Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, July 21, 2009

பெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10!


1) பைக்கில வந்து, இறங்கிப் போகறதுக்கு முன்னாடி குனிஞ்சு கண்ணாடில முகம் பார்த்து அவசர அவசரமா தலைகோதுவீங்களே... அது பிடிக்கும்.

2) நீங்க போடற சாக்ஸ், உங்க PHANTக்கு மேட்சா இருக்கறப்போ உங்க பைக்ல உட்கார்ந்து இருக்கும்போதோ, படில ஏறும்போதோ ஷூவுக்கும் PHANTக்கும் இடைல கொஞ்சமா சாக்ஸ் தெரியுமே.. அதை ரசிப்போம்.

3) பைக் ஓட்டும்போது ஒரு சைட்ல சாய்ஞ்ச மாதிரி உட்காராம, கைய ரொம்ப அகட்டி ஹேண்டில பிடிக்காம நேரா உட்கார்ந்த மாதிரி ஓட்டறப்போ ஏதாவது திருப்பம் வந்தா திரும்பும்போது சைட் அடிப்போம்.

4) கார்ல போகும்போது ஜன்னல்ல ஒரு கைய வெச்சுட்டு, அந்தப் பக்கம் இருக்கறவர்கிட்ட சீரியஸா பேசிட்டு வர்ற போஸை விரும்புவோம்.

5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல ரெண்டு கையையும் வெச்சுட்டு அந்நியோந்நியமா போவீங்கள்ல அந்த போஸ் பார்க்க ரொம்ப விருப்பம் எங்களுக்கு. (அப்படிப் போகும்போது ஓட்டறவரை சைட் அடிப்பீங்களா, பின்னாடி உட்கார்ந்திருக்கறவரையா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை!)




6) சேர்ல உட்கார்ந்திருக்கும்போது கம்பீரமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கறதும், நாற்காலியோட (அ) டெஸ்க் (அ) பின்னாடி உள்ள மேஜையோட பின்பகுதில ரெண்டு கை முட்டியையும் வெச்சு உட்கார்ந்திருக்கறதும் பிடிக்கும்.

7) நாற்காலியை திருப்பிப் போட்டு அதன் சாய்மானத்துல முகம் வெச்சுட்டு பேசறது பிடிக்கும்.

8) பொண்ணுங்க க்ரூப்பா வரும்போது ஒண்ணுந்தெரியாத மாதிரி பம்மிகிட்டு போவிங்கள்ல அது பிடிக்கும்.

9) நாலஞ்சு பசங்க பைக்ல சாஞ்சுட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போஸ் குடுத்துட்டு நின்னுகிட்டிருக்கறத ரொம்ப ரசிப்போம்.

10) பத்தாவது பாய்ண்ட்டா நிறைய வருது.. நேருக்கு நேர் பார்த்துப் பேசற பசங்க.., நாலைஞ்சு பேர் இருக்கறப்போ ரொம்ப ஹ்யூமரா பேசற ஒரு குறிப்பிட்ட பையன், கல்யாணவீட்ல இல்ல பொதுவான இடங்கள்ல ஒருத்தன் பிஸியா வேலை செஞ்சுட்டு இருப்பான்-பல பேர் அவனைச் சார்ந்து இருப்பாங்க-அந்த மாதிரி பசங்க... இது மாதிரி எக்கச்சக்கமா இருக்காம். உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க!


டிஸ்கி: அப்துல்லாவா.... ஆதிமூல கிருஷ்ணனா..? ரெடி ஸ்டார்ட் மீஜிக்!




.

Tuesday, November 4, 2008

பெண்ணால் முடியும் தம்பி!

பதினாறு வருஷத்திற்கு முந்தைய நிகழ்வு இது.

அந்தப் பெண் மணிப்பூரிலிருந்து வந்து திண்டுக்கல் காந்தி கிராமில் படித்துக் கொண்டிருந்தார். மேற்படிப்பு விஷயமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே, மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்து, காதல் வயப்படுகிறார்.

அவர் பெயர் பீனா. அந்த இளைஞர் கெல்வின்.

பீனா, தனது வீட்டில் காதலைத் தெரிவித்தபோது, எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பு. பிறகு பீனாவின் உறுதியைக் கண்டு, ‘இரண்டு வருடங்கள் கெல்வினுடன் எந்தத் தொடர்போ, பேச்சு வார்த்தையோ கூடாது என்று தடை விதிக்கிறார்கள். கட்டுப்படுகிறார்கள் இருவரும்.

ஒருவருடத்தில் வீட்டாரின் சாயம் வெளுக்கிறது. தன்னை மனம் மாற்றி வேறு ஒருவருக்கு திருமணம் செய்விக்கும் முயற்சியில் வீட்டார் இறங்கிவிட்டதை அறிகிறார் பீனா. கொடுத்த வாக்குப்படி, காதலனுடன் பேசாமல், அவரது பெற்றோருக்கு தொலைபேசி விபரத்தைக் கூறுகிறார் பீனா. உடனே, கெல்வினின் தாயார் கெல்வினை மணிப்பூருக்கு அனுப்பி பீனாவை அழைத்துவரச் சொல்லி திருமணம் செய்துவைக்கிறார்.

ஃப்ளாஷ்பேக் ஓவர்!

ஆயிற்று. மணவாழ்க்கை வெற்றிகரமாய் நடந்துகொண்டிருக்கிறது. சந்தோஷமான மணவாழ்க்கைக்கு அடையாளமாய் ஒரு மகன். பெற்றோருடன் பேச்சுவார்த்தையோ, போக்குவரத்தோ இல்லவே இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையொன்றுமில்லை. அதுதான் பெற்றோர்களைப் போலவே பார்த்துக் கொள்ளும் மாமனார், மாமியார் வாய்த்திருக்கிறார்களே!

அதிலும் வந்தது சோதனை. பணி நிமித்தமாய் தென்னாப்பிரிக்காவில் இருந்த மாமனாரும், மாமியாரும் வந்த விமானம் நடுவானில் நொறுங்க, நொறுங்கிப் போனார் பீனா. அது நடந்தது 2007 மே. அந்த சமயத்தில் இவர் கருவுற்றிருந்தார். டிசம்பரில் இரண்டாவதாக ஒரு மகன்!

இந்த சமயத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தனது தம்பிகளின் தொடர்பு மூலமாக பெற்றோருடனான பந்தமும் துளிர்விட்டது. சந்தோஷமானார். 15 வருடங்களுக்குப் பிறகு மணிப்பூர் செல்ல முடிவெடுத்து, செல்கிறார்.

அங்கே உறவினர்கள், பெற்றோருடன் மகிழ்ச்சியாய் இருந்து, உணவருந்திக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்க் கலாச்சாரம் குறித்த கிண்டல் பேச்சு வருகிறது உறவினர்களிடமிருந்து. ‘அந்த ஊருக்குப் போய் என்னத்தக் கிழிச்ச’ என்ற வசவுகள் வேறு.

அப்போதுதான் திருக்குறள் பற்றி தான் படித்ததை பகிர்ந்துகொள்கிறார் பீனா. அவர்களுக்கோ ஆச்சரியம்! திருக்குறள் இப்பேர்ப்பட்ட ஒரு புத்தகமா. அதில் சொல்லப்படாததே இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார்.

திரும்ப ஊருக்கு வரும்போது பீனாவின் மனம் அலைபாய்கிறது. ஒரே இந்தியாவில் இருந்தாலும், ஒரு மாநிலத்தின் பெருமைகள் மற்ற மாநிலத்துக்குத் தெரிவதில்லை. தெரிந்து கொண்டு, அதைப் போற்றி நடந்தால் மாநிலப் பிரச்சினைகளோ, பிரிவினைகளோ வருமா...?

அப்போதுதான் அவர் தீர்க்கமாக ஒரு முடிவெடுக்கிறார்.

அந்த முயற்சியில் வெற்றிபெற வேண்டி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடமும் தனது திட்டத்திற்கு ஆதரவு பெற்றுவரும் அளவுக்கு பீனா எடுத்த அந்த முடிவு என்ன?

மதியம் இரண்டு மணிவரைக் காத்திருங்கள்...