான் இருக்காரு. போதாததுக்கு ஹர்பஜன் / ஜாகீர் நல்லா பார்ட்னர்ஷிப் தர்றாங்க.. அப்பறமென்ன?
Get Ready Folks!
---------------------------------
என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்ப்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி
.
Thursday, January 20, 2011
அவியல் 20 ஜனவரி 2011
பொங்கல் விடுமுறை முடிந்து நண்பர் பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார். டிக்கெட் எடுக்கும்போது, இவருக்கு முன் சீட்டில் தன் ஐந்து -ஆறு வயது மதிக்கத்தக்க மகனுடன் அமர்ந்திருந்த குடும்பத்தலைவர் இரண்டரை டிக்கெட் என்று கேட்டிருக்கிறார். கண்டக்டர் ‘மூணு டிக்கெட்டா எடுத்துட்டீங்கன்னா பையன் நல்லா உட்கார்ந்துட்டு வரலாம். அரை டிக்கெட் எடுத்தீங்கன்னா இன்னொருத்தரை உட்கார வைக்க வேண்டிவரும். இல்லீன்னா செக்கிங் இன்ஸ்பெக்டருக்கு நான் பதில் சொல்லணும்’ என்றிருக்கிறார்.
அவ்வளவுதான். பயங்கரமாகக் கத்த ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. ‘அத்தனை லட்சம் கொள்ளையடிக்கறாங்க... இந்த அரைடிக்கெட்லதான் நாட்டைக் காப்பாத்தப் போற நீ’ என்று ஒரே அர்ச்சனையாம். சகட்டு மேனிக்கு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து ‘அரை டிக்கெட்டு என்னாய்யா இந்தாளு கவுன்சிலர்லேர்ந்து ஒபாமா வரைக்கு எல்லாரையும் இழுக்கறாரு?’ என்று பிற பயணிகளும் சலசலக்க ஆரம்பிக்க அவர் மனைவி படாரென எழுந்து ‘இப்ப அவரு சொன்னமாதிரி டிக்கெட் எடுங்க.. இல்லைன்னா கம்னு உட்காருங்க.. என்னாத்துக்கு இந்த வாயி?” என்று கத்த பொட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டாராம் அந்தப் பயணி.
சம்சாரம் அது மின்சாரம்!
----------------------------------
இதுவும் பஸ்ஸில் (கூகுள் பஸ் அல்ல. பேருந்து!) நடந்த விஷயம்.
அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படத் தயாராக நிற்கிற பேருந்தில் ஏறுகிறார் அவர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றியில் பட்டை. ‘அன்பர்களே.. நான் சிங்காரச் சென்னையிலிருந்து பழனி செல்வதற்காக வந்திருக்கிறேன். அங்கங்கே உங்களைப் போன்றவர்கள் செய்யும் தானத்தைப் பெற்று முருகனை தரிசிக்கப் போகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. தானம் இடுபவர்கள் இடலாம்’ என்று கம்பீரமாக அறிவித்துவிட்டு ஒவ்வொருத்தர் அருகிலும் போய் நிற்கிறார். அருகில் நிற்கும்போதுதான் அவர் சுவாசத்தில் டாஸ்மாக் வாசனை ரொம்பவே ஓவராக இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஒருவரும் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. நடந்து நடந்து பின் படிக்கட்டுக்கு வந்தவர் சத்தமாகச் சொன்னாராம்:
“ஒருத்தரும் போடலியா? சரி.. சரி.. பார்த்துப் போங்க.. சபரிமலை ஞாபகமிருக்கில்ல? அந்த மாதிரி ஆகாம இருந்தாச் சரி”
அடப்பாவிகளா..!
-----------------------
ட்விட்டரில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது கீழே உள்ள புகைப்படம்:

(பெரிதாகப் பார்க்க: http://www.ibelieveinadv.com/commons/enjoy-the-wait.jpg)
காத்திருக்கும் நேரத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார்கள். பலே யோசனை இது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கீழிருந்து ஒரு கதை ஆரம்பித்து மேலே முடிவது போலிருக்கும் அந்த ஐந்தாவது யோசனை ஆஹா! எத்தனை இடைவெளிவிட்டு அழகாக நகரும் க்யூ!
இந்தியாவுலயும் ஆராச்சும் செய்ங்கப்பா இந்த மாதிரி யோசனையெல்லாம்!
-------------------------------------------
ஒரு டெக்னிகல் மேட்டர்: ட்விட்டரில் பலர் அடிக்கடி வந்து ‘இங்க்லீஷ்ல டைப்புங்க. நான் மொபைல்ல படிக்கறேன். தமிழ்ல அடிச்சா படிக்க முடியாது’ என்கிறார்கள். நீங்கள் ஓபரா மினியில் உலவுபவராக இருந்தால் தமிழில் படிக்க முடியும்..
ஓபரா மினி அட்ரஸ் பாரில் www எல்லாம் இல்லாமல் டைரக்டாக config: என்று டைப்பி ஓகே கொடுக்கவும். செட்டிங்ஸ் பகுதி வரும். அதில் கடைசியாக 'use bitmap fonts....' என்று முழ நீளத்துக்கு ஒரு கேள்வி இருக்கும். அது ‘NO’ என்றிருக்கும். அதை ‘YES’ என்று மாற்றுங்கள். இனி நீங்கள் உங்கள் வலை, ட்விட்டர், மின்னஞ்சல்களை தமிழிலேயே படிக்கலாம்!
------------------------------
மொபைல் நம்பரை மாற்றாமல் சர்வீஸ் ப்ரொவைடரை மாற்றும் வசதி இன்னும் கொஞ்சநாட்களில் வரவிருக்கிறது. 19 ரூபாய்க்கு ஓர் எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டால் நீங்கள் வேறு நெட்வொர்க்குக்குத் தாவலாமாம். ஆனால் முக்கிய விஷயம் பழைய நெட்வொர்க் கணக்கில் உங்களிடம் பாக்கி ஏதும் இருந்தால் அது புது நெட்வொர்க்கில் கணக்கில் வராது.
வரவர இந்த மொபைல் ஃபோன்காரர்கள் - சிம்கார்டு விற்பவர்கள் என்று இவர்களது வளர்ச்சி ஏகபோகமாய் ஏறிக்கொண்டிருக்கிறது. அன்றொருநாள் புதுப்பட இசைத்தட்டு ஒன்று வாங்க அலைந்து கொண்டிருந்தேன். அவிநாசியில். ஒரு சி.டி கடைகூட இல்லை. இருந்த ஒன்றிரண்டு கடைகளிலும் ஒரிஜினல் ஆடியோ சி.டி இல்லை. ‘அதெல்லாம் வருதா இப்ப?’ என்று ஒரு கடைக்காரர் கேட்டது அதிர்ச்சி!அதே நேரம் பத்து கடைகளுக்கு ஒரு கடை சிம்கார்டு, செல்ஃபோன் கடையாக இருந்தது.
என் நண்பர் ஒருவர் புத்தாண்டு அன்று way to smsலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘இன்று முதல் நான் அலைபேசி உபயோகிப்பதிலை என்று முடிவு செய்திருக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி இது:........................ நான் தங்களைத் தொடர்புகொண்டு ஏதேனும் சொல்ல விரும்பினால் way to sms இருந்து தொடர்பு கொள்கிறேன். நீங்கள் என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்பினால் ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள்’ என்று.
பொறாமையாக இருந்தது அவரெடுத்த முடிவு கண்டு!
-----------------------------------
மெக்கானிக் ஷாப் ஒன்றில் கண்ட வாசகம்:
மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.
----------------------
.
அவ்வளவுதான். பயங்கரமாகக் கத்த ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. ‘அத்தனை லட்சம் கொள்ளையடிக்கறாங்க... இந்த அரைடிக்கெட்லதான் நாட்டைக் காப்பாத்தப் போற நீ’ என்று ஒரே அர்ச்சனையாம். சகட்டு மேனிக்கு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து ‘அரை டிக்கெட்டு என்னாய்யா இந்தாளு கவுன்சிலர்லேர்ந்து ஒபாமா வரைக்கு எல்லாரையும் இழுக்கறாரு?’ என்று பிற பயணிகளும் சலசலக்க ஆரம்பிக்க அவர் மனைவி படாரென எழுந்து ‘இப்ப அவரு சொன்னமாதிரி டிக்கெட் எடுங்க.. இல்லைன்னா கம்னு உட்காருங்க.. என்னாத்துக்கு இந்த வாயி?” என்று கத்த பொட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டாராம் அந்தப் பயணி.
சம்சாரம் அது மின்சாரம்!
----------------------------------
இதுவும் பஸ்ஸில் (கூகுள் பஸ் அல்ல. பேருந்து!) நடந்த விஷயம்.
அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படத் தயாராக நிற்கிற பேருந்தில் ஏறுகிறார் அவர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றியில் பட்டை. ‘அன்பர்களே.. நான் சிங்காரச் சென்னையிலிருந்து பழனி செல்வதற்காக வந்திருக்கிறேன். அங்கங்கே உங்களைப் போன்றவர்கள் செய்யும் தானத்தைப் பெற்று முருகனை தரிசிக்கப் போகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. தானம் இடுபவர்கள் இடலாம்’ என்று கம்பீரமாக அறிவித்துவிட்டு ஒவ்வொருத்தர் அருகிலும் போய் நிற்கிறார். அருகில் நிற்கும்போதுதான் அவர் சுவாசத்தில் டாஸ்மாக் வாசனை ரொம்பவே ஓவராக இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஒருவரும் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. நடந்து நடந்து பின் படிக்கட்டுக்கு வந்தவர் சத்தமாகச் சொன்னாராம்:
“ஒருத்தரும் போடலியா? சரி.. சரி.. பார்த்துப் போங்க.. சபரிமலை ஞாபகமிருக்கில்ல? அந்த மாதிரி ஆகாம இருந்தாச் சரி”
அடப்பாவிகளா..!
-----------------------
ட்விட்டரில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது கீழே உள்ள புகைப்படம்:

(பெரிதாகப் பார்க்க: http://www.ibelieveinadv.com/commons/enjoy-the-wait.jpg)
காத்திருக்கும் நேரத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார்கள். பலே யோசனை இது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கீழிருந்து ஒரு கதை ஆரம்பித்து மேலே முடிவது போலிருக்கும் அந்த ஐந்தாவது யோசனை ஆஹா! எத்தனை இடைவெளிவிட்டு அழகாக நகரும் க்யூ!
இந்தியாவுலயும் ஆராச்சும் செய்ங்கப்பா இந்த மாதிரி யோசனையெல்லாம்!
-------------------------------------------
ஒரு டெக்னிகல் மேட்டர்: ட்விட்டரில் பலர் அடிக்கடி வந்து ‘இங்க்லீஷ்ல டைப்புங்க. நான் மொபைல்ல படிக்கறேன். தமிழ்ல அடிச்சா படிக்க முடியாது’ என்கிறார்கள். நீங்கள் ஓபரா மினியில் உலவுபவராக இருந்தால் தமிழில் படிக்க முடியும்..
ஓபரா மினி அட்ரஸ் பாரில் www எல்லாம் இல்லாமல் டைரக்டாக config: என்று டைப்பி ஓகே கொடுக்கவும். செட்டிங்ஸ் பகுதி வரும். அதில் கடைசியாக 'use bitmap fonts....' என்று முழ நீளத்துக்கு ஒரு கேள்வி இருக்கும். அது ‘NO’ என்றிருக்கும். அதை ‘YES’ என்று மாற்றுங்கள். இனி நீங்கள் உங்கள் வலை, ட்விட்டர், மின்னஞ்சல்களை தமிழிலேயே படிக்கலாம்!
------------------------------
மொபைல் நம்பரை மாற்றாமல் சர்வீஸ் ப்ரொவைடரை மாற்றும் வசதி இன்னும் கொஞ்சநாட்களில் வரவிருக்கிறது. 19 ரூபாய்க்கு ஓர் எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டால் நீங்கள் வேறு நெட்வொர்க்குக்குத் தாவலாமாம். ஆனால் முக்கிய விஷயம் பழைய நெட்வொர்க் கணக்கில் உங்களிடம் பாக்கி ஏதும் இருந்தால் அது புது நெட்வொர்க்கில் கணக்கில் வராது.
வரவர இந்த மொபைல் ஃபோன்காரர்கள் - சிம்கார்டு விற்பவர்கள் என்று இவர்களது வளர்ச்சி ஏகபோகமாய் ஏறிக்கொண்டிருக்கிறது. அன்றொருநாள் புதுப்பட இசைத்தட்டு ஒன்று வாங்க அலைந்து கொண்டிருந்தேன். அவிநாசியில். ஒரு சி.டி கடைகூட இல்லை. இருந்த ஒன்றிரண்டு கடைகளிலும் ஒரிஜினல் ஆடியோ சி.டி இல்லை. ‘அதெல்லாம் வருதா இப்ப?’ என்று ஒரு கடைக்காரர் கேட்டது அதிர்ச்சி!அதே நேரம் பத்து கடைகளுக்கு ஒரு கடை சிம்கார்டு, செல்ஃபோன் கடையாக இருந்தது.
என் நண்பர் ஒருவர் புத்தாண்டு அன்று way to smsலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘இன்று முதல் நான் அலைபேசி உபயோகிப்பதிலை என்று முடிவு செய்திருக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி இது:........................ நான் தங்களைத் தொடர்புகொண்டு ஏதேனும் சொல்ல விரும்பினால் way to sms இருந்து தொடர்பு கொள்கிறேன். நீங்கள் என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்பினால் ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள்’ என்று.
பொறாமையாக இருந்தது அவரெடுத்த முடிவு கண்டு!
-----------------------------------
மெக்கானிக் ஷாப் ஒன்றில் கண்ட வாசகம்:
மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.
----------------------
.
Subscribe to:
Posts (Atom)