எல்லாரும் மன்னிக்கணும். சபரிமலைக்கு மாலைபோடற
ஆ-சாமிகளைப் பத்தி ஒரு பதிவு எழுதிகிட்டிருந்தேன். ரொம்ப சீரியஸா இருக்கு. கொஞ்சம் அந்தக் கோவம் தணியட்டும். ஏற்கனவே மு.க - கிட்டேர்ந்து அதிகமா கோவப்படக்கூடாது ன்னு அட்வைஸ் எல்லாம் வந்துகிட்டிருக்கு. அதுனால அப்பறமா அதை வெளியிடலாம்ன்னு நிறுத்தி வெச்சுட்டேன்.
************************************
சரி... இன்னைக்கு ஒண்ணும் எழுதாம இருக்கலாம். ஆனா அதுவும் முடியல. அதெப்படி ஒரு நாளைக்கு உங்களை சும்மா விடறது? அதுனால நான் ரசிச்ச சில நகைச்சுவைகளை போட்டுத் தாக்கலாம்ன்னு ஒரு ப்ளான்.
அவசரத்துக்கு உப்புமா மாதிரி, இதுதான் நம்மகிட்ட நெறைய ஸ்டாக் இருக்கு!
**********************************
ஒரு நேர்முகத்தேர்வில்:
கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?
வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து
நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!
****************************
காதலி: நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?
**************************
ரொம்ப குண்டான ஒருத்தர் பஸ்சுல போனாராம். ரெண்டு டிக்கெட் புக் பண்ணி, உள்ள ஏறினார். கண்டக்டர் எங்க இன்னொருத்தர்ன்னு கேட்க, எனக்குத்தான் ரெண்டு. குண்டா இருக்கறதால’ ன்னார்.
கண்டக்டர் சொன்னாராம்... “சீட்21, சீட் 37 ரெண்டும்தான் காலி. போய் ஒக்கார்ந்துக்கோங்க”
*************************
“நம்ம கலா பூகோளத்துல டரொமப் ‘வீக்’கா இருக்கா”
“அவங்கப்பா, அம்மா அவளை உலகம் தெரியாம வளர்த்துட்டாங்க”
*****************************
போலீஸ்காரர் மனைவி தன் தோழியிடம்:
“என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்”
“ஐயையோ.. அப்பறம்?”
“நல்லவேளை, நெத்திப்பொட்டை ட்ரெஸ்ஸிங் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்”
**************************
மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...
“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”
“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”
“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”
“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”
“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”
“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”
****************************
பத்திரிகை ஆஃபீஸுக்கு வந்த ஒரு பெண்..
“என் கணவர் காலமாய்ட்டார். காலமானர் விளம்பரம் போட எவ்வளவு?”
“வார்த்தைக்கு நூறு ரூபாய்”
“ப்ச்.. என்கிட்ட இருநூறு ரூபாய்தான் இருக்கு. சரி.. ஹென்றி காலமானார்’ அப்படின்னு ரெண்டே வார்த்தை போட்டுடுங்க”
பத்திரிகைகாரருக்குப் பாவமாய்த் தோன்றவே..
“சரி..உங்களுக்கு சலுகை தர்றோம். நாலு வார்த்தை எழுதிக் கொடுங்க. இருநூறு ரூபாய் போதும்”
அந்தப் பெண்மணி எழுதிக் கொடுத்தார்...
“ஹென்றி காலமானார். கார் விற்பனைக்கு..”
***************************
ரெண்டு மருமகள்கள்..
“போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப் போய்ட்டாங்க”
“ம்ஹ்ம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்”
“அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”
*******************************
ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன். அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன். அவன் பேசற மொழி தெரியல. ஒரு மந்திரியை கூப்ட்டு பேசச் சொன்னாரு ராஜா. மந்திரி ‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ன்னாரு. அவனும் பயத்துல கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..
‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்லமாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’
******************************
டிஸ்கி: முதல் பாரால சொல்லிருக்கற மு.க., நம்ம முத்துலெட்சுமி கயல்விழி!
Showing posts with label JOKES. Show all posts
Showing posts with label JOKES. Show all posts
Wednesday, December 3, 2008
Wednesday, July 23, 2008
பலசரக்கு... பழைய சரக்கு!
கி.வா.ஜகந்நாதனைத் தெரியுமில்லையா உங்களுக்கு? சிலேடைப் பேச்சிலே வல்லவர்…! இனி மேலே (ச்சே...) கீழே படியுங்கள்..
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
********************
”எங்க தாத்தா செத்துட்டார். `காலமானார்’ பகுதியில விளம்பரம் கொடுக்கணும். எவ்வளவு செலவாகும்?”
”செண்டிமீட்டருக்கு 150 ரூபாய்”
“அடேங்கப்பா.. எங்க தாத்தா ஆறு அடி, மூணு செண்டிமீட்டராச்சே! கட்டுப்படியாகாது..”
****************************
குணாவும். ஜனாவும் வாடகைப் படகை எடுத்துக்கொண்டு ஏரியில் மீன் பிடிக்கப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைய மீனகள் கிடைக்க, குஷியானான் குணா. “டேய்.. ஜனா.. இந்த இடத்தைக் குறிச்சு வெச்சுக்கோ. நாளைக்கும் இங்கேயே வரலாம்” என்றான்.
மறுநாள்... படகுத்துறை நோக்கிப் போகும்போது “ஜனா.. நான் சொன்னமாதிரி அந்த இடத்தை நீ குறிச்சு வெச்சிருக்கதானே?” என்று கேட்டான் குணா.
“பின்னே? அந்தப் படகோட அடிப்பாகத்துல ஒரு பெருக்கல் குறி போட்டு வெச்சிருக்கேனே” என்று ஜனா சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் குணா. ரொம்ப டென்ஷனோடு கேட்டான்... “முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”
***************************
“குருவே.. நல்வாக்கு அருளுங்கள்” - சிஷ்யன் கேட்டான்.
“அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்” – புன்சிரிப்புடன் சொன்னார் குரு.
“என்ன குருவே... இதுவா நல்வாக்கு?”
“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி! வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளைடோ இறந்தால் எத்தனை துக்கம்?”
**********************
நெப்போலியன் : “என்னோட டிக்ஷனரியில IMPOSSIBLE என்கிற வார்த்தையே இல்லை!”
உடனே சொன்னான் நம்மாளு ஒருத்தன்.. “அதெல்லாம் டிக்ஷனரி வாங்கறப்பவே பாத்திருக்கணும்”
*************************
மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.
“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”
“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”
“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”
“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.
உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.
“எதுக்கு ரெண்டு?”
“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”
***********************
போலீஸ்காரங்க கோவிச்சுக்கக் கூடாது..!
காட்டுல ஒரு முரட்டுப் புலி. அதைப் பிடிக்க பலநாட்டுப் போலீசும் முயற்சிக்கறாங்க. தமிழ்நாட்டுப் போலீஸ் உள்ளே புகுந்த ஒரு மணி நேரத்துல புலியைப் பிடிச்சுட்டதா செய்தி பரவுது. டி.வி.காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் வேகமா காட்டுக்குள்ள போய்ப் பாத்தா...
தமிழ்நாட்டுப் போலீஸ் சுத்தி நிக்க, நடுவுல ஒரு கரடி பரிதாபமா மிரள மிரள நின்னுட்டிருந்ததாம். போலீஸ்காரங்க அத லத்திசார்ஜ் பண்ணிகிட்டே சொல்லீட்டிருந்தாங்க.....
“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”
-------------------------
இது ஒரு `ஏ’ ஜோக்.... வேணாங்கறவங்க படிக்காதீங்க..!
உள்ளாடை வாங்கிய இளம்பெண் கடைக்காரரைக் கேட்டாள்.
“இதுமேல எம்பிராய்டரில எழுதித் தரமுடியுமா?”
“சொல்லுங்க மேடம் என்னன்னு எழுதணும்?”
“`இங்கே எழுதியிருப்பதை நீ படிக்க முடிந்தால் நாம் மிக நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம்’ அப்படீன்னு எழுதணும்”
“ஆங்கிலத்திலா... ஹிந்தியிலா.. எந்த மொழியில எழுத?”
“ப்ரெய்லியில் எழுதுங்க”
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
********************
”எங்க தாத்தா செத்துட்டார். `காலமானார்’ பகுதியில விளம்பரம் கொடுக்கணும். எவ்வளவு செலவாகும்?”
”செண்டிமீட்டருக்கு 150 ரூபாய்”
“அடேங்கப்பா.. எங்க தாத்தா ஆறு அடி, மூணு செண்டிமீட்டராச்சே! கட்டுப்படியாகாது..”
****************************
குணாவும். ஜனாவும் வாடகைப் படகை எடுத்துக்கொண்டு ஏரியில் மீன் பிடிக்கப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைய மீனகள் கிடைக்க, குஷியானான் குணா. “டேய்.. ஜனா.. இந்த இடத்தைக் குறிச்சு வெச்சுக்கோ. நாளைக்கும் இங்கேயே வரலாம்” என்றான்.
மறுநாள்... படகுத்துறை நோக்கிப் போகும்போது “ஜனா.. நான் சொன்னமாதிரி அந்த இடத்தை நீ குறிச்சு வெச்சிருக்கதானே?” என்று கேட்டான் குணா.
“பின்னே? அந்தப் படகோட அடிப்பாகத்துல ஒரு பெருக்கல் குறி போட்டு வெச்சிருக்கேனே” என்று ஜனா சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் குணா. ரொம்ப டென்ஷனோடு கேட்டான்... “முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”
***************************
“குருவே.. நல்வாக்கு அருளுங்கள்” - சிஷ்யன் கேட்டான்.
“அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்” – புன்சிரிப்புடன் சொன்னார் குரு.
“என்ன குருவே... இதுவா நல்வாக்கு?”
“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி! வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளைடோ இறந்தால் எத்தனை துக்கம்?”
**********************
நெப்போலியன் : “என்னோட டிக்ஷனரியில IMPOSSIBLE என்கிற வார்த்தையே இல்லை!”
உடனே சொன்னான் நம்மாளு ஒருத்தன்.. “அதெல்லாம் டிக்ஷனரி வாங்கறப்பவே பாத்திருக்கணும்”
*************************
மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.
“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”
“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”
“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”
“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.
உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.
“எதுக்கு ரெண்டு?”
“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”
***********************
போலீஸ்காரங்க கோவிச்சுக்கக் கூடாது..!
காட்டுல ஒரு முரட்டுப் புலி. அதைப் பிடிக்க பலநாட்டுப் போலீசும் முயற்சிக்கறாங்க. தமிழ்நாட்டுப் போலீஸ் உள்ளே புகுந்த ஒரு மணி நேரத்துல புலியைப் பிடிச்சுட்டதா செய்தி பரவுது. டி.வி.காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் வேகமா காட்டுக்குள்ள போய்ப் பாத்தா...
தமிழ்நாட்டுப் போலீஸ் சுத்தி நிக்க, நடுவுல ஒரு கரடி பரிதாபமா மிரள மிரள நின்னுட்டிருந்ததாம். போலீஸ்காரங்க அத லத்திசார்ஜ் பண்ணிகிட்டே சொல்லீட்டிருந்தாங்க.....
“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”
-------------------------
இது ஒரு `ஏ’ ஜோக்.... வேணாங்கறவங்க படிக்காதீங்க..!
உள்ளாடை வாங்கிய இளம்பெண் கடைக்காரரைக் கேட்டாள்.
“இதுமேல எம்பிராய்டரில எழுதித் தரமுடியுமா?”
“சொல்லுங்க மேடம் என்னன்னு எழுதணும்?”
“`இங்கே எழுதியிருப்பதை நீ படிக்க முடிந்தால் நாம் மிக நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம்’ அப்படீன்னு எழுதணும்”
“ஆங்கிலத்திலா... ஹிந்தியிலா.. எந்த மொழியில எழுத?”
“ப்ரெய்லியில் எழுதுங்க”
Subscribe to:
Posts (Atom)