Showing posts with label காட்டுமிராண்டிகள். Show all posts
Showing posts with label காட்டுமிராண்டிகள். Show all posts

Friday, November 14, 2008

சாகலாம்னு தோணுது...

அப்போது என்னிடம் லைசென்ஸ் இல்லை. இதே திருப்பூரில் தேவ்ஜி காலனி-யில் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். இருந்த ஒரு டி.வி.எஸ்-ஸை எனக்குக் கொடுத்துவிட்டு எங்கள் மேனேஜருக்கு எம் – 80 வாங்கினார்கள். அவருக்கு அதை ஓட்ட சிரமமாய் இருக்கவே மறுபடி அவர் டி.வி.எஸ்-ஸையே எடுத்துக் கொண்டார். அந்த எம்-80யில் சென்று கொண்டிருந்தபோது சங்கீதா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்த ட்ராஃபிக் போலீஸார் பிடித்து விட்டார்கள்.

“லைசென்ஸ் இருக்கா?”

எங்கேயிருந்துதான் அப்படி ஒரு ஐடியா ‘சட்’டென வந்தது என்று தெரியவில்லை. (மூளையிலிருந்துதான்!)

“இருக்குங்க. கம்பெனில வாங்கி வெச்சிருக்காங்க”

“ஸ்டேஷனுக்கு வந்து காமிச்சு வண்டியை எடுத்துட்டுப் போ. பேரைச் சொல்லு..” என்று அந்தப் பாழாப்போன பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“ராமசாமி”

“வயசு?”

“32”

12 வருடங்களுக்கு முன் நடந்தது இது. அப்போது எனக்கு வயசு வெறும் 23தான். அந்த கான்ஸ்டபிள் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இவ்ளோ சின்னப் பையனா இருக்க? 32ங்கற?” என்று கேட்டார்.

“பார்த்தா தெரியாதுங்க” என்று சொல்லி சமாளித்துவிட்டு அவர்கள் வண்டியை லாரியில் ஏற்றியபிறகு கம்பெனிக்குப் போனேன். மேலாளரிடம் விஷயத்தைச் சொல்ல நடுங்கிப் போனார் அவர். பின்ன? அவர் பேருதானே ராமசாமி? பத்து, பதினைஞ்சு வண்டில எது யாருதுன்னா பார்க்கப் போறாங்க என்று அவர் பெயரைக் கொடுத்துவிட்டேன். ஆனால் அவரோ பயந்துபோய் வர மறுத்துக் கொண்டிருந்தார். எங்கள் முதலாளி வந்து ‘பையன் புத்திசாலித்தனமா ஒரு வேலை பண்ணீட்டு வந்திருக்கான். போங்க.. போய் பேசி வண்டியை எடுத்துட்டு வந்துருங்க’ என்று சொன்னபிறகே வந்தார்.

ஸ்டேஷனில் போய் என்னைப் பிடித்த கான்ஸ்டபிள் வெளியே ஒரு மரத்தடியில் யாரிடமோ பேரம்பேசியபடி இருக்க, நேராக உள்ளே சார்ஜெண்டிடம் போய் அந்த மெமோவையும், வண்டியின் RC புத்தகம், லைசென்ஸ் எல்லாத்தையும் காட்ட, ‘வண்டில எப்பவுமே ஒரு காப்பி வெச்சுக்கணும்ங்க’ என்று சொல்லிவிட்டு ‘யோவ்.. இவங்க வண்டியை குடுத்துடு’ என்று சொல்ல வண்டியை எடுத்துக் கொண்டு, ஸ்டார்ட் செய்து நகர்த்த எங்களை நோக்கி வந்தார் என்னைப் பிடித்த அந்தக் கான்ஸ்டபிள்.

“ஏம்ப்பா... ஒம்பாட்டுக்குப் போற?” என்று பின்னால் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து கேட்க.. (என்னா ஞாபக சக்திப்பா!) நான் முகத்தை ரொம்ப சோகமாக வைத்துக் கொண்டு “உள்ள கவனிச்சுட்டு வந்துட்டேன் சார். லைசென்ஸை கொண்டு போகவேண்டியதுதானே எனக்கு அடி விழுகாத குறையா திட்டுசார் உங்களால” என்று சொல்லி விட்டு மேனேஜரை முதுகில் நோண்ட அவர் வண்டியை விரட்ட ‘எஸ்கேப்!’

********************************

கேபிள் சங்கர் எழுதச் சொல்லிதான் நேற்று முன்தினம் இதை எழுத ஆரம்பித்தேன். இது தவிர வேறு ஒன்றிரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு. ஆனால் நேற்றைக்கு சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்தபிறகு மனசு எதிலும் லயிக்க மறுக்கிறது. நேற்று காலை நர்சிம் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும். எங்கள் வீட்டுத் தொலைக்காட்சி பெரும்பாலும் ஆஃப் செய்யப்பட்டுத்தான் இருக்கும். அதனால் நேற்று முன்தினம் பார்க்கவில்லை. நேற்றைக்கு பதிவர் கிரியின் பதிவில் இருந்த யூ ட்யூப் வீடியோவில்தான் முழுமையாகப் பார்த்தேன்.

ஆறுமுகம் என்ற மாணவனை காட்டுமிராண்டிக் கும்பல் தாக்குகிறது. பதைபதைத்து ஓடி வருகிறான் சக மாணவன் பாரதிகண்ணன். அவனையும் தாக்குகிறது. கால்களிலும், உடம்பிலும் ஹாக்கி மட்டையால் சரமாரியாக முப்பதுக்கும் மேற்பட்ட அடிகள். அதுவும் பிங்க் பனியன் போட்ட ஒரு மிருகம்தான் இருவரையும் அதிகமாக அடித்தவன். இவனை நடுத்தெருவில் கட்டி வைத்து காலுக்குக் கீழே கல்லால் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதயமே இல்லாத கொடுங்கோல் மனசுக்கார பேய். இவனைப் பெற்ற பாவத்துக்கு இவன் பெற்றோர் எழுதிவைத்துவிட்டுச் சாகலாம்.

கேட்டருகே கிடந்த பாரதிகண்ணனின் கால்கள் இவன் அடித்த அடியில் துடிப்பதும், மறுபடி மறுபடி அவன் அடிப்பதும் தாங்கமுடியவில்லை. பாரதி கண்ணனுக்கோ, ஆறுமுகத்துக்கோ அண்ணன், தம்பியாக பிறந்த எவரும் இந்தச் செயலைப் பார்த்து நக்சலைட்டாக மாறி அந்தக் கும்பலை ஒழிக்க முற்பட்டால்கூட ஆச்சர்யமில்லை.

இந்தச் சாதிப் பிடியிலிருந்து தமிழகம் மீண்டு வராதவரை நமக்கு விடிவே இல்லை. இந்த லட்சணத்தில் பெரிய புடுங்கிகள் போல ஒவ்வொரு சாதிக்கும் தலைவராக இருக்கும் அரசியல்வாதிகள் பேட்டி மயிரு வேறு கொடுக்கிறார்கள். இவனுகள் வளர்த்துவிட்டதுதானே இது. நாசமாப்போக.

பார் கவுன்சில் விழாவுக்காக கோவையில் கிரண்பேடி வருகிறார். பார் கவுன்சிலில் இரு பிரிவாம். இன்னொரு பிரிவினர் கிரண்பேடியை கெரோ செய்து உள்ளே விடாமல், வேறு வழியின்றி கிரண்பேடி காரில் ஏறி சென்றுவிட வேறொரு ஹோட்டல் ஹாலில் விழா நடக்கிறது.

இவர்கள் மாணவர்கள் அல்ல. சீனியர் வக்கீல்கள். இவங்களே இப்படி புத்திகெட்டு அடிச்சுகிட்டா, அப்புறம் அந்தச் சட்டம் படிக்கற மாணவர்கள் அதைவிட கேவலமா காட்டுமிராண்டிகளாத்தான் இருப்பாங்க.

என்ன எழுதினாலும் மனசு ஆறமறுக்கிறது. கல்லூரி முதல்வர் எவ வீட்டுக்குப் போய் உக்கார்ந்துட்டிருந்தான்னு தெரியல. எல்லாம் முடிஞ்சு வந்து என்னத்தப் புடுங்கப் போறான்னும் தெரியல. போலீஸ் அவரு அனுமதி குடுக்கணும்ன்னு நின்னுகிட்டிருந்ததாம். போங்கடா.....

ஒரு வகையில பெண்ணின் கற்பும் ,ஆணின் வீரமும் ஒரே மாதிரி பார்க்கப் படுது. ஒரு ஆணை ஆறேழு பேர் அடிக்கறது, பெண்ணை பப்ளிக்ல ரேப் பண்றதுக்குச் சமம். அப்பவும் இந்த மாதிரி பார்த்துட்டு இருந்தா ஒத்துக்குவாங்களா? இல்ல.. அவ மேலயும் தப்பு இருக்கு, கவர்ச்சியா ட்ரெஸ் போட்டிருந்தா.. டீஸ் பண்ணிப் பேசினா.. அதுனாலதான் கற்பழிச்சாங்கன்னு சொல்லுவாங்களா?

போலீஸையும், வேடிக்கை பார்த்துட்டிருந்த மாணவர்களையும் விடுங்க. இந்த ரெண்டு பேரையும் அடிச்ச கும்பல்ல இருந்தவங்க உடம்பிலயும், என் உடம்பிலயும் ஓடறது ஒரே நிறத்தாலான ரத்தம்ங்கறத நினைக்கும்போது..

சாகலாமான்னு தோணுது.