Tuesday, February 1, 2011

சிறப்புச் சிறுகதை

கடந்த மாதத்தின் ஒரு மாலையில் நண்பர் வெண்பூ அழைத்திருந்தார்.

“பரிசல்.. ஃப்ரீயா இருக்கியா?”

நாயகன் ஸ்டைலில் ‘தெரியலயேப்பா’ என்றேன்.

அதீதம் முதல் இதழில் அவரது கதையைப் பற்றிப் பேசினார்.

“நல்ல ரெஸ்பான்ஸுன்னு இந்த இதழிலும் எழுதச் சொல்லிக் கேட்டிருக்காங்க” என்றார்.

“சூப்பர்..!” என்றேன். அவர் கேட்டார்: “அதீதத்துக்கு நீ ஏதும் எழுதலியா?”

“ரெண்டு மூணு மெய்ல் வந்துச்சு. ஆனா வழக்கம்போல டைம் இல்ல. எதுவும் திருப்தியா அமையல” என்றேன்.

“சரி.. நான் ஒரு கரு வெச்சிருக்கேன்.. ஆஃபீஸ்ல ஏக டென்ஷன். அதை நீ டெவலப் பண்ண முடியுமா?”

அன்றைக்கு சூரியன் மேற்கே உதித்திருக்க வேண்டும். அமைதியாக வேறெந்த இடையூறும் இல்லாமல் அவர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

முழுக் கருவையும் சொன்னார்.

“நல்லாருக்கு. ஏதாவது-இப்படித்தான் வரணும்-ன்னு ஐடியா வெச்சிருக்கியா?” - கேட்டேன்.

“அதெல்லாம் இல்ல பரிசல். இது கரு. இதை எப்படி வேணா உன் ஸ்டைல்ல டெவலப் பண்ணி எழுது. உன் பேர்லயே வந்தாலும் சரி...”

அன்றைக்கு இரவுக்குள் மனதுக்குள் முழு ட்ராஃப்டும் ரெடியாக - எழுதி வெண்பூவுக்கு அனுப்பினேன்.

“வாவ்! செம.. நான் நெனைச்சதை விட நல்லாவே வந்திருக்கு பரிசல்..” என்று சின்னச் சின்ன மாற்றமும் சொன்னார்.

இந்த இதழ் அதீதத்தில் வெளியாகியிருக்கிற அந்தக் கதை.. இதோ உங்களுக்காக..

---------------------------------------------
இறப்புக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் (வெண்பூ - பரிசல்)

கரு: வெண்பூ
கதையாக்கம்: பரிசல்காரன்

ஹைதராபாத்தின் சம்சாபாத் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. மாடர்ன் உடைகளில் இளைஞர்கள் / இளைஞிகள் ஃப்ளைட் செல்லவிருக்கும் லண்டனை இங்கேயே நினைவுபடுத்தினர். தொப்புள் தெரியும் லோ ஹிப் சேலைகளில் பணக்காரப் பெண்கள். தொப்பையும், சஃபாரியுமாய் சிலர். அருகிலிருந்தவர்களைப் பற்றிய கவலையில்லாமல் அலைபேசியில் பலர்.

லேப்டாப் பேக்குடன் அமர்ந்திருந்த கிரிதர் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். அவன் கண்களில் ஒரு வெறுமை அமர்ந்திருந்தது. டைட்டான டீ ஷர்ட்டில் க்ளிவேஜ் தெரிய ஸ்டைலாக நடந்து வந்து இவனருகில் அமர்ந்து ஸ்னேகமாய்ப் புன்னகைத்தவளுக்கு பதில் புன்னகையளிக்கும்போதும் அவன் உதட்டில் உயிர்ப்பில்லாமல் இருந்தது. அவளை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் அதைப் பற்றி யோசிக்கும் மனநிலையில் அவனில்லை.

ஜோதிடர் நாகமாணிக்கம் அவனிடம் சொன்னது அவனுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

“கிரி... நான் ஜோசியத்தைத் தொழிலாப் பண்றவனில்லன்னு உனக்குத் தெரியும். உங்கம்மா இறப்பு, தொழில்ல நீயும் அண்ணனும் வந்து அப்பாக்கு எவ்ளோ பக்கபலமா இருப்பீங்கன்னது முதற்கொண்டு பலதும் நான் சொன்ன மாதிரியே நடந்திருக்கு. ஆனா.. நான் பல வருஷமா உன்கிட்ட சொல்லாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போறேன்” என்ற பீடிகையோடு அவர் சொன்ன விஷயம்தான் இன்றைக்கு கிரிதரின் இந்த மனநிலைக்குக் காரணம்.

“கிரி.. என் கணிப்பு இதுவரைக்கும் பொய்யாப்போனதில்ல. உன் ஜாதகப்படி வர்ற ஜனவரி 31 உனக்கு கடைசி நாள். இதை உங்கப்பா, அண்ணன்கிட்ட சொல்லப் போறதில்ல. உன்கிட்டயும் சொல்லணும்ன்னு நினைக்கல. நீ ஏதாவது ஆசைப்பட்டிருந்தா செஞ்சுக்கோ. அவ்ளோதான் சொல்லமுடியும். நானும் ஒரு வருஷமா இது சரியான்னு எல்லா வகையிலையும் ஆராய்ஞ்சுட்டேன். எல்லாமே இதைத்தான் சொல்லுது”

“ஹாய் மிஸ் பூர்ணிகா.. வாழ்வே வசந்தம் சீரியல்ல பின்றீங்க!”” உற்சாகக் குரலொன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. அப்போதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது. அருகில் வந்தமர்ந்தவள் டி வி நடிகை. ஜீன்ஸும், சிகப்பு ரிப் நெக் டீ ஷர்ட்டுமாய் அவளைப் பாராட்டியபடி கைகுலுக்கிக் கொண்டிருந்தவன் “எக்ஸ்யூஸ் மி.. இஃப் யு டோண்ட் மைண்ட்...” என்று கிரிதரை ஒரு சீட் தள்ளியமரச் செய்து அந்த டிவி நடிகையிடம் நட்பு பாராட்டலானான்.

அவள் அதை விரும்பாதவளாய் அவனிடம் எக்ஸ்க்யூஸிவிட்டு எழுந்து வேறிடம் சென்றாள். ஜீன்ஸ் இளைஞன் கிரிதர் பக்கம் திரும்பினான்.. "த‌மிழ்?" என்று நெற்றியை சுருக்கினான். கிரித‌ர் த‌லையாட்டிவுட‌ன் அவ‌ன், “பாருங்க பாஸு.. சீரியல்ல அழுமூஞ்சி. நேர்ல செம ஃபிகரா இருக்கா. கரெக்ட் பண்ணலாம்னா எஸ்கேப் ஆய்ட்டா..” என்று சிரித்தபடி சொல்லி “ஐ’ம் ஆண்ட்ரூஸ்..” என்று கை நீட்டினான். “ஐ’ம் கிரிதர்” என்று இவன் கைநீட்ட, பற்றி குலுக்கி “லண்டன் வர்ற வரைக்கும் இதே மாதிரி உர்ர்னுதான் மூஞ்சியை வெச்சுக்கப் போறீங்களா?” என்று கேட்டான். அவன் கையில் ஒரு டின் இருந்தது. பேச்சில் பிஸ்கட் வாசனை. உயர்ரக மதுவாக இருக்க வேண்டும்.

ஃப்ளைட் வரும் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் உற்சாகக் குவியலாய் இருந்த ஆண்ட்ரூஸுடன் கொஞ்சம் நெருக்கமானான் கிரிதர். ஃப்ளைட்டில் ஏறி அருகருகே அமரும் நிமிடத்தில் தன்னைப் பற்றி ஆண்ட்ரூஸிடம் முழுவதுமாகச் சொல்லிவிட்டிருந்தான்.

“ஹெஹ்ஹெஹ்ஹே..... ஜோக் ஆஃப் த இயர். நீங்க நாளைக்குள்ள சாகப்போறீங்களா? வாட் எ ரப்பிஷ் திங் மிஸ்டர் கிரிதர்...? எந்த யுகத்துல வாழ்ந்துட்டிருக்கீங்கன்னு தெரியுமா” என்றவன் தொடர்ந்து கேட்டான்: “சரி.. நாளைக்குச் சாகப்போறீங்கன்னா இன்னைக்கு எதுக்கு ஃப்ளைட்ல லண்டன் ட்ராவல்?”

“சொன்னா முட்டாள்தனமா இருக்கும். தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் அஞ்சரை மணிநேர வித்தியாசம். அப்படீன்னா நாளைக்கு நைட் இங்க பன்னெண்டு மணின்னா அங்க இன்னும் அஞ்சரை எக்ஸ்ட்ரா ஆகணும் அந்த நேரம் வர. ஆக என் மரணத்தை கொஞ்ச நேரமாவது தள்ளிப்போடறேன்.. புரியுதா?”

“புரியுது.. ஆனா செம காமெடியா இருக்கு. சரி சாகப்போறீங்க.. எதுக்கு லேப்டாப்?”

“எனக்கும் மனசுல ஒரு ஓரமா துளியூண்டு நம்பிக்கை இருக்கு ஆண்ட்ரூஸ்... ஒருவேளை சாகலைன்னா.. கம்யூனிகேஷனுக்கு என்ன பண்றது?“ என்று முத‌ல்முறையாக‌ வாய்விட்டு சிரித்தான்.

ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. கிரிதர் தன் வாட்சில் மணி பார்த்தான் 10.45.

“கிரிதர்.. இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருக்கற ஆளை நான் இப்பத்தான் பார்க்கறேன். யு ஆர் க்ரேஸி!” என்றான் ஆண்ட்ரூஸ்.

“ஆண்ட்ரூஸ்.. இதுவரைக்கும் அந்த ஜோசியர் சொன்னது தப்பினதே இல்லை. அதுவுமில்லாம அவரு ஜோசியத்தைத் தொழிலாப் பண்றவரில்லை. ஜோசியம் பொய்ன்னு நிரூபிக்கறதுக்காக ஜோசியம் படிக்க ஆரம்பிச்சவர் விஞ்ஞான ரீதியா அதை அலசி ஆராய்ஞ்சிருக்கார். தினமும் பகல்ல பலரையும் சந்திச்சுப் பேசி இரவு முழுக்க தன் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களை கம்ப்யூட்டர்ல போட்டு சேமிச்சு... அவரைப் பார்த்துப் பேசினீங்கன்னா இப்படிச் சொல்ல மாட்டீங்க”

“ஓகே கிரிதர்.. என்னோட பிறந்த நேரத்தை வெச்சு என்னைப் பத்தி சொல்லுவாரா?” எனக் கேட்டான் ஆண்ட்ரூஸ்.

“நிச்சயமா..”என்றவன் தன் லேப்டாப்பை ஆன் செய்து விமானத்தின் சீட்டில் இணைக்கப்பட்டிருந்த டேட்டா கார்டை சொருகி இணைய இணைப்பைக் கொடுத்தான்.

“மொதல்லெல்லாம் ஃப்ளைட்ல நெட் கனெக்ட் பண்ண முடியாது. ஏன் போனமாசம் கூட இல்ல.. இப்ப அதெல்லாம் வந்துடுச்சு. இந்தக் காலத்துல போய் ஜோசியம் கீசியம்ன்னுட்டு” என்ற ஆண்ட்ரூஸிடம் “மணி பதினொண்ணே கால் ஆகுது.. அவர் இப்ப ஆன்லைன்ல இருந்தா இப்பவே கேட்டுச் சொல்றேன்.. வெய்ட்” என்று தன் மெயிலை உயிப்பித்த போது ஜோசியரின் பெயரருகே பச்சை நிறமொளிர்ந்து கொண்டிருந்தது.

“குட்.. ஆன்லைன்ல இருக்காரு..” என்றவன் ஜோசியரை சாட்டுக்கு அழைத்தான்.

“ஹை டெக் ஜோசியர்தான் போல.. ஒத்துக்கறேன்..” என்ற ஆண்ட்ரூஸ் தன் பிறந்த நாள், நேரம், இடத்தைச் சொன்னான்.

சில பல நல விசாரிப்புகள் ‘ச்சாட்’டில் நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘நீ என்ன செய்தாலும் ஜாதகத்தை ஏமாற்றவோ, மாற்றவோ முடியாது கிரிதர்’ என்ற வரிகளை மட்டும் எட்டிப் படித்தான் ஆண்ட்ரூஸ்.

“உங்களைப் பத்திச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கேன். கொஞ்ச நேரத்துல ரிப்ளை மெய்ல் வரும்.. ‘நீ இப்ப எதைக் கேட்டாலும் செய்யறேன்’ங்கறார்” என்றான் கிரிதர் ஒருவித செயற்கைப் புன்னகையோடே.

ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு வெரி அர்ஜெண்ட் என்ற சப்ஜெக்டுடன் ஜோசியரிடமிருந்து மெய்ல் வந்திருந்தது. திறந்தான் கிரிதர்.

‘கிரிதர்.. இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். உனக்கு நாளை இறுதிநாள் என்றேனல்லவா.. என் ஜோசியம் பொய்க்காதெனின் உன் சக பயணிக்கு இன்றைக்கு இறுதிநாள். இதில் மாற்றமில்லை’ – இவ்வளவுதான் இருந்தது.

ஆண்ட்ரூஸிடம் காண்பித்தான். ‘ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஹ்ஹாஆ’ என்று அவன் சிரித்த குரலுக்கு முன் சீட் பயணிகள் திரும்ப.. “ஸாரி.. ஸாரி” என்று வழிந்து, “என்ன கிரிதர் தமாஷ் பண்றாரு உங்காளு?” என்றபடி கிரிதரின் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தான். 11.45. “இன்னும் கால் மணிநேரத்துக்குள்ள் நான் சாகப்போறேனா? ஃபூலிஷ்!” என்றபடி எழுந்து “எக்ஸ்க்யூஸ் மி.. வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்” என்று நகர்ந்தான். ஆண்ட்ரூஸின் முகம் தற்போது கொஞ்சம் களையிழந்ததாய்ப் பட்டது கிரிதருக்கு. ‘இல்லை நாந்தான் நினைத்துக் கொள்கிறேனோ?’ என்றும் சமாதானப்படுத்திக் கொண்டான்.

நிமிடங்கள் கரைய... திரும்பி வந்தமர்ந்தான் ஆண்ட்ரூஸ். கிரிதரின் மணிக்க‌ட்டைத் திருப்பி வாட்சில் மணி பார்த்தான். 11.59. “இன்னும் ஒரு நிமிஷம் க‌ழிச்சும் நான் இருந்தா.. உங்க ஜோசியம் பொய்.. சரிதானே?” என்று அவன் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்தான் கிரிதர்.

11:59:55

11:59:56

11:59:57

11:59:58

11:59:59
..
..
..
..
..
..
..
..
..
..
..


ஐ!! அதெப்படி பூராக்கதையையும் இங்கயே படிக்க முடியுமா? கதையைத் தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக்கவும்! பின்னூட்டத்துல கருத்து தெரிவிக்கவும்!


.

27 comments:

கொல்லான் said...

தொய்விலாத நடை...
நல்ல கருக் கொண்ட, உங்களின் அடுத்த மைல் கல் கதை இது...

ஹுஸைனம்மா said...

பாக்தாத் நகரத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னை மரண தூதர் உற்று பார்ப்பதைக் கண்டு பயந்துபோய், தூரத்திலுள்ள பஸ்ரா நகருக்கு தப்பி ஓடினாராம். அங்கேயும் வந்த மரணதூதர், “அதானே, உன்னை இன்று பஸ்ராவில் சந்திக்கவேண்டும் என்பது இறைக்கட்டளை. நீ பாக்தாதில் இருக்கிறாயே என்று ஆச்சர்யப்பட்டுப் பார்த்தேன்” என்றாராம்.

உங்கள் கதை இந்தக் கதையை ஞாபகப் படுத்தியது.

மாடர்ன் வெர்ஷன் நல்லா இருக்கு. அடுத்த மணிரத்னம்? :-))))))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை..
அளவை குறைத்தால் இன்னும் இனிமையாக இருக்கும்

Ganpat said...

இப்படி மாற்றினால் நன்றாக இருக்குமோ!!

‘கிரிதர்.. இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். உனக்கு நாளை இறுதிநாள் என்றேனல்லவா.. என் ஜோசியம் பொய்க்காதெனின் உன் சக பயணிக்கு இன்றைக்கு இறுதிநாள். இதில் மாற்றமில்லை’ –

இதற்கு பதிலாக ...

‘கிரிதர்.. உன் சக பயணிக்கு நல்ல யோக ஜாதகம்; ஆயுளும் அதிகம்.இவர் வாழ்க்கையில் மிக பெரிய சாதனைகள் பல புரிவார்.அனைவரும் மெச்ச வாழ்வார்’

என்று மாற்றி விட்டால் போதும்!வேறு எந்த மாற்றமும் தேவையில்லை.

நன்றி

ஜி.ராஜ்மோகன் said...

நல்ல எழுத்து நடை உங்களுக்கு பரிசல்! அருமையான கதை! வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

//
என்று மாற்றி விட்டால் போதும்!வேறு எந்த மாற்றமும் தேவையில்லை.
//

அப்படி மாற்றினால் இன்னொரு மாற்றமும் வேண்டி வரும் கண்பத்.

அது:









கதையாக்கம்: கண்பத்.

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் பாஸ்..

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல நடை.. சுவாரஸ்யம் கடைசி வரை குறையவில்லை. லாஜிக்கை இடிக்காத முடிவு. அருமை நண்பரே !

R. Gopi said...

\\அரபிக் கடல் மேல் பறந்து கொண்டிருந்த விமானம் தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது.. \\

எதிர்க்காற்று அதிகமிருப்பதால் விமானம் லண்டன் செல்லாமல் திரும்ப இந்தியாவே செல்கிறது என்று ஆங்கிலத்தில் அறிவித்துவிட்டு இந்தியில் அறிவிக்கத் தயாரானார் தலைமை விமானப் பணிப்பெண்.

சி. முருகேஷ் பாபு said...

அன்பு பரிசல்,
கதையைவிட அதை இங்கே நிறுத்திய இடத்தில் உங்களுடைய தூண்டில் உத்தி நன்றாக இருந்தது.

வாழ்த்துக்கள்!

CS. Mohan Kumar said...

சிறுகதைக்கே கதை திரை கதையெல்லாம் போடுறீங்க; நைஸ்

Athisha said...

கதை இன்னும் வாசிக்கல. ஆனா வெண்பூபரிசல்ன்றதே கவிதைமாதிரி இருக்கு.. ரொம்ப அழகு. ஐ லவ்வ்விட்

குரங்குபெடல் said...

நல்ல பதிவு . . .

ஆனா . . . கேமரூனும் ஸ்பீல்பெர்க்கும்
பேசிக்குற பிகினிங் பில்டப் . . .

ஸாரி . . . உண்மையிலேயே கொஞ்சம் ஓவர்

நன்றி

நாகராஜ் said...

அடுத்த மைல் கல் கதை இது..

நச்சுனு இருக்கு சார்

பிரதீபா said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

//
‘கிரிதர்.. இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். உனக்கு நாளை இறுதிநாள் என்றேனல்லவா.. என் ஜோசியம் பொய்க்காதெனின் உன் சக பயணிக்கு இன்றைக்கு இறுதிநாள். இதில் மாற்றமில்லை’//

இந்த வரிகள் சற்றே கதையின் இயல்புத்தன்மையை இழந்து இருப்பதைப் போலத் தோன்றியது.

\\அரபிக் கடல் மேல் பறந்து கொண்டிருந்த விமானம் தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது.. \\
ராஜேஷ்குமார் அவர்களின் நடையை நினைவூட்டியது :)

ஆனால் வித்தியாசமான கதை. வாழ்த்துக்கள்-வெண்பூபரிசலுக்கு. அதிஷா சொன்ன // ஆனா வெண்பூபரிசல்ன்றதே கவிதைமாதிரி இருக்கு//-எழுத்து மாறாமல் காபி பேஸ்டிக்கறேன்

vinu said...

sorry bro; i'm disappointed, may be my expectation is much more on you

சுசி said...

வாழ்த்துகள் பரிசல்.. கதை செம..

தனியனின் கிறுக்கல்கள் ! said...

சார் சூப்பர்... அருமையா இருக்கு கதை... கதை சொன்ன விதம் மிக அருமை சார்..


இதே கருவைக்கொண்டு நானும் ஒரு சிறுகதை எழுதி வச்சிருந்தேன்..
எப்படி வெளியடனும்னு எல்லாம் தெரியாததால அப்படியே விட்டுட்டேன்...

I just got the meaning for coincidence :)

நான் வெச்ச தலைப்பு : " நான் இறந்து கிடந்த இருபத்தி நான்கு மணி நேரம் "

Unknown said...

adi dhool.josiyathai aadharikkum kadhai than,irundhalum flow super.
kkalyanakumar1@gmail.com

DINESH said...

வாழ்த்துகள் பரிசல்.. கதை சூப்பர்...

DINESH said...

வாழ்த்துகள் பரிசல்.. கதை சூப்பர்...

இராஜராஜேஸ்வரி said...

கதையின் முடிவை வாசகர் ஊகத்திற்கே
விட்டிருக்கிறீர்கள்.
விறுவிறுப்பான கதை.நல்ல நடை.

Unknown said...

/நாம இப்ப கராச்சிக்கு நேரா பறந்துட்டு இருக்கோம். பாகிஸ்தான் நேரப்படி இந்த நாள் முடிய இன்னும் இரண்டு நிமிஷம் இருக்கு”/

so கிரிதர் ஒரு பாகிஸ்தான் ஆளு....புரியுது...

கதை எனக்கு புடிக்கலே....உங்களிடம் பழைய form ஐ எதிர்பார்க்கும் ரசிகன்

சந்துரு

Unknown said...

/நாம இப்ப கராச்சிக்கு நேரா பறந்துட்டு இருக்கோம். பாகிஸ்தான் நேரப்படி இந்த நாள் முடிய இன்னும் இரண்டு நிமிஷம் இருக்கு”/

so கிரிதர் ஒரு பாகிஸ்தான் ஆளு....புரியுது...

கதை எனக்கு புடிக்கலே....உங்களிடம் பழைய form ஐ எதிர்பார்க்கும் ரசிகன்

சந்துரு

Anisha Yunus said...

vithi valiyathu!!!

:)


aanalum paavam, kooda ukkaanthathukkaka avaraiyum kollanuma?

Unknown said...

kadhaiyin mudivu irukum andha link vaelai seidhu illai.....pls ennavenru paarthu sollavum