Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Monday, July 6, 2009

அ-

திகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...

லுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ்! ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன? அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.

ந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.

வர்கள் கேட்டது…

'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர்? ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா? கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே?' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.

திஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ!

ண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா?’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!

டுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு! மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

வியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற?) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.

.